articles

நிவாரணத்தை எதிர்பார்த்து விவசாயிகள்...

தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடு துறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்து வரும் மழையினால் வேளாண் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கிப்போயுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையின் காரணமாக மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துபோயுள்ளன. 15ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி இளம்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. தஞ்சையை ஒட்டி நரசிங்கமங்களம் என்ற கிராமத்தில் பாதிக்கப்பட்ட வயல்களில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நிவாரணம் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் கேட்டு அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் காற்றோடு சேர்ந்து பெய்த கனமழையால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிரில் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் கவலை யில் உள்ளனர்.

மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டால் நெற்பயிர்கள் பதராக மாறிவிடும். மகசூல் பாதிக்கும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து வடிகால் மற்றும் பாசன ஆறுகளில் அதிகளவில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் விளைவாக 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு மேல் இளம் சம்பா பயிர்கள் முழுமையாக தண்ணீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் கதிர் வரும் பயிர்கள் வயல் வெளிகளில் தண்ணீரில் சாயத் தொடங்கியுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் குறிப்பாக குடவாசல், பேரளம், நன்னிலம், பில்லூர், கொல்லுமாங்குடி, இஞ்சிக்குடி, பூந்தோட்டம், கூத்தனூர் உள்ளிட்ட பகுதிகளும் மன்னார்குடியில் பூந்தாழங்குடி, மண்ணு குண்டான் அதேபோல் கோட்டூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் சம்பா பயிரை மழை நீர் சூழ்ந்துள்ளது.

 இம்மாவட்டத்தில் 62 ஆயிரம் ஏக்கர் சம்பா இளம் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 5ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா தாளடி நெற்பயிர்களும் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.  டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் தலைமையிலான சி.பி.எம்.குழுவினர் பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு வருகின்றனர். விவசாயிகளின் துயர் துடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட வருவாய் நிர்வாகம் உரிய வாறு கணக்கீடு செய்து கூடியவிரைவில் விவசாயிக ளுக்கு நிவாரணம் அளித்திட நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.

-ஆரூரான்