articles

img

இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! - கி.வீரமணி ,திராவிடர் கழகத் தலைவர்

மார்ச் 23 மாவீரன் - இளைஞர்களின் எழுச்சி நாயகனாகவும், எடுத்துக் காட்டாகவும், என்றும் வரலாற்றுப் பக்கங்களின் வைரமாக ஜொலித்துக் கொண்டு, மறைந்தும் மறையாமல் வாழும் லட்சியத்தின் அடையா ளமாக உள்ள பகத்சிங்கின் 92 ஆவது நினைவு நாள்! வெறும் 24 ஆண்டுகள்தான் பகத்சிங்கின் வாழ்வு என்ற உடல்வாழ்வு; ஆனால், அவரது கொள்கை லட்சிய வாழ்வு வரலாற்றில் நிரந்தர வாழ்வு. கோழைக ளுக்கும், கொள்கையற்று சந்தர்ப்பவாத வித்தைக் காரர்களாகவும் பொதுவாழ்வைப் பயன்படுத்து வோருக்கும் ஓர் எச்சரிக்கை மணி! “என்னைத் தூக்கிலிடுவதற்குப் பதில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லுங்கள். அது இன்னும் மகிழ்ச்சி தரும்” என்று முழங்கிய ஓர் ஒப்புவமை சொல்ல முடியாத புரட்சித் தீ அவர்!

எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சிறையிலி ருந்தபோது உலகுக்கு அளித்த உன்னத லட்சிய விளக்கம் - “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’’ என்ற  அரிய சிந்தனை உலைக்கூடம்; பாசறைப் பட்டறைப் பகலவனின் ஒளிமுத்து! இந்திய நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் என்றும் குன்றா ஒளியுடன் உள்ள தன்னல மறுப்பாளர்கள் - இளைஞர்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் என்று முப்பெரும் கொள்கைத் ‘‘திரிசூலங்கள்!’’ நாட்டுக்காக, மக்களின் உரிமைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டு மரணத்தை மகிழ்ச்சியுடன் ஆரத்தழுவிய ஒப்பிலா மணிகள்!

மறைக்கப்பட்ட  வ.உ.சி.யின் தியாகம்!

அதுபோலவே, வயதில் மூத்த ஒப்பற்ற தியாகச் சுடர் வ.உ.சி. தியாகத்தில் வெந்து நொந்தாலும் புடம்போட்ட தங்கம் -வரலாறு அவருக்குத் தர வேண்டிய தக்கதோர் இடத்தைத் தர இன்னமும் தயங்குகிறது; காரணம், அவர் தனது இறுதிக் காலத்தில் ‘சமூகநீதியையே தனது பிரச்சாரக் களமாக்கிக்’ கொண்டதுதான்! பகத்சிங் என்ற அந்தப் புரட்சியாளர் நமக்குப் போதித்த பாடங்களை நினைவூட்டிக் கொள்ளுதலும், அதற்கான தூய பொதுவாழ்க்கை, லட்சியத்தை அடைய - “கொண்ட கொள்கைக்காக - எந்த விலை யையும் மகிழ்ச்சியுடன் கொடுக்கவேண்டும்” என்று தந்தை பெரியார் சொன்ன கருத்து இலக்கியத்திற்கே மாவீரன் பகத்சிங் ஓர் இலக்கணமாகவே என்றும் திகழுகிறார்! இளைஞர்களே, வெறும் கேளிக்கையல்ல பொது வாழ்க்கை என்பது!

இளைஞர்களே, வெறும் பதவி அரசியல், கேளிக்கை- இந்த வாணவேடிக்கை வெளிச்சத்தால் மயங்கி வாழாதீர்கள், அது அற்ப வாழ்க்கை! தற்காலிக போலிப் புகழ் வாழ்க்கை! லட்சியத்தோடு ஒரு மனிதன் 24 வயதுவரை வாழ்ந்த நிலையிலும்கூட, பல நூற்றாண்டுகள் மட்டுமல்ல; காலத்தை வென்ற அவரின் வீர வர லாற்றை - ஒரு புரட்சி சரித்திரம் படைக்க, கொண்ட கொள்கையை மலர்ப் படுக்கையாக எதிர்நோக்கா மல், முள்ளும், முரண்பட்ட மேடுகளும், பள்ளங்க ளும், உயிர்க்கொல்லி அனுபவங்களும் அச்சுறுத்தி னாலும், துணிவுடன் எதிர்கொள்ளும் தூய பொது வாழ்வின் அடையாளமாகக்கொண்டு வாழ்வோம் என்று உறுதியுடன் சூளுரை ஏற்றுக்கொள்ளுங்கள்!

‘இன்குலாப் ஜிந்தாபாத்!’

தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் நேரம் முன்புவரை கையில் வைத்திருந்த புத்தகத்தைப் படித்துக்கொண்டே இருந்தவர் என்றால், அவ ருக்குத்தான் எத்தகைய பாறை நெஞ்சம்! முடிவில் உறுதியான நிலைப்பாடு, தண்டனையாகக் கருதாமல் லட்சியத்தைப் பெற கொடுக்கும் விலையே தன்னுயிர் என்று உலகுக்குப் பறைசாற்றிய பகுத்தறிவுவாதி - புரட்சியின் வடிவம்!

‘‘இன்குலாப் ஜிந்தாபாத்!’’
‘‘புரட்சி வெல்லட்டும்!’’

பகத்சிங் கேட்ட கேள்விகள்

சனாதனத்திடமிருந்து இன்றுவரை பதில்கள் கிடைக்காத கேள்விகள் இதோ! கடவுளைப்பற்றி மாவீரன் பகத்சிங்கின் அழுத்த மான கருத்து! ‘‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அவர் ஏன் இந்த உலகத்தைப் படைத்தார்? இன்பமும், துன்பமும் கொண்ட இவ்வுல கில் முழுமையாக திருப்தியடைந்த ஒரு மனிதனாவது இருப்பானா? இன்று கஷ்டப்படுபவர்கள் எல்லோரும் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள்தானா? உலகிலேயே மிகப்பெரிய பாவம் ஏழையாக இருப்பதுதான். வறுமை என்பது பாவம். அது ஒரு தண்டனை. அதையெல்லாம் அந்தக் கடவுள் யோசிக்கமாட்டாரா? ஒரு மனிதனைப் பொறுத்தவரை, சுயநலம்மிக்க தரந்தாழ்ந்த செயலாக நான் கருதும் கடவுள் நம்பிக்கை யும், தினசரி பிரார்த்தனைகளும் என் விஷயத்தில் உதவிகரமானதாக இருக்கப் போகிறதா? அல்லது நிலைமையை மோசமாக்கப் போகிறதா என்பது எனக்குத் தெரியாது. இன்னல்கள் அனைத்தையும் அதிகபட்சத் துணிவுடன் எதிர்கொண்ட நாத்திகவாதிகளை நான்  படித்திருக்கிறேன். எனவே,நானும் எனது கடைசி மூச்சி ருக்கும்வரை, தூக்குமேடையிலும்கூட தலைநிமிர்ந்து நிற்பதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

இதனை எவ்வாறு நிறைவேற்றுகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு நண்பர், என்னைப் பிரார்த்தனை செய்யு மாறு கேட்டுக்கொண்டார். என்னுடைய நாத்திகத்தைப்பற்றி சொன்னபோது, அவர் சொன்னார், ‘‘உன்னுடைய கடைசி நாள்களில் நீ கடவுளை நம்பத் தொடங்கிவிடுவாய்’’ என்று. நான் சொன்னேன், ‘‘இல்லை, எனதருமைக்குரி யவரே, அப்படி ஒரு நாளும் நடக்காது. அவ்வாறு செய்வது என் தரப்பில் மன உறுதிக் குலைவான, தரம் தாழ்ந்த செயல் என்றே நான் நினைப்பேன்.’’

பகத்சிங் வெறும் படமல்ல 

“சுயநல நோக்கம் கருதியே நான் கடவுளைப் பிரார்த்தனை செய்யப் போவதில்லை.’’ வாசகர்களே, நண்பர்களே, இது என்ன ‘‘ஆணவமா?’’ அது ஆண வம்தான் என்றால், அந்த ஆணவத்தை நான் உறுதி யாகப் பற்றிக் கொள்கிறேன் என்று முழங்கியவன் பகத்சிங். நாத்திகன் பகத்சிங் குறித்து தந்தை பெரியார் ‘குடிஅரசில்’ (29.3.1931) பின்வருமாறு எழுதியுள்ளார்:

‘‘பகத்சிங் இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மையான சமத்துவமும், சுதந்திர மும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்குப் பயன்படத்தக்கதாக தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு எவரும் அடைய முடியாத பெரும் பேறு என்று சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம்.’’ தோழர்களே, பகத்சிங் படத்தை - படமாகப் பார்த்து வெறும் வாடும் மாலை போடாதீர்கள்; பாடமாகப் படித்து, வாழ்க்கையில் அவரின் வாடாத, வற்றாத உறுதி யைப் பின்பற்ற முயலுங்கள்! அது உங்களை ‘‘சொக்க சுயமரியாதைக்காரர்’’ ஆக்கும். பகத்சிங் வாழ்க! வாழ்க!!

 

 


 

;