கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரசுக் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்றும், பல்வேறு துறைகளில் ஒப்பந்த மற்றும் தற்காலிகமாக பணிபுரிபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் திமுக கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழக இளைஞர்கள் வாக்களித்தார்கள்.
தமிழக அரசு மற்றும் அரசுத் துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்க ளை நியமிக்க வேண்டும் என பல கட்டப் போராட்டங்க ளை நடத்திய பிறகும் கடந்த அதிமுக அரசு அக்கோரிக் கைக்கு செவிசாய்க்கவில்லை. கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சி காலத்தில் பெயரளவில் மட்டுமே நிரந்தர அடிப்படையிலான பணி நியமனங்கள் நடை பெற்றன. தற்காலிக மற்றும் ஒப்பந்த பணியாளர்களா கவும், அவுட்சோர்சிங் அடிப்படையிலும் மட்டுமே பெரும்பகுதி பணி நியமனங்கள் மேற்கொள்ளப் பட்டன. அதிலும் முறைகேடுகள் மலிந்து காணப்பட்டன. கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணி யாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட அனைத்துத் தேர்வுகளும் பெரும் சர்ச்சைக்கு ஆளானது. குளறு படியான அறிவிப்புகள், தேர்வு முறைகேடுகள், கால தாமதமான பணிநியமனங்கள் காரணமாக இவற்றின் மீதான நம்பிக்கை தகர்ந்து வருகிறது.
வரவேற்கத்தக்க அறிவிப்புகள்
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழக அரசு வேலைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை குறித்து பாராட்டத்தக்க அரசாணை களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றினால் தந்தை, தாய் இருவரையும் இழந்த வர்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அரசாணை வெளி யிட்டுள்ளது. மேலும், தமிழக அரசு மற்றும் பொ துத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளை யாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்தும் அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் மேலாக, தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளை கட்டாய மாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் வரவேற்கத் தக்கவை.
தேர்வு அறிவிப்புகள்
கொரோனா பேரிடரை காரணம் சொல்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இத்தேர்வுகளை உடனடியாக நடத்திட வேண்டு மென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுக ளுக்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஒருபக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் மறுபக்கம் ஏமாற்றத்தை அளிக்கிறது. காரணம் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குரூப் 2 மற்றும் 2ஏ நிலை பதவிகளுக்கு 5831 பணியிடங்க ளும், குரூப் 4 நிலை பதவிகளுக்கு 5255 பணியிடங்க ளும் தேர்வுகள் மூலம் நிரப்பப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கௌரவ விரிவுரையாளர்கள்
அரசுக் கல்லூரிகளில் கணிசமான பகுதி உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் 2331 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு ஆசிரி யர் தேர்வாணையம் 04-10-2019 அன்று அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பங்களும் பெறப்பட்டன. ஆனால், பணிநியமனத்திற்கான அடுத்தகட்ட நடவ டிக்கைகள் தற்போது வரையிலும் மேற்கொள்ளப் படவில்லை. இந்நிலையில், ஆண்டிற்கு 11 மாதத்திற்கு தலா 20,000 தொகுப்பூதியத்தில் 3443 கௌரவ விரிவு ரையாளர்களை நியமிப்பதற்கு அரசு உத்தர விட்டுள்ளது.
முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்
அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்நிலை யில் 09-09-2021 அன்று 2207 பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு விண்ணப்பங்களும் பெறப்பட்டன. 2021 நவம்பர் 13,14,15 தேதிகளில் கணினி வழி தேர்வு கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பில் இருந்த பல்வேறு குளறுபடிக ளால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி எப்போது தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப் படவில்லை. இத்தகைய சூழலில், பெற்றோர் ஆசிரி யர் கழகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மாதம் 10,000 ரூபாய் சம்பளத்தில் 2774 முதுநிலை ஆசிரியர்க ளை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.
இடைநிலை சுகாதாரப் பணியாளர்
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகிறபோது தமிழ கத்தில் சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்பட்டதாக இருந்தாலும் அவை போதுமானதல்ல என்பதையே கொரோனா பேரிடர் நமக்கு உணர்த்தியது. இந்நிலை யில், தமிழகத்தின் சுகாதாரக் கட்டமைப்பை இன்னும் வலுவானதாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக அர சிற்கு உள்ளது. அதன் முதல் படியாக காலியாகவுள்ள மருத்துவர், செவிலியர், ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியிடங்களையும் முழுமையாக நிரப்பிட வேண்டும். மேலும், பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்க ளையும் உருவாக்க வேண்டும். ஆனால், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இப்பணியிடங்கள் பெரும்பாலும் அவுட்சோர்சிங் முறையிலேயே நிரப்பப்பட்டன. திமுக அரசால் மேற்கொள்ளப்படும் பணிநியமனங்களும் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக ‘இடை நிலை சுகாதாரப் பணியாளர்’ என்ற பெயரில் 4828 செவி லியர்களை பணிநியமனம் செய்வதற்கான அறிவிப்பை 01-12-2021 அன்று சுகாதாரத்துறை வெளியிட்டது. இவர்களுக்கு மாதம் 14000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்றும் இந்த பணி முழுமையாக ஒப்பந்த அடிப்படையிலானது என்றும் தற்காலிக மானது என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், இவர்கள் அரசுப் பணியாளர்கள் அல்ல என்றும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் மட்டுமே என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள், “இப்பணி முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதை நன்கு அறிவேன். இப்பணி எக்காரணத்தைக் கொண்டும் நிரந்தரமாக்கப்படாது என்பதையும் நன்கு அறிவேன். நான் பணியில் சேர்ந்த பின் பணி மாறுதல் அல்லது பணி நிரந்தரம் கோர மாட்டேன்” என்று உறுதி மொழி சான்று கொடுக்கவேண்டுமென்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதே விதிமுறைகளின் படி ஒப்பந்த மற்றும் தற்காலிக அடிப்படையில் மாதம் 11000 ரூபாய் சம்பளத்தில் 2448 சுகாதார ஆய்வாளர்களும் நியமிக்கப் படவுள்ளதாக தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பணி நியமனத்தில் மாற்றம் தேவை
நவீன தாராளமயக் கொள்கைகளை அம லாக்கத் துவங்கிய 1990களுக்குப் பிறகு அரசு மற்றும் தனியார் துறைகளில் நிரந்தர அடிப்படை யிலான பணி நியமனங்கள் என்பது கேள்விக்குறியாகி யுள்ளது. அதிலும் குறிப்பாக, நரேந்திரமோடி தலைமை யிலான ஒன்றிய அரசு அதிகாரத்திற்கு வந்தது முதல் அரசு மற்றும் அரசுத் துறைகளில் நிரந்தர அடிப்படையில் பணிநியமனம் செய்வது அரிதாக மாற்றப்பட்டுள்ளது. தற்காலிகப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், திட்டம் அடிப்படையிலான பணியாளர்கள் என்ற வகையில் பணிநியமனங்களை மேற்கொள்வதுடன் மாநில அரசுகளும் அந்த அடிப்ப டையில்தான் பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்துகிறது. தொழிலாளர் நலச் சட்டங்களை சிதைத்து உழைப்புச் சுரண்டலை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. கடந்த அதிமுக அரசு ஒன்றிய பாஜக அரசின் இளைஞர் விரோத நடவடிக்கை களை அப்படியே நகலெடுத்து தமிழகத்திலும் அமல்படுத்தியது.
எனவே தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அரசுக் காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்றும், பல்வேறு துறைகளில் ஒப்பந்த மற்றும் தற்காலிகமாக பணிபுரிபவர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும் திமுக கொடுத்த வாக்குறுதியை நம்பி தமிழக இளைஞர்கள் வாக்களித்தார்கள். இந்நிலையில், திமுக அரசாங்கம் போட்டித் தேர்வுகளை நடத்தி நிரந்தர அடிப்படையில் பணியா ளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பதே தமிழக இளைஞர்களின் எதிர்பார்ப்பு. கடந்த காலங்களை ஒப்பிடுகிறபோது இன்றைய தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதாக இருந்தாலும் பணி நியமனங்கள் குறித்த தமிழக அரசின் நடவ டிக்கைகள் நம்பிக்கைத் தருவதாக இல்லை. பணி நியமனங்கள் குறித்த திமுக அரசின் அறிவிப்புகளை பார்க்கும்போது கடந்த அதிமுக அரசின் பாதையில் தான் திமுக அரசும் பயணிக்கிறதோ என்ற சந்தே கம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. எனவே, தமிழக திமுக அரசாங்கம் பணிநியம னங்கள் குறித்த தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். நிரந்தர அடிப்படையில் பணிநியம னங்களை மேற்கொள்ள வேண்டும்.
கட்டுரையாளர் : மாநிலத்தலைவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்