articles

img

சோக்காளியின் “ஷோ” காலி - அ.ர.பாபு

கொதிக்கிற வெயிலில் தார்ச் சாலையில் உருண்டு புரண்டாலும், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தாலும், தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என்பது சர்வ நிச்சயம் என்பதை கோவையில் நடை பெற்ற சோக்காளியின் ரோடு “ஷோ” காலியானதும், சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஊத்திப்போனதும், தமிழக மக்களின் உணர்வு பாஜகவிற்கு எதிரான மனநிலையில் இருப்பதை ஒரு சேர பிரதிபலித்துள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு தேர்வு  நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலை யில், கோயம்புத்தூரில் திங்களன்று நடந்த மோடியின் ரோடு ஷோவுக்கு தேர்ந்தெடுத்த சாலையில் கல்லூரிகள், மருத்துவமனைகள் அதிகம். மேலும், மேட்டுப்பாளையம் சாலை பிரதான சாலையாக இருப்பதால், நகர் உலா விற்கு அனுமதிக்க முடியாது என கோவை மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. உடனே பாஜகவினர் நீதி மன்றம் சென்று ரோடு ஷோவிற்கு அனு மதி பெற்று மோடியை தெருவில் உலாவ விட்டனர்.

அப்படி அனுமதி பெற்று இரண்டு நாட்கள், கோவை மாவட்ட மக்களை  படாதபாடு படுத்தி பெரும் அவதிக்கு உள்ளாக்கிவிட்டனர். அவிநாசி சாலை,  காந்திபுரம், நூறடி சாலை, மேட்டுப் பாளையம் சாலை முழுவதையும் பாது காப்பு காரணங்களுக்காக காவல்துறை அடைத்தது. நடந்து செல்வதற்குகூட ஒருவரையும் அனுமதிக்கவில்லை. 

இதனால், இதர சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அல்லோலகல்லோலப்பட்ட னர். வாகனங்களை அனுமதிக் காததால், மேட்டுபாளையம் சாலையில் உள்ள பூமார்க்கெட் முற்றிலுமாக ஸ்தம்பித்தது. டன் கணக்கான பூக்கள் விற்பனையாகாமல் அழுகிப்போயின. விற்பனைக்காக வந்திருந்த பூக்கள் அவிந்து அழுகிப்போனதால் மொத்த பூ வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். இதேபோன்றே, மாண வர்கள், தொழிலாளர்கள், மருத்துவ மனைக்கு சென்றவர்கள் என அனை த்து தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகினர். 

இதனால், இதர சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அல்லோலகல்லோலப்பட்ட னர். வாகனங்களை அனுமதிக் காததால், மேட்டுபாளையம் சாலையில் உள்ள பூமார்க்கெட் முற்றிலுமாக ஸ்தம்பித்தது. டன் கணக்கான பூக்கள் விற்பனையாகாமல் அழுகிப்போயின. விற்பனைக்காக வந்திருந்த பூக்கள் அவிந்து அழுகிப்போனதால் மொத்த பூ வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகினர். இதேபோன்றே, மாண வர்கள், தொழிலாளர்கள், மருத்துவ மனைக்கு சென்றவர்கள் என அனை த்து தரப்பினரும் பெரும் அவதிக்குள்ளாகினர். 

சேலத்திலும்...
இதேபோன்றே, ராமதாஸ், டி.டி.வி.தினகரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் அமரவைத்து சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கும் ஆட்கள் வரவில்லை. வந்த ஆட்களும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல், “தேமே” என அமர்ந்திருந்த னர்.  மைதானம் நிரம்பியுள்ளது போன்ற  தோற்றத்தை ஏற்படுத்த, நடப்பதற் கென்று தடுப்புகள் அமைக்கப்பட்ட இடைவெளியில் இரண்டு பேருந்துகள் ஓவர்டேக் எடுத்துச்செல்லும் வகையில் இடைவெளி விட்டிருந்தனர்.

மொத்தத்தில் சோக்காளியின் “ஷோ” காலி என்பதே அரசியல் ஆர்வ லர்களின் தற்போதைய பேச்சாக உள்ளது.  

- அ.ர.பாபு