பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி திரு மலைக்குச் சென்று ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தியுள்ளார். பின்னர் ஏழுமலை யான் தரிசனம் சிறப்பாக அமைந்தது. நாட்டில் வாழும் 140 கோடி மக்களின் நலனுக்காக ஏழு மலையானை பிரார்த்தனை செய்தேன் என்று கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் நல்வாழ்வுக்காக திட்டங்களை தீட்டுவதற்கும், செயல்படுத்துவதற்கும் அதிகா ரம் படைத்துள்ள ஆட்சியின் தலைவர் பிரதமர் மோடி. மக்களின் சேவகர் என்று அவர் நாடாளு மன்ற படிக்கட்டுகளை கும்பிட்டு கூறிய வார்த்தைகளை மறந்து விட்டார் போலும். இந்திய மக்களை இனி ஏழுமலையான் தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லாமல் சொல்கி றார் போலிருக்கிறது.
தம்மை இந்திய மக்களின் பிரதம சேவகர் என்று மோடி கூறினார். ஆனால் அவர் கோயில் கோயிலாகச் செல்வதும் வழிபடுவதும் அதையெல் லாம் அற்புதமான தருணம் என்று புகழ்வதும், அவரது நடைமுறையாகவே உள்ளது. எந்த மாநி லத்திற்குச் சென்றாலும் இதை ஒரு வழக்கமா கவே கொண்டிருக்கிறார். அது அவரது தனிப் பட்ட விருப்பம்தான் என்றாலும் நாட்டின் தலை மைப் பொறுப்பில் உள்ளவர் அந்த பொறுப்பை உணர்ந்து மக்களின் நலன்காக்க என்னென்ன திட்டங்களை செயல்படுத்துகிறார் என்பது தானே முக்கியம்.
நலத்திட்டங்களை வரையறுக்கும் நிறை வேற்றும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கே அவருக்கு மனமில்லை. ஆனால் மாதம் மாதம் கடைசி ஞாயிறன்று மனதின் குரல் என்று வானொலியில் உரையாற்றுகிறார். அதில் அரு ளாசி வழங்குவதுபோல் அள்ளி விடுகிறார்.
மக்கள் நலனுக்காக வழிபட்டதாக கூறும் மோடியின் கணக்கில் இந்த நாட்டின் விவசாயி களோ, தொழிலாளர்களோ, பழங்குடி மக்களோ, தலித்களோ, சிறுபான்மையினரோ இல்லையா? இருந்திருந்தால் விவசாயிகள் தலைநகரில் ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்திய போதும், மல்யுத்த வீராங்கனைகள் நீதி கேட்ட போதும், மணிப்பூர் பற்றி எரிந்த போதும், அங்கு சென்றிருக்க வேண்டுமே! ஆனால் அந்தப் பக்கமே முகத்தைக் கூட திருப்பாமல் இருந்தவர் தானே பிரதமர் மோடி. இப்போது 140 கோடி மக்கள் நினைவுக்கு வந்தது தற்போது நடக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களும் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலும் அன்றி வேறென்ன?
நாட்டு மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. தற்போது அவை மோடியையும் அவரது கட்சியையும் சுழன்றடித்துக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற கோயிலுக்குச் செல்வது போல இவரும் தெலுங் கானா தேர்தலுக்கு முன்பு திருப்பதி சென்றுள் ளார். ஆனால் அவருடைய விருப்பம் நிறை வேறப் போவதில்லை.