வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்க ளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் கிரா மப்புற வறுமையைப் போக்கவும் ஒன்றிய, மாநிலஅரசுகளின் திட்டங்களை அமலாக்கம் செய்யும் சிறந்த அரசுத்துறை நிறுவனம்தான் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (DRDA) ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அதனுடைய நிதி ஆதாரத்தில் செயல் படும் இந்த நிறுவனம் 1999 முதல் அரசின் திட்டங்களை கிராமப்புற மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்க்கிற பணியை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இணைப்புப் பாலமாகச் செயல்படுகிறது.
கிராமப்புற உள் கட்டமைப்பை சீர்குலைத்தல்
பெரும்பாலான வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு 75 சதவீதம் மாநில அரசு 25சதவீதம், செலவழிக் கின்றன. சில சிறப்புத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு 90 சதவீதம் வரை செலவு செய்கிறது. கிராமப்புறங்க ளில் பிரதமர் வீட்டு வசதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள், இயற்கை எரிவாயு உரமேலாண்மை, ஊரகச் சாலைகள் மேம்பாடு நபார்டு நிதியின் கீழ் ஊரக சாலையை, மாநிலச் சாலைகளுடன் இணைத்தல், நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுத்திட்டங்கள் அமலாக்கம், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி சேவை மையம் உள்ளிட்ட ஊரக கட்டிடங்கள், விளையாட்டுத் திடல்கள் போன்றவற்றின் உருவாக்கத்தில் மிகப் பெரும் பங்காற்றுகிறது. இத்தகைய கிராமப்புற உள் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் வேலையையே ஒன்றிய பாஜக அரசு செய்கிறது.
கூலி வேலை முடக்கம்
மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வேலை அளித்து ஊதியம் வழங்குவது வரை முழுமையான செயலாக்கத்தில் ஈடுபடுகிறது. வறுமை ஒழிப்பு வேலை உத்தரவாதம், ஆண், பெண் இருபாலருக்கும் சமகூலி, இத்துடன் இயற்கை வளம், நீர் வளம், விவசாய மேம்பாடு கிராமப்புறங்களில் மண் சாலைகள் அனைத்தையும் தார்ச்சாலைகளாக மாற்றும் பணியிலும், பட்டியல் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்விடங்களில் குடிநீர், சாலைவசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வச திகளை மேம்படுத்துவதும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் முக்கியப் பணியாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சமூக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராமப்புறங்களில் நலிவடைந்த மக்களுக்காகச் செயல்படும் அமைப்பு களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுக்கள் மேற்கண்ட பணிகளை ஒழுங்குப்படுத்தவும் பயனாளிகளை தெரிவு செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களு க்கு வேலை வழங்கும் திட்டம் பாஜக அரசால் முடக்கப்படுகிறது.
நெருக்கடியில் சிக்கும் ஊராட்சி அமைப்புகள்
இத்தகைய பணிகள் செய்யும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முறையையே வரும் 2022 மார்ச் 31இல் ஒன்றிய அரசு இழுத்து மூடுவதாக மாநில அரசு களுக்கு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு கிராமப்புற வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு, உள் கட்டமைப்பு வசதிகளுக்கு இனி நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்படும் என்று அறிவிக்காமல் அபாயச் சங்கை ஓங்கி ஒலிக்கிறது. இதனால் கிராமப்புறங்களில் பல்வேறு விதமான நலத் திட்டங்களுக்கு நிதி கிடைக்கா மல் பின்தங்கிய நிலையிலேயே நீடிக்க வேண்டி இருக்கும். அதனால் மாநில அரசுகள் நிதி நெருக்கடி யில் சிக்கிக் கொள்வதோடு மக்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் சூழல் ஏற்பட்டுள் ளது. உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் அமலாக்கப்படும் திட்டங்கள் முடக்கப் படுவதால் மக்களுக்கு பெரிதாக ஒன்றும் செய்ய முடி யாது கையறு நிலைக்கு தள்ளப்படும் அவல நிலை யை ஒன்றிய அரசு திட்டமிட்டு உருவாக்கியுள்ளது.
இலவச அரிசியை பறித்த மோடி அரசு
கொரோனா பெருந்தொற்று பரவல் தொடர்ந்து நீடித்து அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவம், ஆக்சிஜன் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் மரித்தே போனார்கள். பி.எம். கேர்ஸ் நிதியில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை எடுத்து மக்கள் உயிரை காப்பாற்ற பிரதமர் மோடியின் மனம் இரங்கிடவில்லை. ஊரடங்கின் காரணமாக பெரு நகரங்களில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த கிராமத்திற்கு திரும்பி உண வின்றி தவித்தனர். நாடு முழுவதும் உணவுப் பொட்ட லங்களை பல்வேறு அமைப்புகள் கொடுத்த போதும் மோடி அரசுஅசையவில்லை. தேசம் முழுவதும் மக்கள் கூட்டம் உணவுக்கா கவும் சுகாதாரம் கேட்டும் தவித்த போது, கொரோனா கால நிவாரணம், இலவசமாக உணவு தானியங்கள் வழங்கக்கோரி எழுந்த போராட்டம் காரணமாக மோடி அரசு ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, கோதுமை கொடுத்தது. வேலையிழப்பு. வருவாய் இல்லாமல் பட்டினியால் மக்கள் வதைபடும் போது பட்டினிச்சாவுகள், தற்கொலைகள் அதிகரித்துள்ள சூழலில் 5 வயது சிறுவன் விழுப்புரத்தில் உண வில்லாமல் பசியால் தமிழகத்தில் மரித்துப் போன சம்பவம் நடந்துள்ள நிலையில் தான், 2021 டிசம்பர் மாதம் முதல் கொரோனா காலத்தில் கொடுத்து வந்த 5 கிலோ இலவச அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ கொண்டைக்கடலை பருப்பு வழங்குவதை மோடி அரசு நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. பொருளாதாரம் புத்துயிர் பெற்று வருவதாலும் சந்தை யில் விற்பனை சிறப்பாக இருந்ததாலும் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு இலவச ரேசனை நிறுத்திய தாகத் தெரிவித்திருக்கிறது.
விலைவாசி உயர்வு விண்ணை முட்டுவதால் மக்க ளின் வாங்கும் சக்தி குறைந்து போய் இருக்கிறது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பெட்ரோலியப் பொருட்கள் விலைஉயர்வு மற்றும் ஊரடங்கின் காரணமாக சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன. வேலையின்மை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் தான் பாஜக அரசு பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி இலவச ரேசனை நிறுத்தியது. ரேசன் பொருட்கள் பெற்று வந்த 80 கோடி மக்களின் தலை யில் பேரிடியை இறக்கியுள்ளது. அரசின் வருவாயிலி ருந்து பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்த நிதியை விட கூடுத லாக உணவு மானியத்திற்குச் செலவிட முடியாது என்று பாஜக அரசு பகிரங்கமாக தெரிவித்துள்ளது. 80 கோடி மக்கள் பசியால் துடிக்கும் போது, உணவுக் கிடங்குக ளில் தேங்கிக் கிடக்கும் தானியங்கள் பாழாய்ப் போகும் போது கூட அதை மக்களுக்கு கொடுக்க முடியாத ஒரு மோசமான அரசாகவே மோடியின் அரசு இருக்கிறது.
கூலி பாக்கியும் உச்சநீதிமன்றத் தலையீடும்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ரூ. 10,000 கோடி நிலுவையில் இருப்பது குறித்த வழக்கு கடந்த டிசம்பர் 14 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டபோது, ஊதியத்தின் நிலுவை தொகை எப்போது வழங்கப் படும் என்று கூட மோடி அரசால் சொல்ல முடிய வில்லை. உடனடியாக ஊதியம் வழங்கவும், நிலுவை யில் உள்ள ஊதியத்திற்கு வட்டி சேர்த்து வழங்கவும் உரிய பதில் தர வேண்டும் என்று உச்சநீதிமனற்ம் ஒன்றிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. நிதி ஒதுக் கீட்டையும், வேலை நாட்களையும், சட்டக்கூலியையும் வாய்மொழி உத்தரவில் குறைத்த பாஜக அரசு வேலை செய்த நாட்களுக்கு ஊதியத்தை நிறுத்தி, தொழிலா ளர்களை வேலைக்கு வராமல் தடுக்கும் மோசடி வேலை யில் மோடி அரசு மிகவும் வேகமாக செயல்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சம் கோடி ரூபாய்களை தள்ளுபடி செய்வதோடு, வரிச்சலுகை கொடுப்பது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் கொடுக்கச் செய்வது, கடன் வாங்கியவர்கள் கடனை கட்டாமல் வெளியூர் தப்பி செல்ல ஏற்பாடு செய்வது, பிறகு அந்தக் கடன்களை வராக்கடனாக கணக்கிட்டு அதனை தள்ளுபடி செய்து, தேசிய வங்கிகளை நட்டத்திற்கு உள் ளாக்குவது ஆகியவையே மோடி அரசின் வாடிக்கை யாக இருக்கிறது. இத்தகைய மோடி அரசின் கொள்கைகளே கிராமப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்களை ஒழிக்கும் நடவடிக்கைகளாக இருக் கின்றன. அத்துடன் வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கான நிதியை கார்ப்பரேட்களுக்கு மடை மாற்றம் செய்ய மோடி அரசு தீவிரம் காட்டுகிறது. இத்தகைய மோடி அரசின் இழி செயலை, கிராமப்புற மக்களின் வாழ்வா தாரத்துக்கு மோடி அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்துவோம்! கிராமப்புற ஏழைகள் மீது தொடர் தாக்குதலை நடத்தும் மோடி அரசுக்கு எதிராக, அனைத்து உழைப்பாளி மக்களையும் ஒன்று திரட்டுவோம்!
கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்.