articles

img

நீதியைக் கொல்லும் நீட் தேர்வு - வீ.மாரியப்பன்

நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டி இரண்டாவது முறையாக தமிழக சட்டமன்றம் இயற்றிய சட்ட முன்வடிவை ஆளுநர் உடனே ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து  48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில், இராஜரத்தினம் ஸ்டேடியத்தில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மார்ச் 9,10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடத்துகிறோம்.

உள்ளூர் துவங்கி உக்ரைன் வரை மாண வர்களைக் கொல்லும் தேர்வாக  மாறி இருக்கிறது நீட். மருத்துவ மாணவர்க ளின் கல்வி வாய்ப்பை பறித்து, மாநில உரிமை, கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதியை சிதைக்கும் தேர் வான நீட் தேர்வால் ஏற்கனவே தமிழகத்தில் அனிதா முதல் 25 மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர்.  தற்போது கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா 97 சதவீத மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக் காததால் உக்ரைனில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழ கத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்ற மாணவர் நவீன் சேகரப்பா ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரில் கொல்லப்பட்டார். நேற்றுவரை 1200 மருத்துவ மாணவர் கள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர். ஒன்றிய அரசின் நீட் தாக்குதலால் மாணவர்கள் அடையும் துயரமும் அலைக்கழிப்பும்  தொடர்கதையாய் மாறிப்போயுள்ளது.

நீட் எனும் கொடுவாளின் துவக்கம்

இந்தியா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கு 35 நுழைவுத்தேர்வுகள் நடைபெறுகிறது என 2009இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அகில இந்திய அளவில் ஒரு   நுழைவுத் தேர்வை நடத்த உத்தரவிட்டது. டிசம்பர் 2010 இந்திய மருத்துவக் கவுன்சிலும் நீட் தேர்வு நடத்த அறிக்கை வெளியிட்டது. மத்திய பாடத் திட்டத்தில் தேர்வு நடத்துவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு, குஜராத், மேற்குவங்கம்,ஆந்திரா மாநி லங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.  மாநிலங்கள்  எதிர்ப்பை யொட்டி இத்தேர்வு நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.  2014 பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு பேராசிரியர் ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பணம் ஒன்றே தகுதியாக அமை கிறது. இதன் விளைவாக மருத்துவ சேவை தகுதியற்றுப் போகிறது. இதனை கட்டுப்படுத்த நுழைவுத்தேர்வை பரிந்துரை செய்தது.

இக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்த 18ஆவது நாடாளுமன்ற சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை நிலைக்குழு. 2016 மார்ச் மாதம் 8ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது 92-ஆவது அறிக்கையில் தனியார் நிறுவனங்கள் மருத்துவக் கல்வியை எந்த அளவுக்கு மலிவான விற்பனை பண்ட மாக மாற்றியுள்ளனர் என விவரங்களை வெளிப்படுத்தி யும், மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்த, கட்டணக் கொள்ளையை தடுக்க மருத்துவ நுழைவுத் தேர்வை  நடத்தவும். நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்க ளுக்கு விலக்கு அளிக்கவும் பரிந்துரைத்தது. நாடாளு மன்ற நிலைக் குழு பரிந்துரையை புறந்தள்ளி, 2016 ஆகஸ்ட் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் திருத்தச் சட்டத்தின் மூலம் பிரிவு 10டி உருவாக்கப்பட்டு நீட் கட்டா யமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தின் பிரிவு 200 அடிப்படையில் 2017 பிப்ரவரியில் தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்ட முன்வடிவை பிரிவு 201 கூறப்பட்ட நடைமுறையை பின்பற்றி உரிய காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் தமிழக சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பாமல், சட்ட முன்வடிவு காலாவதியானது.  தமிழகத்தில் நீட் எதிர்ப்பு, முறைகேடுகள், மாணவர் சந்தித்த சிக்கல்கள் என எதையும் நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு கொண்டு செல்லாமல், நீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதாக அந்த குழுவில் இந்திய அரசு தெரிவித்தது. உண்மையை மறைத்து தேசிய மருத்துவ ஆணைய சட்ட (NMC) முன் வடிவிற்கான பரிந்துரையை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பெற்றது இந்திய அரசு.

2019 தேசிய மருத்துவ ஆணைய சட்டம் இயற்றப் பட்டது.இது இந்தியா முழுமைக்கும் செல்லும் என்றா லும், கல்வி ஒத்திசைவு (பொது) பட்டியலில் உள்ளதா லும், மருத்துவமனை, மருந்தகம், மாநிலப் பட்டியலில் உள்ளதால். பல்கலைக்கழகங்கள் உருவாக்குதல், ஒழுங்குபடுத்துதல், கலைத்தல் ஆகியவை மாநில பட்டியலில் உள்ளதாலும், மாணவர் சேர்க்கை ,கட்டணம் தீர்மானித்தல் ஆகியவை ஒழுங்குபடுத்துதலில் அடங் ங்கும். எனவேமாநில அரசு அப்பொருளின் மீது சட்டமியற்றும் அதிகாரம்  உள்ளது  என உச்ச நீதிமன்ற மும் தெளிவுபடக் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திற்கு நீட்டிலிருந்து விலக்கு கோரி சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவை ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கவோ திருப்பி அனுப்பவோ அதிகாரம் கிடையாது. எவ்வளவு விரைவில் அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்ப வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200 படி ஆளுநர் விரைவாக அனுப்ப வேண்டும். ஆனால் அவர் நான்கு மாதமாக காலம்தாழ்த்தி மாணவர் நலனை புறக்கணித்து பாஜக அரசுக்கு ஆதரவாய்  திருப்பி அனுப்பி தன் விசுவாசத்தை காட்டியுள்ளார். 

நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறியுள்ள சொத்தையான காரணங்கள்!

வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி அசோசியேஷன் வழக்கில் நீட் தேர்வு தேசிய நலனுக்கானது. சமூகத்தின் நலிந்த பிரிவினர்களின் பாதுகாப்பிற்கானது. பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு பாதுகாப்பானது என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டியி ருக்கிறார்.

உண்மை என்ன? 

1. அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் ஏது மின்றி நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றம் வெறும் வாய் வார்த்தைகளை வைத்துத் தீர்ப்பு கொடுத்துள்ளதே தவிர தரவுகளின் அடிப்படையில் அல்ல.  நீட்தேர்வின்  கட்டமைப்பு  மற்றும் தமிழக மாணவர் கள் எதிர்கொண்டிருக்கும் சமூகவியல் நிலைமை , கல்வி வாய்ப்பிற்கு பாதகச் சூழல்கள் இடையிலான காரணத் தொடர்பு மற்றும் மருத்துவக் கல்வி, மருத்துவத் தொழில் மற்றும் சுகாதார பராமரிப்பு சேவைகள் என ஒட்டு மொத்த அம்சங்களில் காரண தொடர்பின் தாக்கம் என இருதரப்பு பரிமாண விசாரணைகள் மூலம்  ஏகே.இராஜன் அறிக்கைஆய்வின் அடிப்படையில் நிரூபிக்கப் பட்டுள்ளது. நீட் தேர்வு பட்டியலின, பழங்குடி மாணவர்களை பாது காக்கவில்லை.  ஏனெனில் தனியார் பயிற்சி மையங்க ளில் பல லட்சம் கட்டணம் கட்டினால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும். வசதிபடைத்தவர்கள், மேல்தட்டு மாண வர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில்  இடம்பெற முடியும். ஏழை,எளிய கிராமப்புற,ஒடுக்கப்பட்ட, அரசுப் பள்ளி மாணவர்களைத் திட்டமிட்டு வெளியேற்றும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது. மாநிலப்  பாடத் திட்டத்தில் பயின்றவர்களுக்கு மத்திய கல்வி வாரி யத்தின் பாடத்திட்டத்தில் தேர்வை நடத்தி திட்டமிட்டு வெளியேற்றுகின்றனர். இது அப்பட்டமான உரிமைப் பறிப்பு நடவடிக்கை.  சமமற்றவர்களை சமபோட்டிக்குள் தள்ளி அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டையே தகர்க்கும் செயல்.

2. நீட் தேர்வு  தகுதியை உறுதிப்படுத்துவதாக இல்லை. முந்தைய காலங்களில் பன்னிரண்டாம் வகுப்பு மதிப் பெண் அடிப்படையில் தரமான, திறமையான, மாணவர் கள் நுழைய உறுதி செய்யப்பட்டு இருந்தது. நீட் தேர்வால் தற்போது முறைகேடுகள், இரட்டை குடி யுரிமை கொண்டு தேர்வு, ஆள்மாறாட்டம், வினாத்தாள் விற்பனை, அரசுப்பள்ளி, கிராமப்புற மாணவர்களை புறந்தள்ளுதல் என  தனிநபர்களுக்கு சமமான, வாய்ப்பையோ, சமநிலை துவக்கத்திற்கான தளத்தை யோ நீட் தேர்வு வழங்கவில்லை.

3. மாநில மாணவர்களின் நலன் சார்ந்ததாக ஏகே. ராஜன் அறிக்கை இருக்கவில்லை எனக் கூறும் ஆளுநர், அதற்கு நியாயப்படுத்தும் தரவுகள் ஏதும் இன்றி, மேலும்  ஆதாரங்களைக் கொடுக்கும் அக்கறையுமின்றி ஒரு தலைபட்சமாக முடிவெடுக்க முனைகிறார். தமிழ்நாடு அரசின் உயர்நிலைக் குழுவின் அறிக்கை யில் முதல் இரண்டு அத்தியாயங்களில் சொல்லப் பட்டுள்ள பாடத் தேர்வுகள், போட்டித்தேர்வுகள், மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கை உத்திகள் தொடங்கி மாணவர் சேர்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் வரை பல்வேறு நிலைகளில் உறுதிப்படுத்தப்பட்ட விவரங்கள் பகுப்பாய்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எதை யும் கவனத்தில் எடுக்காமல்  அனுமானத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார் ஆளுநர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 37 அரசு மருத்து வக்கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. இக் கல்லூரிகள்  மாநில அரசால்  மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கல்லூரிகள். மேலும் ஆயிரக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலையங்களைக் கொண்டிருக்கக் கூடிய மாநிலம் நம் தமிழ்நாடு. இவற்றின் அடிப்படை கட்டமைப்புகளை தகர்க்கும் வண்ணம் இத்தேர்வு இருக்கிறது. இத்தேர்வின் கொடுமையால் மாணவர் கள் மட்டுமல்ல, பெற்றோர்களின் உயிர்களும் பறிக்கப் பட்டிருக்கின்றன. மேலும் மாநில உரிமை பறிக்கப் பட்டிருக்கிறது.ஆகவே தான் நீட்விலக்கு மசோதாவை அரசு சட்ட மன்றத்தில் நிறைவேற்றியது. மாநில மாண வர்களின் நலனில் இருந்து நீட் தேர்வு ரத்தை கோரு கிறது. ஆகவே ஆளுநரின் வாதம்  அடிப்படை அற்றது என்பதை அறியலாம்.

4. ஏ.கே. இராஜன் அறிக்கை முன்முடிவுகளோடு இருப்பதாக  ஆளுநர் கூறியுள்ளார். உண்மையில் ஆளு நர் தான் தனது ஆர்எஸ்எஸ்  ஆதரவு நிலையிலிருந்து  முன்முடிவோடு நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பி இருக்கிறார். தமிழக அரசின் அறிக்கையில் உள்ள உண்மை யான கண்டுபிடிப்புகளுக்கு எதிராக ஆளுநர் கூறுபவை யெல்லாம் அவரின்  சொந்த விளக்கமாகவே உள்ளது.  

4.ஏ.கே.ராஜன் அறிக்கை அனுமானங்களின் அடிப் படையில் இருக்கிறது என ஆளுநர் குறிப்பிடுகிறார். நீட் தேர்வு என்பது போட்டித் தேர்வின் கட்டமைப்பு மற்றும் அதனை நடத்துதல் என்ற இரண்டு செயல்பாடுகளின் அடிப்படையில் நடைபெறவேண்டும். ஆனால் நீட் தேர்வு அவ்வாறு நடக்கவில்லை. உலகளாவிய கண்ணோட்டம், தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான நிபந்தனைகள், அரசுத் துறை களிடம் இருந்து அங்கீகரிக்கப்பட்ட தரவுகள் ஆகிய மூன்று கோணங்களில் அறிவியல் பூர்வமான பகுப் பாய்வு செய்யும்  வகையில் இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு நீட் தேர்வு இல்லை என ஏ.கே.இராஜன் அறிக்கை தர்க்க ரீதியாக நிரூபித்துள்ளது. முற்சார்பற்ற பொதுவான தரநிலைகள் மற்றும் அளவுகோல்களைப் பயன்படுத்தி மாணவர்களின் திறனை சோதிப்பது.  தங்களுடைய கல்வி வாழ்க்கை  முழுவதிலுமாக  மாணவர்கள் உருவாக்கிக்கொண்டி ருக்கும் கல்விசார் திறன்கள்  அடிப்படையிலும் சோதிப் பது, உயர் படிப்பில் மாணவர்களின் வெற்றியைத் துல்லி யமாகக் கணிப்பது, அதேபோல் பயிற்சி, தனிப்பயிற்சி இல்லை என்பதை உறுதிப்படுத்துவது, கலாச்சாரம், பிராந்தியம், மொழி, சமூக பொருளாதார சார்பு குறித்து முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப் படுவதாக இருக்கவில்லை என்பதை உறுதி செய்வது ஆகிய நிபந்தனைகளை ஈடுசெய்யும் வகையில் இத் தேணயர்வு இல்லை என்பதை உயர்நிலைக்குழு கண்டறிந்துள்ளது.  மேற்கூறிய நிபந்தனைகளில் நீட் தேர்வு தோல்வி கண்டுள்ளது. இவ்வளவு விளக்கமாக நீட்டின் பாதிப்பு குறித்து  எடுத்துரைத்தும் அதை மறுப்பது  ஆளுநரின் அதிகாரத்தைக் காட்டுகிறதே தவிர மாணவர் நலன் மீது அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. திறமைகளற்ற மாணவர்களின் நுழைவைத் தடுக்க  நீட் தேர்வு தவறியிருக்கிறது. பன்முக சிந்தனையுடன் உயர்நிலை திறன்கொண்ட தேர்வர்களை தேர்ந் தெடுக்க இயலாத நிலை,  தேர்வு குளறுபடிகள் போன்ற நீட் தேர்வின் தோல்விகள் இதுகுறித்து கருத்துக்  கூறாமல் நீட்விலக்கு மசோதாவை திருப்பி அனுப்புவது ஆளுந ரின் கண்மூடித்தனத்தையே காட்டுகிறது.

5. அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு சதவீதம் மட்டுமே முந்தைய காலங்களில் இடம் பெற்றனர் என ஆளுநர் அறிக்கை கூறுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் செயல்திறன் குறைவாக இருக்க  பள்ளிகளில் வழங்கப்படும் கல்விச் சேவை மட்டும் காரணம் இல்லை.முக்கியமாக கற்றல், கற்பித்தல், பயிற்சி, எல்லோருக்கும் கிடைக்கின்ற பிற வசதிகள், போதுமான அடிப்படை வசதிகள் என கார ணிகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும். செயல் திறன் குறைவாக இருந்தாலும், பன்முகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் மருத்துவக் கல்விக்கான உலக கூட்டமைப்பு கூறுவதுபோல் மாணவர் சேர்க்கை யில் கற்றல் மற்றும் கல்வி செயல்முறைகளை மேம் படுத்த வேண்டுமே தவிர மற்றொரு தேர்வு தேவை யில்லை. ஏ.கே.இராஜன் அறிக்கை மஞ்சள் காமாலை பார் வையுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் கூறியுள்ளார். உண்மையில் ஆளுநர் கண்களை மூடிக்கொண்டு இவ்வறிக்கையை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

நீட் தேர்வுக்கு முன்பாக ஒரு சதவீதம் மட்டுமே சிபிஎஸ்சி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்த னர். தற்போது 39சதவீதமாக உயர்ந்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் 98.5 சதவீதம் மாணவர்கள் பயின்றனர். தற்போது 59 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழ் வழியில் 16.8 சதவீதம் பயின்ற மாணவர்கள் தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது. நீட் தேர்வுக்கு பின்பாக  தரவரிசை பட்டியலில் 10 மாணவர்களில் 8 மாணவர்கள் சிபிஎஸ்சி மாணவர்க ளாக தேர்வாகின்றனர். நீட் தேர்வுக்கு முன்பாக 2013 முதல் 2017 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை நான்கு ஆண்டுகளில் 43 பேர் மட்டுமே. நீட் தேர்வுக்குப் பின்பாக 2017 முதல் 2022 வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த  மாணவர்களின் எண்ணிக்கை 4979. இதன்மூலமே ஆளுநரின் அறிக்கையின் உண்மைத் தன்மையை அறியலாம்.

தமிழக அரசு மாணவர் நலனிலிருந்து மீண்டும் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி  நீட் தேர்வு விலக்கு மசோதாவை  மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.  தமிழகத்தில் இத்தேர்வு 25 மாணவர்கள் உயிரை பறித்திருக்கிறது.  நம்  தலைமுறையினரின் மருத்துவக் கனவு பறிக்கப்பட்டு பொதுசுகாதாரம் சீரழிக்கப்படுகிறது.

இத்தகு மாணவர் விரோத மக்கள் விரோத நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடந்த ஐந்து ஆண்டுக ளாக இந்திய மாணவர் சங்கம் பல்வேறு கட்ட போராட் டங்களை தொடர்ந்து நடத்திவருகிறது. 100க்கும் மேற் ழுட்ட மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வழக்குகளை சந்தித்தும் வருகிறோம். கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி 1000 மாணவர்களை திரட்டி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு வலுவான போராட்டத்தை நடத்தி னோம்.  தொடர்ச்சியாக மாநில உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களாட்சி மாண்புகள் என அனைத்தை யும் சிதைக்கும்   நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.  நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டி இரண்டாவது முறையாக தமிழக சட்டமன்றம் இயற்றிய சட்ட முன்வடிவை ஆளுநர் உடனே ஒன்றிய அமைச்சர வைக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து  48 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில், இராஜரத்தினம் ஸ்டேடியத்தில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் மார்ச் 9,10 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடத்துகிறோம், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்கட்சி தலைவர்கள் பங்கேற்கி றார்கள்.

நீட் எனும் மாணவர்உரிமைப்பறிப்பு தேர்வை விரட்ட அனைவரும் கரம் கோர்ப்போம். மாநில அரசையும் நம்மோடு போராட்டக் களத்திற்கு கொண்டு வருவோம். 

கட்டுரையாளர் : மாநிலச் செயலாளர், 
இந்திய மாணவர் சங்கம்