business

img

தில்லி, மும்பை டிவிட்டர் அலுவலகம் மூடல்!

தில்லி, மும்பை ஆகிய 2 இடங்களில் உள்ள டிவிட்டர் அலுவலகங்கள் மூடிவிட்டு, ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கிய நாள் முதல் டிவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த ஆண்டில், இந்தியாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து மொத்த ஊழியர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், தில்லி, மும்பை ஆகிய 2 இடங்களில் உள்ள டிவிட்டர் அலுவலகங்கள் மூடிவிட்டு, ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.
செலவினை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், பெங்களூருவில் உள்ள அலுவலகம் மட்டும் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

;