articles

img

காந்திஜியின் அறிக்கைக்கு மறுப்புக் கடிதம் எழுதிய சுகதேவ்

நம் பாரத விடுதலைக்காகப் போரிட்ட புரட்சி வீரரும், 24 வயதில் தூக்குக்  கயிற்றை முத்தமிட்டு வீரமரணம் அடைந்த வருமான சுகதேவ்.

*    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1907 மே 15இல்  பிறந்தார். முழு பெயர் சுகதேவ் தாபர். 3  வயதில் தந்தையை இழந்தார். இவரது சித்தப்பா லாலா அசிந்தராம் தேசபக்தர். ஆரிய சமாஜத்தில் பற்றுக் கொண்டவர். அவரிடம் வளர்ந்ததால் இவரும் சிறு  வயது முதலே ஆரிய சமாஜக் கொள்கை களில் மிகுந்த ஈடுபாடும், தேசப்பற்றும் கொண்டிருந்தார்.

*    பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1907 மே 15இல்  பிறந்தார். முழு பெயர் சுகதேவ் தாபர். 3  வயதில் தந்தையை இழந்தார். இவரது சித்தப்பா லாலா அசிந்தராம் தேசபக்தர். ஆரிய சமாஜத்தில் பற்றுக் கொண்டவர். அவரிடம் வளர்ந்ததால் இவரும் சிறு  வயது முதலே ஆரிய சமாஜக் கொள்கை களில் மிகுந்த ஈடுபாடும், தேசப்பற்றும் கொண்டிருந்தார்.

 *    லாகூர் தேசியக் கல்லூரியில் 1920-இல் சேர்ந்தார். அப்போது பகத்சிங்குடன் அறி முகம் ஏற்பட்டு, அவருடன் நட்பு கொண்டார். 1921-இல் காந்திஜியின் ஒத்து ழையாமை இயக்கத்தால் கவரப்பட்டார். அந்நிய ஆடைகளை எறிந்துவிட்டு, கதராடை அணிந்தார். சைமன் கமிஷன் வருகையை எதிர்த்து, பகத்சிங்கும் அவரது தோழர்களும் கருப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர். அதில் கலந்து கொண்ட சுகதேவ் கைது செய்யப்பட்டார்.

*    சகோதரிகளும், தாயும் இவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். ‘நாட்டுக்காக சேவையாற்றப் போவதால்  திருமணம் செய்துகொள்ளப் போவ தில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறி விட்டார்.

*    பகத்சிங் அமைத்த இந்துஸ்தான் குடியரசுப் படையில் தன்னை இணைத்துக்கொண் டார். இயக்கம் எத்தகைய பணியை அளித் தாலும் அதை முழு மனதுடன் செய்வார்.  அதன் பஞ்சாப் மாநிலத்துக்கான பொறுப் பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

*    சோஷலிசம் குறித்து நன்கு அறிந்தவர். அதீத நினைவாற்றல் கொண்டவர். கடின மான தத்துவ நூல்களைக்கூட இரண்டு, மூன்று நாட்களில் படித்து விடுவார். குறிப்புகள் எடுக்காமலேயே, அதில் உள்ள  பல விஷயங்களை மேற்கோளுடன் கூறு வார். கட்சித் தோழர்களின் தேவைகளை அறிந்து, அக்கறையோடு நிறைவேற்றிக் கொடுப்பார். நாட்டில் சோஷலிச ஜன நாயக அமைப்பை நிறுவுவதை லட்சிய மாகக் கொண்டிருந்தார்.

*    நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது தொடர்பாக பகத்சிங் கைது செய்யப்பட் டார். காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் கொலை மற்றும் லாகூர் சதி வழக்குக் காக சுகதேவ் 1929-இல் கைது செய்யப் பட்டார்.

\*    புரட்சி வீரர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று காந்திஜி அறிக்கை விட்டார். அதற்கு பதில் கூறும்  வகையில், தங்கள் தரப்பை விளக்கி காந்திஜிக்கு இவர் எழுதிய கடிதம் மிகவும் பிரசித்தம்.

* லாகூர் மத்திய சிறையில் 15 நாட்கள் தண்ணீர்கூட குடிக்காமல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இவரை வலுக் கட்டாயமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உணவு புகட்ட முயன்ற காவலர்கள், அதிகாரிகளைத் தாக்கினார். சிறையில் பகத்சிங் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.

*    நண்பர்கள் பகத்சிங், ராஜகுருவுடன் இணைந்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என  முழக்கமிட்டபடியே 1931 மார்ச் மாதம்  23ஆம் நாள் தூக்கு கயிற்றை முத்தமிட்டார். வரலாற்றில் இன்றும் வாழ்கிறார்.

 

- பெரணமல்லூர் சேகரன்

 

 

 

;