articles

img

வறுமை ஒழிந்து விட்டதா? மோடி அரசின் ஏமாற்று வேலை! - பேரா.அசோக் குலாட்டி, சைமா ஜோஸ்

வேலை வாய்ப்புகளுக்கு உண்மையான உரைகல் ஊதிய விகிதங்கள் தான். கிராமப்புறங்களில் மோடியின் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக கடந்த ஐந்து வருடங்களில் எதிர்மறை வளர்ச்சியை நோக்கியே ஊதியங்கள் வேகமாக சென்றுள்ளது. ஊதிய அரிப்பை இது ஏற்படுத்தியுள்ளது என்பதை அரசாங்கத்தின் தரவுகளில் இருந்தே எவரும் புரிந்து கொள்ளலாம்.

நரேந்திர மோடி அரசின் கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுவிட்டதாக நிதி ஆயோக் சமீபத்தில் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இது தேசிய பல பரிமாண வறுமை குறியீட்டை (NMPI)-  National Multi development Poverty Index) அடிப்படையாகக் கொண்டது.

பத்து அளவீடுகள்

ஐக்கிய நாடுகள் சபை இந்த வறுமைக் குறியீட்டை 10 காரணிகளைக் கொண்டு அளவிடுகிறது. ஆரோக்கி யம் (ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பிறப்பு); கல்வி  (பள்ளி மற்றும் பள்ளி வருகை) மற்றும்; வாழ்க்கைத் தரம் (சமையல், எரிபொருள், சுகாதாரம், குடிநீர், வீடு, மின்சாரம் மற்றும் சொத்து). இவற்றுடன் நம்மு டைய நிதி ஆயோக்  தாய் வழி ஆரோக்கியம் மற்றும் வங்கிக் கணக்கு இரண்டையும் சேர்த்து அதனை பன்னிரண்டு அளவீடுகளாக அதிகரித்துள்ளது. வருமானம்/ நுகர்வு அடிப்படையிலான பாரம்பரிய மதிப்பீடுகளைக் காட்டிலும் இந்த பல பரிமாண வறுமைக் குறியீடு முறை, வறுமையின் சிறந்த அளவீடு என நிதி ஆயோக் வாதிடுகிறது.

இரண்டிற்கும் இடையே உள்ள குறைபாடுகளை விவாதிப்பது இந்த கட்டுரையின் நோக்கம் அல்ல என்றாலும் 12 குறி யீடுகளின் அடிப்படையில் ஆராயும் பொழுது இவை  அனைத்தும் அரசின் முதலீடுகளால் இயக்கப்படுவது என்ற அடிப்படையில் மக்கள் தொகையின் ஒரு பெரும் பகுதியினரின் நிலைமைகளில் முன்னேற்றம் இருந்தால், அதை வரவேற்கலாம். சுகாதாரம், பள்ளி, வங்கிக் கணக்கு ஆகியவை  ஒரு குடும்பத்தின் வருமா னத்தோடு நேரடியாக தொடர்புடையது என்பதும் மற்றொரு முக்கிய அம்சம்.

ஆண்டு கல்வி நிலை அறிக்கை வெளிப்படுத்தும் உண்மைகள்!
1. கல்வித்தரம் மோசமாக உள்ள போது பள்ளிகளில் சேர்ப்பதில் என்ன பயன்?
2. ஏழைகளின் வருமானம் குறைந்து சேமிப்புக்கே வழியில்லாத போது வங்கிக் கணக்கு வைத்திருப்பதால் மட்டும் என்ன பலன்?

பிரதமரின் ஆண்டு கல்வி நிலை அறிக்கை இந்த முரண்பாடுகளை சுட்டிக்காட்டி உள்ளது. நமது கல்வி முறை படித்த வேலையில்லாத இளைஞர்களை உரு வாக்குகிறது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் வருமானம் குறைந்து வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி காணும் நிலையில் கல்வி, சுகாதாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றை  நுகரக் கூடிய அவர்களின் வாங்கும் சக்தியை எப்படி தக்க வைக்க முடியும் என்ற கேள்வியையும் இது எழுப்பு கிறது? வருமான வீழ்ச்சியால் ஏற்படும் வறுமையை மறைப்பதற்காகவே, ‘பல பரிமாண வறுமைக் குறியீடு’ என்ற அளவீடு உருவாக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.

உண்மையான ஊதியம் மற்றும் வேலையின்மை இரண்டையுமே சம அளவு முக்கியத்து வத்தோடு கணக்கிட்டால் தான் 2047ஆம் ஆண்டுக்குள்  வெகு ஜனங்களை மேம்படுத்தக்கூடிய வளர்ச்சிப் பாதையை உருவாக்க முடியும். மக்களின் வருமான மும் அதற்கு ஏற்ப கணிசமாக உயர வேண்டும். நாள் ஒன்றுக்கு 2.5 டாலர் (சுமார் ரூ.207) வருமானம் மட்டுமே பெறுகின்ற (சுமார் 16 கோடி) மக்கள் இந்தி யாவில் வாழ்கின்றனர் என உலக வங்கி அறிக்கை (2017 ஆம் ஆண்டின் வாங்கும் சக்தியின் அடிப்படை யில்) கூறியுள்ளது.

ஏழை மக்களை  
வறுமையில் இருந்து வெளியேற்றுவது எப்பொழுது?

இந்த ஏழை மக்களில் பெரும்பான்மையோர் கிராம ங்களில் உள்ளனர். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில்களில் பணியாற்றுகின்றனர்.கடந்த 20 வருடங்களில் இருவேறு அரசியல் கட்சிகள் ஆட்சி யில் வேலை வாய்ப்பு உண்மையான ஊதிய விகி தங்களில் என்ன நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.

ஐ.மு.கூ முதல் ஆட்சிக் காலத்தில் வேளாண்துறை யில் ஆண்களுக்கான உண்மையான ஊதியம் சிறிதளவு (0.2%) வளர்ந்தது. விவசாயம் சாராத தொழி லாளர் ஊதியம் 0.9% குறைந்தது. இரண்டாவது ஆட்சிக் காலத்தில் 2009-10 முதல் 2013- 14 வரை விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத கிராமப்புற ஊதியங்கள் முறையே 8.6% மற்றும் 6.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்தது.

பாஜக கூட்டணி ஆட்சியில் எதிர்மறை வளர்ச்சி!
பாஜக கூட்டணியின் முதலாம் ஆட்சியில் 2014-2018 வரை கிராமப்புறங்களில் விவசாயம் அல்லது விவசாயம் சாராத ஊதியம் முறையை 3.3 மற்றும் 3% வீழ்ந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊதியங்க ளின் வளர்ச்சி முறையே மைனஸ் 0.6 மற்றும் மைனஸ் 1.4 என்ற எதிர்மறைக்கு மாறியது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியதாகும். இது மீட்சி பெறும் என்பது ஒரு நம்பிக்கையே! 

விவசாய வீழ்ச்சி
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.விவரம் வருமாறு:

1951 இல் 69.7%; 2011 இல் 54.6%: 2018ல் 42.5%; 2019 20 45.6%; 2020- 21 இல் 46.5%; 2021- 22 இல் 45.5%

கோவிட் காலத்தில் ஏற்பட்ட தலைகீழ் இடம்பெயர்வு கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

வேலையின்மை குறைந்ததாக மாயத் தோற்றம்
வேலைவாய்ப்பின்மை குறித்த தகவல்களை  காலமுறை தொழிலாளர் சக்தி ஆய்வறிக்கை (Periodic Labour Force Survey 2017-18) முதல் வெளி யிட்டு வருகிறது. அப்பொழுது 6 சதவிகிதமாக இருந்த வேலை வாய்ப்பின்மை 2021- 22 ல் 4.1% குறைந்துள்ளது. ஆனால் உண்மையில் வேலையின்மை குறைய வில்லை

. அப்படி ஒரு மாயத் தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. பாஜக அரசின் பிஎல்எப்எஸ் அறிக்கைக்கும் சர்வ தேச தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) ஆய்வுக்கும்  இடையேயான வரையறையில் உள்ள வேறுபாடு தான் இதற்கும் காரணம். பிஎல்எப்எஸ் (PLFS), ஊதியம் வழங்கப்படாவிட்டாலும் அதையும் வேலைவாய்ப்பாக கணக்கிட்டுக் கொள்வதால் வேலையின்மை குறைந்த தாக காட்டுகிறது. ஆனால் உண்மையில் வேலை யின்மை அதிகரித்து வந்துள்ளது என்று திட்ட கமிஷ னின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சந்தோஷ்  மேரோத்ரா உண்மையைப் போட்டு உடைக்கிறார்.

பிஎல்எப்எஸ் (PLFS)-ன் ஒப்பீடுகளை பிற நாடு களுடன் பொருத்திப் பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த நாடுகள் ஐஎல்ஓ வரையறைகளை பின்பற்று கின்றன. இதன்படி கணக்கிடும் போது இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை வேகமாக அதிகரித்து வரு கிறது என்ற உண்மை தெரியவரும் என்றும் சந்தோஷ் மோரேத்ரா விளக்குகிறார்.

வேலைவாய்ப்புகளின்  உரைகல் எது?

வேலை வாய்ப்புகளுக்கு உண்மையான உரைகல் ஊதிய விகிதங்கள் தான். கிராமப்புறங்களில் மோடி யின் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக கடந்த ஐந்து வருடங்க ளில் எதிர்மறை வளர்ச்சியை நோக்கியே ஊதியங்கள் வேகமாக சென்றுள்ளது. ஊதிய அரிப்பை இது ஏற் படுத்தியுள்ளது என்பதை அரசாங்கத்தின் தரவுகளில் இருந்தே எவரும் புரிந்து கொள்ளலாம்.

கட்டுரையாளர்கள் : இந்திய சர்வதேச பொருளாதார விவகார ஆராய்ச்சிக் கவுன்சிலின் பேராசிரியர் மற்றும் ஆய்வு மாணவர்
நன்றி : தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் 
(The Financial Express) 22/1/24.
தமிழில் : கடலூர் சுகுமாரன்