articles

img

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்றுக!

தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகளை முற்றாக ஒழிப்ப தற்கும், பட்டியலின மக்களின் நலன்களை பாதுகாத்து அவர்க ளின் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கும் தங்கள் தலை மையிலான அரசு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சட்ட மன்றக்குழு சார்பில் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் பல வடிவங்களில் நீடித்து வருகிறது. பட்டியலின மக்கள் மீதான அடக்குமுறைகளும், தாக்கு தல்களும் அதிகரித்து வருகின்றன. இவைகளை களைவதற்கு தங்கள் தலைமையில்  செவ்வாயன்று (12.4.2022) நடைபெற்ற மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சட்ட மன்றக்குழு சார்பில் சில கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு கீழே தந்துள்ளோம். இவற்றை ஆய்வு செய்து, நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டு மெனவும் கேட்டுக் கொள்கிறோம்.

கோரிக்கைகள்

1தமிழகத்தில் ஆணவப்படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுப்பதற்கு “தனிச் சட்டம்” இயற்றிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தனிச் சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசிற்கு முழு அதிகாரம் உள்ளது. ஏனெனில் இந்திய அரச மைப்புச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஏழாவது அட்ட வணை  “சட்டம் மற்றும் பொது ஒழுங்கு” மாநிலத்தின் அதிகாரம் என வரையறுத்துள்ளது. உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் குறிப்பாக லதாசிங் எதிர் ஒன்றிய அரசு (Union of India), ஆறுமுக சேர்வை எதிர் தமிழ்நாடு மற்றும் குறிப்பாக மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்த வழக்கு சக்தி வாஹினி எதிர் Union of India (SHAKTHI VAHINI VS UNION OF INDIA) என்ற வழக்கில் ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் தண்டனை போதவில்லை என்றாலோ அல்லது வேறு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றாலோ அதற்கு மாநில அரசுதான் உரிய முடிவெடுக்க வேண்டும் என வாதிட்டது. மேலும் மேற்கண்ட அட்டவணை குறித்து எடுத்து காட்டியது. எனவே தன்முனைப்புடன் தமிழக அரசு முன் மாதிரியாக ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக “தனிச் சட்டம்” இயற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

2தமிழ்நாடு அரசு சட்டப்பேரவை விதி எண் 123 இன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிர்ப்பந்தம், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015” முன்வடிவு என்ற பெயரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் அப்போ தைய சட்டமன்ற குழுவின் தலைவர் அ.சவுந்தரராசன் 29.9.2015 அன்று பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்ததையும் தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

3உசிலம்பட்டி விமலாதேவி சாதி ஆணவப் படுகொலையைத் தொடர்ந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சி யால் வழக்கறிஞர் உ. நிர்மலாராணியின் மூலமாக விமலாதேவியின் இணையர் திலீப்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண் 26991 / 2014 என்ற வழக்கில் நீதிபதி வி. ராம சுப்பிரமணியன்  13.04.2016 அன்று வழங்கிய தீர்ப்பில் “சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் இயற்றப்படவேண்டும்” என்று அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது. அத்தகைய தனிச் சட்டம் இயற்றப்படுகிற வரை சாதி மறுப்புத் திருமண தம்பதிகளைப் பாதுகாப்பதற்கு பின்வரும் வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. 

மாவட்டம் தோறும் சிறப்புப் பிரிவுகள்

அசாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினருக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் குறித்த மனுக்களை / புகார்களை வாங்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சமூக நலத்துறை அதிகாரி, மாவட்ட ஆதி திராவிட நல அதிகாரி ஆகியோரைக் கொண்ட சிறப்புப் பிரிவுகளை மாநில அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

ஆ    இந்தச் சிறப்புப் பிரிவுகள் இத்தகைய புகார்களைப் பெறவும் அவற்றை பதிவு செய்யவும் தேவையான உதவி / ஆலோசனைகளையும் அதே நேரத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்கவும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஒரு தொலைபேசி இணைப்பை உருவாக்க வேண்டும்.

இமாநிலத்தில் உள்ள ஒவ்வொரு காவல்நிலையமும் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு (சிசிடிஎன்) இணைப்பில் உள்ளதால், இத்தகைய புகார்கள் உதவி தொலைபேசி இணைப்பு மூலம் பெறப்பட்டாலும் கூட உடனடியாக அந்தத் தம்பதியினர் முதல் தகவல் அறிக்கையை தானாகவே பெறும் வகையில் ஒரு முறையை உருவாக்குவது குறித்து மாநில அரசு ஆலோசிக்க வேண்டும்.

ஈஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வாறு உருவாக்கப்பட்ட சிறப்புப் பிரிவுகள் முறையான கால இடைவெளியில், தொலைபேசி இணைப்பு மூலமாகவோ அல்லது வேறுவகையிலோ பெறப்படும் சாதி மறுப்புத் திருமண தம்பதியினருக்கு அளிக்கப்படும் துன்புறுத்தல் / மிரட்டல் பற்றிய புகார்களை பதிவு செய்யப்படுவதையும், உரிய காவல்நிலையத்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதையும் கண்கா ணிக்க வேண்டும்.

ஆன்லைன் புகார் பதிவு வசதி

உசாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியி னர் எந்த காவல் எல்லையில் வருகிறார்களோ அவர்க ளுக்குப் பாதுகாப்பு தருவது அந்தக் காவல் நிலைய ஆய்வா ளரின்  (காவல்நிலைய அலுவலரின்) கடமை. அத்தகைய பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, சிறப்புப் பிரிவு, ஹெல்ப்லைன் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ பெறப்பட்ட புகார், தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று உணரும் தம்பதியர் எங்கு செல்கிறார்களோ அந்த எல்லைக்குள் இருக்கும் காவல் நிலையத்திற்கு உடனடியாக அனுப்பப்படு வதை உறுதி செய்ய வேண்டும். CCTNS போர்ட்டல் மூலம்  ஆன்லைன் பதிவு சாத்தியமாக இருந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு புகார் அனுப்புவது எளிதாக இருக்கும். சிறப்புப் பிரிவினால் பாதுகாப்பு வேண்டும் என்ற தம்பதியினரின் கோரிக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட தருணத்திலிருந்து, தம்பதியருக்குப் பாதுகாப்பு அளிப்பது அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளரின் கடமையாகும்.

ஊபாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்கு வது மற்றும் தம்பதிகளை பின் தொடர்ந்து துரத்தி வந்த தற்காக குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டும் தங்கள் பணியை கட்டுப்படுத்திக் கொள்ளா மல், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோர் தங்கள் பாது காப்புக்காக அளிக்கும் புகார்களை பெறவேண்டி அமைக்கப் பட்ட சிறப்புப் பிரிவு, தம்பதியரின் பெற்றோருக்கு ஆலோசனை (கவுன்சிலிங்) வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எசாதி ஆணவப் படுகொலை என்ற தீமையை ஒழிக்கத் தேவை யான நிதியை அரசு ஒதுக்கி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்புப் பிரிவுகளின் வசம் போதுமான நிதி கிடைக்கச் செய்ய வேண்டும். தம்பதிகளுக்கு தற்காலிக தங்குமிடங்களை வழங்கவும், தேவையான இடங்களில் அவர்களுக்கு மறுவாழ்வு  அளிக்கவும் இந்த நிதி சிறப்புப் பிரிவுகளால் பயன்படுத்தப்பட லாம். சிறப்புப் பிரிவுகள் ஆலோசகர்களின் சேவைகளை ஈடு படுத்த எந்தத் தடையும் இருக்கக்கூடாது.

கடமை தவறிய அதிகாரி,  பொறுப்பேற்க வேண்டும்

ஏஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சிறப்புப் பிரிவு, தம்பதி யினரைப் பாதுகாக்கும் கடமையில் தவறிய அதிகாரிகளை அதற்கு பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். பாதுகாப்பு வழங்கத் தவறியதை ஒரு பெரிய தவறான நடத்தையாகவே பார்க்க வேண்டும். அரசு, மூன்று மாதங்களுக்குள் சிறப்புப் பிரிவுகளை அமைத்து மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஐமேற்கண்ட முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டல்படி சிறப்புப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. எனவே தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநில  பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் பெயரில் சென்னை உயர்நீதி மன்றத்தில்  460/2017 என்ற எண்ணுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் அன்றைய உள்துறை செயலாளர்  அபூர்வ வர்மா, சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வமான வாக்கு மூலத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், மாநக ரங்களிலும் ரிட் மனு 26991/2014-இன் படி சிறப்புப் பிரிவுகள் தற்பொழுது அமைக்கப்பட்டு விட்டது எனவும் சிறப்புப் பிரிவு களின் அதிகாரிகள் பெயர் மற்றும் தொலைபேசி எண்களையும் தெரிவித்திருந்தார். இதன் பிறகும் ஆணவப்படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருந்தன.

ஒஇந்நிலையில் இச்சிறப்புப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி தீண்டாமை ஒழிப்பு முன்னணியால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் உரிய பதில்களைப் பெற முடியவில்லை என்பதே இச்சிறப்புப் பிரிவுகள் இயங்கவில்லை என்பதைச் சுட்டு கிறது. ஆகவே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த சிறப்பு  பிரிவுகள் மாவட்டம் தோறும் இயங்குவதை உறுதி செய்திட வேண்டும்.

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு...

4சாதி மறுப்பு திருமணம் புரிந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, ஓய்வூதியம், வீட்டுவசதி மற்றும் மறுவாழ்வு நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். அனைத்து மாவட்டங்களில் சிறப்பு நீதி மன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். வன்கொடுமை வழக்கு நடத்துவதற்கு சிறப்பு வழக்கறிஞர்கள் கோருபவர்களுக்கு பரிசீலித்து 15 நாட்களுக்கும் ஒப்புதல் வழங்கிட வேண்டும். வன் கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகள் பதிவு செய்யப்படும் போது, பாதிக்கப்பட்ட பட்டியலினத்தவர் மீது கட்டாயமாக வழக்குப்  பதிவு செய்வதை தவிர்த்திட வேண்டும். விசாரணை அடிப்படை யில் உண்மைத் தன்மையை அறிந்து வழக்குப் பதிவு செய்வது என்பது தவிர்க்க முடியாததாகும். காவல்துறையை பொறுத்த வரை கவுண்ட்டர் (எதிர்) பெட்டிசன் வாங்கி வழக்குப் பதிவு செய்யும் நடைமுறை என்பது தீண்டாமையை ஒழிப்பதற்கு பயன் படாது. ஆகவே இதில் அரசு கவனம் செலுத்திட வேண்டு மென கேட்டுக் கொள்கிறோம்.

5சாதி மறுப்பு காதல் திருமணம் புரியும் தம்பதியினருக்கு விடப்படும் அச்சுறுத்தல், மிரட்டல்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அல்லது மாநில அளவிலான அதிகாரிகள் அல்லது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தெரியப்படுத்தும் விதமான “செயலியை” அறிமுகப் படுத்தப்பட வேண்டும். இது சாதி  ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான ஒரு வழிமுறையாகவும் அமையும்.

அரசு வேலை

6 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், நந்தீஸ், சுவாதி  - சாதி ஆணவப்படுகொலை வழக்கில் (2018) நந்தீஸ் குடும்பத்தில் ஒரு வருக்கு அரசு வேலை இன்னும் வழங்கப்படவில்லை. வழங்கிட வேண்டும்.

7 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், குருந்தமடம் பழனியின் (2021) குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. வழங்கிட வேண்டும்.

8 சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் (2015) குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. வழங்கிட வேண்டும்.

9  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, விமலாதேவி சாதி ஆணவப் படுகொலை வழக்கில் (2014) குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை. வழங்கிட வேண்டும்.

10   அரியலூர், நந்தினி வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகள் (2019) இன்னும் முடிவு பெறவில்லை. நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

காவல் நிலையத்திலாவது  அறிவிப்புப் பலகை

11   சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் வன்கொடுமை  தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளுக்கு உட்பட்டது என்பதை கிராமப்புறங்களில், பொது இடங்களில், மக்கள் கூடும் இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். குறைந்தபட்சம் காவல் நிலையத்திற்கு வெளியிலாவது இந்த அறிவிப்புப் பலகையை வைக்க வேண்டும்.

12   தமிழகத்தில் இன்னும் பல வடிவங்களில் நீடிக்கும் தீண்டா மைக் கொடுமையான இரட்டை குவளை முறை, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதை தடுப்பது, பட்டியலின மக்களின் பிணங்களை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல தடுப்பது - சுடுகாட்டுப் பாதை மறுப்பு, கோவிலுக்குள் தலித் மக்கள் வழிபட அனுமதி மறுப்பு -  பொங்கல் வைக்க மறுப்பு - ஊர் கூடி தேர் இழுக்க மறுப்பு, ஊர் திருவிழாக்களின் போது கோவில், குளத்தை  பட்டியலின மக்கள் மட்டும் சுத்தம் செய்ய வற்புறுத்துவது, ஊர் பொது இடங்களை பயன்படுத்த தடை விதிப்பது, சமமாக நாற்காலியில் உட்காருவதை தடுப்பது, ஆடு, மாடு இறந்து போனால் அடக்கம் செய்ய வற்புறுத்துவது, பண்டிகைக் காலங்க ளில், ‘உயர்’சாதியினரின் வீடுகளில் வேலை செய்ய வற்புறுத்து வது, பட்டியலின மக்களின் தெருக்களில் புகுந்து வீடுகளையும், அவர்களது உடமைகளையும் தாக்குவது, பட்டியலினப் பெண்கள் - சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் - சீண்டல்கள் செய்வது உள்ளிட்டு பல வடிவங்களில் தீண்டாமைக் கொடுமை கள் நடைபெற்று வருகின்றன. இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

13    புதுக்கோட்டை மாவட்டம், வணக்கண்காடு, கன்னியன் கொள்ளை, கரு. வடத்தெரு, கரு. தெற்குத் தெரு, கரு. கீழத்தெரு, போன்ற கிராமங்களில் இன்றும் தலித் மக்கள் ஆலய வழிபாடு மறுப்பு, பொது இடங்களை பயன்படுத்த தடை, பண்டிகைக் காலங்களில் ‘உயர்’சாதியினர் வீட்டு வேலைகள் செய்ய வற்புறுத்துவது உள்ளிட்ட கொடுமைகள் நீடித்து வரு கின்றன. இதனை தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.

மனைப்பட்டா

14  ஈரோடு மாவட்டம்   சத்தியமங்கலம் ( நகரம்) வரதம்பாளை யம் கிராமம், தோப்பூர் பகுதியில் சுமார் 150 ஆண்டுகளாக 185 அருந்ததியர் குடும்பங்களைச் சேர்ந்த துப்புரவுப் பணியா ளர்கள் குடியிருந்து வருகின்றனர்.  சத்தியமங்கலம் நகரப் பகுதி யில் -(தோப்பூர்)  பிளாக் ஏ - வார்டு எண் 21 ரீ. ச. எண் 340/2 “தலைவர் ஊராட்சி மன்றம் சத்தியமங்கலம்”  என்று கிராம கணக்குகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விஸ்தீரணம் 3.17 ஏக்கர் ஆகும். இங்கு குடியிருக்கும்  துப்புரவுப் பணியா ளர்கள் பல ஆண்டுகளாக வீட்டு மனைப் பட்டா கேட்டும் மனுக் கள் கொடுத்தும் வந்துள்ளனர். இதுவரை கிடைக்கவில்லை. இவர்களுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


15  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், உக்கிரம் பகுதி யில் உணவகங்களில் இரட்டை டம்ளர் முறைகளும், தரையில் அமர வைத்து உணவு வழங்கும் முறையும், முடி வெட்ட மறுப்ப தும் நடந்து வருகிறது. இது குறித்து கடத்தூர் காவல் நிலை யத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு பட்டியலின மக்களுக்கு உணவுப் பொருட்கள் மளிகைக் கடைகளில் வழங்க மறுத்தும், கூலி வேலை செய்யவிடாமல் தடுத்தும் வரு கின்றனர். இவற்றை களைவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும்.

தடுப்புச்சுவர்

16   திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஆரம்பாக்கம் அருகிலுள்ள தோக்கமூர் ஊராட்சியில் 150 தலித் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் வசித்து வந்த வீடுகளை ஒட்டி 2006ஆம் ஆண்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அந்த சுவரின் மீது கண்ணாடி ஓடு பதிக்கப்பட்டு தலித் பகுதி மக்கள் இந்த பகுதியில் வராமல் இருப்பதற்கு அமைக்கப்பட்டுள் ளது. அதேபோல, திரௌபதி அம்மன் கோவிலை சுற்றி சுமார் 3 ஏக்கர் பரப்பளவில்  கம்பி வேலி அமைப்பதற்கு சிமிண்ட் கம்பம் நடப்பட்டுள்ளது. தலித் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு நிறுத்தப்பட்டுள்ளது. இது அகற்றப்பட வேண்டும். அதே போல, இந்த ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்  நிலம் எடுத்து ஒரு குடும்பத்திற்கு 3 சென்ட் என்ற அடிப்படை யில் 90 தலித் குடும்பங்களுக்கு  பயனாளிகள் தேர்வு செய்து, அதற்கான  7 நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த நிலம் 90 குடும்பங்க ளுக்கு வழங்கப்படவில்லை. உடனடியாக இந்நிலங்கள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

17   திருவள்ளூர் தாலுகா, பேரத்தூர் ஊராட்சி, விஷ்ணுவாக்கம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி யும் தலித் மக்கள் பயன்படுத்துவார்கள் என்ற காரணத்திற் காக கட்டவிடாமல் சிலர் தடுத்து வருகின்றனர். இங்கு பேருந்து  நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

18   திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை தாலுகா ராஜா நகரம் ஊராட்சியில் 105 தலித் குடும்பங்களுக்கு 1991-96 வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்து பட்டா வழங்கவிடாமல் தடுத்து வருகின்றனர். மனித உரிமை ஆணையம் தலையிட்டு உடனடி யாக நிலத்தை வழங்க வேண்டுமென வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டும் இதுவரை வழங்கவில்லை. இம்மக்களுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

19    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா, நாகநா தபுரம் கிராமத்தில், 40 ஆண்டுகளுக்கும் முன்னதாக தலித் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கப்பட்டது. தற்போது வரை குடிமனை இடம் அளந்து பயனாளிகளுக்கு ஒப்படைப்பு செய்ய வில்லை. உடனடியாக நிலம் ஒப்படைப்பு செய்திடவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் சட்டமன்றக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.