cinema

img

போலீசுடன் மோதுகிற இன்னொரு சினிமா...

மெரினா புரட்சி படத்தில் கதாநாயகனாக வந்தவர் நவீன். அவரே கதை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்தும் வெளிவர இருக்கிற படம்தான் வலியோர் சிலர். பாவேந்தரின் வரிகளான ‘‘வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா’’... என்பதிலிருந்து எடுத்தாளப்பட்டாலும் இதன் கதை போலீசுக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையிலான மோதலாம். நடுத்தர வர்க்கத்து இளைஞனுக்கும் காவல்துறைக்கும் இடையிலான முரண் - மோதலைத்தான் இந்தக் கதை பேசப்போகிறது என்கிறார்கள். அதிகார துஷ்பிரயோகத்தின் கொடுமையை அம்பலப்படுத்துவதாக இந்தப் படம் இருக்குமாம். இருந்தால் சரி.

;