articles

img

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை பாலியல் படுகொலை: மம்தாவின் வாட்டர்லூ? -வீ.பா.கணேசன்

கடந்த பத்து நாட்களாக மேற்கு வங்கத்தையும் கடந்து, நாடு முழுவதி லும் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ள கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ மனை பாலியல் படுகொலை சம்பவம் அந்த மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலையை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் இந்த வழக்கை மாநில காவல்துறையி டமிருந்து சிபிஐக்கு மாற்றியுள்ள அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, மாநில அரசை நோக்கி பல கேள்விகளை  இன்று எழுப்பி யுள்ளது. 

படுகொலை சம்பவம் 

கடந்த 8ஆம் தேதி இரவு கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த ஓர் இளம் பெண் மருத்துவர் அந்த வளாகத்திற்குள் மூன்றாவது மாடியில் இருந்த கருத்தரங்க அரங்கத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, மிகக்கொடூர மான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

இந்தப் படுகொலை செய்தி மறுநாள் காலைதான் (ஆகஸ்ட் 9) வெளிவந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் சந்தீப் கோஷ், அந்த பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார் என்றுதான் முதலில் அறிவித்தார்.  

பின்பு பயிற்சி மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவமனை ஊழியர்களின் கடுமையான போ ராட்டத்தைத் தொடர்ந்து (இன்னமும் தொடர்கிறது) ஆகஸ்ட் 12 அன்று ஆர் ஜி கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த நான்கு மணி  நேரத்திற்குள்ளாகவே கொல்கத்தா வின் தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராக அவர் நியமிக்கப் பட்டார். 

அதைப் போன்றே, இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி அந்த மருத்துவமனையில் பணி புரிந்து வந்த  தன்னார்வலர் (இது காவல் துறையின் பொதுமக்கள் தொடர்புக்கான ஓர் அமைப்பு) சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.  ஆனால், மாநகர காவல்துறை ஆணையர் கைது செய்யப்பட்டவருக்கும் காவல் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.  

மக்களின் தன்னெழுச்சி

இந்தப் பாலியல் படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதிலும் மக்களை கிளர்ந்தெழச் செய்தது. இளம் பெண்கள் ‘இரவை மீண்டும் கைப்பற்றுவோம்!’ என்ற முழக் கத்துடன் வீதிகளில் குவிந்தனர். 

ஏற்கனவே திட்டமிட்டபடி சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள் இரவு (ஆகஸ்ட் 14) கொல் கத்தாவில் மூன்று முக்கிய மையங்களில்  7 வயதில் இருந்து 70 வயது வரையிலான பெண் களும் அவர்களோடு ஆண்களும் என வயது, பாலின வேறுபாடின்றி ஆயிரக்கணக்கில் குவிந்து ‘நீதி வேண்டும்!’ என இரவு முழுவதும் முழக்கமிட்டனர். சமூக ஊடகங்களின் உதவியால் இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள் மாநிலம் முழுவதிலும் பெருந்திரளான மக்களின் பங்கேற்போடு நடை பெற்றன. 

இந்த ஆர்ப்பாட்டங்கள்  கொல்கத்தா மாநகரில் நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், அதே இரவில், மிகப்பெரும் கும்பல் ஒன்று (சுமார் 7,000 பேர் என்று கூறப்படுகிறது) ஆர் ஜி கர் மருத்துவமனையில் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த முக்கிய சிகிச்சைப் பகுதிகளின் மீது தாக்கு தல் நடத்தி விட்டுச் சென்றுள்ளது. இந்தப் படுகொலையின் முக்கியத் தடயங்கள் இதில் திட்டமிட்டு அழிக் கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக மும் எழுந்துள்ளது. அப்போது மாநில காவல்துறை செயலற்று நின்றதை உச்சநீதிமன்றம் கடுமை யாகக் கண்டித்துள்ளது. 

கேள்வி கேட்ட நீதித்துறை

இந்த மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து மாநகரின் முக்கியப் பகுதிகளில் (எங்கெல்லாம் ஆர்ப்பாட்டம் திட்டமிடப்படுகிறதோ) எல்லாம் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. இத்தகைய அடக்கு முறை நடவடிக்கைகளின் விளை வாக, மக்களிடையே எழுந்த கேள்விகள் பல. இந்த வழக்கு விசா ரணை முறையாக நடக்கவில்லை என்ற முறையீடுகளை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றமும் அவற்றையே ஆகஸ்ட் 13 அன்று கேள்விகளாக எழுப்பியது. 

1) படுகொலை செய்யப்பட்டவர் அந்த மருத்துவமனையில் பணிபுரிபவர் என்ற வகையில் செய்தி அறிந்ததும் கல்லூரி முதல்வர் ஏன் காவல்துறையில் முறையாக புகார் எழுப்பவில்லை? 

2) பதவியில் இருந்து (ஆகஸ்ட் 12) ராஜினாமா செய்த நான்கு மணிநேரத்திற்குள்ளாகவே மற்றொரு கல்லூரியின் முதல்வராக அவரை அவசர அவசரமாக நியமித்தது ஏன்?  இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை மேற்கு வங்க காவல்துறை, சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட் 20 அன்று உச்சநீதி மன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதும், மருத்து வக் கல்லூரி முதல்வரின் நடத்தை மற்றும் காவல்துறையின் மெத்த னம் ஆகியவற்றைச் சாடியது. மேலும்  நாடு தழுவிய அளவில் மருத்துவத் துறையினர் எதிர்கொள் ளும் எண்ணற்ற பிரச்சனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, அவற்றுக்கு உரிய தீர்வு காணும் வகையில் கடற்படையின் மருத்துவப் பிரிவு தலைமை இயக்கு நர் ஆர்த்தி சரீன் தலைமையில் பத்து உறுப்பினர்களை கொண்ட தேசிய செயல் படை ஒன்றை நியமித்து மருத்துவர்களின் பாதுகாப்பு, வேலை நிலைமைகள், அவர்களின் பொதுவான நலம் ஆகியவை பற்றிய இடைக்கால அறிக்கையை மூன்று வாரங்க ளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது. 

இரண்டுமே  அவர் கையில் 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், மேற்கு வங்க மாநிலத்தில் மருத்துவம், உள்துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் அமைச்சராக மம்தா பானர்ஜி தான் உள்ளார். அவரது பொறுப்பின் கீழ் உள்ள இரண்டு முக்கியத் துறை களிலும் இந்தக் கொடூர சம்பவம் எவ்வாறு மோசமாக கையாளப் பட்டது என்பதைத்தான் அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் அம்ப லப்படுத்துகின்றன. 

கிட்டத்தட்ட கடந்த 30 ஆண்டு களுக்கும் மேலாக பொதுவெளி யில் சிங்கூர், நந்திகிராம் என பல்வேறு முழக்கங்களுடன்  எண் ணற்ற போராட்டங்களை நடத்தி, மாநிலத்தில் ஆட்சியைக் கைப் பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த சம்பவத்தின் விளைவாக மக்களிடையே கடுமையான வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். அவரது 13 ஆண்டுகால ஆட்சியில் இத்தகைய ஒரு நிலையை அவர் சந்தித்ததேயில்லை எனலாம்.  கட்சி வேறுபாடுகளை எல்லாம் கடந்து, மக்கள் எழுச்சியோடு எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் பதில ளிக்க இயலவில்லை. 

எதிர்க்கட்சிகள் விஷமத்தன மான தீப்பிழம்புகளை விசிறி விடுவதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்டியுள்ள நிலையில், திரிணாமுல் கட்சியின் மூத்ததலை வரும் மாநிலங்களவை உறுப்பின ருமான சுகேந்துசேகர்ரே வெளி யிட்ட (கல்லூரி முதல்வரையும் கொல்கத்தா காவல் துறை ஆணை யரையும் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்பது உட்பட) கடுமையானகருத்துக்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக இருந்தன.  

அதற்குப் பரிசாக, அவருக்கு காவல்துறையிடமிருந்து சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்வதாகப் புகார் கூறி மருத்து வர்கள் கழகத்தின் நிர்வாகி ஒருவ ருக்கும், மற்றொரு மருத்துவ ருக்கும் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மக்களின் கேள்விகளுக்கு முறையான பதிலை முன்வைக்காமல், சமூக ஊடகங்களின் மூலம் எதிர்க்கட்சி கள் மக்களின் மனக்கசப்பை விசிறி விடுகின்றன என்ற மம்தாவின் புகார் பொதுவாக மக்கள் மத்தியில் எடுபடவில்லை.  

எதிர்க்குரலின் ஆழம்

திரிணாமுல் காங்கிரஸ் இவ்வாறு தற்காப்பு நிலையை எடுப்பதன் சில அம்சங்களை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். உள்ளூர் அளவிலான அடிமட்டத் தலைமையின் கருத்துகளை செவிமடுக்காமல், நிர்வாக இயந்திரத்தையே நம்பி யிருப்பது இப்போது அக்கட்சியை திருப்பித் தாக்கியுள்ளது. 

இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட திரிணாமுல் அனுதாபிகளான பெண்கள் கூட மாநில அரசு பெண்களுக்கென அமலாக்கி வரும் லஷ்மி பண்டார் என்ற திட்டத்தின் மூலம் வழங்கும் உதவித்தொகையை புறக்க ணிப்போம் என்ற முழக்கத்தையும் எழுப்பியுள்ளனர் என்பதும் குறிப்பி டத்தக்கது. திறமையற்ற நிர்வாக  இயந்திரம் அதன் ஆதரவாளர்க ளையும் கூட இவ்வாறு கோபத் திற்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாக்கியுள்ளது. இந்த திடீர் எழுச்சி எத்தகைய தீவிர மாற்றத் தைக் கொண்டுவரும் என்று இப்போது மதிப்பிட முடியாது. 

எனினும் கடந்த மக்களவை தேர்தலில் நகர்ப்புற வார்டுகள் பலவற்றிலும் உள்ளாட்சி அமைப்பு பகுதிகளிலும் திரிணா முல் எதிர்க்கட்சிகளை விடப் பின் தங்கியிருந்தது. இப்போது கிளம்பி யுள்ள எதிர்ப்பு அலையானது, அந்த ஏமாற்ற உணர்வுகளின் பல இழைகள் ஒன்று சேர்ந்ததால் உருவானதாக இருக்கக் கூடும் என்பதையே இந்த எதிர்க்குரலின் அளவும் ஆழமும்எடுத்துக் கூறுகின்றன. 

மம்தா, தன் எதிரிகளை வெற்றி கொண்ட பல தருணங்களை கடந்த 30 ஆண்டுக்கால வங்காள அரசியல் கண்டிருக்கிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸின் இன்றைய செயலற்ற தன்மை அதன் பிம்பத்தை கடுமையா கச் சிதைத்துள்ளது. ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்தெல்லாம் தப்பிப் பிழைத்து வந்த மம்தா இப்போது வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் அவரை பின்னுக்கு இழுப்பதாகவே இருக்கிறது. எதிர்க் கட்சிகளை கைகாட்டி இந்த சம்பவத்தில் அவர் தப்பிக்க முடி யாது என்பதையே நீதிமன்றங்க ளும் ஊடகங்களும் ஒருமித்த குரலில் எடுத்துக் கூறியுள்ளன. ஆர் ஜி கர் சம்பவம் அவருக்கு ஒரு வாட்டர்லூ ஆக மாறுமா என்பதை வருங்காலம் விரைவில் எடுத்துக் கூறும்.