articles

img

முகம் சுழிக்க வைக்கும் வள்ளலார் நகர் பேருந்து நிலையம்- ம.மீ.ஜாபர்

தமிழகத்தின் பழமை வாய்ந்த பகுதிகளில் வடசென்னையில் உள்ள வள்ளலார் நகரும் ஒன்று.  இந்த  பகுதிக்கு  தங்கசாலை, வண்ணார் பேட்டை என்ற பெயரும் உண்டு.  வடசென்னை மக்களின் பொது போக்குவரத்தின் மையமாக திகழ்வது  இந்த வள்ளலாளர் நகர் பேருந்து நிலையம்தான். புகழ்பெற்ற அரசு  ஸ்டான்லி மருத்துவமனை, ஆர்எஸ் ஆர்எம் மகப்பேறு மருத்துவமனை, பாரதியார் மகளிர் கல்லூரி வணிகப் பகுதியான தங்கசாலை, எம்சிரோடு, மூலக்கொத்தளம், வால்டாக்ஸ்சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளுக்கு வந்துசெல்லும்  பொதுமக்கள் இந்த  பேருந்து நிலையத்தை சார்ந்துள்ள னர்.

நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும்  வண்ணாரப் பேட்டை பேருந்து நிலையம் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது. மெட்ரோ ரயில்நிலையம் வந்த பிறகு பொதுமக்களின் புழக்க அடர்த்தி  சற்று தளர்ந்துள்ளது என்றாலும் சாமான்ய மக்கள் பேருந்து போக்கு வரத்து சேவையை நம்பியுள்ளனர். குறைந்த கட்டணம், அரசு சலுகை கள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட வைகளால் சென்னை மாநகர போக்குவரத்து இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்குகிறது.

ஆர்.கே.நகர், ராயபுரம் சட்ட மன்றத்தொகுதியின் மையத்தில் உள்ள இந்த பேருந்துநிலையம் தற்போது மழைநீர் மற்றும் கழிவுநீரால் சூழப்பட்டுள்ளது. பேருந்து நிலையத் தின் ஒருபகுதி குண்டும் குழியுமாக  காட்சியளிக்கிறது. மழைக்காலங் களில் பேருந்துநிலையத்திற்குள் வரும் போது படகில் பயணிப்பது போன்ற அசைவையும் உணர்வை யும் ஏற்படுத்துவதாகவும் முதியவர் கள், பள்ளி கல்லுரி மாணவர்கள்  தெரி வித்தனர். மிகுந்த சிரமத்திற்கு மத்தி யில் பேருந்துகளை அடைய வேண்டி யுள்ளதாக  பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பேருந்து கள் இயக்கப்படும் நேரம் குறித்து  முறையான அறிவிப்பு வெளியிடப் படுவதில்லை என்றனர்.

இதில் கூடுதல் வேதனை என்ன வென்றால் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் இயற்கை உபாதை கழிக்கமுடியாமல் பெண்கள் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். ஆனால் ஆண்களோ பேருந்து நிலையத்தையொட்டி கூச்சமின்றி சிறுநீர்கழித்து விடுகின்றனர். இதனால் மெட்ரோ ரயில்நிலை யத்திலிருந்து  பேருந்து நிலையம் நுழையும் பகுதியில் சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் போக்குவரத்து ஊழியர் கள் கூட பொதுவெளியிலேயே தங்கள்  இயற்கை உபாதையை கழித்து வருகின்றனர். இங்குவருகின்ற பெரும் பாலான பெண்கள் அருவெறுப்பு உணர்வோடு முகம் சுழித்துக்கொண்டு செல்லும் பரிதாபநிலையை கண் கூடாக காணமுடிந்தது. இதுகுறித்து மாநகர பேருந்து ஓட்டுநர் மற்றும்  நடத்துநர்களிடம் கேட்டபோது, டைம்கீப்பர் அறை அருகே உள்ள கழிப்பறை மற்றும் ஓய்வறை கூட முறையாக பராமரிக்கப்படாமல் இருக்கிறது. பொதுமக்களுக்கு மட்டு மன்றி போக்குவரத்து ஊழியர்களுக்கு கூட  இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. தவறு என்று தெரிந்தாலும் வேறு வழியின்றி நாங்கள் இங்கேயே சிறுநீர் கழிக்கவேண்டியுள்ளது. பொதுமக்களுக்கான கழிவறைகள் கட்டப்படாலும் மந்தமானநிலையில் தான் வேலைகள் நடப்பதாக கூறி னார்.  

மக்களின் நலனுக்காக பலத்திட்டங் களை நாள்தோறும் அறிவித்து செயல்படுத்திவரும் மாநில அரசும்  மாநகராட்சியும் மாநகர போக்குவரத்து  கழகமும் சென்னை முழுவதும் உள்ள பேருந்து நிலையம் மற்றும்  பணிமனைகளை ஆய்வு செய்து  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். கழிவறை இல்லாத இடங்களில் அதற்கான வசதிகளை செய்துதர வேண்டும், பயணிகள் அமர இருக்கை கள், மழை மற்றும் வெயில் காலங்க ளில் பாதிக்கப்படாமல் இருக்க போதிய கூரைகள், குடிநீர்வசதி,ஓட்டுநர் நடத்துநர்களுக்கு அடிப்படை வசதிகளுடன் ஓய்வறைகள், ஆகிய வற்றை ஏற்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகவுள்ளது.

- ம.மீ.ஜாபர்