articles

யுடிஎப்புக்கு ஜமாயத்-இ-இஸ்லாமியின் ஆதரவு இன்று இனிக்கலாம்; நாளை அது மிகவும் கசப்பாக இருக்கும்! - பி.ஏ. முகம்மது ரியாஸ்

யுடிஎப்புக்கு  ஜமாயத்-இ-இஸ்லாமியின் ஆதரவு இன்று இனிக்கலாம்; நாளை அது மிகவும் கசப்பாக இருக்கும்!

நிலம்பூர் இடைத்தேர்தல்

கேரளத்தின் நிலம்பூர் தொகுதி மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.  மதிப்பளிக்கிறோம். பெரும்பான்மை சிறுபான்மை மதவாத வலதுசாரி கருத்துகள் எந்த அளவுக்கு தாக்கத்தை இந்த தேர்தலில் உருவாக்கியது என்பதை நாங்கள்  ஆய்வு செய்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசாங்கத்தின் மக்கள் நல திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு வாக்காளர்களிடம் சென்றடைந்துள்ளது என்பதையும் ஆய்வு செய்வோம். எதனை சரி செய்ய வேண்டுமோ அவற்றை சரி செய்வோம்.

 மாநிலம்  முழுதும் உயர்வு;  நிலம்பூரில் சரிவு

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களின் விசேட அம்சம் என்னவெனில் கேரளாவின் வர லாற்றில் முதல்முறையாக எல்டிஎப் (LDF) அர சாங்கம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டது. எல்டிஎப் அரசாங்கம் தொட ர்வதற்கு மக்கள் வாக்களித்தனர். 2016ஆம் ஆண்டு தேர்தல்களை ஒப்பிடும் பொழுது வாக்கு சதவீதம் 43.48லிருந்து 46.9% ஆக உயர்ந்தது. தொகுதிகள் எண்ணிக்கையும் 91லிருந்து 99ஆக உயர்ந்தது. இங்கு ஒன்றை  நினைவில் கொள்ள வேண்டும். 2016 தேர்தல் களை ஒப்பிடும் பொழுது 2021ஆம் ஆண்டு எல்டிஎப் வாக்குகள் 3.5% அதிகரித்தன. ஆனால் நிலம்பூரில் எல்டிஎப் வாக்குகள் 1% குறைந்தன. யுடிஎப் வாக்குகள் 4% அதிகரித்தன. நிலம்பூர் தொகுதி பாரம்பரியமாக யுடிஎப் வெல்லும் தொகுதியாகும். 2016 வரை சுமார் 40 ஆண்டுகள் யுடிஎப் வெற்றி பெற்ற தொகுதி இது. நிலம்பூர் தொகுதியின் இந்த பின்னணியை நாம் கவனத்தில் கொள்வது அவசியம்.

 ஜமாயத்/ பாஜக வாக்குகள்  யுடிஎப்-புக்கு மடைமாற்றம்

எல்டிஎப் தனது அரசியல் மற்றும் சித்தாந்த நடவடிக்கைகள் மூலம் பல்வேறு வலதுசாரி சக்திகளை ஓரளவு தனிமைப்படுத்தியது. எனவே யுடிஎப் மீண்டும் ஆட்சியை பிடிப்பது கனவில் கூட சாத்தியமில்லை எனும் சூழல் இருந்தது. எனவேதான் யுடிஎப் வலதுசாரி சக்திகளுடனும் மதவாத சக்திகளுடனும் பகிரங்கமாக கூட்டணி அமைக்க முன்முயற்சி எடுக்கிறது. அதனால் தான் மதவாத அமைப்பான ஜமாயத்-இ-இஸ்லா மியை யுடிஎப் எவ்வித நிபந்தனையுமின்றி இரு கைகளால் வரவேற்று ஆரத்தழுவிக் கொண்டது. வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு நாள் முன்பு பாஜக வேட்பாளர் ஒரு தகவலை வெளியிட்டார். எல்டிஎப் வெற்றி பெறுவதை தடுக்க பாஜக தனது  கணிசமான வாக்குகளை யுடிஎப்க்கு மடை மாற்றியது என உண்மையை போட்டு உடைத் தார். எனவேதான் 2021 தேர்தல்களை ஒப்பிடும் பொழுது பா.ஜ.க.வின் சுமார் 4000 வாக்குகள் தற்பொழுது சரிந்துள்ளன. எஸ்டிபிஐ (SDPI) தனது பங்கிற்கு 8500 வாக்குகளை யுடிஎப்க்கு  மடைமாற்றியது எனவும் அறிக்கைவிட்டுள்ளது. நிலம்பூர் தொகுதியில் ஒரே சமயத்தில் பெரும் பான்மை சிறுபான்மை மதவாத சக்திகளின் ஆதரவை யுடிஎப் பெற்றது என்பதையே இது வெளிப்படுத்துகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலும் இடைத்தேர்தலும்

நிலம்பூர் தொகுதியில் ஒரு சட்டமன்ற உறுப்பி னரை அதுவும் மீதமுள்ள 9 மாத காலத்துக்கு மட்டும் தேர்ந்தெடுக்கும் ஒரு நிகழ்வை வைத்துக் கொண்டு எல்டிஎப் அரசாங்கம் மீது மக்களுக்கு அதிருப்தி உருவாகியுள்ளது என என்னதான் எதிர்சக்திகள் இடைவிடா பிரச்சாரம் செய்தாலும் உண்மை அது அல்ல. 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்தவுடன் அனைத்து எதிர்சக்திகளும் இடதுசாரி அரசாங்கத்தின் மீது மக்கள் பெரும் அதிருப்தி கொண்டுள்ளனர் என வலுவான பிரச்சாரம் செய்தனர்.  மக்கள் நாடாளுமன்றத் தேர்தல்களை போலவே சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிப் பது இல்லை என்பது நாம் அறிவோம். 2024 நாடா ளுமன்ற தேர்தலில் நிலம்பூர் சட்டமன்ற தொகுதி யில் எல்டிஎப் வேட்பாளர் 29,000 வாக்குகளே பெற்றார். ஒரு ஆண்டுக்கு பின்னர் நடந்த இந்த தேர்தலில் எல்டிஎப் 67,000 வாக்குகள் பெற்றுள்ளது. சுமார் 37,000 வாக்குகள் அதி கரித்துள்ளன. வாக்கு சதவீதத்திலும் இந்த உயர்வை காணலாம். 2024 முடிவுகளுக்கு பின் னர் எல்டிஎப் அரசாங்கத்தின் மீது மக்க ளுக்கு அதிருப்தி தோன்றியுள்ளது என கூக்குர லிட்டவர்கள் ஒரே ஆண்டில் அதே தொகுதியில் 37,000 வாக்குகளை எல்டிஎப் கூடுதலாக பெற்றது குறித்து என்ன சொல்லப் போகின்றனர்? ஒவ்வொரு தொகுதியிலும் இடைத்தேர்தல்கள் நடந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தல்களை விட கூடுதலான வாக்குகளையே எல்டிஎப் பெறும். அப்பொழுது எதிர்சக்தியினர் என்ன சொல் வார்கள்? எனவே எல்டிஎப் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிருப்தி உருவாகியுள்ளது என்பது அடிப்படையற்ற, பொய்யான பிரச்சாரம் ஆகும்.  

நிலம்பூரில் உக்கிரமான  அரசியல் போராட்டம்

நிலம்பூரில் எல்டிஎப் மிகச்சிறந்த வேட்பாளரை களம் இறக்கியது. இந்த தோல்வி தனிப்பட்ட முறையில் தோழர் சுவராஜின் தோல்வி அல்ல. இது நம்முடைய கூட்டு பின்னடைவு. கட்சி தோழர்களாகிய நமக்கு தேர்தல் தோல்விகளும் வெற்றிகளும் தனிப்பட்ட முறையிலானது அல்ல. நிலம்பூரில் ஒரு உக்கிரமான அரசியல் போராட்டம் நடைபெற்றது. இருவித மதவாதங் களுக்கு எதிராகவும் அவற்றுடன் கூடி குலாவும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி(யுடிஎப்)யின் அரசிய லுக்கு எதிராகவும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வலுவான போராட்டத்தை நடத்தி யது. வேட்பாளர் தோழர் சுவராஜ் அந்த போராட்டத் தினை முன்னெடுத்தார். அவருக்கு கிடைத்த வர வேற்பை குறைத்து மதிப்பிட இயலாது. நமது சரியான அரசியல் முழக்கங்களை வாக்காளர்களின் மனதில் கொண்டு சேர்ப்பதில் ஏதாவது போதாமைகள் இருந்தனவா என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்வோம். நமது  சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதன் மூலமும்,  மோசமான மதவாத சக்திகளுடன் யுடி எப் உருவாக்கியுள்ள கூட்டை அம்பலப்படுத்து வதன் மூலமும் நாம் முன்னே செல்வோம். மத வாத கூட்டு மூலம் கிடைத்த வெற்றி யுடிஎப்-புக்கு இன்று இனிக்கலாம். ஆனால் நாளை அது மிக கசப்பானதாக மாறும்.