ரயில்வேக்கு என இருந்த தனி பட்ஜெட் தூக்கி எறியப்பட்டு எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இந்தியாவில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய பொதுத் துறையான இந்திய ரயில்வே சிறப்புடன் செயல்பட பிரிட்டிஷ் காலத்திலே இருந்து பின்பற்றப்பட்டு வந்த பொது பட்ஜெட்டிற்கு இணையான ரயில்வே பட்ஜெட்டை மோடியின் ஒன்றிய அரசு நிராகரித்து விட்டது. ரயில்வே பட்ஜெட் இருக்கும் போது ரயில்வேக்கென தனி வரவு-செலவு, புதிய வண்டி களின் வரவு, புதிய பாதைகள் அமைப்பது, விரிவாக்கம் உள்ளிட்டவை பற்றி விவாதம் நடத்தி, ரயில்வேயை மேம்படுத்திட இருந்த ஒரு வழியும் பாஜக அரசின் மூலம் அடைக்கப்பட்டு விட்டது. குஜராத் முதல்வர் மோடி பிரதமரானால் இந்தியா விற்கே ரோல்மாடலாக இருப்பார் என்ற நப்பாசையில் பலரும் வாக்களித்து மோடி பிரதமரானார். 2014 மே மாதம் மோடி பிரதமராக பதவியேற்றவுடன் அவரது உரையில் வெளியான முதல் அறிவிப்பு ரயில்வே 100 சதம் தனியாருக்கு வழங்கப்படும், ராணுவத்திலும் தனி யார் முதலீடு அமல்படுத்தப்படும் என்பதுதான். தனியா ருக்கு தாரைவார்க்கும் கொள்கையை வேகமாக அமல் படுத்திடும்
168 வயதான இந்திய ரயில்வேயை, நாட்டிலுள்ள மிகப்பெரிய பொதுத் துறையான ரயில்வேயை அதன் கட்டமைப்பை பாஜக மோடி அரசு தூள் தூளாக நொறுக்கியது. 1991-92-ல் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில் கொண்டு வரப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் தனியார் மயம் அரசு பொதுத்துறைகள் மீது பாய்ந்தது. அதில் தொலைபேசி துறை முதல் பலியாக்கப்பட்டது. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் என இரு கூறாக்கப்பட்டு தொலைபேசி துறையின் பற்கள் பிடுங்கி எறியப் பட்டன. இதோடு ரயில்வேயிலும் தனியார்மயத்திற்கு சுழிப் போடப்பட்டது. காலியிடங்கள் நிரப்பாமை, ஆட் குறைப்பு, வேலைப்பளு, கட்டண உயர்வுகள் ஆகியவை ஐமுகூட்டணி ஆட்சியில் துவங்கப்பட்டன.
கங்கணம் கட்டி செயல்படும் மோடி அரசு
2014 இல் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாஜகமோடி அரசு கங்கணம் கட்டிக் கொண்டு ரயில்வேயை முழுவ துமாக தனியாருக்கு தாரைவார்ப்போம் என்று அவிழ்த்த கூந்தலை அள்ளி முடிக்காமல் பாஞ்சாலியாக நிற்கிறது. ரயில்வேக்கென இருந்த பட்ஜெட் ஒழிக்கப்பட்ட தனால் ரயில்வேயில் நிர்வாகச் செயல்பாடுகள் மூடி மறைக்கப்படுகின்றன. தனியார்மயத்தை கொண்டு வருவது பற்றியோ, சீர்திருத்தங்கள் பற்றியோ நாடாளு மன்றத்தில் பேசப்படுவதில்லை, விவாதமுமில்லை. எந்தவித அனுமதியின்றி தனியார்மய டெண்டர் அறி விப்புகள், ஊழியர் நலன் சார்ந்த அறிவிப்புகள், ரயில்வே போர்டின் உத்தரவுகள் மட்டுமே வெளி வரு கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே புதிய ரயில்கள், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின் றன. மற்ற மாநிலங்கள் அரசியல் ரீதியாக புறக்கணிக் கப்படுகின்றன. 2019 இல் மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ரயில்வேயை பகிரங்கமாக விற்பதற்கு முடிவெ டுத்து விட்டார். அதற்கென அட்டவணை, நூறு நாள் திட்டம், அதில் ஆறு பிரஸ்களை மூடுவது, மானியங்க ளை வெட்டுவது, ஷெட் ஷாப்புகளை தனியாருக்கு கொடுப்பது, சலுகைக் கட்டணங்களை வெட்டுவது, ஏழு உற்பத்திப் பிரிவுகளை டெண்டர் விடுவது என குரங்கு கையில் கிடைத்த இந்த பூமாலையாக ரயில்வேயை சீரழிக்க துவங்கினார்.
224 ரயில்களை 30 ஆயிரம் கோடிக்கு 35 வருட குத்தகைக்கு விடுவது, 500 பாசஞ்சர் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றுவது, சீசன் டிக்கெட், ரயில்வே பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கான, நோயாளிகளுக்கான வியாபாரிகளுக்கான சலுகைக் கட்டணங்களை ரத்து செய்வது என பல முடிவுகள் அதிரடியாக எடுக்கப்பட்டன. கடுமை யான கட்டண உயர்வு. ஜன்னல் ஓர இருக்கைக்கு கூட தனி கட்டணம், பதிவில்லாத கோச்சுகளுக்கு முழுக்கு, லாபம் தரும் தடங்கள் கூட்ஸ் ரயில் தனியா ருக்கு, 2025 க்குள் 500 ரயில்களும் , 750 ரயில்வே நிலையங்களும் 30 சதவீதம் தனியாருக்கு, 12 குழுக்க ளாக பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படும், கட்டணங்களை தனி யாரே தீர்மானிக்கலாம் என மக்கள் சொத்துக்களை நாசம் செய்திடும் திட்டங்களுக்கு பச்சைக் கொடியை காட்டி இருக்கிறது பாஜகவின் ஒன்றிய அரசு.
வெளிநாட்டிலிருந்து இஞ்சின் இறக்குமதி செய்வது, சித்தரஞ்சன் லைக் வின் சொத்து 746 கோடியை, ஐசிப் சொத்து 2442 கோடியை, கபர்தலா கோச் சொத்து 1277 கோடியை, பெங்களூர் வீல் ஒர்க்ஸ் சொத்து 1300 கோடியை தனியாரிடம் கொடுத்து, இஞ்சினியரிங் பகுதி, சிக்னல், ஓஎச்இ, ஆப்ரேடிவ் பகுதி களை ரயில்வே ஊழியர்களை கொண்டு செயல்பட வைப்பது என மிகப்பெரிய தனியார்மய நெட்ஒர்க் தயாரிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவில் நின்று போன பயணிகள் ரயில்கள், தொற்று குறைவிற்கு பிறகு விரைவு வண்டிகளாக ஓடத் துவங்கின. ஆனால் பல விரைவு ரயில்கள் அதிக மான கட்டணத்துடன் அறிவிப்பு இல்லாமல் ஓடு கின்றன. முன் பதிவு பெட்டிகள் இல்லாமல் சாதாரண சீட்டுகளும் முன் பதிவு கட்டணங்களுடன் இயக்கப்படு கின்றன. நிறுத்தப்பட்ட பாசஞ்சர் வண்டிகள் இது வரை இயக்கப்படவில்லை. இயக்குவதற்கும் நிர்வாகம் தயாரில்லை. இதனால் சாமானிய மக்கள் ரயில் பய ணத்தை கைவிட்டு விட்டார்கள். சிறு குறு வியாபாரி கள், பள்ளி மாணவர்கள், ஆலைத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் சீசன் டிக்கெட் உபயோகிப்பாளர்கள் என பலரும் ரயில் வசதியின்றி சிரமப்படுகிறார்கள். ஏழையின் ரதம் என அழைக்கப் படும் ரயில் பயணம் எட்டாக் கனியாகி விட்டது. இதை பற்றியெல்லாம் மோடி அரசு கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை.
4 லட்சம் பணியிடங்கள் சரண்டர் திட்டம்
ரயில்வே பொதுத் துறையாக செயல்பட்டதனால் 16 லட்சம் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் போஸ்டு கள் சரண்டர் ஆனதாலும்,காலியிடங்கள் நிரப்பப் படாததாலும் நான்கு லட்சம் ஊழியர்கள் காணாமல் போய் விட்டனர். தவிர மூன்று லட்சம் காலியிடங்கள் சரண்டருக்கு தயாராகி இருக்கிறது. எப்போதும் நடக்கலாம். உடனடியாக 50 சதவீதம் சரண்டர் செய்தி டும் திட்டமும் தயார் நிலையில் இருக்கிறது. கடுமையான ஊழியர் பற்றாக்குறைவினால் வேலைப்பளு நெருக்கடி தாங்க முடியாமல் பலர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். காலியாக இருக்கும் இடங்களில் ஆறு லட்சம் காண்டிராக்ட் ஊழி யர்கள் உட்பட மொத்தமாக ரயில்வேயில் 12லட்சத்து 26 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். ஓய்வு பெற்ற ராணுவ வீரரும் காண்டிராக்டில் பணி செய்து வரு கிறார்.
ஊழியர்களே பாஸ் எடுக்கும் நிலை
ரயில்வே ஊழியர்களின் நலன்களும் இந்த கால கட்டத்தில் சூறையாடப்பட்டன. ஏழாவது சம்பள கமிஷன் சிபாரிசுகளில் ஊதிய உயர்வு கிடையாது. 52 க்கும் மேற்பட்ட அலவன்ஸ், அட்வான்சுகள் பறிக்கப்பட்டன.எட்டு மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. கொரோனாவை காரணம் காட்டி 18 மாத பஞ்சப்படி முடக்கப்பட்டு அரியர்சும் பறிக்கப்பட்டது. ஊழியர்களின் மேனுவல் பாஸ் ரத்து செய்யப்பட்டு ஆன்லைனில் பாஸ் வழங்கிடும் முறை திணிக்கப்பட்டது. இதன் விளைவாக டூட்டிக்கு வருகின்ற ஊழியர்கள் பாஸ் வசதியின்றி டிக்கட் அல்லது சீசன் டிக்கெட் எடுக்கும் முறைக்கு தள்ளப்பட்டனர். அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் மேனுவல் பாஸின்றி பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதுகாப்பு சாதனமின்றி, சமூக இடை வெளியின்றி ஓப்பன் லைனில் ஊழியர்கள் கொரோனா பாதுகாப்பற்ற பணிக்கு தள்ளப்பட்டதால் ஆயிரக்கணக் கான ஊழியர்கள் கொரோனாவிற்கு பலியானார்கள். பெடரேசன்களிடம் நிர்வாகம் பேசுவதில்லை தொழிற்சங்கங்களை மதிப்பதில்லை. பெடரேசன் களும் போராடும் குணங்களை கைவிட்டு நிர்வாகத் திற்கு சாதகமான முடிவுகளை எடுத்து வந்ததி னால் ஊழியர்களின் நலன்கள் தொடர்ந்து பாதிப்புக் குள்ளாயின. ஊழியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படா மல் மலை போல் குவிந்து கிடக்கிறது. 2019இல் நடக்க வேண்டிய சங்க அங்கீகார தேர்தல் இரண்டு ஆண்டுகள் நடத்தாமல் தள்ளிப் போடப்பட்டு வருகின்றது. தொழி லாளர் சட்டங்களை திருத்தி வேலை நேரங்களை மாற்றிடும் வேலையை, உரி்மை பறிப்புகளை நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது.
கடந்த எட்டு வருடங்களாக மோடியின் ஒன்றிய அரசி னால் ரயில் பயணம் மக்களை விட்டு விலகிச் சென்று விட்டது. பிஎஸ்என்எல்-ஐ போல ரயில்வேயும் தனக்குரிய ஜனநாயக பாதையை விட்டு தனியாரின் கட்டுப்பாட்டிற்குள் நுழைந்து இருக்கிறது. கட்டாய விருப்ப ஓய்வு திட்டத்திற்கு திட்டங்கள் வகுக்கப்படு கின்றன.மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே உருக்குலைந்து போவதை தடுத்திட கடுமையான போராட்டத்தை ஊழியர்களும் மக்களும் சேர்ந்து நடத்திடுவது காலத்தின் கட்டாயமாகும்.
கட்டுரையாளர் : உதவித் தலைவர், டிஆர்இயு