இந்திய திறன் அறிக்கை 2024 இல், வயது வித்தியாசமின்றி ஆண்களும் பெண்களும் வேலை செய்ய விரும்பும் மாநிலங்களில் கேரளம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. நாட்டின் நகரங்களில், கொச்சி இரண்டாவது இடத்தையும், திரு வனந்தபுரம் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களில் அதிக வேலை வாய்ப்புள்ள இரண்டாவது மாநிலமாக கேரளம் உள்ளது. கணினி திறன் அடிப்படையில் கேரளம் மாநிலங்களில் மூன்றாவது இடத்திலும், திருவனந்த புரம் நகரங்களில் முதலிடத்திலும் உள்ளது. இந்திய திறன் அறிக்கை 2024 நாடு முழுவதும் 3.88 லட்சம் இளைஞர்களின் பங்கேற்புடன் விரிவான தேசிய வேலைவாய்ப்புத் தேர்வு மூலம் தயாரிக்கப்பட்டது.
கேரளத்தில் ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பொறியியல் துறையில் அதிக வேலை வாய்ப்பு உள்ளது. ஆங்கில மொழி புலமை, கணினி அறிவு, எண்ணியல் (டிஜிட்டல்) மற்றும் விமர்சன சிந்தனை திறன் ஆகியவற்றின் அடிப்படையில், 18-29 வய துக்குட்பட்ட கேரள இளைஞர்கள் நாட்டிலேயே முதலி டத்தில் உள்ளனர். திறன் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற் காக கேரளத்தில் அரசு அளவில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த மாற்றம் மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையின் விரைவான வளர்ச்சியைக் குறிக்கிறது. 2011-16இல் மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பத் துறையில் 26,000 வேலை வாய்ப்புகளும், 2016-23இல் 62,000 வேலைவாய்ப்புகளும் உருவாக் கப்பட்டன. 2016இல் அரசு தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் 78,068 பேர் பணிபுரிந்தனர், அது இன்று 1,35,288 ஆக அதிகரித்துள்ளது.
ஐடி துறை இணையற்ற முன்னேற்றம்
2016க்குப் பிறகு, ஐடி துறை இணையற்ற முன்னேற் றத்தை அடைந்துள்ளது. 2011-16 காலகட்டத்தில் ஐடி ஏற்றுமதி ரூ.34,123 கோடியாக இருந்தது, ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அது ரூ.85,540 கோடியாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப இடம் 5,75,000 சதுர அடியில் இருந்து 73,44,527 சதுர அடியாக அதிகரித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப பூங்காக்க ளில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 2022இல் 640 ஆக இருந்து 1,106 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் 75 லட்சம் சதுர அடியில் ஐ டி தொழிலிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிய ஐடி நிறுவனங்கள் இங்கு முதலீடு செய் கின்றன. கொச்சி இன்ஃபோபார்க்கில் அண்மையில் திறக்கப்பட்ட ஐபிஎம் மென்பொருள் ஆய்வகம் மட்டும் ஓராண்டில் சுமார் ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. கழக்கூட்டம், கின்ஃப்ரா பூங்காவில் டாடா எலெக்சி நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. 8 மாதங்களில் 2.17 லட்சம் சதுர அடி கட்டிடம் ஒப்ப டைக்கப்பட்டது. இங்கு தற்போது 3,500 பொறியா ளர்கள் பணியாற்றி வருகின்றனர். விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, கின்ஃப்ராவிலேயே 2 லட்சம் சதுர அடி புதிய இடத்தைக் கோரியுள்ளனர்.
கொச்சி இன்போபார்க்
அரசின் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துக்களுக் காக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கொச்சி இன்போ பார்க்கில் பிரிகேட் குழுமத்தின் 1.5 லட்சம் சதுர அடியில் ஐ டி பணியிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெறுவர். கொச்சி மெட்ரோ ரயில் வளாகத் தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய இடத்தை இன்ஃபோ பார்க் கட்டி வருகிறது.
கொச்சி இன்போபார்க் சொந்தமாக புதிய கட்டி டத்தை கட்டி வருகிறது. ஒன்றரை லட்சம் சதுர அடியில் உள்ள இந்த இடத்தில் 1,500-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். அமெ ரிக்க எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான என்ஓவி (NOV) மற்றும் ஜெர்மன் ஐடி நிறுவனமான அடெஸ்ஸோ (Adesso) ஆகியவை கொச்சி இன்ஃபோ பார்க்கில் புதிதாக செயல்படத் தொடங்கியுள்ளன. 1.3 லட்சம் சதுர அடியில் காஸ்பியன் தொழில்நுட்ப பூங்காவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந் துள்ளன. 1,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கோழிக்கோடு சைபர் பூங்காவில் 4 லட்சம் சதுர அடியில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. 4000 வேலை வாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கே - ஸ்பேஸ்
கேரளா ஸ்பேஸ் அல்லது கே-ஸ்பேஸ் (K-Space) அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ரூ.241 கோடி மதிப்பிலான இத்திட்டத்தின் டிபிஆர் இறுதி கட்டத்தில் உள்ளது.கே. ஸ்பேஸ் இன்னும் மூன்று ஆண்டுகளில் செயல்படத் தொடங்கும். நூறுக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2 லட்சம் சதுர அடியில் செயல்பட இது உதவும். 15,000 க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களை மூன்று ஆண்டுகளுக்குள் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதி இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்க ளை இலக்காகக் கொண்டுள்ளது. தற்போது, மூன்று ஆண்டுகளுக்குள் கேரளத்தில் தகவல் தொழில்நுட்ப மனித வளத்தை மூன்று மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெக்னோபார்க்கில் 30 ஏக்கரில் 16.5 லட்சம் சதுர அடியில் தொடங்கப்படும் குவாட் திட்டம் 15,000-க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அங்கு, பிரிகேட் குரூப் முதல் கட்ட மாக தகவல் தொழில்நுட்ப இடத்தை கட்டும் பணியை முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் இரண்டு லட்சம் சதுர அடி சேர்க்கப்படுகிறது. டெக்னோபார்க் கின் மூன்றாம் கட்டம் டாரஸ் நிறுவனத்தால் 10 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. நான்காம் கட்டத் தில், 94 ஏக்கரில் 1.6 லட்சம் சதுர அடியில் டிசிஎஸ் உரு வாக்கி வருகிறது. நான்காவது கட்டத்தில், சன்டெக் 3 லட்சம் சதுர அடிக்கு மேல் ஐடி இடத்தை உருவாக்கு கிறது.
இலக்கு 5 லட்சம் வேலை வாய்ப்பு
நாட்டிலிருந்து 10 சதவிகித தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி கேரளத்தில் இருந்து செல்ல வேண்டும் என்ற இலக்குடன் அரசு செயல்பட்டு வருகிறது. எலக்ட்ரானிக் ஹார்டுவேர் டெக்னாலஜி ஹப் மற்றும் எமர்ஜிங் டெக்னாலஜிஸ் ஹப் ஆகியவற்றை அமைப்ப தற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகளில் குறைந்தது 5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்குவதே இலக்கு.
திருவனந்தபுரம்-கொல்லம், ஆலப்புழா-எர்ணா குளம், எர்ணாகுளம்-கொரட்டி மற்றும் கோழிக் கோடு-கண்ணூர் ஆகிய 4 ஐடி வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணூர் சர்வதேச விமான நிலையம் அருகே கின்ஃப்ரா நிறுவனம் கையகப்படுத்திய 25 ஏக்கரில் கண்ணூர் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. கொல்லம் ஐடி பூங்கா அமைக்க இடம் கண்டறியப்பட்டு, அந்த இடத்தை கையகப் படுத்தி பூங்கா அமைப்பதற்கான முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இணையம் குடிமக்கள் உரிமை
இதற்கு இணையாக, தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் கேர ளத்தை அறிவுசார் சமுதாயமாக உருவாக்க முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையத்தை குடிமக்களின் உரிமை என்று அறிவித்த ஒரே மாநிலம் கேரளம். கே-ஃபோன் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாகவும் மற்றவர்களுக்கு மிகக் குறைந்த விலையிலும் இணையச் சேவைகளை வழங்குகிறது. இது தவிர பொது இடங்களில் கே - ஃபை ( K-Fi) எனும் திட்டத்தின் மூலம் 2,023 இலவச வை-ஃபை (Wi-Fi) ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 2,000 ஹாட்ஸ்பாட்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
கொச்சியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மண்ட லத்தை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. முழுமையாக அமைக்கப்படும் போது, இது ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்டு பிடிப்பு மண்டலமாக இருக்கும். கே-ஸ்பேஸ் திருவனந்தபுரத்தில் விண்வெளித் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் ஒரு சிறந்த மையத்தை நிறுவு வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த டிஜிட்டல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. டிஜிட்டல் அறிவியல் பூங்கா, தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அறிவுத் தொ ழில்களின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் உட்கட்டமைப்பை வழங்க முடியும். இத னால், நவீன தொழில்கள் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள உதவும் கொள்கையை கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. இவற்றின் விளைவே புதிய தலைமுறையிடம் இருந்து அரசாங்கத்திற்கு கிடைத்துவரும் பெரும் ஆதரவு. அந்த ஆதரவு சிலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்து கிறது.
தமிழில் : சி.முருகேசன்