சென்னை,மே.06- ஒரே நாளில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை காலை சவரனுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.72,200க்கு விற்பனையான நிலையில் தற்போது இன்று மாலையே மீண்டும் ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,800க்கு விற்பனையாகிறது.
காலையில் ஒரு கிராம் தங்கம் 9,025க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,100க்கு விற்பனையாகிறது.
ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை உயர்ந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.