மே 2014இல் ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் சாலைகளில் உயிர்ப்பலி, விபத்துக்களில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேர் இறக்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு என உள்நோக்கத்துடன் தற்போது இருக்கும் மோட்டார் வாகன சட்டத்தினை மாற்றியமைக்க வேண்டுமென முடிவுக்கு வந்தது. சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா 2014 என கார்ப்பரேட்டுகளுக்கும், பெரு முதலாளிக ளுக்கும் பொதுப்போக்குவரத்து மற்றும் சுங்கச்சாவடி களைத் திறந்துவிடும் விதத்தில் 13.09.2014 அன்று மசோதாவினை தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் போக்குவரத்தை சீரழிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டது. சாலைப் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சிறு உரிமையாளர்கள் உட்பட பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழ்நிலை இம்மசோதா வால் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்திடும் வகை யில் AIRTWF, CITU உள்ளிட்ட தொழிற்சங்க அமைப் புக்கள் ஒன்று திரண்டு நாடு முழுவதும் மத்திய அரசு க்கு எதிராக பல்வேறு இயக்கங்களை நடத்தின. மேலும் 30.04.2015 அன்று இந்திய நாடு முழுவதும் சுமார் 3 கோரி சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மேல் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி அம் மசோதாவினை கிடப்பில் போடும் நிலையை உரு வாக்கினர்.
சிஐடியு, அகில இந்திய சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர்ந்து இயக்கங்கள் நடத்தியதோடு, நாடாளுமன்றத்தில் இருக்கும் இடது சாரிகள் கடுமையான முறையில் ஆட்சேபித்தனர். ஒரு கட்டத்தில் தோழர். சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர்கள் மசோதாவில்உ ள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக் கான பாதிப்புகளை எடுத்துரைத்தும் பேசினர். நமது தரப்பில் குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க), நவநீத கிருஷ்ணன் (அதிமுக) உள்ளிட்ட இதர எம்பிக்களுடன் கலந்து பேசி விவா தத்திற்கு உட்படாமல் தள்ளி வைக்கும் நடவடிக்கை யினை மேற்கொண்டோம். இந்நிலையில் பாஜக அரசு மசோதாவினை திரும்பப் பெற்று நடைமுறையில் இருக்கும் மோட்டார் வாகன சட்டம் 1988-லேயே, தனி யாருக்கு சாதகமாக 82 திருத்தங்களை செய்து இரு அவைகளிலும் தாக்கல் செய்து சட்டத்திருத்தங்களுடன் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப்பட்டது.
ரூல்ஸ் மற்றும் ரெகுலேஷன் உருவாக்கி கொண்டி ருக்கும் நிலையிலேயே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை டிபார்ட்மென்ட் மூலம் ஓட்டுநர்லை சென்ஸ், எப்சி, புதிய வாகனம் பதிவு, இன்சூரன்ஸ் கட்டணம், சாலை விதிகளை மீறி இயக்குவோ ருக்கு விதிக்கும் அபராதம், வாகனங்களின் லைப், நாடு முழுவதும் இயக்கும் விதத்தில் ஆம்னி பேருந்துகளு க்கு அனுமதி, பதிவு சான்று, சுங்கக் கட்டணம் உயர்த்து தல் போன்றவற்றையொட்டி 02.02.2017, 16.04.2018, 22.05.2018, 13.09.2018, 02.11.2018, 19.11.2018, 24.07.2019, 12.03.2021 தேதிகளில் நோட்டிபிகேஷன் உத்தரவுகளின் மூலம் சாலை போக்குவரத்து தொழில்கள் பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்துள்ளது. தமிழக ஆட்சியிலிருந்த அதிமுக அரசும், ஒன்றிய அரசின் உத்தரவுகளுக்கு இணங்க 05.09.2018, 17.03.2021 தேதிகளில் உத்தரவு பிறப்பித்து நடைமுறைப்படுத்த முன் முயன்றது. வாகனங்களுக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கை செய்தி ஏற்கனவே வெளி வந்தன. சமீபத்தில் ஓட்டுநர் லைசென்ஸ் வழங்குதல், வாகனங்கள் எப்சி பார்ப்பது போன்றவற்றை தனியா ருக்கு (கார்ப்பரேட்) பிஜேபி அரசு கொடுக்க முன் வந்துள்ளது. இந்நிலையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் மூலம் தமிழக அரசுக்கு வருகிற வருமானத்தையும் காலி செய்யும் நடவடிக்கையாகவே மாறும்.
தளர்த்தப்பட்ட ஊரடங்கு என்று சொன்னாலும் சாலைப் போக்குவரத்து தொழிலே முடங்கியுள்ள நிலை யில், தொழிலாளர்களும் சிற்சில வாகன உரிமையா ளர்களும் வருமானமின்றி தவிக்கின்றனர். இந்நிலை யில் பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையினை தினந் தோறும் உயர்த்தி வந்த நிலையில் சமீபத்திய 5 மாநில தேர்தலின் காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. உக்ரேன், ரஷ்யா போரின் காரணமாக கச்சா எண்ணெய் நாளுக்கு நாள் விலை அதிகரித்து வரும் நிலையில், ரூ.9 அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் உள்ளது. மாநில அரசும் தன் பங்கிற்கு வரியும் விதிக்கிறது. தி.மு.க அரசு பொ றுப்பேற்ற பின்பு அரசின் சார்பில் ரூ.3 பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் ஓடாத வாகனத்திற்கு இன் சூரன்ஸ், சாலை வரி, எப்சி எடுத்தல், அரைகுறையாக வாகனம் இயங்கும் போது டோல்கேட் கட்டண கொள்ளை என அடிமேல் அடிக்கிறது பிஜேபி அரசு.
டோல்கேட் கட்டணக் கொள்ளை
உதாரணத்திற்கு. வேலூர் மாவட்ட பள்ளிகொண் டா - அணைக்கட்டு வரை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார் மினி பேருந்து வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 2005-ஆம் ஆண்டுகளிலிருந்து சுங்க கட்டணத்தை ஒன்றிய அரசு வசூலித்து வருகிறது. மாதத்திற்கு ரூ.1000/-, 1500/-, 2500/-, 4,000/- வரை டோல்கேட் கட்டணம் அவ்வப்போது உயர்த்திய நிலையில் செலுத்தி அப்பேருந்து இயங்கியது. தற்போது சுமார் ரூ.50,000/- அளவிற்கு மாதந்தோறும் டோல்கேட்டில் செலுத்த வேண்டிய சூழ்நிலை மினி பஸ் உரிமையளர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், பிரதமருக்கும், கிருஷ்ணகிரி ஆர்டிஓ அலுவலகத்திற்கும், நேஷனல் ஐவேஸ் அதாரிட்டி ஆப் இந்தியா அதிகாரிக்கும் 02.03.2020 மனு கொடுத்திருந்தும் இப்பிரச்சனை தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் கிராமத்திற்கு இயக்கப்பட்டிருந்த மினி பேருந்தை இயக்கப்படாமல் அச்சிறு உரிமையாளர் நிறுத்திவிட்டார். இதனால் அக் கிராம மக்களுக்கு பஸ் வசதி கிடைக்காமல் பல கி.மீ நடந்து வந்து மெயின்ரோட்டில் பேருந்துகளில் ஏறி பயணம் செய்ய வேண்டியுள்ளது.
அபராதம்
உச்ச நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பின் மூலம் ஏப்ரல் 2021 முதல் ஒன்றிய, மாநில அரசுகள் இன்சூரன்ஸ் கம்பெனிகள், போக்குவரத்து துறை மற்றும் அரசும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தின் கடுமை யான முடிவுகளை அமல்படுத்தும் நிலை உருவாக் கப்பட்டுள்ளது. இப்போதோ புதிய மோட்டார் வாகன சட்டப்படி எப்சி-யும் தனியாருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஓட்டுநர் உரிமம் வழங்குவது உட்பட கார்ப்பரேட் வச மாகி வருகிறது. ஓட்டுநர் பயிற்சி பள்ளியும் அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகும் போல் உள்ளது. வாகனம் இயங்காத காலத்தில் வாரியத்தின் உதவி பெற பதிவு செய்யலாம் என்றால் “ஆன்லைன் பதிவு” என்று கூறும் நிலையில் குழப்பம் நீடிக்கிறது.
வேலைக்குச் சென்றால் தான் தனது குடும்ப வாழ்க்கையை நடத்தும் நிலையில் உள்ள சாலைப் போக்குவரத்தான ஆட்டோ, டாக்சி, டெம்போ, ஷேர் ஆட்டோ, சிறிய சரக்கு வாகனம், மேக்சி கேப், பள்ளி வாகனம், மினி பேருந்து, தனியார் பேருந்து, லாரி, கன் டெய்னர் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலா ளர்கள் கீழ்காணும் பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகின்றனர்.
ஏழரை டன் வரைக்கும் வாகனங்களை இயக்க பேட்ஜ் தேவையில்லை என நீதிமன்றத் தீர்ப்பிற்கு பிறகும் வழியில் கொடுக்கும் தொல்லை, டோல்கேட், இன்சூரன்ஸ் சொந்த வாகனங்களுக்கு எப்சி-க்கு 15 ஆண்டு கால அளவை குளோஸ் செய்து இருத்தல், கட்டணம் எட்டு மடங்கு உயர்வு, ஸ்டிக்கர் குறிப்பிட்ட “திக்னஸ்” இருக்கவேண்டுமென நிர்பந்தம், “ஆன் லைன் பைன்” எனும் மோசமான நடவடிக்கை, முறை சாரா தொழிலாளர்களின் தகுதியாக மெக்கானிக்குகள் பதிவு செய்ய இயலாத சூழல், ஆன்லைனில் எல்லாமே பூர்த்தி செய்து சரியாக அனுப்பினாலும் திரும்ப திரும்ப திருப்பி அனுப்புவது, ஓவர்லோடு, ஸ்டிக்கர் ஒட்ட அதிக பணம் கேட்டு தொல்லை கொடுத்தல், வேலூர் (பள்ளி கொண்டா) பாண்டி, விழுப்புரம், திருமங்கலம் போன்ற டோல்கேட் பிரச்சனைகள், பாண்டிச்சேரி டோல் கேட்டில் ஆர்டிஓ அமர்ந்து ரூ.3,000 கட்டச் சொல்லி நிர்பந்தம், பிரைவேட் ஏஜென்சி மூலம் ஸ்டிக்கர் ஒட்ட பணம் வசூலிக்கும் கொடுமை, ஏர்போர்ட்டுக்குள் வாடகை வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலை போன்ற பல்வேறு நெருக்கடிக்கு சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
சாலைப் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டு இந்தியாவில் அனைத்து பகுதி உழைப்பாளி மக்களும். சாதாரண ஏழை, எளிய மக்களும் ஒன்றிய பிஜேபி அரசின் தவறான கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் இணைந்து டில்லியில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டின் அறைகூவலாக, தொழிலாளர் சட்ட தொகுப்பை கைவிட, பொதுத்துறைகளை பாதுகாக்க, மின்சார சட்டத்தை திரும்ப பெற, மோட்டார் வாகன சட்டத்தை கைவிட, முறைசாரா தொழிலாளர்களின் நலவாரியத்தை பாதுகாக்க, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட, பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்களை வலியுறுத்தி 2022 மார்ச் 28, 29 தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து தொழிலில் பணியாற்றுகின்ற முன்னணி ஊழியர்கள் மற்றும் இதர தொழிற்சங்க முன்னணி ஊழியர்களை ஒன்று திரட்டி வரும் 2022 மார்ச் 17-ம் தேதி திண்டுக்கல்லில் வேலை நிறுத்த ஆயத்த சிறப்பு மாநாடு நடத்த தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து உள்ளிட்ட பயணிகள் போக்குவரத்து, லாரி, ஆட்டோ, மேக்சி கேப், கால் டாக்சி, சிறிய சரக்கு வாகனம், பள்ளி வாகனம், பயிற்சி பள்ளிகள், டயர் பன்சர் போடுதல், இரு சக்கர, நான்கு சக்கர, ஆறு சக்கர, ஒர்க்ஷாப் என தமிழகத்தில் மட்டும் சுமார் 25 லட்சம் மோட்டார் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மோட்டார் தொழிலாளர்கள் ஒன்றிணைந் தால் இந்தியாவின் இயக்கத்தையோ நிறுத்த முடியும். அரசை அசைக்க வைக்க முடியும்.
அந்த உணர்வோடு ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள், தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை பின்னுக்கு தள்ள வரும் 2022 மார்ச் 28, 29 தேதிகளில் நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம். மகத்தான சாதனை படைக்க ஒன்று கூடுவோம்.
கட்டுரையாளர்: அகில இந்திய சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சம்மேளனத்தின் துணைத்தலைவர்