articles

img

அக்னிப் பாதை என்பது ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டமே! - மாதா

அந்தமான் சிறையிலிருந்த போது சாவர்க் கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து  மகாராஷ்டிராவிலுள்ள ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார். சிறையிலிருந்த போது இந்து பட்-படா சாஹி என்ற நூலை எழுதினார். அதில் இந்துக்களின் பெருமையை நிலைநாட்ட மராட்டிய மன்னர் சிவாஜி எவ்வாறு ராணுவத்தை யும், கொரில்லா போர் முறையையும் பயன்படுத்தி ஔரங்கசீப்பை வென்று ஆட்சி அமைத்தாரோ அதைப் போல முஸ்லீம்களை வெளியேற்றி, சுதந்திரமான இந்து சாம்ராஜ்யம் அமைக்க இந்துக்களை ராணுவ மயமாக்க வேண்டுமென்று எழுதினார். மீண்டும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து 1924ஆம் ஆண்டில் சாவர்க்கர் சிறையிலிருந்து விடுதலையான வுடன் ஆங்கிலேயருக்கு அளித்த வாக்குறுதியின்படி வட இந்தியா முழுவதும் ஆள் சேர்ப்பு முகாம்கள் நடத்தி லட்சக்கணக்கான இந்து இளைஞர்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துவிட்டார். ஆனால் முதல் உலகப் போர் முடிந்த சில ஆண்டுகளில் நிதிநிலையைக் காரணம் காட்டி ஏராளமான வீரர் களை பிரிட்டிஷ் அரசாங்கம் ராணுவத்திலிருந்து வெளி யேற்றியது. அதன் பின் 1939ல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த போது, ஆங்கிலேயர்களுக்கு தங்களு டைய இந்துமகாசபாவின் விசுவாசத்தை வெளிப் படுத்த சாவர்க்கர் போர்ச்சூழலை பயன்படுத்த எண்ணி. வைஸ்ராய் லிங்டோ பிரபுவை சந்தித்து இந்து இளைஞர்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்த்துவிட ஒப்புதல் பெற்றார். ஆங்கிலேயர்களின் போர்க் களத்திற்கு அப்போது ஏராளமான வீரர்கள் தேவைப் பட்டார்கள். 

பள்ளிகள், கல்லூரிகளில் இந்து இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். கோவில் திருவிழாக்களிலும், இலக்கியக் கூட்டங்களில் கூட ராணுவமயமாக்கல் பற்றியே உரை யாற்றினார். லட்சக்கணக்கான இளைஞர்கள் பிரிட்டிஷ் பட்டாளத்தில் சேர்க்கப்பட்டு போர் முனைக்கு அனுப் பப்பட்டார்கள். அப்போதைய கடும் பஞ்சமும், வேலை யின்மையும் அதற்கு ஏதுவாக இருந்தது.  1941ஆம் ஆண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐஎன்ஏ படைகள், ஜப்பானிய ராணுவ உதவியுடன் இந்தியாவிற்குள் நுழைய ஆயத்தம் செய்து கொண்டி ருந்தது. அப்போது சாவர்க்கர் பிரிட்டிஷாரின் எதிரிகள் நம் எதிரிகள். அந்நியப் படைகளை எல்லையில் தடுத்து நிறுத்த வேண்டுமென்று அறைகூவல் விடுத்தார். ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்கள் நடத்தி பல்லாயி ரக்கணக்கான இளைஞர்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் அவர் சேர்த்துவிட்ட படைகள்தான் வடகிழக்கில் ஐஎன்ஏ படைகளைத் தோற்கடித்தன. தான் சேர்த்து விட்ட ராணுவ வீரர்களால்தான் நேதாஜியின் படைகள் தோற்கடிக்கப்பட்டு பிரிட்டிஷ் இந்தியா காப்பாற்றப் பட்டது என்று சாவர்க்கர் பெருமையாகக் கூறினார்.

சமூகத்தை ராணுவமயமாக்கும் பணியில் உத்வேகமடைந்த இந்து மகாசபா இளைஞர்கள் நாட்டை தந்தையர் நாடென்றே கற்பனை செய்தி ருந்தார்கள். சாவர்க்கர் எப்போதுமே நாட்டை, பெண் பாலில் அழைக்க மாட்டார். அது அவருக்குப் பிடிக்காது. இந்துமகாசபா கூட்டங்களிலும், பொது நிகழ்ச்சிக ளிலும் தந்தையர் நாடு, புனித நாடு என்றே குறிப்பிடு வார். மற்றவர்களையும் அப்படித்தான் பேச வேண்டு மென்று வலியுறுத்துவார். பின்னாளில் வந்த ஆர் எஸ்எஸ் தலைவர்கள் அரசியல் காரணங்களுக் காக தேசத்தை தெய்வமாக்கி “பாரத் மாதா” என்ற ழைத்தார்கள். இந்துக்களை ராணுவமயமாக்குவது என்ற கருத்து சாவர்க்கருடையது மட்டுமல்ல. தங் களை கலாச்சார அமைப்பு என்று கூறிக்கொள் ளும் சங்பரிவாரின் அனைத்து தலைவர்களின் சிந்த னைகளும் செயல்பாடுகளும் சமூகத்தை ராணுவ மயமாக்குவதை நோக்கியே செல்கின்றன. ஆர்எஸ்எஸ் நிறுவனத் தலைவரான ஹெட்கேவா ருக்கும் இத்தகைய சிந்தனைகள் உருவாகி வந்துள் ளன. 1930 களில் கல்கத்தாவில் மருத்துவப் படிப்பை முடித்தவுடன், ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவான “கிராந்தி தள்” என்ற அமைப்புடன் ஹெட்கேவார் தன்னு டைய உறவைப் புதுப்பித்துக் கொண்டார். இந்த இயக் கமானது உடற்பயிற்சிக் கூடங்களில் ஆயுதப் பயிற்சி கொடுத்து கிளர்ச்சியாளர்களை உருவாக்குவது, தீவிர வாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது போன்ற சட்ட விரோதமான காரியங்களைச் செய்து வந்தது.

ஹெட்கேவார் 1925இல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஆரம்பித்த போது, அதில் சேரும் ஒவ்வொரு உறுப்பி னரும் உடற் பயிற்சியும், அரசியல் கல்வியும் பெறு வேன் என்றும், பயிற்சி முடிந்த பின் மற்றவர்களுக் கும் பயிற்சி கொடுப்பேன் என்றும் உறுதி மொழி எடுக்க வேண்டும். உடற் பயிற்சி என்பது ஏறக்குறைய ராணுவப் பயிற்சி போல்தான் இருக்கும். சீருடையாக டவுசரும், சட்டையையும் காக்கி நிறத்திலேயே தேர்வு செய்தார். 1940இல் இரண்டாம் உலகப் போரின் போது சிவிலியன்கள் காக்கி உடை அணியக் கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தடை செய்தது. ஹெட்கேவார் சட்டையை மட்டும் வெள்ளையாக மாற்றி, ஆர்எஸ்எஸ் சீருடை நிறமாக காக்கியும், வெள்ளையுமாக ஆக்கி னார். ராணுவ சிந்தனைகளால் நிரப்பப்பட்ட ஹெட் கேவார் சிவாஜி ஆட்சியில் மராட்டிய தலைமைத் தளபதியை “சர்சேனாபதி” என்றழைத்தது போல், ஆர்எஸ்எஸ் தலைமைப் பயிற்சியாளருக்கும் அதே பெயரைச் சூட்டினார். வாரம் ஒரு முறை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உதவியுடன் சுயம் சேவக்குகளின் அணிவகுப்பும் நடைபெற்றது.

இவ்விடத்தில் ஹெட்கேவாரின் குருவும், வழிகாட்டி யுமான டாக்டர் மூஞ்சேவைப் பற்றி குறிப்பிட வேண்டியது முக்கியமான ஒன்றாகும். மூஞ்சேவின் வருகை ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கு புத்தெழுச்சி யை ஏற்படுத்தியது. மருத்துவரான அவர் பிரிட்டிஷ் அரசின் தூதுவராக தென்னாப்பிரிக்காவில் பல ஆண்டு காலம் பணியாற்றினார். 1931இல் முதலாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பும் வழியில் இத்தாலிக்கு விஜயம் செய்தார். அங்கு அரசால் நடத்தப்படும் ராணுவப் பள்ளிகளையும், கல்லூரி களையும் பார்வையிட்டார். ரோம் நகரில் ராணுவக் கல்லூரியையும், உடற்கல்வி அகாடமியையும் பார்வையிட்ட பிறகு, அவர் மனதில் கனன்று கொண்டி ருந்த சமூக ராணுவமயமாக்கல் சிந்தனை கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இளைஞர் களை ராணுவமயமாக்கி எவ்வாறு பாசிச சிந்தனை கள் போதிக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டு. இந்தியாவில் இதை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உறுதி பூண்டார். சர்வாதிகாரி முசோலினியுடனான சந்திப்பு அவருக்கு ஒரு திறப்பை ஏற்படுத்தியது. இந்துத்துவா சிந்தனைகளும், பாசிச போதனைகளும் ஒரே நேர் கோட்டில் இணைந்தன. இந்து இந்தியாவை உருவாக்குவதற்கு ராணுவப் பயிற்சியளிக்க ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. நாக்பூரில் ஹெட்கேவார் தலைமையில் இயங்கும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் அதற்கு பொருத்தமான தாக இருக்கும் என்று இந்தியா திரும்பியவுடன் மூஞ்சே கூறினார்.

மூஞ்சேவும், ஹெட்கேவாரும் குரு, சிஷ்யன் போல் இந்து இயக்கத்தை வழி நடத்தினார்கள். உள்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய எதிரிகளை வீழ்த்து வதற்கு மத்திய இந்து ராணுவ கல்விக் கழகம் என்ற அமைப்பை நாசிக் நகரில் அமைத்தார்கள். அதன் நிர்வாகியாக ஹெட்கேவார் நியமிக்கப்பட்டார். இன்றும் ராணுவப் பள்ளி என்ற பெயரிலேயே பள்ளியும், கல்லூரியும் நாசிக்கில் நடத்திக் கொண்டி ருக்கிறார்கள். இங்கு ஒன்றிய பொது தேர்வாணை யம் நடத்துகின்ற குடிமைப் பணி தேர்வுகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிப் பணிகள் போன்ற தேர்வுகளுக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இங்கு பயின்று உயர் பதவியில் அமர்கின்ற அதிகாரிகளும், ஊழியர்க ளும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு விசுவாசமாக இருப்ப தோடு, அரசு எந்திரத்தையும், நிர்வாகக் கட்டமைப்பை யும் காவிமயமாக்கும் வேலையை இந்த பயிற்சி நிறுவனம் செய்துகொண்டிருக்கிறது. இங்குள்ள கல்லூரியில் வழக்கமான பாடங்களுடன் ராணுவக் கல்வியும், உடற்பயிற்சியும் மாணவர்களுக்கு அளிக் கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ராணுவ அதிகாரி கள் தேர்வுக்கும் இங்கு பயிற்சியளிக்கப்பட்டு ஏராள மானோர் ராணுவ அதிகாரிகளாக பணியாற்று கிறார்கள். இந்நிறுவனத்தில் தலைமைப் பயிற்சியா ளராக இருந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி லெப்டி னென்ட் கலோனல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோகித் 2008ஆம் ஆண்டு பல மனித உயிர்களைப் பலி வாங்கிய மாலேகான் வெடிகுண்டு வழக்கில் முக்கியக் குற்றவா ளியாக கைது செய்யப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறை யில் இருந்து தற்போது பிணையில் வந்துள்ளார். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்குப் பின் மேற்கண்ட ராணுவ பயிற்சி பள்ளி இந்தியா முழுவதும் பிரபல மானது. வெடிகுண்டு வழக்கின் குற்றவாளிகள் பலர் இப்பயிற்சி பள்ளியில் பயின்றவர்களே.

சுயம் சேவக்குகள் அணிவகுப்பிலும், அவர்களு டைய பொது நிகழ்ச்சிகளிலும் பாண்டு வாத்தியம் இசைக்கப்படுவதைப் பார்த்திருக்கிறோம். ஆரம் பத்தில் சாதாரண இசையாகத்தான் இருந்தது. மூஞ்சே இத்தாலி சென்று திரும்பியவுடன், இத்தாலிய ராணுவ இசை மெட்டுக்களை ஆர்எஸ்எஸ் பாண்டு வாத்திய இசைத் தொகுப்பில் ஹெட்கேவார் புகுத்தி னார். அரசு நிர்வாகத்தில் ராணுவ எண்ணம் கொண்ட வர்களையே தலைமைப் பதவியில் நியமிக்க ஆர்எஸ்எஸ் எப்போதும் விரும்புகிறது. சர்தார் படேல் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த போது, பஞ்சாப் ஆர்எஸ்எஸ் சங்சாலக் (தலைவர்) ராய் பகதூர் திவான் பத்ரிதாஸ் என்பவர் கிழக்கு பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏற்பட்ட கலவ ரத்தால் உருவான அகதிகள் முகாமிற்கும், நிவாரணப் பணிகளுக்கும் ஆர்எஸ்எஸ் காரர்கள் பொறுப்பாளர்க ளாக நியமிக்கப்பட்டார்கள். இதன் உச்சமாக தில்லி ராணுவ கமாண்டோ தலைநகரில் சுயம்சேவக்குகள் அமைதி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோல்வால்கரை கேட்டுக்கொண்டார். கலகம் செய்த வர்களையே காவல் பணிக்கு நியமித்த கொடுமை நடந்தேறியது.

தேசத்தை பாதுகாக்க ராணுவ வீரர்களுக்கு எல்லையைத் தாண்டி போரிடும் சக்தியும், ஞானமும் தேவைப்படுவதாக அண்மையில் மோகன்பகவத் கூறினார். கலாச்சாரக் கல்வி அளித்து, உள்நாட்டி லும் அவர்களுடைய சேவையை பயன்படுத்த வேண்டு மென்று முஸ்லீம்களை மனதில் வைத்துக்கொண்டு பேசினார். ஏராளமான இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தொழில் முறை ராணுவமாக ஆக்க முடியுமென்று ஆர்எஸ்எஸ் நம்பு கிறது. அவர்களுடைய உடற்பயிற்சிக் கூடங்களில் கம்புகளுடன் கடினமான பயிற்சியளிப்பது ராணுவ மாக்குவதின் முன்னோட்டமே. சமூகத்தை ராணுவமய மாக்கும் சாவர்க்கரின் லட்சியம் அக்னிபாதை திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படுகிறது.

கட்டுரையாளர் :  சிபிஐ(எம்), தேனி மாவட்டக்குழு உறுப்பினர்