articles

img

திரிபுராவில் நடப்பது தேசத்திற்கே ஓர் எச்சரிக்கை - மாணிக் சர்க்கார்,

ஏப்ரல் 6 - 10 தேதிகளில் கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்கார் ஆற்றிய உரை இது. 

காணொலி வழி தொகுப்பு: இரா.சிந்தன்

திரிபுராவில், போராடிவரும் மக்க ளின் சார்பில் என்னுடைய இதய பூர்வமான வணக்கங்கள். திரிபுரா வில் நடந்து வருவது என்ன என்பதை உங்க ளோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நமது கட்சியின் 23 வது அகில இந்திய மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரசியல் தீர்மா னம், நாட்டின் மதச்சார்பற்ற, ஜனநாயக எண் ணம் கொண்ட அனைத்து மக்களுக்கும் ஓர் அழைப்பை விடுத்துள்ளது. பாஜகவை தனி மைப்படுத்திட வேண்டும், வீழ்த்திட வேண்டும் என்பதுதான் நம்முடைய முடிவாகும். ஏனென்  றால், மதபீட அரசாங்கத்தை உருவாக்கி, ஜன நாயகத்தை சீரழிக்கும் வகையில் அவர்கள் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்டுகிறார்கள். திரிபுராவிலும், பாஜக அதிகாரத்திற்கு வந் துள்ள பின்னணியில், அங்கே என்ன நடக்கி றது என்பதை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்பு கிறேன். இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக  திரிபுரா உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியும், திரிபுரா மக்களும் அதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், நாட்டின் அரசமைப்புச் சட்டம், திரி புராவின் பாஜகவினால் மதிக்கப்படுவ தில்லை. நம்முடைய கட்சி அலுவலகங்கள் குறி வைத்து தாக்கப்படுகின்றன. நம்முடைய ஆத ரவாளர்களுடைய வீடுகளும், ஜனநாயக  எண்ணம் கொண்ட மக்களும் தாக்கப்படு கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவர்கள் குறிவைத்தாலும் கூட, மற்ற ஜன நாயக சக்திகளையும் அவர்கள் விட்டுவைக்க வில்லை.

காங்கிரஸ் மீதும் தாக்குதல்

காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களும் கூட தாக்கப்படுகிறார்கள் என்பதை இங்கே  சுட்டிக்காட்ட விரும்புகிறேன். திரிபுராவில் இடதுசாரி அரசாங்கத்தை தோற்கடிக்கும் நோக்கத்துடன், கடந்த சட்டமன்ற தேர்தலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காங்கி ரஸ் கொடுத்த ஆதரவு இல்லாமல் அங்கே பாஜகவின் ஆட்சி அமைந்திருக்க முடியாது. ஆனால், அவர்களும் கூட தற்போது தாக்கு தலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை குறிப்பிட வேண்டியுள்ளது.  கேரளத்திலும், காங்கிரஸ் கட்சியின் தலை மையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் கட்சிகள், இடது ஜனநாயக முன்னணி அர சாங்கத்திற்கு இடையூறு தரும் விதத்தில் செயல்படுகிறார்கள். கேரளத்தில் செயல்படும் காங்கிரஸ் கட்சியினர், திரிபுராவில் என்ன நடந் துள்ளது என்பதை உணர வேண்டும். திரிபுரா வில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் 40 சதவீதத்திற்  கும் கூடுதலான ஓட்டுக்களை பெற்றிருந்தார் கள். ஆனால் கடைசியாக நடந்த தேர்தலில் அவர்களுடைய வாக்குகள் 2% ஆகியது. அவர்  களுடைய ஆதரவு வாக்குகள் பாஜகவிற்கு சென்றன. 2.5% வாக்குகளை மட்டுமே பெற்ற பாஜகவிற்கு 50% வாக்குகள் சென்றுள்ளன. இடதுசாரிகளுடைய வாக்கு சதவீதத்தில் 7 சதவீதம் குறைந்தது. ஆனால், காங்கிரசின் ஆதரவு வாக்குகளில் பெரும்பகுதி பாஜக விற்கு சென்றுவிட்டது. கேரளத்திலும் கூட, காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள், பாஜகவிற்கு எதிராக இருப்  பதை விடவும், இடது ஜனநாயக முன்னணிக்கு சவாலை உருவாக்குவதாக இருக்கிறது. அவர் களுடைய மோசமான போக்கினை மனதில் கொண்டே திரிபுராவில் என்ன நடந்தது என் பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

சட்டத்திற்கு வேலையே இல்லை

திரிபுராவில், அரசமைப்புச் சட்டம் மதிக்கப்  படுவதில்லை என்று குறிப்பிட்டேன். கடைசி யாக நடந்த உள்ளாட்சித் தேர்தல்கள் உட்பட அனைத்திலும் மக்களுடைய வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த அனுமதிக்கப்படு வதில்லை. நேரடியாகவே அவர்களின் உரிமை களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதே போல 40க்கும் அதிகமான ஊடகவியலா ளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள்  மறைமுகமாக மட்டுமல்லாமல், நேரடியாக வும் தாக்கப்படுகிறார்கள். காவல்துறை இவ் விஷயத்தில் வழக்கு பதிய மறுக்கிறது. பெண்களின் பாதுகாப்பு பற்றி நிறைய பேசப்படுகிறது. ஆனால் திரிபுராவின் நெடுஞ்  சாலைகளில் ஒவ்வொரு நாளும் 4-5 பிணங்கள் விழுகின்றன. அதில் ஒன்றிரண்டு பெண்களும் உள்ளனர். காவல்துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தாலும், எந்த விசாரணையும், வழக் குப் பதிவும் நடப்பதில்லை. காவலர்கள் செல்கி றார்கள், எந்த விசாரணையும் இல்லாமல் அந்த நபர் தற்கொலை செய்துவிட்டதாக உட னடியாக தெரிவிக்கிறார்கள்.  திரிபுராவின் காவல்துறை, பாஜகவின் பொம்மலாட்டத்திற்கு நடனமாடுகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சொற்படி நடக்கி றார்கள். வீடுகள் தாக்கப்பட்டாலும், பொருட் கள் கொள்ளையடிக்கப்பட்டாலும், பெண்கள் தாக்கப்பட்ட போதிலும், காவல்துறை அது  விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. பாதுகாப்புக் கேட்டு அங்கே சென்றா லும், பெரும்பாலும் எந்த வழக்கும் பதியப்படு வதில்லை. புகார்களை ஏற்பதில்லை. மாறாக, தாக்குதலுக்கு உள்ளாவோருக்கு எதிராக வழக்கு பதிந்து, மிரட்டவும் காவல்துறை முயற்சிக்கிறது. இதுதான் திரிபுராவில் நடக்கி றது. பாஜகவின் தலைமையிலான திரிபுரா அர சாங்கத்தை ஒரு காட்டாட்சி என்றுதான் சொல்ல வேண்டும். சட்டத்திற்கு அங்கே வேலையே இல்லை.

காங்கிரசுக்கு வேண்டுகோள்

அகர்தலாவில் அமையப்பெற்ற காங்கி ரஸ் பிராந்திய தலைமை அலுவலகமும் தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளது. காங்கிரசில் இருந்து திரிணாமுல் காங்கிரசிற்கு சென்று பின் பாஜகவிற்கு தாவி, பாஜக ஆட்சிக்கு வரு வதற்கு உதவி செய்தவர்கள், பின் அவர்கள் காங்கிரசுக்கே திரும்பிய பின் அவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. கூட்டம் நடத்தும் போது புகுந்து தாக்கியுள்ளார்கள். பாஜக வின் ஆதரவாளர்களும், பாஜகவில் உள்ள  தலைவர்களும் கூட தங்களுடைய தவறுகளை இப்போது உணரத் தொடங்கிவிட்டார்கள். எனவே, என்ன விலை கொடுத்தாவது பாஜக வை நாம் தடுத்தாக வேண்டும். அதுதான் பொது வான மனநிலையாக உள்ளது. ஆனால் கேர ளத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு இதுவெல்லாம் புரிகிறதா? பாஜகவிற்கு எதி ராக போராடாமல், அவர்களுடைய தத்து வத்தை எதிர்க்காமல், இடது ஜனநாயக முன்ன ணிக்கு எதிராக மேற்கொள்ளும் மறைமுகமாக கூட்டணி, யாருக்கு உதவி செய்திடும்? காங்கிரஸ் கட்சியின் பொதுவான ஆதர வாளர்களுக்கும், தில்லியில் உள்ள தலை வர்களுக்கும் நான் வெளிப்படையான வேண்டு கோளை விடுக்கிறேன். நீங்கள் ஓரிடத்தில் சொல்வதற்கும் இன்னொரு இடத்தில் செய்வ தற்கும் வேறுபாடு இருக்கிறது. இது நாட்டுக்கு  உதவி செய்யாது. திரிபுராவில் நடந்துவரு வதை உங்களுக்கு சுட்டிக்காட்டுவதற்கான காரணம் இதுதான்.  ஊரக, நகர்ப்புற ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பும், வருவாயும் குறைந்துள்ளது. வாங்  கும் சக்தியை மக்கள் இழந்து வருகிறார்கள். பட்டினியும், அரைப்பட்டினியும் அதிகரித்து வருகிறது. ஊரக இந்தியா வறுமையில் வாடு கிறது. பழங்குடி மக்களிடம் வறுமை அதிக ரித்திருப்பதால், உடமைகளை விற்றுப் பிழைக்கிறார்கள். உணவு தேடிச் சென்று,  வேற்றிடத்தில் சாகும் திரிபுரா குடிமக்களு டைய உடல்களைக் கூட திரும்ப எடுத்துவர முடியாத சோகம் நிலவுகிறது. ஆனால் அரசாங்  கத்திற்கு இதுபற்றி எந்தக் கவலையும் இல்லை.

ஊழலின் மறுபெயர் பாஜக

ஊழல் என்ற சொல்லுக்கும் பாஜக அரசாங்  கத்திற்கும் ஒரே பொருள்தான். அந்த அள வுக்கு முறைகேடுகள் புரையோடிப் போயி ருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு வேலை என்று பேசிய பாஜக தனது வாக்குறுதி களை காற்றில் விட்டுள்ளது. பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாந்து போனதை இளைஞர்கள் உணர்ந்துவிட்டார்கள். இளை ஞர்கள் முதல், ஊரக, நகர்ப்புற ஏழைகள், சிறு குறு முதலாளிகள், விவசாயிகள், தொழி லாளர்கள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பி னரும் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ள னர். ஆனால் அவர்களுடைய போராட்டமோ, எதிர்க் குரலோ நசுக்கப்படுகிறது. ஏனென்றால், பாஜக அரசாங்கத்திற்கு எந்த வலிமையும் இல்லை. எனவேதான் வன்முறையை கையில் எடுத்து அதையே தீவிரமாக முன்னெடுக்கி றார்கள். 

23 தோழர்ளை இழந்துள்ளோம்

திரிபுராவின் மக்களும், செங்கொடியும் உறுதியோடு இந்த போக்கை எதிர்த்து நிற்கி றோம் என்பதை பெருமையுடன் குறிப்பிடு வேன். நம்முடைய எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு பெண் உட்பட 23 தோழர்களை இழந்துள்  ளோம். ஆயிரக்கணக்கானவர்கள் தாக்கப் பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களின் பலரும் மருத்துவமனைக்கு கூட செல்ல முடிய வில்லை. ஆனாலும் நாம் சரணடைந்திட வில்லை. திரிபுராவில் மக்கள் தம் கைகளில் செங்கொடியை வைத்திருக்கிறார்கள். மக்கள், போராட்ட உணர்வோடு வீதிகளில் திரள்கிறார்கள்.  நமது போராட்டங்களின் வழியாக, பாஜக வின் பாசிசத்தனமான, ஜனநாயக விரோத, மக்கள் விரோத, ஊழல் அரசாங்கம் தடுக்கப் படும். திரிபுரா மக்கள் ஒற்றுமையோடு இந்த போராட்டத்தை முன்னெடுக்க, மார்க்சிஸ்ட் கட்சி அழைக்கிறது. இப்போது தற்காப்பு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தவிர்க்க முடியாத ஒன்று.

நமது இலக்கு மிகச் சரியானது!

திரிபுராவில் நடக்கும் நிகழ்வுகளை தனி யாக பார்க்க முடியாது. நாடு முழுவதும் என்ன நடக்கிறதோ அதுதான் அங்கேயும் நடக்கி றது. எனவே நாம் பாஜகவை தனிமைப் படுத்துவதும், வீழ்த்துவதும் மிகச் சரியான முழக்கம். திரிபுராவில் மட்டும் இந்த போராட்டத்தை முடித்துவிட முடியாது. இடது சாரிகளும், ஜனநாயக சக்திகளும், மதச்சார் பற்ற சக்திகளும் தங்கள் ஆதரவினை வழங்கிட வேண்டும்.  2021, செப்டம்பர் மாதத்தில், நம்முடைய கட்சியின் தலைமை அலுவலகம் உட்பட ஏராள மான தோழர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிராக நம் கட்சியின் அனைத்து கிளைகளும் உதவி வழங்கிட வேண்டும் என கட்சியின் அகில இந்திய தலைமை அறிவித்தது. கேரள மாநிலக் குழு மட்டும் ரூ.6 கோடி ரூபாய்  களை நிவாரண நிதியாக அனுப்பி வைத்தது. கேரள மக்களுக்கு தலைவணங்குகிறேன். உங்களுடைய ஆதரவுக் குரல், எங்களுக்கு வலிமை அளித்துள்ளது. இந்த முறையில்தான் நாமெல்லாம் இணைந்த போராட்டத்தை நடத்திட முடியும்.

நம்முடைய அரசியல் தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் இலக்கு, மிகச் சரியான ஒன்று. நம்மோடு இதுவரை கைகோர்க்காத மக்களையும் இந்த முழக்கத்தின் அடிப்படை யில் இணைத்திட வேண்டும். பாஜகவை தனி மைப்படுத்துவதும், வீழ்த்துவதும் அவசியம் என்பதை உணர்ந்த மக்கள் போராட்டம் நிச்ச யம் வெற்றியடையும். பாசிசத்தன்மையுடைய சக்திகளை வீழ்த்தி முடிப்பது திண்ணம்.