பாகுபலி, கே.ஜி.எஃப், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். போன்ற மாற்றுமொழிப் படங்களுக்குத் தமிழில் மிகப் பெரிய வரவேற்பு கிடைப்பதுபற்றி இயக்குநர் மணிரத்தினத்தி டம் ஒரு பத்திரிகை சார்பில் கேட்கப்பட்டபோது அவர் அளித்த பதிலிலிருந்து சில பகுதிகள் இங்கே: மாற்றுமொழிப் படங்களுக்கான வரவேற்பென்பது புதிதாகத் தொடங்கியது கிடையாது. ஒருகாலத்தில் இங்கே இருந்து எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய சந்திரலேகா என்ற ஒரு படம் வடநாட்டில் வெளியாகி வெற்றிக்கொடியை நாட்டியது. அப்போது யாருக்கும் இந்தக் கேள்வி எழவில்லை. நிறையப் பேர் படம் பார்ப்பது நல்லதுதானே? இதை என்னாலும் நிறுத்த முடியாது, உங்களாலும் முடியாது. ஹாலிவுட்டிலிருந்து வரும் படங்களைத் தமிழில் டப் பண்ணிப் பார்க்கிறோம். அதுபோல கன்னடத்திலிருந்து வந்தால், பார்த்தால் என்ன தவறு? தமிழில் அதுபோல நல்ல படங்களை எடுத்தால் அதுவும் வெளி மாநிலங்களில் வெற்றிபெறும். தமிழின் தரம் செழுமையானது. திறமைமிக்க இளைஞர்கள் புதிது புதிதாக வந்துகொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்றார்..