கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரில் இந்திய அறிவியல் மாநாடு நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி எப்படி நடைபெற வேண்டும் என்பதை பற்றி கோடிட்டுக் காண்பித்தார். அங்கு கூடியிருந்த இளம் ஆராய்ச்சியாளர்களிடம் அவர் கூறியது: “புதுமை செய்யுங்கள், காப்புரிமை பெறுங்கள், படையுங்கள், வளம்பெறுங்கள்”
அறிவை வியாபாரமயமாக்குவது
தற்போதைய ஒன்றிய ஆட்சியாளர்கள், அறிவியல் ஆய்வகங்களும் மற்ற அறிவியல் ஆராய்ச்சி மையங்களுக்கும் தங்களுடைய அறிவுத்திறனை வெளி உலகச் சந்தையில் விற்று வருவாயை உருவாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அறிவுறுத்திக் கொண்டுள்ளார்கள். அந்த வருவாயில் உருவாகும் உபரிநிதியை முதலீடு செய்து நமது நாட்டிற்கு தேவையான தொழில்நுட்ப வளர்ச்சியை உருவாக்கிட வேண்டும் என்கிறார்கள்.
2015 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான இயக்குநர்கள் ஒன்றிணைந்து தயாரித்த “டேராடூன் பிரகட னத்தில்” மேற்கூறிய கொள்கை நிலைபாட்டை காணலாம். தனியார் சுயநிதி காப்புரிமையை சந்தையில் விற்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான நிதியைப் பெறுவது என்று அங்கு முடிவெடுக்கப்பட்டது. அதாவது அறிவியல் ஆராய்ச்சிகளை வியாபரப்படுத்துவதற்கான அழைப்பு என்றும் இதை கருதலாம். இது அரசு தனக்கு சொந்தமான எந்தவொரு நிறுவனத்தை யும் சந்தைக்கான சரக்காக மாற்றும் செயல்முறை யாகும். ஆராய்ச்சி நிறுவனங்கள் பொது நிதியை சார்ந்திருப்பதை விட தங்களுக்கு தாங்களே நிதியை உருவாக்கும் வணிக அடிப்படையை பின்பற்றுவதுதான் சரியென இந்த அரசு கருதுகிறது. அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் பிரிவு 8 இல் பதிவு செய்யப்படும் ஆராய்ச்சி மையங்களை உருவாக்க ஊக்கப்படுத்தப்படு கின்றன. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள் முதலீடு செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தேசிய ஆராய்ச்சி நிறுவனமும் அனுபவமும்
‘அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் (Anusandhan National Research Foundation-ANRF)’ என்பதின் அமைப்பாக்கத்திலேயே இந்த அணுகு முறையை காணலாம். 2023இல் ஆரம்பிக்கப் பட்ட இந்த புதிய ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் அறிவியல் ஆய்வுகளுக்கு நிதியினை வழங்கு வதற்கும் ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும்; மற்றும் கல்வித்துறைக்கும் தொழில்நிறுவனங்களுக்கும் தொடர்பை பலப்படுத்துவதற்கும் உருவாக்கப் பட்டுள்ளது.
2024 பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் அனு சந்தன் தேசிய ஆராய்ச்சி நிறுவனம் 5 ஆண்டு களுக்கு ரூ.50 ஆயிரம் கோடியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 72% தனியார் துறை மூலமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இப்போது நிதியுதவி அளிக்கப்டும் விதத்தை பரிசீலித்தால் அரசு ஆராய்ச்சிகளுக்கு படிப்படியாக நிதியளிப்பதை குறைத்துக்கொண்டு அதிக அளவில் தனியார் துறையில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் ஆராய்ச்சியிலும் வளர்ச்சியிலும் அரசின் நிதியுதவியை விட மிக அதிக அளவில் தனியார்துறை முதலீடு செய்தி ருக்கும் அமெரிக்காவில் கூட அது தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் மருந்து உற்பத்தி துறைகளிலேயே குவிந்துள்ளது.
ஆராய்ச்சிகள் பொது நிதியில் உருவாக்கப் பட்டாலும் காப்புரிமை மூலம் அது தனியார் நிறு வனங்களுக்கு விற்க பலகலைக்கழகங்கள் அனு மதிக்கிறது. உலகம் முழுவதும் நவதாரளவாத பொருளாதார கொள்கைகள் அமலில் இருப்ப தால் அறிவியலுக்கு நிதியளிப்பதில் தனியார் துறையின் தலையீட்டை அதிகப்படுத்தியுள்ளது.
இயற்கைசார் அறிவியலுக்கு அதிக நிதி யளிப்பதுதான் தேசிய அறிவியல் ஆராய்ச்சி அமைப்பின் முக்கிய நோக்கம் என சொல்லப் பட்டாலும் உண்மையில் அது பல்கலைக்கழக ஆராய்ச்சி அமைப்பை, முதலாளித்துவ சந்தை யின் ஆணைக்கு அடிபணிந்து நடக்கும் அமைப்பாக மாற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிகிறது.
இயற்கைசார் அறிவியலுக்கு நிதி அளிக்க தனியார் துறை முன்வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில், உடனடி லாபம் மற்றும் பயன்பாடுகள் இருந்தால் அன்றி தனியார் துறை முதலீடு செய்யாது. அதேசமயம் சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட அறிவியலின் (evidence-based ) ஒரு பகுதியாக இல்லாத “இந்திய அறிவு அமைப்பு (Indian Knowledge Systems)” களுக்கு அரசின் நிதியுதவிக்கு இதே போன்ற கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தியா இடம் பெற்றிருந்தாலும், இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிக்கான பொது நிதியின் விகிதம் கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6% முதல் 0.7% வரை மட்டுமே உள்ளது.
தென் கொரியா போன்ற ஒரு நாடு, இந்தியா வின் மக்கள்தொகையோடு ஒப்பீடும் போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. ஆனால் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% முதல் 3% வரை அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு செலவிடுகிறது.
தனியார் துறை நிதியளிக்க ஊக்குவிக்கப்படும் அதே வேளையில், அரசாங்கம் அடிப்படை அறி வியல் மற்றும் இலாப நோக்கமற்ற ஆராய்ச்சிக் காக அதன் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். அது நடக்கவில்லை என்றால், ஆர்வத்தின் காரண மாக அறிந்து கொள்ளுதல் என்ற உந்துதல் (curiosity-driven) மூலம் நடைபெறும் அறிவியல் ஆராய்ச்சிகள் நமது பல்கலைக்கழகங்களில் வீழ்ச்சியைக் காணும். அதனால், அறிவியலின் மீதான பொது மக்களின் நம்பிக்கை இழந்து போகும். சுதந்திரமாக கேள்விகேட்கும் சூழலை வளர்ப்பதும், நிறுவனங்களின் நிதி மற்றும் நிர்வாக சுயாட்சியைப் பராமரிப்பதும் மிக முக்கியமானது.
கட்டுரையாளர் : பெங்களூரு தேசிய மேம்பாட்டுக்கல்லூரி துணை பேராசிரியர்
நன்றி : தி இந்து( ஆக.14)
தமிழில் : மோசஸ் பிரபு
இன்று (ஆகஸ்ட் 23) தேசிய அறிவியல் தினம்