articles

img

ரயில் விபத்துக்கு வழிவகுக்கும் பரிந்துரைகளும் உத்தரவுகளும் - ஆர்.இளங்கோவன்

ரயில் விபத்துக்கு வழிவகுக்கும்  பரிந்துரைகளும் உத்தரவுகளும் - ஆர்.இளங்கோவன்

ரயில்வே லோகோ பைலட்டுகளின் உணவு மற்றும் இயற்கை உபாதைகளுக்கான இடைவேளைக்கு சாத்தியமில்லை என்றும் அவர்களது தலை மையக ஓய்வு (வாராந்திர) ஓய்வில் உள்ளடக்கியது என்றும் கூறுவதன் மூலம் வாரத்தில்  ஒட்டுமொத்த ஓய்வு நேரத்தை 22 அல்லது 30 மணிநேரம் மட்டுமே என்ற மோசமான முடிவையும் பரிந்துரைத்துள்ளது ரயில்வே நிர்வாகம். ரயில்வே பாதுகாப்புடன் ( Safety) நேரடித் தொடர்பு டைய ரயில்வே லோகோ பைலட்டுகளின் பல குறை களைக் களைய அமைக்கப்பட்ட ரயில்வே பன்முக நிபுணர்கள் குழு (Multi Disciplinary Committee on Grievances of Loco running staff) மற்றும் லோகோ பைலட்டுகள் வேலை நேரம் மற்றும் ஓய்வு தொடர்பான ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர் நிலைக்குழு (HPC 2013) பரிந்துரைகள் அமலாக்கம்  தொடர்பாக  அமைக்கப்பட்ட ரயில்வே வாரியக் குழு (Railway Board Committee) ஆகிய இரண்டு குழுக்களின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தக் குழுக்களின் பின்னணி

சமீபத்திய பல ரயில் விபத்துக்களுக்கு ரயில் ஓட்டு நர்களின் கவனக்குறைவு காரணமாகக் கூறப்பட்டது. அதேசமயம் தொடர் இரவுப் பணிகள், போதுமான ஓய் வின்மை, நீண்ட பணி நேரம் போன்ற அடிப்படைக் கார ணங்களினால் கவனக்குறைவு ஏற்படுவதை பல விபத்து விசாரணை அறிக்கைகள் மற்றும் வல்லுநர் குழுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய சூழ்நிலையில் தெற்கு ரயில்வே லோகோ பைலட்டுகள் கடந்த ஆண்டு பல போராட் டங்களைத் தொடர்ந்து, நிர்வாகத்திற்கு முறையாக முன்னறிவிப்பு செய்து, 2024 ஜூன் 1 முதல் உரிமை மீட்புப் போராட்டம் நடத்தினர். மறுக்கப்பட்ட 46 மணி நேர வார ஓய்வு, இரண்டு இரவுகளுக்கு மிகாமல் இரவுப் பணி மற்றும் வேலை நேரம் உள்ளிட்ட உரிமைகளைத் தாங்களே எடுத்துக் கொள்ளும் போராட்டத்தின் விளை வாக 300க்கும் மேற்பட்ட சார்ஜ் ஷீட்கள் மற்றும் இடமாற்றம் என  பல தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்ட னர். ஆனால் அத்தகைய போராட்டத்தின் பக்க விளை வாக, 2024 ஜனவரியில் லோகோ பைலட்டுகளின் காலி யிடங்கள் வெறும் 5696 என்று பொய் கூறிய ரயில்வே நிர்வாகம் அதனை 18799 என உயர்த்தி 18.06.2024 அன்று அறிவித்தது. மேலும் போராட்டத்தின் விளை வாக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்க ளின் அழுத்தம் மற்றும் கேரள  எம்பி ஜான் பிரிட்டோ முன்னெடுத்த 14 உறுப்பினர்களின் கூட்டு கோரிக்கை மனு ஆகியவற்றின் காரணமாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலையீட்டை முன்னிட்டு தாங்க ளாகவே உரிமைகளை எடுத்துக் கொள்ளும் வகையில் தெற்கு ரயில்வேயில் நடத்தப்பட்ட ஒரு மாத கால போ ராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. எனினும் ஆதரவுப் போராட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்தன. அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலையீட்டால் ஏஐஎல்ஆர்எஸ்ஏ தலைவர்கள் ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து முறையிட்ட னர். அப்போது அமைச்சர், ஓடும் தொழிலாளர்களின் குறைகளைக் களைய கமிட்டி அமைத்து தீர்வு காணப் படும் என்று உறுதியளித்தார். அவ்வாறு அமைக்கப் பட்ட கமிட்டிகளே பன்முக நிபுணர்கள் குழு (Multi Disciplinary Committee) மற்றும் ரயில்வே வாரிய குழு ஆகியவை.  

அதிர்ச்சியளிக்கும் பரிந்துரை

இவற்றில் பன்முக நிபுணர்கள் குழு பரிந்துரை ரயில்வே வாரிய உத்தரவு வாயிலாக 2025 ஏப்ரல் 4 ஆம்தேதி வெளியானது. அவற்றில் பெரும்பாலா னவை நிர்வாக வசதிக்கானவை மட்டுமே. மேலும் லோகோ ஓடும் தொழிலாளர்களின் குறைகளைக் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமின்றி எந்த ஒரு சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயாமல் அரசியல மைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கும் உரிமைகளைத் துச்ச மாகக் கருதி பணியில் உள்ள ஓட்டுநர்கள் உணவு இடை வேளை மற்றும் இயற்கை அழைப்பிற்கு நேரம் ஒதுக்க சாத்தியமில்லை என்று ஒரே வரியில் மறுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. லோகோ பைலட்டுகள் வேலை நேரம் மற்றும் ஓய்வு தொடர்பான உயர் நிலைக்குழு (HPC) பரிந்துரைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட  ரயில்வே வாரியக் குழு அறிக்கையும் தற்போது வெளிவந்துள்ளது. குழுவின் குறிக்கோளுக்கு முற்றிலும் முரணாக லோகோ பைலட்டுகளின் பீரியாடிக்கல் வாராந்திர ஓய்வில் அன்றாட தலைமையக ஓய்வும் உள்ளடக்கியது என்று கூறி உயர் நிலைக்குழு (எச்பிசி 2013) ஏற்கெ னவே அளித்த 40 மணிநேரம் வார ஓய்வு பரிந்துரையை யும் இது மறுதலித்து உள்ளது. இது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் மண்டல தொழிலாளர் ஆணையர் உத்தரவுகளை நிராகரித்து நாட்டின் அனைத்து சட்டங்களுக்கும் மேலானவர்கள் ரயில்வே நிர்வாகத்தினர் என்று நிறுவியுள்ளனர்.

ரயில் ஓட்டுநர்களின் வார ஓய்வு

ரயில்வே சட்டம் பிரிவு 133(2)-இன் படி ரயில் ஓட்டு நர்களுக்கு மாதந்தோறும் நான்கு 30மணி நேரம் அல்லது ஐந்து 22மணிநேரம் வாராந்திர ஓய்வு வழங்க வேண்டும்.  வாரம் ஒரு நாள் ஓய்வு அனுமதி பெற்ற எந்த ஒரு  சராசரி ஊழியர் (ரயில்வே அலுவலகம் உட்பட), அவர் அன்றாட ஓய்வு, மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை 16மணி நேரம் முடிந்தவுடன் 24 மணிநேரம் (ஒரு நாள்) கழித்து மறுநாள் காலை 9 மணி வரை ஓய்வு வழங்கப்படுகிறது அதாவது 16+24= 40 மணி நேரம். இதேபோல் வாரம் இரண்டு நாள் சனி மற்றும் ஞாயிறு ஓய்வு பெறுபவர்கள் பெறும் மொத்த ஓய்வு நேரம் 64 மணி நேரம். தற்போது ரயில் ஓட்டுநர்களுக்கு விதிப்படி 30 மணி நேரம் வார ஓய்வு வழங்கும்போது  அன்றாட பயண ஓய்வு 16 மணி நேரம் கழித்து  வெறும் 14 மணிநேரம் மட்டும் சேர்த்து மொத்தம் பணியிலிருந்து இறங்கியது முதல் 30 மணி நேரம் மட்டுமே வழங்கப் படுகிறது.  ரயில்வே பாதுகாப்பு குறித்து அமைக்கப்பட்ட, உயர் நிலைக்குழு (HPC-2013, TASK FORCE COM MITTEE ON SAFETY - 2017) உட்பட பல விபத்து விசாரணை ஆணையங்களும் ரயில் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் வாராந்திர ஓய்வு குறைவு குறித்து  பரிந்துரைகள் வழங்கினாலும் ரயில்வே நிர்வாகம் ஏற்க தயாராக இல்லை. மேலும் ஓய்வுநேர குறைவை சரி செய்வதற்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களை கவுன்சிலிங் (Councelling) செய்து, மனைவிகள் ஓட்டு நர் கணவர்களிடம் வேலை வாங்காதீர்கள், மார்க்கெட் அனுப்பாதீர்கள், குழந்தைகள் ஓட்டுநர் அப்பாக்களை விளையாடக் கூப்பிடாதீர்கள் என்று ஓட்டுநர் ஓய்வு எடுப்பதை உறுதி செய்ய உத்தரவிட்டது. மறுபுறம் இதுகுறித்த முறையீட்டில் மண்டல தொழி லாளர் ஆணையரின்( RLC(C)) தீர்வு வாராந்திர ஓய்வு, பயண ஓய்வு இரண்டும் வெவ்வேறு வகையானவை என்று தொழிலாளர்களுக்கு சாதகமான முடிவான போதும், மேலும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புகள் சாதகமாக அமைந்த பின்னரும் கூட ரயில்வே நிர்வாகம் அதனை அமல்படுத்த காலதாமதம் செய்து வந்தது.  அதேசமயம் நடைமுறையில் ஏற்கெனவே பல நாட்கள் வெளியூரில் தங்கி பணியாற்றும் நிலையில் ஓட்டுநர்களின் உடல் நலம் சார்ந்த பிரச்சனை மற்றும் குடும்பத் தேவைகளுக்கும் நேரம் ஒதுக்க இய லாமல் வாராந்திர ஓய்வு சுரண்டப்படுவதால் ஓட்டுநர் கள் பல இன்னலுக்கு ஆளாகின்றனர்.

ஆபத்தான நான்கு  தொடர் இரவுப் பணி

லோகோ பைலட்டுகள் தொடர்ந்து 4 இரவுக்கு மேல் பணிபுரிவதால் தூக்கக் கடன் ( sleep debt) மற்றும் கண் அயர்ந்து ( Micro sleep) , சிவப்பு சிக்னலைக் கடந்து செல்லும் ஆபத்து உள்ளது. எனவே உயர் அதிகாரக்குழு (HPC-2013) ரயில் ஓட்டுநர்களின் தொடர் இரவுப் பணி இரண்டுக்கு மிகாமல் கட்டுப் படுத்தப்பட வேண்டும் என்றும் தவிர்க்க முடியாத சம யங்களில் வெளியூரில் இருந்து தலைமையகத்திற்கு திரும்ப மட்டும் மூன்றாவது இரவுப் பணி என பரிந்து ரைத்துள்ளது. விசாகப்பட்டினம் விபத்து குறித்து விசாரணை செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர் 4 இரவுப்பணி ஆபத்தானது என்றும் இரண்டுக்கு மிகாமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்து ரைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

பன்முக நிபுணர்கள் குழு மற்றும் ரயில்வே வாரியக் குழு  

இத்தகைய சூழ்நிலையில் மேற்கூறிய ரயில்வே வாரியக் குழுக்களின் முடிவுகள்படி,  1.உணவு இடைவேளை மற்றும் இயற்கை உபாதைக ளுக்கான நேரம் ஒதுக்க சாத்தியமில்லை. 2. லோகோ பைலட்டுகளின் பீரியாடிக்கல் வாராந்திர ஓய்வில் அன்றாட தலைமையக ஓய்வும் உள்ள டக்கியது.  3. லோகோ பைலட்டுகள் தொடர்ந்து 4 இரவுப் பணிகள் செய்ய வேண்டும்.  என்பது போன்ற ரயில்வே உத்தரவு மற்றும் பரிந்து ரைகள் ரயில் ஓட்டுநர்களின் கோரிக்கைகளை மறுத்து ஊழியர்களின் நலனை நிராகரித்துள்ளது மட்டுமின்றி பல ரயில் விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.  ஏற்கனவே திட்டமிட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாக போதிய ஆட்சேர்ப்பு இல்லாமல் கடைப் பிடிக்கப்பட்ட மோசமான ரயில்வே கொள்கைகளின் விளைவாக போதிய ஓய்வு, விடுப்புகள் மறுக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் ரயில்வே லோகோ பைலட்டுகள் பல விபத்துக்களினால் உயிரிழ ப்பு மற்றும் வேலையிழப்பை சந்தித்து வருகின்றனர். பொதுவாக ஊழியர்களின் மன கசப்புகளை முறை யாக களைய முற்படாமல் வழக்கமான முறையில் குழுக்கள் அமைத்து கோரிக்கைகளை நீர்த்துப்போ கச் செய்து போராடுபவர்களை சோர்வடையச் செய்யும் தந்திர உபாயங்கள் பாதுகாப்பான ரயில் இயக்கத்தி ற்கு நன்மை பயக்காது. மேலும்  ரயில்வே உத்தரவு மற்றும் பரிந்துரைகளினால் வெறுப்படைந்து உள்ள தொழிலாளர்கள் அவற்றிற்கு எதிராக மேலும் போ ராட்டங்களை தீவிரப் படுத்த வேண்டிய நிலைக்கு செல்ல நேரிடும்.

கட்டுரையாளர் : தலைவர், டிஆர்இயு பென்சனர்ஸ் சங்கம்.