articles

img

பொதுத்துறையும் அரசியல் சட்டமும் - தாமஸ் பிராங்கோ

அரசமைப்புச் சட்டத்தின் வலிமையானது, ஒவ்வொரு குடிமகனுக்கும் அதைப் பாதுகாப்பதில் உள்ள உறுதியிலேயே உள்ளது. ஒவ்வொரு குடிமகனும் இந்தப் பாதுகாப்பில் தன் பங்கைச் செய்யக் கடமைப்பட்டால் மட்டுமே, அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாப்பானவையாக இருக்கும். - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

அரசியலமைப்பை ஒவ்வொரு குடிமகனும் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை, பொதுத்துறை மற்றும் பொது சேவைகளுக்கான மக்கள் ஆணையத்தின் “தனியார் மயமாக்கல்-இந்திய அரசியலமைப்பிற்கு ஓர் அவமா னம்” என்ற தலைப்பிலான இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதிர்ச்சி தரும் விபரங்கள்

பொருளாதார நிலை குறித்த அந்த ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவில் சுமார் 230 மில்லியன் மக்கள் (23 கோடி) வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். மேலும் கிட்டத்தட்ட 190 மில்லியன் (19 கோடி) மக்கள், அதாவது மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைவாக உள்ளனர்.15-49 வயதுக்குட்பட்ட பெண்க ளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்; ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை களில் கிட்டத்தட்ட 35 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றிய வர்களாகவும், 20 சதவீதம் பேர் மிக மோசமான உடல் நிலையிலும் உள்ளனர். நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் வேலையின்மை இப்போது 14 சதவீதத்தை தாண்டியுள்ளது. வேலையின்மை மற்றும் வருமானக் குறைவால் ஏற்படும் கடுமையான மன அழுத்தத்தின் விளைவாக, கடன்சுமை அபாயகரமாக அதிகரித்து வரு கிறது. இப்போது டிஜிட்டல் அடைமொழியுடன் வருகின்ற கடனுதவி சுறாக்கள், எந்தவிதமான வரையறைகளும் இல்லாத கந்து வட்டி விகிதங்களை வசூலிக்கின்றன. 2019-20  ஒரே ஆண்டில் மட்டும், சிறு குறு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் தற்கொலைகளின் எண் ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவின் கோடீஸ்வரர்களின் சொத்துக் குவிப்பில் எந்த குறையும் இல்லை. தி எக னாமிஸ்ட் அறிக்கையின் படி, முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 2016 மற்றும் 2020 க்கு இடையில் 350 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் அவரது சக தொழிலதிபரான கெளதம் அதானியின் நிகர மதிப்பு 750 சதவீதம் அதிகரித்துள்ளது. மற்ற பெரும் பணக் காரர்களும் ஒரு வருடத்திற்குள் தங்கள் செல்வத்தை 75 முதல் 85 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர்.  நாட்டின் பொருளாதார நிலை குறித்து அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள சில அம்சங்கள் இவை.

இத்தகைய பொருளாதார போக்குகள் அரசியல மைப்புக்கு எதிரானவை அரசியலமைப்பின் முன்னுரை, பிரிவு 38ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, இந்திய அரசை ஒரு “சோசலிச” மற்றும்  “நலன் காக்கும்” அரசாகவும் மதிப்பீடு செய்தது. மேலும் அது, அனை வருக்கும் “சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை தரவல்ல ஒரு சமூக ஒழுங்கிற்கு” உத்தரவாதம் அளிக்கிறது. இன்னும் கூடுதலாக, அது சமூகத்தின் பொருள் வளங்களின் உரிமையும் கட்டுப்பாடும், சிறந்த முறையில் பொது நலனைப் பேணுவதற்குச்  பகிர்ந்தளிக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதை, அர சுக்குக் கட்டாயமாக்குகிறது; பொருளாதார அமைப்பின் செயல்பாட்டினால் செல்வம் மற்றும் உற்பத்திச் சாத னங்கள் ஒரே இடத்தில் குவிந்து, மக்களுக்கு பாதிப்பு  ஏற்படுத்துவதை தவிர்க்கவும் இது உதவுகிறது. ஆனால், அரசு மேற்கொள்ளும் தீவிர தனியார்மய மாக்கல், சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்கும். எனவே இது அரசியலமைப்பிற்கு முரணானது என்றும் அறிக்கை விளக்குகிறது.

இட ஒதுக்கீடு கொள்கையும் பொதுத்துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை

பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, அரசியலமைப் பின் பாதுகாப்பு மற்றும் மக்கள்நல விதிகளின் தனித்து வமான பகுதியாக இடஒதுக்கீடு உள்ளது என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பல நூற்றாண்டுகளாக அந்த சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட பாரபட்சத் தைக் கருத்தில் கொண்டு, விரிவான விவாதங்களுக் குப் பிறகு அரசியலமைப்பு நிர்ணய சபை அந்த விதி களை அறிமுகப்படுத்தியது. இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் “அடிப்படை கட்டமைப்பின்” ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும், அதை அரசியலமைப்பு வழிமுறைகள் மூல மாகவோ அல்லது வேறுவிதமாகவோ மாற்ற முடியாது. தனியார்துறைகள், இடஒதுக்கீடு கொள்கையை பின் பற்றுவதில்லை. எனவே தனியார்மயமும், ஒப்பந்தத் தொழிலாளர் முறையும் இந்த அரசியலமைப்பு விதிக்கு எதிரானது என பல தரவுகளுடன் அறிக்கை கூறுகிறது. நிதி ஆயோக் செயல்பாடுகள் இக் கோட்பாடுகளை கேள்விக் குறியாக்குகின்றன. 1950ல் அரசாங்க தீர்மா னத்தின் மூலம் அமைக்கப்பட்ட திட்டக் கமிஷன்,  அடிப்படை உரிமைகள் மற்றும் அரசின் கொள்கை வழி காட்டுதல் கோட்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பு விதிகளை, நடைமுறைப்படுத்துவதற்காக வடிவ மைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். 

ஆனால், திட்டக் கமிஷன் போலல்லாமல், ‘நிதி ஆயோக்’ என்பது ஒரு தன்னிச்சையான “திங்க் டேங்க்”  (சிந்தனையாளர்களின் மன்றம் போல்) மட்டுமே. அதன் அமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டின் அடிப்படை யில் அது வெளிப்படைத் தன்மையற்றதாகவும்,  இந்திய ஒன்றியத்தின் பகுதிகளான மாநிலங்களின் நலன்க ளுக்கு முறையான மற்றும் போதுமான பிரதிநிதித்து வத்தை அனுமதிக்காததாகவுமே உள்ளது.  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சிக் கொள்கைகளை மேலும் அவமதிப்பதாகவே, நிதி ஆயோக்கின் நடவடிக்கை உள்ளது. வங்கிகள் தனி யார்மயம் உட்பட பரிந்துரைப்பது நிதி ஆயோக் தான் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொது நோக்கத் திற்காக நிலம் கையகப்படுத்துதல் என்பது தனியார் நல னுக்கானதாக மாறி இருக்கிறது.

பொதுத்துறை பங்குகள் விற்பனை எனும் முடிவானது, அரசியலமைப்பிற்கு எதிராக இருப்பதால் அடிப்படையி லேயே பலவீனமாகிறது என்பதுடன், தற்போது பின்பற் றப்படும் பங்குவிற்பனை திட்டத்தால், தனிநபர் சட்டங்கள் மீறப்படுவதும் நடக்கிறது. உதாரணமாக, “பொது நோக்கம்” என்ற பெயரில் நிலம் கையகப் படுத்தும் சட்டத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களுக் காக (PSUS) கடந்த காலத்தில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டன. அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவ னங்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக நிலம் எடுப்பதைக் குறிக்கும் வகையில் அந்த நேரத்தில் ‘கையகப்படுத்தல்’ என்ற இந்த சொல்லாடல் வரையறுக்கப்பட்டது. மாநில அரசுகள்தான் அவ்வாறு நிலங்களை கையகப்படுத் தின. அத்தகைய நிலங்களை தனியார் நிறுவனங்களு க்கு மாற்ற அனுமதிப்பதும், வேறு வழிகளில் பணமாக்க முயற்சிப்பதும்,  நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மீறுவதாகும். பொதுத்துறை நிறுவனங்கள் திறனற்றவை என்கிற வாதம் 1991லிருந்து முன்வைக்கப்படுகிறது;  எந்த அடிப்படை நியாயமும் இல்லாமல்,  குறிப்பிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் செயல்படும் சூழல்களைக் கணக்கில் கொள்ளாமல் இவ்வாதம் முன்வைக்கப் பட்டது. அரசாங்கமும் ஊடகங்களும் இந்த வாதத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லாத போதும், இதையே சத்தியவாக்காக ஓயாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, ராஷ்டிரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட்டின் விசாகப்பட்டினம் எஃகு ஆலைக்கு, அதன் தனியார் துறை போட்டியாளர்க ளைப் போலல்லாமல், பல ஆண்டுகளாக இரும்புத் தாது சுரங்கங்கள் ஒதுக்கப்படவில்லை. ஏர் இந்தியா மற்றொரு சிறந்த உதாரணம். இதுபோன்ற பல எடுத்துக் காட்டுகள் உள்ளன என அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.

எல்ஐசி, ஒரு மாபெரும் அறக்கட்டளை ஆகும். 1956-ல் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) உருவானபோது,   முதலீடாகப் போட்ட ரூ.5 கோடிதான் அரசாங்கம் இதுவரை எல்.ஐ.சிக்கு செய்துள்ள ஒரே முதலீடு. 2011ல், அடிப்படை முதலீட்டு வரம்பு 100 கோடி யாக உயர்த்தப்பட்ட போது,  எல்ஐசி, தனது  சொந்த நிதியில் இருந்தே இதனை ஈடுகட்டியது. இதன் அனைத்து லாபங்களும், அதன் பங்குக்காக அரசாங்கத் திற்கு தரப்படும்  5 சதவீத ஈவுத்தொகையைத் தவிர, மீதம் அனைத்தும் பாலிசிதாரர்களுக்கு விநியோகிக்கப்படு கிற, ஒரு தனித்துவ நிறுவனமாக இது கட்டமைக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டை அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டாலும், இந்த பங்கு விற்பனைத் திட்டம் பாலிசிதாரர்களின் நம்பிக்கையை குலைத்து, அதன் மூலம் எதிர்காலத்தில் அதன் வாய்ப்புகளை மோசமாக பாதிக்கும், தேசம் முழுமைக்கும் ஆயுள் காப்பீட்டினை எடுத்துச் சென்ற பெருமைக்கு பங்கம் விளைவிக்கும், என அறிக்கை வாதிடுகிறது.

முதலாவதாக, குத்தகைக்கு விட உத்தேசிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பீடு உண்மையில் ரூ.6 லட்சம் கோடியாக இருக்குமா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை. அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் கோடி திரட்டப்படலாம் என அறிக்கை கூறுகிறது. தேசிய சொத்து பணமாக்குதலின் விரிவான பகுப்பாய்வு, எதிர்கால வருவாய்கள் எவ்வாறு வறண்டு போகும் என்பதைக் காட்டுகிறது. பொது - தனியார் கூட்டு என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல பகுதி களிலும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்று அறிக்கை விவரிக்கிறது. அச்சுறுத்துகிற இந்த தனியார்மயமாக்கல் திட்டங்க ளினால் இந்திய அரசு முழுமையாக சுரண்டப்படுமா னால், தொழில்நுட்ப சுயசார்பு உட்பட, மேற்குறிப்பிடப் பட்ட அனைத்து முனைகளிலும் சந்திக்கவுள்ள எதிர்கால சவால்களை அது எதிர்கொள்ள முடியாது. இந்த அறிக் கையானது, நிபுணர்களின் உடனடி பகுப்பாய்வு ஆகும், இது அரசாங்கத்தால் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும், இல்லையெனில் குடிமக்கள் அரசியல மைப்பைப் பாதுகாக்க எழுவார்கள்.

கட்டுரையாளர் : வங்கி ஊழியர்  தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர்,  தமிழில் : கிருத்திகா பிரபா, சேலம்