நவீன இந்தியாவின் பொருளாதார வரலாற்றில் 1990களின் தொடக்கம் ஒரு நாசகரமான திருப்புமுனையாக அமைந்தது. மிகப்பெரும் கடன் நெருக்கடியை (BoP Crisis) சமாளிக்க என்ற பெயரில், பி.வி. நரசிம்மராவ் அரசாங்கம் தனியார்மயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தது. “நவீன இந்தியாவின் கோயில்கள்” என நேரு அழைத்த பொதுத்துறை நிறு வனங்கள், “அரசாங்கத்திற்கு வணிகத்தில் எந்த வேலையும் இல்லை” என்ற புதிய கோட்பாட்டின் கீழ் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
26% பங்குகள் விற்பனை
இந்தச் சூழலில் 1999-ல் வாஜ்பாய் தலைமை யிலான பாஜக கூட்டணி அரசாங்கம் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (HZL) நிறுவனத்தின் 26 சதவீத பங்கு களை அனில் அகர்வாலின் வேதாந்தா நிறுவனத் திற்கு விற்பனை செய்தது. HZL என்பது வெறும் ஒரு நிறு வனம் மட்டுமல்ல. துத்தநாகம் உற்பத்தியில் நாட்டின் முன்னணி நிறுவனமாக இருந்த இது, நாடு முழுவதும் நான்கு தொழிற்சாலைகளையும், ஏழு சுரங்கங்களை யும் கொண்டிருந்தது. ராஜஸ்தானின் உதய்பூரை தலை மையகமாகக் கொண்ட இந்நிறுவனம், 1976-ல் விசாகப்பட்டினத்தில் துத்தநாக உருக்காலையை நிறுவி, தென்னிந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கும் பங்களித்து வந்தது.
இந்த விற்பனைக்கு எதிராக முதன்முதலில் வீதி களில் இறங்கி போராடியது சிஐடியு தொழிற்சங்கம் தான். எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கூட எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், சிஐடியு தலைமையிலான தொழிற்சங்கங்கள் தெருப்போராட்டங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் நாடாளு மன்றத்தில் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.
எச்சரிக்கை உண்மையானது
இந்த கூட்டு எதிர்ப்பு போராட்டங்களின் விளை வாக, ஐமுகூ-1 ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ள முயன்ற கூடுதல் பங்கு விற்பனை முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. இடதுசாரிகளின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் ஐமுகூ-2 காலத்தில், இடதுசாரி களின் ஆதரவு தேவையில்லாத நிலையில், இந்நிறு வனத்தில் அரசின் பங்குகள் மேலும் குறைக்கப்பட் டன. வேதாந்தா குழுமம் 64.92 சதவீத பங்குகளைக் கொண்டு, நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது.
சிஐடியு தொடக்கம் முதலே எச்சரித்தது போல, இந்த தனியார்மயமாக்கல் நிறுவனத்தின் சொத்துக் களை கையகப்படுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகவே இருந்தது. “பெரும்பான்மை பங்கு களை வாங்கி, பின்னர் நிறுவனத்தின் சொத்துக்களை ரியல் எஸ்டேட்டுக்குப் பயன்படுத்துவதற்கான தீய திட்டமே இது” என்ற மார்க்சிஸ்ட் கட்சியின் எச்சரிக் கை, விசாகப்பட்டினம் துத்தநாக உருவாக்காலை மூடப்பட்ட போது உண்மையானது.
வேலை இழந்த தொழிலாளர்கள்
2013ல் விசாகப்பட்டினம் யூனிட் திடீரென மூடப் பட்டது. கச்சா கனிமப் பற்றாக்குறை, மின்சாரம், சுற்றுச் சூழல் பிரச்சினைகள் என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் உண்மையான நோக்கம், 365 ஏக்கர் பரப்பளவில் கங்காவரம் - விசாகப்பட்டினம் துறைமுகங்களுக்கு இடையே அமைந்துள்ள மதிப்புமிக்க நிலத்தை கைப்பற்றுவதே என்பது பின்னர் தெரியவந்தது. இங்கு 1697 நிரந்தர தொழிலாளர்கள், 140 அதிகாரிகள், 1300 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேலை இழந்தனர்.
இந்த மூடல் விவகாரத்தில் ஐஎன்டியுசி போன்ற தொழிற்சங்கங்கள் நிர்வாகத்துடன் சமரசம் செய்து கொண்டதால், தொழிலாளர்களின் போராட்டம் பலவீனமடைந்தது. அன்றைய காங்கிரஸ் தலைவர் களின் நாடகமான எதிர்ப்புகளும், உள்ளூர் அரசியல் தலைவர்களின் வெற்று உறுதிமொழிகளும் தொழி லாளர்களை ஏமாற்றின. இறுதியில் வெறும் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன் தொழிலாளர்கள் வெளியேற்றப் பட்டனர்.
சூறையாடிய வேதாந்தா
ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்டின் மதிப்புமிக்க சொத்துக்கள் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. வேதாந்தா குழுமம் இந்த சொத்துக்களைப் பயன் படுத்தி தனது வணிகத்தை பெருக்கிக் கொண்டது.
இன்று, அதே வேதாந்தா குழுமம் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் கனிமம் எடுக்க வரு கிறது. நாயக்கர்பட்டி பிளாக் என்ற பெயரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கான ஆய்வு உரிமத்தை பெற்றுள் ளது. விவசாய நிலங்கள், நீர் ஆதாரங்கள், சுற்றுச்சூழல் ஆகியவை பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். HZL விவகா ரத்தில் நடந்த அனுபவங்களை முன்வைத்து, மார்க் சிஸ்ட் கட்சியும் வாலிபர் சங்கம் உள்ளிட்ட இயக்கங் களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரு கின்றன. எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது.
ஹிந்துஸ்தான் ஜிங்க் உள்ளிட்ட விவகாரம் நமக்கு கற்றுத்தரும் முக்கிய பாடங்கள் பல. ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் தனியார்மயமாக்கல் என்பது வெறும் பங்கு விற்பனையோடு முடிவடைவ தில்லை. அது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை யும், தேசத்தின் பொருளாதார சுயாட்சியையும் பாதிக் கிறது. சிஐடியு-வின் தொடக்ககால எச்சரிக்கைகள் அனைத்தும் இன்று நிரூபணமாகியுள்ளன.
இருப்பினும், போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட
வெற்றிகளும் உள்ளன. நெய்வேலி, விசாகப்பட்டினம் எஃகு ஆலை, கோல் இந்தியா போன்ற நிறுவனங்களில் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டங் கள் தனியார்மயமாக்கலை தடுத்து நிறுத்தின.இதுதொழிலாளர் ஒற்றுமையின் வலிமையை காட்டு கிறது.
லாப வேட்டைக்காடாக...
தற்போது மதுரை மாவட்டத்தில் வேதாந்தாவின் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான போராட்டம், HZL அனுபவங்களின் அடிப்படையில் முன்னெடுக் கப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களை பாது காப்பது என்பது வெறும் தொழிலாளர் நலன் சார்ந்த விவகாரம் மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுடன் தொடர்புடையது என்ற புரிதல் வளர்ந்துள்ளது.
ஏனெனில், பொதுத்துறை நிறுவனம் என்பது மக்கள் நலனை காவு கேட்காது; ஆனால் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை துச்சமாக எண்ணும்; லாப வேட்டைக்காடாக மாற்றும்.
அரியவகை கனிமங்களை கொள்ளை அடிப்ப தற்காக மதுரையை முற்றுகையிடும் வேதாந்தா நிறுவனத்தின் நடவடிக்கைகள், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதன் நீண்டகால விளைவுகளை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் நலனுக்காக செயல்படும் நிறுவனங்கள். ஆனால் தனியார் நிறு வனங்கள் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டவை என்பதை இது மீண்டும் உணர்த்து கிறது.
கட்டுரையாளர் : சிஐடியு, மாநில துணைத் தலைவர்