articles

img

வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம்

முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார அமைப்புக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை கூர்மைப்படுத்துவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் என்று கட்சியின் மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23ஆவது மாநாடு மதுரையில் உள்ள இராஜா முத்தையா மன்றத்தில்  மார்ச் 30இல் (இன்று) துவங்குகிறது. காலை 9 மணியளவில் நடைபெற உள்ள பொது மாநாட்டில் தொடக்க நிகழ்ச்சியில் மாநாட்டின் செங்கொடியை கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்தியக்குழு உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் ஏற்றி வைக்கிறார். மாநாடு தொடர்பாகவும் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும் தீக்கதிருக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு துவங்க இருக்கும் தினத்திற்கு முன்னதாக மார்ச் 28,29 தேதிகளில் நாடு தழுவிய மிகப்பிரம்மாண்டமான தொழி லாளர் வர்க்கத்தின் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. கோடிக்கணக்கான தொழிலாளர்கள், துறைவாரி ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவு பாட்டாளிகளும் பங்கேற்றிருக்கிறார்கள். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த எழுச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து தொழிலாளர்களும் வெகுவாக பாராட்டப்பட வேண்டியவர்கள். மோடி அரசு தீவிரப்படுத்தியுள்ள நவீன தாராளமய கொள்கை அமலாக்கத்திற்கு எதிராக இவர்கள் வீரச்சமர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நவீன தாராளமயக் கட்டம்

நவீன தாராளமயக் கொள்கைகள் என்பவை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முதலாளித்துவத்தின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் ஏகாதிபத்தியம் என்று தோழர் லெனின் கூறினார். ஏகாதிபத்தியத்தை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கியமான கட்டம்தான் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கம் நிறைந்த நவீன தாராளமயம். இன்றைய உலகில் நவீன தாராளமயக் கொள்கைகள் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் மிகத்  தீவிரமாக அமலாகியுள்ளன. அவற்றின் கோர விளைவு களை உலகம் முழுவதிலும் பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டிருக்கின்றது.  தொழிற்புரட்சி சகாப்தத்திற்கு முன்பு நாம் இன்று பார்க்கிற, அனுபவிக்கிற நவீன வசதிகள் இல்லை. ஆனால் இன்றைக்கு சகலவிதமான வசதிகளும் உரு வாகியுள்ளன. நவீன கருவிகள் உற்பத்தி ஆகின்றன.  இந்த வளர்ச்சிக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களை விட நவீன மனிதர்கள் சற்று ஆரோக்கியம் அதிகரித்த வர்களாகவும் வாழ்நாள் அதிகரித்தவர்களாகவும் மாறியிருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்த வாழ்வு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது; அதேவேளை  மின்சாரமயம், சுகாதார வசதிகள், நவீன மருத்துவ வசதிகள் உள்ளிட்ட பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஏற்பட்டுள்ளன. தொழிலாளி வர்க்கத்திற்கு  பலன் உண்டா?

ஆனால் முதலாளித்துவத்தின் நவீன தாராளமயக் கட்டம் கொண்டுவந்துள்ள இந்த முன்னேற்றங்கள் தொழிலாளி வர்க்கத்திற்கு என்ன பலனைத் தந்திருக் கிறது என்பது மிக முக்கியமான கேள்வி. நவீன கருவி கள், இயந்திரங்கள், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப  புரட்சியெல்லாம் ஏற்பட்ட பிறகும் கூட தொழிலாளி யின் வேலைநேரம் குறையவில்லை. மாறாக, தொழி லாளி ஏற்கெனவே போராடிப் பெற்ற 8 மணி நேர  வேலை என்பது இன்னும் பாதகமான முறையில் மாற்றப் பட்டு வருகிறது. கூடுதல் நேரம் தொழிலாளியின் உழைப்பு உறிஞ்சப்படுகிறது. கூலியும் ஊதியமும் வெட்டப்படுகிறது.  இந்தியாவில் நடந்துள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டம் 12 பிரதான கோரிக்கைகளை முன் வைக்கிறது. அவற்றின் துணைக் கோரிக்கைகளில் ஒன்று, வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் என்ப தாகும். பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வாரத்திற்கு 48 மணி நேரம் என்பதை மாற்றி 35 மணி நேரம் மட்டுமே வேலைநேரமாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் அந்தக் கோரிக்கை இப்போது வலுவாக முன்னிறுத்தப்படு கிறது. இந்த வேலைநேரத்திலேயே முதலாளி வர்க்கம் தொழிலாளியிடமிருந்து அதிகப்படியான உற்பத்தியை  பெற்றுவிட முடியும். இதிலேயே முதலாளிக்கு உபரி லாபம்தான் கிடைக்கப் போகிறது. 

இயற்கைக்கு விரோதமாக...

வேலைநேரம் குறையாதது மட்டுமல்ல; நவீன  தாராளமயக் கட்டம் உருவாக்கியுள்ள வளர்ச்சிகள் அனைத்தும் முதலாளித்துவத்தின் லாபத்தை மேலும் கொழுக்க வைப்பதற்கேயன்றி தொழிலாளியின் ஆரோக் கியத்தையோ, நலனையோ பாதுகாப்பதற்கானதல்ல என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. உதாரணத் திற்கு, முதலாளித்துவம் தனது லாபத்திற்காக உரு வாக்கியுள்ள இந்த வளர்ச்சி தொழிலாளிகளை, மனி தர்களை இயற்கையிலிருந்து பிரித்துவிட்டது. மனிதர் களின் குணநலன்களே மாறிப்போயுள்ளது. இயற்கை க்கு விரோதமானதாக மனிதர்களின் சிந்தனைகளை சிதைப்பதற்கு முதலாளித்துவம் நிர்ப்பந்திக்கிறது. பணி செய்யும் இடத்திலிருந்து மன நிம்மதியின்றி - அழுத்தத்துடன் தூங்கச் செல்கிற தொழிலாளி, அல்லது கார்ப்பரேட் நிறுவன ஊழியர், குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் வைத்து, தூக்கத்தை தொலைத்து மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து ஓட வேண்டி யிருக்கிறது. தொடர்ச்சியான இந்த அழுத்தம் இதய  நோய்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை அவருக்கு  உருவாக்குகிறது. அதேபோல நவீன தொழில்நுட்ப வளர்ச்சி உருவாக்கியுள்ள கணினித் திரைகள், ஸ்மார்ட் போன்கள், எல்இடி விளக்கு போன்றவற்றின் வெளிச்சம் தொழிலாளியை சூரியனையே பார்க்க விடாதவாறு செய்கிறது. இது அவர்களது தூக்கத்தை பாதிப்பது மட்டுமல்ல; உடலில் பல வேதியியல் விளைவு களை உருவாக்குகிறது. இப்படி பல அம்சங்களைக் குறிப்பிடலாம். 

‘கிக்’ பொருளாதாரம்...

எனவே முதலாளித்துவத்தின் நவீன தாராளமயக் கட்டம் தனது லாபத்திற்காக தொழிலாளியின் உழைப்பை சுரண்டுவது மட்டுமல்ல; தொழிலாளியின் உயிரையே பறிக்கிறது.இன்றைய முதலாளித்துவ சுரண்டலின் தன்மை முன்பு இருந்ததைவிட நுட்பமானதாகவும், கொடூரமானதாகவும் மாறி யுள்ளது. எந்தத் துறையிலும் நிரந்தர ஊழியர்கள் இருக்கக்கூடாது என்ற நிலை உருவாகி வருகிறது.  சாதாரண கூலித் தொழிலாளி முதல் கல்லூரி பேராசிரி யர் வரை தொகுப்பூதியத்தில், மதிப்பூதியத்தில் வேலையில் அமர்த்தப்படுகிறார்கள். ‘கிக்’ பொருளா தாரம் (GIG ECONOMY) என்பது தற்போது முத லாளித்துவ உலகில் வேகமாக முன்னுக்கு வந்து  கொண்டிருக்கிறது. கிக் பொருளாதாரம் என்றால், உழைப்புச் சந்தையில் முழு நேர தொழிலாளர்கள் அல்லது ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கு பதி லாக அனைத்துத் துறைகளிலும் முழுக்க முழுக்க தற்காலிக, பகுதி நேர, ஒப்பந்த அடிப்படையில் நிய மிப்பது; எந்தத்துறையிலும் முழு நேர அடிப்படை யிலான தொழிலாளர்கள் தேவையில்லை; தொழி லாளர் சட்டவிதிகள் உள்ளிட்ட எதையும் அமலாக்கத்  தேவையில்லை என்கிற அதிதீவிர சுரண்டல் வடிவமே  தவிர வேறல்ல. இந்த வடிவம் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கிற அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பொருத்தப்படுகிறது. இது சுரண்டலை மேலும் தீவிரப் படுத்துகிறது. பெரு முதலாளிகளின், கார்ப்பரேட்டு களின் லாபத்தை குவிக்கச் செய்கிறது.இந்த வடிவத்தில் எட்டு மணி நேரம் வேலை என்ற சட்ட நடைமுறைக்கு மாறாக 12 மணி நேரம், 14 மணி நேரம் வேலை வாங்கு வது என்ற நிலை அதிகரிக்கிறது. இந்த நிலை தீவிர மடையும் சூழலில் நமது உரிமைக்காகப் போராட வேண்டும் என்ற உணர்வு பெறாத புதிய பகுதி தொழி லாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. 

கம்யூனிஸ்ட்டுகளின் கடமை

ஆனால் இன்றைய உலகில் இதுதான் எதார்த்த நிலைமையாக உள்ளது. நவீன தாராளமயம் உரு வாக்கியுள்ள வளர்ச்சியும் முக்கியம்; அதேவேளை அதன் கொடிய சுரண்டலை எதிர்த்துப் போராடுவதும் முக்கியம். ஒரு கம்யூனிஸ்ட், நவீன தாராளமயத்தின் வளர்ச்சி உருவாக்கியுள்ள எதார்த்தங்களை புரிந்து கொள்ளாமல், உள்வாங்கிக் கொள்ளாமல் போரா டினால் அவர் இடதுதீவிரவாதி ஆகிவிடுவார்; அதே வேளை நவீன தாராளமயத்தின் வளர்ச்சி குறித்த மாயை யில் சிக்கி அதை ஆதரிக்கத் துவங்கிவிட்டால் அவர்  ‘சீர்திருத்தவாதி’யாகிவிடுவார். மாறாக ஒரு கம்யூ னிஸ்ட், நவீன தாராளமயம் உருவாக்கியுள்ள வளர்ச்சி யின் தாக்கங்களை புரிந்து கொண்டு, அந்த வளர்ச்சியை தொழிலாளி வர்க்கத்திற்குச் சாதகமாக எப்படி  மாற்றுவது; அந்த வளர்ச்சிக்காக முதலாளி வர்க்கம் நடத்துகிற கொடிய சுரண்டலை எதிர்த்து எப்படி தொழி லாளிகளை அணிதிரட்டி களத்தில் இறக்குவது என்று  சிந்தித்தால் மட்டுமே அவர் மார்க்சியத்தை முன்னெடுத்துச் செல்கிறார் என்று பொருள். இந்தியா வில், தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை கற்பனாவாத சோசலிசத்தை முன்வைக்கிற கட்சி  அல்ல. கற்பனையிலேயே பாட்டாளி வர்க்கத்திற்கு அனைத்தையும் செய்துவிட முடியும் என்று கருதுகிற கட்சி அல்ல. மாறாக, இந்தியாவின் எதார்த்த நிலை மைகளை திட்டவட்டமாக ஆய்வு செய்து, திட்டவட்ட மான கொள்கையை வகுத்துள்ள கட்சி. இங்கு முத லாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒன்றுக்கொன்று உத விக்கொள்கின்றன. அதனால்தான் முதலாளித்துவம் உருவாக்குகிற தொழில் வளர்ச்சியும் இங்கு இருக் கிறது; நிலபிரபுத்துவத்தின் கூறுகளான சாதியக் கொடுமைகளும் மதவெறியும் தாண்டவமாடுகிறது. இவை இரண்டும் ஒரே நேரத்தில் தகர்க்கப்பட வேண் டும். அப்படியானால் இவற்றிற்கு அடிப்படையாக உள்ள முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக- பொரு ளாதார அமைப்பு முறை  வேரோடும் வேரடி மண்ணோ டும் நிர்மூலமாக்கப்பட வேண்டும். இந்த மகத்தான இலக்கை எட்டுகிற சக்தி இந்திய பாட்டாளி வர்க்கத் திற்கு உண்டு. அதை நிச்சயம் செய்து முடிப்போம் என்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம்.

நிரந்தரத் தீர்வு எது?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் வைப்பது கற்பனையானதல்ல; முதலாளித்துவத்தை முடிவுக்கு கொண்டுவருகிற கடினமான பணி. அந்தப் பணியின் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட்  கட்சி நடத்துகிற போராட்டங்களைப் பார்க்க வேண்டும். இங்கு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ கட்டமைப் பிலேயே, மக்களுக்கு சில நலத்திட்டங்களை அமலாக்குவதன் மூலம், சில தொழிற்சாலைகளை உருவாக்கியதன் மூலம் வளர்ச்சியை கொண்டுவந்து விட்டதாக ஒரு கருத்தியல் இருக்கிறது. ஆனால் முத லாளித்துவ அமைப்பு முறையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சீர்திருத்தமும், நலத்திட்டங்கள் என்ற பெயரிலான நடவடிக்கைகளும் சுரண்டலின் கோரத் தன்மையை மூடி மறைக்கக்கூடிய ஒன்றே. இதை தோழர் லெனின் “சீர்திருத்தமும் மார்க்சியமும் (REFORM AND MARXISM)” என்ற நூலில் விளக்குகிறார். பல்வேறு இலவச திட்டங்கள், மதிய உணவு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் தமிழகம் உட்பட பல்வேறு  மாநிலங்களில் அமலில் உள்ளன. இந்த நலத்திட்டங் கள் அனைத்தையும் கம்யூனிஸ்ட்டுகள் வரவேற்கிறோம். இவற்றால் கிடைக்கும் பலன்களை தொழிலாளி வர்க்கம் நிச்சயம் பெற்றுக் கொள்ள வேண்டும்; அனுபவித்துக் கொள்ள வேண்டும். ஆனால்  அதில் திருப்தி அடைந்து விடக்கூடாது. ஏனென்றால்  முதலாளித்துவ அமைப்பு முறையில் மேற்கொள்ளப் படுகிற எந்தவொரு நலத்திட்டமும் தொழிலாளி வர்க்கத்திற்கு தற்காலிக நிவாரணத்தையே  தரும்;  நிரந்தரத் தீர்வு சோசலிசம் மட்டுமே. 

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும்  இந்திய முத லாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக பொருளாதார அமைப்பு முறை எனும் சட்டகத்துக்குள் தான் திட்டங்கள் அமலாகின்றன.  தற்போதைய இந்திய பொருளாதார அமைப்பு முறை சோசலிசம் என்ற பெயரில் கூட பல திட்டங்களை முன்வைத்தது; நேருவிய சோசலிசம், ஆவடி சோசலிசம், ஜெய் பிரகாஷ் நாராயண் சோச லிசம் என பல்வேறு சோசலிசங்களை பேசினாலும் கூட அரசு என்பது முதலாளி- நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் செயல்படுகிறது. அது தமிழகத்தில் திராவிட மாடல் திட்டத்தை முன்வைக்கக்கூடிய திமுக அரசாங்கத்திற்கும் பொருந்தும்; கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்துக்கும் பொருந்தும். அதே நேரத்தில் கேரள இடதுசாரி அரசாங்கம் சுரண்டலை மட்டுப்படுத்துவதற்கான பல சீரிய நடவடிக்கைகளை எடுக்கிறது. அந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வ தற்கு தற்போதைய கட்டமைப்பில் ஓர் எல்லை உண்டு. கூடுதலாக செய்ய முனையும் போது, ஒன்றிய அரசுத் தரப்பிலிருந்து நிதியை வெட்டுவது, தீவிர மான பாரபட்சம் உள்ளிட்ட அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது. மக்களைத் திரட்டி போராடுவதைத் தவிர இதற்கு வேறு வழியில்லை. 

தொழிலாளி வர்க்கத்தின்  உடனடி ஆபத்து

ஆனால் இன்றைக்கு இந்திய மக்கள் தங்களது உரிமைகளுக்காக, தாங்கள் சுரண்டப்படுவதற்கு எதிராக போராட்டக் களத்தில் இறங்குவதை தடுக்கும் நோக்கத்துடன் ஆளும் ஆர்எஸ்எஸ் - பாஜக  மதவெறியை, சாதி வெறியை மிகத் தீவிரமாக தூண்டி விட்டு தொழிலாளி வர்க்கத்தை துண்டாடும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் ‘கட்சித் திட்டத்தை’ மேற்கோள் காட்டி, வரும் ஏப்ரல் 6 - 10 தேதிகளில் கண்ணூரில் நடைபெறவுள்ள அகில  இந்திய மாநாட்டிற்கான நகல் அரசியல் தீர்மானத்தில், “இந்திய அரசியல் பாரதிய ஜனதா கட்சி பிரிவினைவாத மற்றும் மதவெறி  நிகழ்ச்சி நிரலை அடிப்படையாக கொண்ட வலதுசாரி பிற்போக்குவாத கட்சியாக உள்ளது; இதர மதங்களுக்கு எதிராக வெறுப்புணர்வையும், சகிப்பின்மையையும் அடிப்படையாகக் கொண்ட, அதிதீவிர தேசிய வெறியினைக் கிளப்பிவிடுகிற கட்சியாகவும் உள்ளது. இந்தக் கட்சி, இதர முதலாளித்துவக் கட்சிகளைப் போலல்ல; பாசிச, ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழி காட்டப்படுகிற, இயக்கப்படுகிற கட்சியாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அரசு அதிகார அமைப்புகள் மற்றும் அரசு இயந்திரத்தில் ஆர்எஸ்எஸ் மிக எளிதாகப் புகுந்து தனது  சூழ்ச்சிகளை அரங்கேற்றுவதற்கான  வாய்ப்புகளை  பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா சித்தாந்தம் பழமைவாதத்தை மீட்கவும், இந்தியாவின் பன்மைத்துவ கலாச்சாரத்தை நிராகரிக்கவும் முயற்சிக் கிறது; அதன்மூலம் ஓர் இந்துத்துவா ராஜ்ஜியத்தை நிறுவும் இலக்கை அடைய முயற்சிக்கிறது (கட்சித்திட் டம் பாரா 7.14)”  என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், “பாசிச ஆர்எஸ்எஸ் தலைமையிலான மதவெறி மற்றும்  கார்ப்பரேட் ஆதரவு சக்திகள், மத்திய ஆட்சியதி காரத்தை பயன்படுத்தி இந்திய அரசின் நிறுவனங்களை மதவெறிமயமாக்குவது மட்டுமல்ல; நாட்டின் கல்வி அமைப்பு முறை மற்றும் ஊடகங்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தையும் படிப்படியாக மதவெறிமய மாக்குகிறது. இதற்கு பெரும் முதலாளிகளின் சில பகுதியினர் அளித்து வரும் ஆதரவும், பாஜகவின் மதவெறிக் கட்டமைப்பும் இந்திய ஜனநாயகம் மற்றும்  மதச்சார்பின்மைக்கு மிக கடுமையான பாதக விளைவு களை ஏற்படுத்தி வருகின்றன (கட்சித் திட்டம் பாரா 5.7)” என்றும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த எட்டு ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை குணாம்சமான மதச்சார்பற்ற ஜனநாயகம் எனும் விழுமியங்களை அழித்தொழிக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள பாஜகவை தனிமைப்படுத்துவதும், வீழ்த்துவதும் இன்றைய இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான  சுரண்டலை மட்டுப்படுத்துவதற்கான முன் நிபந்தனை யாக மாறியுள்ளது என்பதை நகல் அரசியல் தீர்மானம் விரிவாக விளக்குகிறது. அந்த அடிப்படையில் அரசியல்  பாதையை வகுத்துச் செல்ல வேண்டிய கடமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்ற வேண்டியுள் ளது. இந்த இலக்கை நிறைவேற்றும் விதத்தில், நாட்டின்  அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளை ஒன்றி ணைக்கும் மகத்தான கடமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது.

வர்க்கப் போராட்டமே ஒன்றுபடுத்தும்!

தமிழகம் உள்ளிட்ட இந்திய தொழிலாளர்கள் - விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட  பாட்டாளி வர்க்கத்தின் விடியலுக்கு முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பு முறையை தகர்ப்பதும் சோசலிசத்தை நிறுவுவதுமே தீர்வு. அதை நோக்கிய வர்க்கப் போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்துவதே தொழிலாளர், விவசாய வர்க்கத்தை மேலும் ஒன்று படுத்தும்; மதவெறிக்கு எதிராகவும் நவீன தாராளமய சுரண்டலுக்கு எதிராகவும் ஒரு சேர மக்களை அணி திரட்டும். அதற்கான வியூகங்களை தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநாடு திட்டமிடும்.

தொகுப்பு: எஸ்.பி.ராஜேந்திரன்