இந்த வருடம் பல்கலைக்கழக பொது நுழை வுத் தேர்வு -2022 (CUET-2022) நடத்தப் பட்டு அதன் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐந்து தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இது தேசிய கல்விக் கொள்கை 2022 பரிந்துரையின் அடிப்படை யில் தேசியத் தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டது. உயர்பட்ட மேற்படிப்புக்கான தேர்வும் நடத்தப் பட்டுள்ளது. விரைவில் அதனடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே சென்ற வருடம் மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் பொது நுழைவுத் தேர்வு (CUCET-2021) நடத்தப்பட்டு சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த வருடம் அனைத்து மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், அதன் கல்லூரிகளுக்கும் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாக (CUET-2022) இது மாற்றப்பட்டு நடத்தப் பட்டது. ஆனால் இந்த வருடம் மாநிலப் பல்கலைக் கழகங்கள் இதை அமல்படுத்தத் தயாராக இல்லாத காரணத்தால் மத்தியப் பல்கலைக்கழகங்களில் மட்டும் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
தேசிய தேர்வு முகமையும் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளும்
தேசிய தேர்வு முகவை என்பது ஒன்றிய அரசின் கல்வித் துறையால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். தேசிய கல்விக் கொள்கை 2020இன் பரிந்துரையின்படி இது உருவாக்கப்பட்டுள்ளது.1860ஆம் வருட கூட்டு றவு பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைவர் உட்பட 10 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப் பட்டுள்ளது. இது நிதி உட்பட அனைத்திலும் சுயமாக இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது உயர்கல்விக்கான அனைத்து நுழைவுத் தேர்வுக ளும் இனிமேல் இந்த முகமை மூலமே நடத்தப்பட உள்ளது. இதுவரை சிபிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட நீட் தேர்வு தற்பொழுது இந்த முகமை மூலமே நடத்தப் படுகிறது. தற்போது கலை அறிவியல் பல்கலைக்கழ கங்களுக்கும் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தியுள்ளது. எதிர்காலத்தில் அனைத்து உயர் கல்வி பொறியியல், விவசாயக் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் இம்முகமை நடத்தும் எனவும் தெரிகிறது. நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு ஏன் தேவை என்பதற்கு யுஜிசி கூறும் காரணம் என்னவென்றால் உயர்கல்விக்கு வரும் பள்ளி மாணவர்கள் பல்வேறு போர்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வருவதால் அதிக கட் ஆஃப் மார்க்குகளைப் பெற்ற மாணவர்கள் உயர்கல்வியை கைப்பற்றுகின்றனர். பிறர் விடுபடுகின்றனர். எனவே பொது நுழைவுத் தேர்வு மூலம் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான தேர்வு மூலம் உரிய மாணவர்கள் உரிய உயர்கல்விச் செல்ல வாய்ப்பிருக்கும் என்கிறது.
இப்பொழுது நமது கேள்வி என்பது பல்வேறு போர்டுகளின் மதிப்பீட்டு முறையில் ஒழுங்குமுறை கொண்டு வந்து மாணவர்கள் மதிப்பீட்டு முறையில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்குப் பதிலாக மற்றொரு மைய மதிப்பீட்டு முறையின் மூலம் மாண வர்களை வடிகட்டும் முறை எதற்கு என்பது தான். இந்த மையத் தேர்வு என்பது தனியார் பயிற்சி மையங்களில் அதிக அளவில் பணம் கட்டிப் படிக்கும் மாணவர்களே அதிக மதிப்பெண் எடுத்து உள்ளே நுழைவதும் ஏழை மாணவர்கள் இதில் வெளியேற்றப்படுவதும் தான் நடைபெறுகிறது. இதைத் தான் நீட் தேர்வு கடந்த வருடங்களில் நிரூபித்து வருகிறது. எனவே மைய நுழைவுத் தேர்வு தீர்வு அல்ல.
பொது நுழைவுத் தேர்வின் சவால்கள்
பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான கேள்வித் தாள் என்பதே இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே இந்த வருடம் நடத்தப்பட்டது. அப்படியானால் அந்தந்த மாநிலங்களில் தாய்மொழி யில் படித்த மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்களா? உண்மையில் மத்திய பல்கலைக் கழகத்தில் சேர்வதிலிருந்து இவர்கள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திவிடப் பட்டிருக்கிறார்கள் அல்லவா? இந்தியாவில் ஏற்றத் தாழ்வுமிக்க சமூக அமைப்பு, முழுமையற்ற பள்ளிக் கல்வி கட்டமைப்பு, உறுதி செய்யப்படாத ஆசிரியர்-மாணவர் விகிதங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, பல்வேறு வகைப் பாடத்திட் டங்கள், பல்வேறு வகை கற்பித்தல் முறை ஆகியன மூலம் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு கேள்வித் தாள் மூலம் தேர்வை நடத்துவது அராஜகமான அணுகு முறை அல்லவா?
அகில இந்திய பொதுத் தேர்வை நடத்த மிகப் பெரிய கட்டமைப்புத் தேவைப்படுகிறது. இந்த வருடம் ஒவ்வொரு நுழைவுத் தேர்வு மையத்திலும் சுமார் 300 கம்ப்யூட்டர்கள் இருப்பதும் மிக திறன் மிக்க இணைய வசதி இருந்தால் மட்டுமே சாத்திய மாகும். இது இந்தியா முழுவதிலும் உள்ள மாநிலங்க ளில் சாத்தியமாகுமா? வட கிழக்கு மாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் இத் தேர்வு நடத்துவதை கைவிட்டுள்ளன.இதனால் அப்பகுதி மாணவர்கள் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு சென்று நுழைவுத் தேர்வு எழுதி உள்ளனர் என திரிபுரா பல்க லைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சலீம் ஷா குறிப்பிடுகிறார். நீட் , ஜேஈஈ, சட்ட நுழைவுத் தேர்வு, நிர்வாகவியல் நுழைவுத்தேர்வு ஆகிய மையப்படுத்தப்பட்ட தேர்வுக ளில் பள்ளியில் படிக்கும் போதே தனியார் பயிற்சியில் அதிகப் பணம் கட்டிப் பயிற்சி பெற்று இந்த இடங்க ளைக் கபளீகரம் செய்து இருக்கிறார்கள். இது போல் தரமான பல்கலைக்கழகங்களை, கல்லூரிகளை வசதி படைத்தோரே பிடித்தமான படிப்புகளில் சேர முடியும் என்ற நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது அல்லவா? இதற்கான தனியார், பைஜூஸ் போன்ற கார்ப்பரேட் பயிற்சி மையங்கள் கோட்டா ராஜஸ்தான் போன்ற இடங்கள் மட்டுமில்லாமல் இனி இந்தியா முழுவதும் பரவ வழி வகை செய்யாதா? இது அவர்கள் மாணவர்களிடம் கொள்ளைஅடிக்க பச்சை விளக்கு காட்டுவது போல் இல்லையா?
ஒன்பதுக்கு மேற்பட்ட பாடவகையில் படிக்க...
உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு தான் முக்கிய மென்றால் +2 வரையிலான கல்வியையும், நுழைவுத் தேர்வுக்காக மொழிக் கேள்விகள் கொண்ட இரண்டு பகுதிகள், ஆறு துறைசார்ந்த படிப்புக்கான கேள்விகள் கொண்ட ஒரு பகுதி, மேலும் பொது அறிவு, சம காலச் செய்திகள், லாஜிக், அனலிடிகல், கணித அறிவு ஆகியன கொண்ட ஒரு பகுதி என நான்கு பகுதி கொண்ட கேள்வித்தாளில் ஒன்பதுக்கு மேற்பட்ட பாட வகையில் மாணவர்கள் மேலும் படிக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவார்கள் அல்லவா? உயர்கல்வி பொதுப்படிப்புகள் பல்வகையாக இருக்கும் பொழுது ஒரே நுழைவுத் தேர்வு மூலம் எப்படி அறிவியல், வரலாறு, பொருளாதாரம், வணிகம், வியாபாரம் என உயர்கல்வியில் தேர்ந்தெ டுத்துப் படிப்பது? சில சமயங்களில் வேறு படிப்புக்குச் செல்ல விரும்பினால் அதற்கென ஒரு தேர்வும் எழுத வேண்டும் என்பது எப்படி சாத்தியமாகும்? சமீபத்திய கால்நடைக் கல்லூரிக்கான விளம்ப ரத்தை நினைவுகூர வேண்டியுள்ளது. அதாவது நீட் தேர்வு எழுதினால் மட்டும் போதுமானது. மதிப்பெண் பற்றிக் கவலை வேண்டாம் என விளம்பரம் கொடுத்துள்ளது. கட்டணம் வருடத்திற்கு 5.5 லட்சம் ரூபாய். இதிலிருந்து என்ன தெரிகிறது? உயர்கல்வி க்குச் செல்ல வேண்டுமென்றால் நுழைவுத் தேர்வு எழுதித் தான் தீர வேண்டும் என்ற கட்டாயம் திணிக்கப் பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு எழுதி மதிப்பெண் குறை வாகப் பெற்றால் உயர்கல்வியில் சேர்வதற்கு இது போன்ற தனியார் வணிகமயக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியது தான். மாணவர்களை மன உளைச்சலுக்குள் தள்ளி உயிருக்கே உலை வைத்து விடும் என்பதை நீட் தேர்வு நமக்கு தீய முன்னுதாரணமாக கண் முன்னே தெரிகிறது.
ஒரே நாடு ஒரே தேர்வு முறையின் முதல் தோல்வி
இந்தியாவில் 54 மத்திய பல்கலைக்கழகங்கள், 1027 மாநில பல்கலைக்கழகங்கள், 126 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 403 தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன.பல்கலைக் கழகங்கள் கீழி யங்கும் கல்லூரிகள் சுமார் 42,000. சுமார் 4 கோடிக் க்கும் மேற்பட்ட மாணவர்கள் என உயர்கல்விக் கட்டமைப்பு உள்ள சூழலில் ஒரே நுழைவுத் தேர்வு எப்படி சாத்தியமாகும். தமிழகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்கின்றனர். வெவ்வேறு மாநிலங்களில் பள்ளித் தேர்வு வெவ்வேறு காலங்களில் முடிவடைகிறது. இதனால் ஒரே தேதியில் நடைபெறும் தற்போதைய நுழைவுத் தேர்வு மிகத் தாமதமாக நடைபெற்றுள்ளது.இதுவே ஒரே நாடு ஒரே தேர்வு என்ற முறையின் முதல் தோல்வி எனலாம். மொத்தத்தில் கிராமப்புற, ஏழை மாணவர்கள் சாதாரணமாக கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப் பத்தை பூர்த்தி செய்வதற்கே பெரும்பாடுபடும் போது இது போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதி தோல்வி அடைந்து போவதை விட தொலை நிலைக் கல்வி, திறந்த வகை ஆன் லைன் கல்வி என்ற முறைசாரா உயர்கல்வியை நோக்கித் தள்ளி விடப்படுவது நடக்கும். இதற்காக ஒன்றிய அரசு ஆன் லைன் கல்விக்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்து வைத்துள்ளது. மொத்தத்தில் நிறுவனம் சார் உயர்கல்வியில் இருந்து ஏழை மாணவர்களைத் தடுத்து நிறுத்துவ தற்கே ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு வழி வகுக்கும்.
கட்டுரையாளர் : மேனாள் பொதுச் செயலர்,
அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கக் கூட்டமைப்பு