சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது
நமது செயல்களே நமது அழிவுக்கு காரணமாக இருந்தால், அதனை நமது கிராமங்களில் “சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள் வது” என்று சொல்வார்கள். இன்றைய அமெரிக்காவைப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
வீட்டில் பிடித்த தீ...
ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் பாசிஸ்டுகள் ஆட்சி க்கு வருவது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒவ் வொரு நாளும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிரூ பித்துக் காட்டுகிறார். ஒரு வீட்டில் பிடித்த தீ ஊரையே அழிப்பது போல, அமெரிக்காவைப் பிடித்த சனியன் உலகின் அத்தனை நாடுகளின் உயிர்களையும் வாங்குகிறது. டிரம்ப் மனநிலை பிறழ்ந்து விட்டாரா என்று சந்தேகிக்கும் அளவுக்கு விபரீதமான பல முடிவுகளை வேகமாக எடுத்து வருகிறார். அவரின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள் தான் என்றாலும் அவர் எடுத்துக் கொண்டிருக்கின்ற பல நடவடிக்கைகள் அமெரிக்காவின் எதிர்காலத்தை நிரந்தரமாகப் பாதிக்கும். அமெரிக்காவில் நடப்பவை பற்றியும், அதன் ஜனா திபதி டிரம்ப்பின் கோமாளித்தனமான அரைவேக் காட்டு நடவடிக்கைகள் பற்றியும் அமெரிக்கரை அடுத்து அதிகம் கவலைப்பட வேண்டியவர்கள் நாம் தாம். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள் “அமெரிக்க டாலருக்கு சளி பிடித்தால் இந்திய ரூபாய்க்கு காய்ச்சல் வரும்’’ என்று சொல்வார்கள். உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் என்ற அணுகுமுறைகளை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பதவியேற்ற அரசுகள் அனைத்தும் பின்பற்றி வந்ததால் நமது பொரு ளாதாரக் கட்டுமானங்கள் அனைத்தும் அமெரிக்கா வைச் சார்ந்தே நிற்கின்றன. நமது அந்நியச் செலாவணி முழுவதும் அமெரிக்க டாலர்களிலேயே சேமிக்கப்படு கின்றன. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இந்திய குடியேறிகளின் பங்கு மகத்தானது. அமெரிக்க அர சியல், சமூகம், பொருளாதாரம் என்ற அமெரிக்க நாட்டின் அத்தனை பரிமாணங்களிலும் இந்திய வம்சா வளியினரின் இருப்பும், பங்களிப்பும் வேறு எந்த நாட்டி னருக்கும் இல்லை. இந்த உறவுகளில் பிரதமர் மோடி தனது தனிப்பட்ட முத்திரையைப் பதிக்க நினைத்தார். டிரம்ப் கடந்த முறை ஜனாதிபதியாக இருந்த போது அவரைத் தனது “தனிப்பட்ட நண்பராக” சர்வதேசத் தளத்தில் அடையாளப்படுத்தினார்.
முதல் முறையாக...
இந்தியா -அமெரிக்கா என்ற இரண்டு ஜனநாய கங்களின் உறவாக இருந்ததை மோடி & டிரம்ப் ஆகிய இரண்டு தனிப்பட்ட தலைவர்களின் நட்பின் அடிப்ப டையில் மாற்றி அமைத்தார். இந்திய ராஜதந்திர நிபு ணர்கள் இதுவரை அறிந்திராத வகையில் ஒரு இந்திய பிரதமர், ஒரு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பா ளருக்காக அமெரிக்க மண்ணில் வாக்குக் கேட்டது அதுவே முதல் முறை. அதற்கு கைமாறாக டிரம்பும் இந்தியா வந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் மோடியை தனிப்பட்ட முறையில் புகழ்ந்து தள்ளினார். இந்த அடிப்படையில் இந்த முறை நடந்த ஜனாதி பதி தேர்தலில், பெரும்பாலும் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர்களாக இருந்த இந்திய வம்சாவளி வாக்கா ளர்கள் டிரம்புக்கு ஆதரவாக குடியரசுக் கட்சிக்கு வாக்க ளித்தனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தை பாஜகவின் அயலக அணியைச் சார்ந்தவர்களே முன்னின்று நடத்தினர். வாக்களித்ததோடு மட்டுமல்லாமல் கணிச மான தேர்தல் நிதியையும் வழங்கினர். டிரம்ப் ஜனாதி பதியானால் மோடியைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டார் என்றும், இந்தியர்களின் குடியேற்ற பிரச்சனை களில் டிரம்ப் தங்களுக்கு மிகவும் சார்பாக இருப்பார் என்ற பிரச்சாரத்தை அமெரிக்காவில் வாழும் இந்தி யர்களில் பெரும்பாலோர் நம்பினர். பிரதமர் மோடியின் நண்பர்களான, இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களான அதானியும் அம்பானியும் டிரம்ப்போடு மிகவும் நெருக்கமான தொடர்பை ஏற் படுத்திக் கொண்டனர்.அவரது பதவியேற்பு விழாவுக்கு டிரம்ப்பின் தனிப்பட்ட விருந்தினர்களாக அவர்கள் இருவரும் அழைக்கப்பட்டு,விழா அரங்கின் முன்வரிசையில் இருவரும் அமர்ந்திருந்ததை நாடே பார்த்தது. டிரம்ப்பின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தனது கார்ப்பரேட் குழுமம் அமெரிக்கா இருபதி னாயிரம் கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்யும் என்று கவுதம் அதானி பகிரங்கமாக அறிவித்தார்.
தலையில் ஏறி செவியைக் கடிக்க...
இப்படி பல முனைகளில் அமெரிக்காவோடு பல நெருக்கங்களை உருவாக்கி கொண்டதால் நமது வெளியுறவுக் கொள்கை அமெரிக்காவை மட்டுமே சார்ந்திருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கட்ட விழ்த்துவிட்டிருக்கும் கொலைவெறி தாக்குதல்களை எதிர்த்துக் கூட நம்மால் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்க முடியவில்லை. சர்வதேச அரங்கில் இந்தியா என்றுமே நியாயத்தின் பக்கம்தான் நிற்கும் என்று இந்தியாவின் மேல் இருந்த நம்பகத்தன்மையை யும் இழந்து வருகிறோம். இவ்வளவும் நடந்து முடிந்த பிறகு நமது சிரசில் ஏறி வலுவாக அமர்ந்து கொண்டு நமது செவியைக் கடிக்க ஆரம்பித்துள்ளார் டிரம்ப். வலிக் கிறது என்று சொல்லி அழக்கூட வெட்கப்பட்டு, முக்காடு போட்டு முணகிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
திருடனுக்கு தேள் கொட்டியது போல்...
கத்தாரில் நடந்த அரசு முறை விருந்தின் போது, ஆப்பிள் நிறுவனத்தின் அதிபரைப் பார்த்து பகிரங்க மாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய் வதை நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவில் உற்பத்தி செய்யும் ஆப்பிள் போன்களை அமெரிக்கா வில் விற்க அனுமதிக்க முடியாது என்றும், அப்படி விற்றால் 25% அதிகமாக தண்டவரி கட்டவேண்டும் என்றும் டிரம்ப் எச்சரித்தார். இதைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் திரைப் பட நடிகையுமான கங்கனா ரனாவத், டிரம்ப் இப்படி அறிவித்ததற்கான காரணம், அவர் சர்வதேச அரங்கில் தன்னைவிட மிகவும் பிரபலமாக இருக்கும் மோடியைப் பார்த்து பொறாமைப்பட்டதால்தான் என்று X தளத் தில் பதிவு செய்தார். டிரம்ப்பின் கோபத்தையும் வெறுப் பையும் எதிர்கொள்ளப் பயந்து போன பாஜகவின் தலைவர் ஜே.பி.நட்டா உடனடியாக அந்த பதிவை நீக்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு மட்டுமல்லா மல் பாஜகவில் யாரும் டிரம்ப்புக்கு எதிராக பேசவோ பதிவுகள் போடவோ கூடாது என்று தடையுத்தரவு போட்டார். திருடனுக்கு தேள் கொட்டியது போல, டிரம்புக்கு வாக்களித்த அமெரிக்க இந்திய வாக்காளர்கள் வாய் திறந்து வலிக்கிறது என்று சொல்லக்கூட வகையற்று நிற்கின்றனர். ஊரை விட்டு,உறவுகளை மறந்து நாடு விட்டு நாடு வந்து நான்கு காசு சம்பாதிப்பதற்காக அமெ ரிக்காவில் கடுமையாக உழைக்கும் இந்தியர்களின் அரை (இடுப்பு) வேட்டியைக்கூட அவிழ்க்க வேண்டும் என்பதில் டிரம்ப் குறியாக இருக்கிறார்.
வரிக்கு மேல் மற்றொரு தண்டம்
வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி நாளாய்ச் சேர்த்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்ப 3.5% புதிய வரி கட்ட வேண்டும் என்று தற்போது ஒரு சட்டம் போட்டுள் ளார். சம்பாதித்த பணத்திற்கு ஏற்கனவே வருமான வரி கட்டிய பின்னர் இது என்ன தண்டம் என்று கேட்கக் கூட இந்திய அரசுக்குத் துப்பில்லை. அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் இந்தியர்கள். கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி தகவலின்படி ஆண்டொன் றுக்கு 32 பில்லியன் டாலர் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். வரும் ஆண்டிலிருந்து ஆண்டொன் றுக்கு 1.5 பில்லியன் டாலர்களை இந்தியர்கள் வரு மான வரி கட்டிய பின்னர் கூடுதலாக அமெரிக்க அரசு க்கு கட்டவேண்டும். அங்கே வாழ்கின்ற நம்மவர்கள் தங்களது சேமிப்புகளை இந்தியாவில் எப்படி முதலீடு செய்தாலும் அந்த முதலீட்டிற்கு 3.5% வரி கட்டித் தீர வேண்டும். இதனால் கருப்புச் சந்தை பணப்புழக்கம் அதிகமாகும்.
பல்கலைக்கழகங்களுக்கு மிரட்டல்...
டிரம்ப்பின் அரைவேக்காட்டுத்தனமான நடவ டிக்கைகளால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பயிலும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்க ளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அமெ ரிக்காவில் சுமார் நான்கு லட்சம் இந்திய மாணவர்கள் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்று வருகின்ற னர். இவர்களுடைய கல்வியும், எதிர்காலமும் ஒரு பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இவர்கள் பயிலும் பெரும் பல்கலைக்கழகங்களுக்கு அரசு மானி யம் வழங்க செயல்படுத்தவே முடியாத பல நிபந்த னைகளை டிரம்ப் அரசு விதித்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடக செயல்பாடுகளைத் தணிக்கை செய்து, அவைகளில் இஸ்ரேல் எதிர்ப்பு, பாலஸ்தீன ஆதரவு, பொதுவுடைமை சித்தாந்த ஆதரவு போன்ற பதிவுகள் இருந்தால் அவர்களை உட னடியாக பல்கலைக்கழகங்களில் இருந்து நீக்கிட வேண்டும் என்பதே முதல் நிபந்தனை. பல்கலைக்கழக வளாகங்களுக்குள் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது கல்வி சம்பந்தப்பட்ட நட வடிக்கைகள் தவிர வேறு எவ்வித போராட்டங்களிலோ, பிரச்சாரங்களிலோ ஈடுபடக்கூடாது. அதனை அனும தித்தால் பல்கலைக்கழகத்துக்குரிய அரசு மானியம் உட்பட அனைத்து சலுகைகளும் உடனடியாக நிறுத் தப்படும். இந்த நிபந்தனையை ஒத்துக் கொண்ட பல்க லைக்கழகங்களுக்கு மட்டுமே அரசு மானியமும், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க அனுமதியும் உண்டு என்ற உத்தரவு தற்போது அமலில் இருக்கின் றது. கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு 400 மில்லி யன் டாலர் மானியத்தை நிறுத்தியவுடன் பதறிப்போன பல்கலைக்கழகம் டிரம்ப்பிடம் மண்டியிட்டு சரணாகதி யடைந்து தங்களது 400 மில்லியன் டாலர் மானி யத்தை பெற்றுக் கொண்டது. அதைப்போல உலகப் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தையும் டிரம்ப் நிர்வாகம் மிரட்டிய போது பணிய மறுத்த பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு 2.2 பில்லியன் டாலர் மானியத்தை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் அனுமதியை யும் டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. ஹார்வர்டு பல் கலைக்கழகத்தின் மொத்த மாணவர்களில் சுமார் 30% வெளிநாட்டு மாணவர்கள்.
தான்தோன்றித்தனத்துக்கு தடை
தற்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 147நாடு களைச் சார்ந்த சுமார் 7000 மாணவர்கள் படிக்கின்ற னர். அதில் ஏறத்தாழ 1000 மாணவர்கள் இந்தியர்கள். பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் 57,000 டாலர்க ளும், முதுகலை மாணவர்கள் 77,000 டாலர்களும் கல்விக் கட்டணமாகச் செலுத்துகின்றனர். விடுதி மற்றும் உணவுக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு 20,000 டாலர்கள் கொடுக்கின்றனர். டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவால் இந்த மாணவர்கள் வேறு பல்கலைக்கழ கத்தில் சேரவேண்டும். அல்லது உடனடியாக நாடு திரும்ப வேண்டும். இதனால் பல்கலைக்கழகமே நிலை குலைந்து போகும். ஹார்வர்டு பல்கலைக்கழகம் தற்போது டிரம்ப் அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு ஃபெடரல் கோர்ட்டில் இடைக்கால தடையுத்தரவினைப் பெற்றுள்ளது. ஆனாலும் பல வெளிநாட்டு மாணவர்கள் தங்க ளது எதிர்காலத்தைப் பற்றி பதற்றமும் அச்சமும் அடைந்துள்ளனர். பெரும்பாலான மாணவர்கள் சீனா, கனடா, இந்தியா, தென் கொரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சார்ந்தவர்கள். வேறு பல்கலைக்கழ கத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் சேரவில்லை என்றால் விசா ரத்து ஆகி நாடு கடத்தப்படும் சூழ் நிலைக்கு தள்ளப்படுவர். இப்படி நெருக்கடியில் சிக்கி யுள்ள மாணவர்களில் டென்மார்க் நாட்டின் பட்டத்து இளவரசியும் ஒருவர். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களாக 2000 பல்க லைக்கழகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் முதல் இருபது பல்கலைக்கழகங்களில் பதினாறு பல் கலைக்கழகங்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்கள். அந்த பதினாறு பல்கலைக்கழகங்களில் முதன்மை யானது ஹார்வர்டு பல்கலைக் கழகம். உலக நாடு களின் பல மாபெரும் தலைவர்கள், குடியரசு தலை வர்கள், பிரதமர்கள், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், நீதியரசர்கள், விஞ்ஞானிகள், சிந்தனையாளர்களை உருவாக்கிய பல்கலைக்கழகம். அதன் நிர்வாகக் குழுவில் பல மேனாள் குடியரசு தலைவர்கள், மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பெரும் கார்ப்பரேட் அதி பர்கள் இடம் பெற்றுள்ளனர். அவ்வளவு சிறப்புமிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கே இவ்வளவு நெருக் கடி என்றால் மற்ற அமெரிக்க கல்வி நிலையங்களின் எதிர்காலம் என்னவாகும்?
குரங்கு கை பூமாலை
அமெரிக்க நாட்டின் புகழுக்கும் செல்வாக்கிற்கும் அதன் பொருளாதார பலமும் ராணுவ பலமும் மட்டும் காரணமல்ல! அதன் புகழ் பெற்ற பல்கலைக்கழ கங்கள் ஒரு மிகப்பெரிய காரணம். அமெரிக்க முதலா ளித்துவ சித்தாந்தங்களில் உடன்படாதவர்கள் கூட அந்த பல்கலைக்கழகங்களின் கல்விச் சூழலையும், கல்வியின் தரத்தையும், ஆசிரியர்களின் திறமைகளை யும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விச் சுதந்தி ரத்தையும் பாராட்டத் தயங்கமாட்டார்கள். அமெரிக்க பொருளாதாரத்திற்கு அப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மகத்தானது. இந்திய மாணவர்கள் மட்டும் ஆண்டொன்றுக்கு 9 பில்லியன் டாலரை வழங்கு கின்றனர். இப்படிப்பட்ட புகழும் பாரம்பரியமும் உள்ள பல்கலைக் கழகங்களை குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக பிய்த்து எறிகிறார் டிரம்ப்.
அமெரிக்க சங்கிகளின் நோக்கம்...
அது ஏன்? என்ற கேள்வி முக்கியமானது. பல் கலைக்கழகங்கள் இடதுசாரி சிந்தனைகளுக்கும் சமூக நீதிக்கான முன்னெடுப்புகளுக்குமான பாசறைக ளாக விளங்குகின்றன என்பது டிரம்ப் மற்றும் அவரது தீவிர குடியரசுக் கட்சி ஆதரவாளர்களான “அமெரிக்க சங்கிகளின்” நிலைப்பாடு. 2021 ஆம் ஆண்டே தற்போது துணை குடியரசுத் தலைவராக இருக்கும் மைக் பென்ஸ் “பல்கலைக்கழகங்கள் நமது எதிரிகள்” என்று குறிப் பிட்டார். கலாச்சார வேறுபாடுகளை மதித்து ஏற்றுக் கொள்தல், எல்லோரையும் உள்ளடக்கிய பொருளா தார வளர்ச்சி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சமூக மற்றும் பொருளாதார நீதி போன்ற விழுமியங்களை மாணவர்கள் மூலமாக சமூகத்தில் விதைக்கும் பணியில் பெரும் பங்கு ஆற்றுபவர்கள் பல்கலைக் கழக பேராசிரியர்கள் என்பது அவர்களுடைய கருத்து. அவர்களது பிடியிலிருந்து பல்கலைக்கழகங்களை அரசாங்கத்தின் கைகளில் முழுக்க கொண்டுவர வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். “பெரும் பான்மைவாத அடையாள அரசியலுக்கு”ஆதர வானவர்கள் கைகளில் பல்கலைக்கழகங்கள் இருக்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். இன்று நம் நாட்டிலும் இது தானே நடக்கிறது!
வெளிநாட்டுக் கல்வி மோகம்
நேற்றைய தினம் டிரம்ப் அரசு, மற்றுமொரு கொள்கை முடிவினை அறிவித்துள்ளது. அமெரிக்கா வுக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு விசா வழங்கு வதை நிறுத்தி வைத்துள்ளது. விசா வேண்டி மனுச் செய்திருக்கும் மாணவர்களின் சமூக ஊடகச் செயல் பாடுகளை முழுமையாக தணிக்கை செய்த பின்னரே விசா வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டுக் கல்வியின் மீது மோகம் கொண்டு அதற்காக என்ன விலையென்றாலும் கொடுப்பதற்கு தயாராக இருக்கும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் யோசிக்க வேண்டும். நல்ல திறமை யான மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மேற்படிப்புக் கான தரமான பல்கலைக் கழகங்கள் இந்தியாவில் உருவாக வேண்டும். எது எப்படி இருந்தாலும் டிரம்ப்பின் பதவிக் காலத்தி ற்கு பின்னர் அமெரிக்கா தன் பல பெருமைகளை இழப்பதோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளின் மற்றும் மக்களின் நம்பிக்கையையும், நன் மதிப் பையும் இழப்பது உறுதி! பாவம் அமெரிக்க மக்கள். அவர்களை விட பாவம் அமெரிக்க இந்திய குடியேறி கள், சொந்த செலவில் தங்களுக்கே சூனியம் வைத்துக் கொண்டார்கள். வேறு என்ன சொல்வது!