articles

நேர்மையைக் கடைப்பிடிக்காத செபி தலைவர் பதவி விலக வேண்டும்

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ நிறுவனம், அதானி குழுமத் தின் பல்வேறு சட்ட மீறல்கள் குறித்தும், பங்குச் சந்தை விலைகளில் அவை தில்லு முல்லுகள் செய்தது குறித்தும் விசாரணை செய்துவந்த, இந்திய பங்கு மற்றும் பரி வர்த்தனை வாரியம்  ‘செபி’ (SEBI) நிறுவனத் தின் தலைவர், மாதவி பூரி புச்சின் பங்க ளிப்பு குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல் களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தி ருக்கிறது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையின்படி, மேற்படி ‘செபி’ நிறு வனத்தின் தலைவராக உள்ள மாதவி பூரி புச்சே, அதானி குழுமத்தின்கீழ் பதிவு செய் யப்பட்டுள்ள பெயரளவிலான நிறுவன மான  குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிடிஸ் ஃபண்ட்  என்னும் நிறுவனத்தில் 2015இல் தன் பங்குகளை முதலீடு செய்திருந்தார். பின்னர் புச் ‘செபி’ நிறுவனத்தில் ஒரு முழு நேர உறுப்பினராக சேர்வதற்கு முன், 2017இல் அவருடைய முதலீடுகள்  அவருடைய கண வரின் பெயருக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு அவருடைய பங்குகள் அவருடைய கண வரின் பெயருக்கு மாற்றப்பட்ட பின்னரும் கூட, புச் 2018இல் ஒரு மின்னஞ்சல் மூலமாக முதலீட்டை மீட்டெடுப்பு செய்திருக்கிறார்.     

பல்லாண்டுகளாய்  நடந்த தில்லு முல்லுகள்

ஏற்கனவே ‘செபி’யின் புலன்விசார ணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி யால் பயன்படுத்தப்பட்டுவரும் பெர்முடா- மொரிசியஸ் நிதி கட்டமைப்பு என்னும் பெயரளவிலான நிறுவனத்தில் புச் முதலீடு செய்திருந்தார் என்று, ஊழல்களை வெளிச் சத்திற்குக் கொண்டுவந்த ஒருவரின் அறிக் கையை அடிப்படையாகக் கொண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் நிரூபித்திருக்கி றது. அதானி குழுமம் “வெட்கக்கேடான முறைகளில் பங்குகளில் தில்லுமுல்லுகள் செய்தல் மற்றும் கணக்குகளில் மோசடி கள் செய்தல் போன்றவற்றை பல பத்தாண் டுகளாகச் செய்து வந்தது” என்று குற்றஞ் சாட்டி 2023 ஜனவரியில் ஹிண்டன் பர்க் நிறுவனம் ஓர் அறிக்கையை வெளி யிட்டதை இங்கே நினைவுகூர்ந்திடுவோம்.

உச்சநீதிமன்றக் குழுவின் அறிவுறுத்தல்

அதானி குழுமமானது தங்கள் முத லீடுகளைத் தங்களுடைய சொந்த நிறு வனங்களுக்குள்ளேயே சுழற்சி முறையில் முதலீடு செய்துகொண்டிருந்தது என்ப தைத் தடய அறிவியல் பகுப்பாய்வுகள் மிகவும் தெளிவாக ஆவணப்படுத்தி இருக் கின்றன.   மார்ச் 23இல் அதானி குழுமத்தின் நிறுவனங்களில் சட்டமீறல்கள் நடந்துள்ள னவா என்பதை ஆய்வு செய்வதில் ஒழுங் காற்று மையம் தோல்வியடைந்திருக் கிறதா என்பதைப் புலன் விசாரணை செய்வ தற்காக ஆறு நபர்கள் கொண்ட வல்லுநர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது.  

மேலும் உச்சநீதிமன்றம், ‘செபி’யிடம் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்க ளில் பல்வேறு பொது பங்குதாரர் விதி முறைகள் மீறப்பட்டதா என்றும், தொடர்பு டைய தரப்பினருடனான பரிவர்த்தனை களை வெளியிடத் தவறியதா என்றும் அத்து டன்  அதானி குழுமத்தின் பங்குகளின் விலைகளில் ஏதேனும் முறைகேடு நடந்தி ருந்தால் அவை குறித்துக் குறிப்பாக விசாரிக்குமாறும்  கேட்டுக் கொண்டது.

சந்தேகத்துக்குரியது - கேள்விக்குரியது\

2023 மே மாதத்தில், வல்லுநர் குழு, “அதானி குழுமத்தின் பெயரளவிலான நிறு வனங்களில் நடந்ததாகக் கூறப்படும் பணப் பரிவர்த்தனைகளில் விதிமீறல்கள் இருந்ததா என்று ஆராய்ந்திட அறிவுறுத்தப் பட்ட ‘செபி’ நிறுவனம் அவை தொடர்பாக எதுவுமே கூறவில்லை”  என்று நீதிமன்றத்தி ற்குத் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு, அதானி குழுமத்தின் நிறுவனங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட பல்வேறு புகார்கள் குறித்து ‘செபி’ ஏற்கனவே விசாரணை செய்திருந்திருக்கிறது என்பதை இங்கே நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.

அதானி குழுமத்தின் பெயரளவிலான நிறுவனங்கள் மேற்கொண்ட தில்லுமுல்லு கள் குறித்து எந்த ஓர் உண்மையையும் வெளிக்கொணர ‘செபி’ தவறி இருக்கிறது. ‘செபி’யின் தலைவராக இருக்கும் புச் அதானி குழுமத்தின் வினோத் அதானி சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்திருப்பதை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கும் நிலையில் ‘செபி’யின் செயல்பாடுகள் சந் தேகத்திற்குரியதாகவும், கேள்விக்குரியதா கவும் மாறியுள்ளன.

தலைவர் புச் மற்றும் ‘செபி’யின் பதில்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை “பொ ருத்தமற்றவை”  என்றும், “பண்புப் படு கொலை” (“character assassination”) என்றும் நிராகரித்திருக்கின்றன. புச், ஓர் அறிக்கை வாயிலாக, தனது கணவரின் பால்ய சினேகிதன் அனில் அஹூஜா நிதி நிறுவனம் ஒன்றை நிறுவியதால் அதில் அவர் முதலீடு செய்திருந்தார் என்று கூறி யிருக்கிறார். ஆனால் அவர் எப்படி அதானி  நிறுவனத்தின் இயக்குநராக மாறினார் என்று அவர் அதில் குறிப்பிடவில்லை.

அதானியை விசாரிப்பதிலிருந்து  மாதவி விலகியிருந்தாரா?

‘செபி’ நிறுவனம் அதானி குழுமத்தின் முதலீடுகள் குறித்தும், பங்குகள் குறித்தும் உரிய நேரத்தில் வெளிப்படுத்தியதாகக் கூறியுள்ளபோதிலும், புச், அதானியுடன் கொண்டிருக்கும் தொடர்புகளை  முழுமை யாக வெளிப்படுத்தினாரா என்பது குறித்து ‘செபி’ தெளிவானமுறையில் கூறிட வில்லை. அதானியை விசாரணை செய்வதி லிருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்டு விட்டாரா என்பது குறித்தும் தெளிவான முறையில் பதிலேதும் இல்லை. உச்சநீதி மன்றத்திற்கோ அல்லது 2023 மார்ச் மாதத்தில் அமைக்கப்பட்ட ஆறு நபர்கள் கொண்ட வல்லுநர் குழுவிற்கோ புச் அதானி குழுமத்தின் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதை வெளிப்படுத்தியி ருந்தாரா என்பது குறித்துக் காட்டுவதற்கும் எந்தத் தகவலும் இல்லை.

அதானி குழுமத்திற்கு எதிரான 22 குற்றச்சாட்டுகளில் 20 குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை முடிந்துவிட்டதாகவும், மீதம் உள்ள இரண்டு குற்றச்சாட்டுகள் குறித்தும் மூன்று மாதங்களுக்குள் விசா ரணை முடிந்துவிடும் என்றும் 2024 ஜன வரியில் ‘செபி’ உச்சநீதிமன்றத்தில் தெரி வித்தது. 2024 மே மாதத்தில் ‘செபி’ மேற்படி இரண்டு குற்றச்சாட்டுகளில் ஒன்றில் விசாரணை முடிவடைந்துவிட்டது என்றும் ஒன்று மட்டுமே மீதம் இருப்பதாகவும் தெரி வித்துள்ளது.

அதானி - மாதவி  2 முறை சந்திப்பு

அதானி குழுமத்திற்கு எதிராக ‘செபி’ எவ்விதமான பாதகமான கண்டு பிடிப்புகளையும் இதுவரை கொண்டுவர வில்லை என்பதும், இவ்வாறு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே ‘செபி’யின் தலைவரான புச் கவுதம் அதா னியை இரு தடவைகள் சந்தித்திருந்தார் என்பதும் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளி யிட்டுள்ள ஆழமான குற்றச்சாட்டுகளுக்கு நம்பகத்தன்மையை அளிக்கிறது.

‘செபி’ தலைவரின் தனிநபர் நேர்மை (personal integrity) மற்றும் ஒரு சுதந்திர மான ஒழுங்காற்று அமைப்பின் தலைவரி டமிருந்து எதிர்பார்க்கப்படும் நன்னடத்தை யின் உயர்தரம் (high standards of probity) ஆகிய இரண்டையும் புச் பேணு கிறாரா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்ச னையாகும். இந்த இரண்டையும் மனதில் நிறுத்தி மாதவி புச் தன் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும்.

மறைத்திட முடியாது - மக்கள் நம்பமாட்டார்கள்

காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் அந்நிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு இந்தியாவின் பங்குச்சந்தைகளையும், பொருளாதா ரத்தையும் நலிவடையச் செய்வதற்காக இவ்வாறெல்லாம் ‘செபி’யின் தலைவருக்கு எதிராகக் குற்றம் சாட்டுகின்றன என்று பாஜ க-வும் மோடி அரசாங்கமும் இந்தக் குற்றச் சாட்டுகளை மறுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ‘செபி’ தலைவரின் தில்லுமுல்லுகளை இத்தகைய அபத்த மான நடவடிக்கைகள் மூலமாக மூடி  மறைத்திட முடியாது. அரசின் இக்கூற்று களை சிறுமுதலீட்டாளர்களோ மக்களோ நம்பப் போவதுமில்லை. 

நவீன தாராளமய சீர்திருத்தங்களின் கீழ் நடைபெறும் ஆட்சியில் பெரும் நிதி மூலதனமும், பெரும் வர்த்தக நிறுவனங்க ளும் எப்படி ஒழுங்காற்று மையங்களையும் கைப்பற்றும் என்பதை புச் விவகாரங்கள் வெளிப்படையாகவே காட்டுகின்றன.

இவ்வாறு புதிதாக வெளிவந்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் அதானி குழுமம், எப்படியெல்லாம் சட்ட மீறல் களை மேற்கொண்டு வருகின்றது, பங்குச் சந்தை விலைகளில் தில்லுமுல்லுகள் செய்கின்றது என்பவை தொடர்பாக நீதி மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு விசா ரணை நடத்திட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திடுவதே சாலச் சிறந்ததாக அமைந்திடும். இல்லையெனில், ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு இந்த விவகா ரங்களை ஒட்டுமொத்தமாக விசாரணை செய்வது ஒன்றே வழியாகும்.  

ஆகஸ்ட் 14, 2024, 
தமிழில் : ச.வீரமணி