நாமக்கல், ஜூன் 5- மூலப்பொருட்களின் விலையேற் றம் உள்ளிட்ட காரணங்களால் அச் சகத்தொழில் கடும் நெருக்கடியை சந் தித்து வருகிறது. நமது வீட்டில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகள் குறித்த பேச்சு எழும்போதெல்லாம் முதலில் நம் நினைவுக்கு வருவது பொருத்தமான திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடிப்பது, இரண்டாவதாக அனைவ ரையும் அழைக்கும் வகையில் பத்திரிகைகளை அடிப்பது. இதுதான் முதலில் நாம் நினைவுக்கு வரக்கூடிய நிகழ்வுகளாக இருக்கும்.
அதே போல அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டமாகட்டும், கல்வி நிறுவ னங்களின் விளம்பரமாகட்டும் இவை அனைத்துமே விளம்பரப்ப டுத்துவதற்காக துண்டு பிரசுரங்கள் தேவைப்படுகிறது. இதற்காக குறிப் பிட்ட நாட்களுக்கு முன்னமே துண்ட றிக்கையில் என்ன இடம் பெற வேண் டும்! என்னென்ன பெயர்கள் வர வேண்டும் உள்ளிட்ட விபரங்களை தந்து அதன் பிறகே தயாராகி வாடிக்கை யாளர் கைகளில் வந்து சேரும். இதே போன்று திருமண விசேஷங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தவிர்க்க முடி யாத ஒரு அங்கமாக அச்சகத் தொழில் இருந்து வருகிறது.
தற்போதைய காலகட்டத்தில் அச்ச கத் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு களால் சிறு குறு தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் நசி வடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி பாளையத்தில் அச்சகம் தொழில் செய்து வரும் முருகன் என்பவர் கூறுகை யில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் பணியாற்றி வருகி றேன். ஆரம்ப காலகட்டத்தில் ஒரு திரு மண அழைப்பிதழ் அல்லது அரசியல் கட்சி துண்டறிக்கை அச்சடிக்க வேண்டு மெனில் அது கைகளால் அச்சு கோர்க்கப்பட்டு, அதன் அடிப்படை யிலேயே பத்திரிகைகள் தயாராகும்.
அதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டு களில் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து தற்போது அதிநவீன அச்சக கருவிகள் வந்துவிட்டது. தற்போதைய சூழலில் இந்த அச்சகத் தொழில் மிகுந்த பாதிப்பை நோக்கி சென்று கொண்டுள்ளது. மூலப் பொருட்களின் விலை ஏற்றம், மின்சார கட்டணம் அதிகரிப்பு, உள்ளிட்ட பல்வேறு கார ணங்களால் அச்சகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது என்றார். தற்போது டிஜிட்டல் யுகத்தில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
வெகு சிலர் சில நூறு பத்திரி கைகளை மிக முக்கியமான நெருக்க மான சொந்தங்களுக்கு மட்டும் வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு whatsapp மூலமாக பத்திரிகைகளை புகைப்படம் எடுத்து அனுப்பி விடுகின்றனர். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும் இத்தொழில் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக மற் றொரு அச்சக தொழில் செய்பவர் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகை யில், ஆண்டுதோறும் தனியார் பள்ளி களுக்கு நோட்டுப் புத்தகம் அச்ச டித்தல் உள்ளிட்ட வேலைகளும் வரும். ஆனால் அன்றைய சந்தை மதிப்பு படி நாங்கள் ஒரு விலை நிர்ணயித்து ஆர்டர் பெறுவோம். ஆனால் பணிகள் முடி வடையும் பொழுது ஏதேனும் ஒரு மூலப் பொருட்களின் விலை ஏற்றம் இருந்தால் கூடுதல் தொகை கேட்க முடி யாத நிலை ஏற்படுகிறது.
ஒரு சில தனியார் பள்ளிகளும் உரிய பணம் தராமல் பெண்டிங் வைத்து விடுவ தால் எங்கள் முதலீடும் அதிலேயே தேங்கி எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே பேப்பர் விளையும் அதிகரித்து வருவ தால் தொழிலை நடத்த முடியாத நிலை க்கு தள்ளப்பட்டு வருகிறோம். அது மட்டுமின்றி தற்போதுள்ள பெரும்பாலா னோர் எங்களைப் போன்ற சிறுகுறு தொழில் கூடத்திற்கு வருவதற்கு தயக் கம் காட்டுகின்றனர். நகரின் மையப் பகுதியில் திருமணப் பத்திரிகைகளை அச்சடிப்பதற்காகவே பிரத்யே கமாக உள்ள கடைகள் தற்போது கணிசமாக அதிகரித்து வருவ தால் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
அங்கு பல்வேறு டிசைன்களில் திருமண அழைப்பிதழ் கள் இருப்பதால், அதை பெரும்பாலா னோர் விரும்புகின்றனர். ஆனால் எங்கள் தொழிலை பொறுத்தவரை அப்படி பல்வேறு டிசைன்களில் செய்ய முடியாது என்பதால் எங்களை நாடி வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டும் எனில் அச்சகத் தொழிலில் முன்பெல்லாம் குறைவான முதலீடு தொகை இருந்தால் போதும் சமாளித்து விடலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் தற்போது பல லட்சங்களை செலவு செய்து தற்போதைய உள்ள காலகட்டத்திற்கு ஏற்ப தொழில் கருவிகளை வாங்கினால் மட்டுமே தொழிலை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.. தமிழக அரசும் இதுபோன்று நலிவை நோக்கி சென்று கொண்டுள்ள அச்சக தொழிலாளர்க ளின் வாழ்வாதாரம் பதுகாக்கும் வகை யில் அவர்களுக்கு கடனுதவி உள்ளிட்ட வற்றை வழங்கி தொழிலை மேம்படுத்து வதற்கு உதவ வேண்டும் என்றார்.
-எம்.பிரபாகரன்