தேர்தல் நிதி பத்திர திட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அத்திட்டத்தை ரத்து செய்ததோடு, யார் நிதி கொடுத்தார்கள், எவ்வளவு கொடுத்தார்கள், யாருக்கு கொடுத்தார்கள் என்ற விபரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணை யத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது. மார்ச் 3 ஆம் தேதி வரை மவுனம் சாதித்த பாரத ஸ்டேட் வங்கி 4 ஆம் தேதி சென்று, முழு விபரங்களை சமர்ப்பிப்ப தற்கு ஜூன் 30 வரை அவகாசம் கேட்டது. தேர்தல் நிதி பத்திரம் சம்பந்தப்பட்ட விப ரங்களை மூடி மறைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு பாஜக தலைமை கொடுத்த அழுத்தத்தினால்தான் பாரத ஸ்டேட் வங்கி அவகாசம் கேட்டது என்பது புரிந்து கொள்ள முடியாத ஒன்றல்ல.
திடீரென்று குதித்த மூன்று கையாட்கள்
நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாக பாரத ஸ்டேட் வங்கி மீது தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மார்ச் 12 அன்று வங்கி நிர்வாகம் விபரங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டு மென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், முழு விபரத்தையும் வங்கி நிர்வாகம் அளிக்கவில்லை. இதுகுறித்து கடந்த 18ஆம் தேதி தேர்தல் நிதி பத்திரம் சம்பந்தபட்ட தீர்ப்பு அமலாக்கம் குறித்து வழக்கு விசாரணைக்கு வந்தது. 18 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறபோது எப்படியாவது முழு விபரங்களையும் நீதிமன்றத்திற்கும், தேர்தல் ஆணையத்திற்கும் அளிக்காமல் தடுத்து பாரதிய ஜனதா கட்சியின் உலக மகா மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடந்துள்ளன. திரைப்படத்தில் உச்ச கட்ட க்ளை மாக்ஸ் காட்சியில் வில்லன், தான் செய்த குற்றங்களை மறைப்பதற்கும், தப்பிப்பதற்கும் எடுக்கும் முயற்சிகளைப் போல் 18 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில், பாஜகவின் மோசடியை மூடி மறைப்பதற்கு 3 வழக்கறிஞர்கள் வாதாடியிருக்கிறார்கள்.
‘நீங்கள் தலையிட உரிமை இல்லை’
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அதிஷ் சி அகர்வாலா, தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதத்தை எழுதி அந்த கடிதத்தை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து, ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென்று வாதிட்டார். “ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. உங்களுக்கு இவ்வழக்கில் இப்போது தலையிட உரிமை இல்லை. நீதிமன்றம் அனுமதிக்காது. இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், இல்லையேல் நீங்கள் விரும்பத்தகாத வகையில் நாங்கள் சொல்ல வேண்டியதிருக்கும்” என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரித்தார்.
முதலாளிகளுக்காக கூப்பாடு
முதலாளிகளின் சங்கங்களின் சார்பாக (இந்திய வர்த்தகம் மற்றும் தொழி ல்துறை கூட்டமைப்பு - FICCI, இந்திய தொழில் கூட்டமைப்பு CII) ஆகிய இரண்டு அமைப்புகளின் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் நிதி பத்திரம் சம்பந்தபட்ட முழு விபரங்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் வலியுறுத்தக் கூடாது என்றும், அப்படி சமர்ப்பித்தால் யார் நிதி கொடுத்தார், யாருக்கு கொடுத்தார், எவ்வளவு கொடுத்தார் என்பது வெளிச்ச த்திற்கு வரும்; இதனால் நிதி கொடுத்த முதலாளிகள் அரசியல் கட்சிகளால் மிரட்டப்படுவார்கள் என்றும் வாதிட்டார். “நீங்கள் இன்று காலை (18.03.2024) நீதிமன்றத்திற்கு கொடுத்த உங்களுடைய மனு இன்னும் பட்டியலிடப்படவில்லை. இப்போது எங்கள் முன் உங்கள் மனு இல்லை. மனு மீது வாதிடாமல் வாய் வழியாக சொல்லும் வாதத்தை நீதிமன்றம் கேட்க தயாராக இல்லை. நீதிமன்ற விதிப்படி மற்றவர்களுக்கு சொல்வதுதான் உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் நீதிமன்றத்தில் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி குறிப்பிட்டார். “இந்த வழக்கு விசாரணையில் முதலாளிகளின் சங்கம் மனுதாரராக இல்லை. அவர்களுடைய கருத்துக்களை கேட்காமலேயே தேர்தல் நிதி பத்திரம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அவர்களுடைய கருத்துக்களை சொல்வதற்கு இப்பொழுது வாய்ப்பளிக்க வேண்டும்” என முத லாளிகள் சங்க வழக்கறிஞர் வாதிட்டார். “இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததை உலகமே பார்த்துக் கொண்டிருந்தது. நீங்கள் (முதலாளிகள் சங்கம்) உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இப்போது நீதிமன்றத்திற்கு வரு கிறீர்கள். இது சரியான அணுகுமுறை அல்ல. நீங்கள் மூத்த வழக்கறிஞர் என்பதற்காக உங்களுடைய வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் வாதத்தை ஏற்றால் பல நேரங்களில் இளம் வழக்கறிஞர்கள் அவசரமாக வருவார்கள், அவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்” என முதலாளிகள் சங்க வாதத்தை நிராகரித்துவிட்டார்.
‘கத்துகிற வேலையெல்லாம் இங்கு வேண்டாம்’
மேற்கண்ட விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடிரென்று மேத்யூ நெடும்பரா என்ற வழக்கறிஞர் தலையிட்டு “நாட்டு மக்களுக்கு தெரியாமல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது” என சத்தம் போட்டார். “என்னை பார்த்துக் கத்தாதீர்கள், இது வெளியில் நடைபெறும் தெருச் சண்டை கூட்டம் அல்ல, நீங்கள் நீதிமன்றத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் விசாரணையில் பங்கேற்க வேண்டுமென்றால் மனு போட்டு தான் பங்கேற்க முடியும்” என தலைமை நீதிபதி, வழக்கறிஞர் நெடும்பராவின் வாதத்தையும் நிராகரித்துவிட்டார். மேலும் நீங்கள் வலியுறுத்தியுனால் உங்கள் மீது நீதிமன்றத்தை அவமதித்தாக வழக்கு தொடர வேண்டியிருக்கும் என நீதிபதி எச்சரித்தார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் அதிஷ் அகர்வால் பாஜக வைச் சார்ந்தவர். தேர்தல் நிதி பத்திரம் சம்பந்தமாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமலாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் வழக்கறிஞர் சங்க லெட்டர்பேடில் அகர்வால் கடிதம் எழுதுகிறார். சங்கத்தினுடைய நிர்வாகக்கு ழுவை கலந்து ஆலோசிக்காமல் லெட்டர் பேடை பயன்படுத்தி கடிதம் எழுதிய சங்க தலைவரை கண்டித்து நிர்வாகக்குழுவே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
கள்ளமவுனம் காத்த பாஜக
கடந்த பிப்ரவரி 15 அன்று தேர்தல் நிதி பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த சில தினங்களில் பாஜகவின் தேசிய குழு கூட்டம் நடைபெற்றது. அதில் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக செய்தி வெளியானது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடியோ, அமித்ஷாவோ, பாஜக தலைவர் நட்டாவோ இத்தீர்ப்பு குறித்து வாய் திறக்கவில்லை. “மொத்த தேர்தல் பத்திரங்களின் மூலமாக கிடைத்த பணத்தில் 6000 கோடி தான் பாஜக பெற்றுள்ளது” என அமித்ஷா பொய்யுரைத்தார். தேர்தல் பத்திர முறைக்கு முன்பு இருந்த நடைமுறை மட்டும் 100 சதவிகிதம் குறைபாடற்றதா என நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குமுறினார். இவர்கள் இருவருமே உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து சொல்ல வில்லை. கடந்த 10 ஆண்டு காலமாக பிரதமராக இருக்கும் மோடி ஒருமுறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்தது கிடை யாது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் “ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்று வாய்ச்சவடால் விடுகிறார் பிரதமர் மோடி. தேர்தல் நிதி பத்திரம் ‘சட்டப் படியான ஊழல்’. இந்த ஊழல் திட்டத்தைத் தான் உச்சநீதிமன்றம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று கூறி, ரத்து செய்தது என்பதோடு விபரங்கள் அனைத்தையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு வந்த பிறகு தாங்கள் செய்த மெகா ஊழல் அம்பலமாகி விட்டதே என பாஜகவினரும், சங் பரிவார அமைப்புகளை சார்ந்தவர்களும் மிகுந்த பதட்டத்தில் உள்ளனர். “திருவாளர் பரிசுத்தம்” ஊழல் பற்றி பேசுவது எடு படாது. உலகமகா ஊழல் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் மக்கள் தோற்கடிப்பார்கள் என்பது உறுதியாகி வருகிறது.