20.06.1992 அன்று வாச்சாத்தியில் கொடூரச் சம்பவம் நடந்து, 31 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு தர்மபுரி மாவட்ட சிறப்பு நீதி மன்றம் 215 அரசு அதிகாரிகளுக்கு 29.09.2011 அன்று அளித்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் 29.09.2023-ல் உறுதி செய்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து வாச்சாத்தி கிராம மக்களின் நீதிக்கான போராட்டம் வென்றது. வாச்சாத்தி தொடர்பாக தருமபுரி மாவட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப் பட்ட மனுவின் மீது காவல்துறையினர் இன்று வரை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை. மாறாக காவல்துறையினர் மற்றும் வனத்துறை யினரால் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட 105 நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்தனர். அவ்வழக்கில் முகாந்திரம் இல்லை என்று கூறி உயர்நீதி மன்றம் வழக்கை ரத்து செய்தது. சென்னை உயர்நீதிமன்றம் 1995-ல் இவ் வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தர வுக்கு பிறகுதான், சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. 3 வருடங்களுக்கு பிறகுதான் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கை நடுங்கினும்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.நல்ல சிவன் இவ்வழக்கில் மனுதாரராக இருந்ததால், அனைத்து நீதிமன்ற பிரமாண பத்திரங்களிலும் அவர் கையெழுத்து தேவைப்பட்டது. அலுவலகத்திலும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த புனலூருக்கும் தயார் செய்யப்பட்ட மனுக்களில் அவர் கை நடுக்கத்துடன் கையெழுத்திட்டபோது அவரது மன உறுதியை நம்மால் காண முடிந்தது. தோழர் நல்லசிவன் 20.07.97-ல் மறைந்ததற்கு பிறகுதான் 29.09.2011-ல் சிறப்பு நீதிமன்றம் அனை வருக்கும் தண்டனை வழங்கியது. அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டு இருப்பார். இவ்வழக்கில் 75 சாட்சிகள் சிபிஐ தரப்பில் விசாரிக்கப்பட்டு 324 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கறிஞர் ஜெயபாலன்
இவ்வழக்கில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலை வர்களுள் ஒருவரான தோழர் மைதிலி சிவராமன், சிபிஎம் அரூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தோழர் எம்.அண்ணாமலை, தோழர் பெ. சண்முகம், திருமதி பாமதி இ.ஆ.ப, இரண்டு மாவட்ட நீதிபதிகள், விசாரணை அதிகாரி திரு.ஜெகநாதன், வாச்சாத்தி மக்கள் ஆகியோர் சாட்சிகளின் பட்டியலில் அடங்குவர். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதாடிய அரசு சிறப்பு வழக்கறிஞர் திரு.ஜெயபாலன் பாராட்டுக்குரியவர். வாச்சாத்தி மக்கள் அடையாள அணிவகுப்பு சமயத்திலும் நீதிமன்றத்தி லும் குற்றவாளிகளால் அச்சுறுத்தப்பட்டனர். இருப்பினும் அம்மக்களின் மன உறுதியால் நடந்த சம்பவத்தை சாட்சியமாக சொல்ல முடிந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சி சொல்வதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் சிபிஎம் அரூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தோழர் பி.டில்லிபாபு, வழக்கறிஞர் கே.சுப்பு ராம் மற்றும் கட்சியின் தர்மபுரி மாவட்டத் தோழர்கள். 20.06.1992க்குபின் வாச்சாத்தி கிராம மக்கள் நிர்க்கதியாக இருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியுவின் அறைகூவலின் பெயரில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அம்மக்களுக்கு பொருள் உதவி செய்யப்பட்டது. குறிப்பாக, அரசு போக்குவரத்து சம்மேளனத்தைச் சேர்ந்த தோழர்கள் அம்மக்களுக்கு பக்க பலமாக இருந்தனர். வன்முறை நிகழ்த்தப்பட்டு 31 ஆண்டுகளுக்கு பிறகு தண்டனை உறுதி செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒரு சிலர் தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் என்பது தெரியவில்லை. இத்தீர்ப்பு வாச்சாத்தி மக்களுக்கு புதுத் தெம்பும் நாட்டு மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது மீண்டும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது. ஒருங்கி ணைந்த போராட்டம் வெற்றி பெறும் என்பதற்கு இவ்வழக்கு ஓர் எடுத்துக் காட்டு.