articles

img

உள்நாட்டு தொழில்களை காப்பாற்றாத கார்ப்ரேட் நிறுவனங்களுக்கான ஒன்றிய அரசு

இந்தியா சுதந்திரம் அடைந்து நம் நாட் டுக்கான சட்ட திட்டங்களை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் தலை மையில் அமைத்தக்குழு வழிகாட்டியது. இந்தி யாவின் வளர்ச்சிக்கான பாதைகளையும், தனி மனிதனின் உரிமைகள் உள்பட விவசாயம், தொழில்கள், அறிவு துறை, சட்டம் ஒழுங்கு என  மக்களின் வாழ்வாதாரத்துக்கான வழிகாட்டல், நகர்ப்புறம் வளர்ச்சி மற்றும் கிராமங்களில் வளர்ச் சிகள் காணவும் அரசியல் அமைப்பு சட்டம் உரு வாக்கப்பட்டது. அது 1952-ல் சட்ட வடிவம் ஆக் கப்பட்டன.  அதில் உள்நாட்டு தொழில் வளரச்சிக்காக வும், நாட்டு மக்களின் வேலை வாய்ப்புக்காக வும் பெரும் தொழில்கள் குடிசை மற்றும் சிறு, குறு தொழில்களை அழிக்காமல் இருப்பதுக் காகவும், சட்ட வடிவில் பாதுகாப்பு அரணாக சட்ட  வடிவம் அமைத்து தந்தனர். அந்த சட்ட வடி வத்தில் 1450- க்கும் மேற்பட்ட உற்பத்தியான பொருள்களை அடையாளம் காணப்பட்டு அந்த உற்பத்தியில் பெரும் நிறுவனங்கள் முத லீடு செய்வதற்கு தடை இருந்தால் இந்தியா வில் குடிசை தொழில்கள் வளர்ச்சி கண்டு இந்தி யாவில் பெரும் வேலை வாய்ப்புகளை உரு வாக்கி தந்து தனி மனிதனிடம் பண புழக்கத்தை உண்டாக்கியது.

1991 ஆம் ஆண்டு வரையில் நாட்டின் குடிசை மற்றும் குறு, சிறு தொழில்கள் பெரும் அளவில் வளர்ச்சி கண்டு வந்த நிலையில், இந்திய அரசு புதிய பொருளாதார உலக ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டது. அந்த ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்த இந்த  ஆண்டு வரை குடிசை தொழில்கள் குறு சிறு தொழில்கள் பெரும் அளவில் அழிக்கப்பட்டு, கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக மாறியதன் விளைவாக, நாட்டில் குடிசை தொழில்களும் சிறு, குறு தொழில்களும் அதில் முதலீடுகள் செய்தவர்களின் வாழ்வாதாரமும், தொழிலா ளிகளின் வாழ்வாதாரமும் இழந்துள்ளது. கார்ப் பரேட் நிறுவனங்களின் அடிமை தொழில்களாக மாற்றியன் விளைவாக, உள்நாட்டு குறு, சிறு  தொழில்கள் பாதிக்கப்பட்டு பெரும் வேலை வாய்ப்புகள் இழப்புகளுக்கு ஆளாக்கப்பட்டு சிறு, குறு உற்பத்தி துறையில் தொழிலாளிகள் நம்பிக்கை இழந்து இன்று உற்பத்தி துறைக்கு பதிலாக சேவை துறைகளில் அதிகம் நாட்டம் கொண்டு மாறி செல்லும் நிலைகள் தோன்றி யுள்ளது.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசாக மாறி உள்ளதால், உள்நாட்டின் தொழில்களின் அழிவினை இந்த அரசு கண்டு கொள்வது இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் பல லட்சம்  கோடிகளை பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெற்று ஏமாற்றினாலும், மீண்டும் மீண்டும் கார்ப் பரேட் நிறுவனங்களை பாதுகாக்கவும், அவர் களுக்கான சலுகைகள் வழங்கிடவும் தொடர்ந்து செயல்படுகிறது. ஆனால், நாட்டின்  முதுகெழும்பாக இருந்து வரும் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு கடுகளவில் கூட உதவவில்லை.

மக்கள் பாதித்த போது, அனைத்து துறை களும் முடங்கிய போது இந்திய நாட்டின் கார்ப் பரேட் நிறுவனங்கள் மட்டும் 100 மடங்கு லாபம் பார்த்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கும், சிறு, குறு தொழில் முனைவோர்களும் ஒரு நயா பைசா கூட வட்டி தள்ளுபடி செய்திட இந்த அரசு முன்வரவில்லை. அது மட்டும் இல்லாமல் ஜிஎஸ்டி (GST)-யில் உள்ள குறைகளை காது கொடுத்து கேட்பதற்கு கூட இந்த அரசால் முடியவில்லை. அதுபோல் உள் நாட் டின் தொழில்களை முடக்கும் விதமாக கார்ப் பரேட் நிறுவனங்கள் தங்களின் எண்ணம் போல் நினைத்த நேரத்தில் மூலபொருள்களின் விலைகளை உயர்த்தி வருகிறது.  இதனால் சிறு, குறு தொழில்கள் சிறு லாபம் கூட அடைய முடியாத அளவிற்கு மூலபொருள்களின் விலை களை உயர்த்தி குறு, சிறு தொழில்களின் வளர்ச்சிகளை முடக்கி விடுகிறது. இதை கட்டுப்படுத்திட நாட்டில் மூலபொருள்களின் விலை நிர்ணயம் செய்திட ஒரு நிலைகளை உருவாக்கிட வேண்டும் என்று தொடர்ந்து தொழில் துறையால் வலியுறுத்தி வரும் நிலை யில், கார்ப்பரேட்களின் அரசு குறு,சிறு தொழில் களின் கோரிக்கைகள் ஏற்காமல் மவுனமாக கடந்து செல்கிறது.  மேலும், உற்பத்தி துறையில் ஏற்பட்டு இருக் கும் நெருக்கடிகள் தீர்ப்பதும், நாட்டின் வளர்ச்சி யில் உள்ள அனைத்து பகுதிகளும் குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாக குறுந்தொழில் களுக்கென தனி அமைச்சரையும், தனி துறையை உருவாக்குவதன் மூலமாக உள் நாட்டு உற்பத்தியில் மாற்றம் ஏற்படும். சிறு,  குறு தொழில்களுக்கான உற்பத்தி சார்ந்த  பொருட்களை கண்டு அறிந்து, கார்ப்ரேட்டு களின் தலையீடு இல்லாமல் குறு, சிறு தொழில் களுக்கு வளர்ச்சி காட்டவும், குறுந்தொழில்களுக் கான தனி ஜிஎஸ்டி அமுலாக்கவும், குறைந்த வட்டியில் கடன் வழங்கிட வேண்டும். மேலும், இந்தியாவில் உள்ள பெரும் நிறுவனங்கள் உள்நாட்டவர்கள் உற்பத்திக்கான அனைத்து உதிரிபாகங்களும், இந்தியாவில் தான் வாங்க வேண்டும் என்ற சட்டங்கள் இயற்றப்பட வேண் டும். குறுந்தொழில் மற்றும் அதில் பணிபுரியும் தொழிலாளிகளின் பாதுகாப்புக்கான சட்ட பாதுகாப்பும், மாவட்டங்களில் குறுந்தொழில் பேட்டைகள் உருவாக்கிட தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.  இந்தியாவில் அதிக வேலை வாய்ப்புகள் வழங்கிடும் உற்பத்தி துறையான இந்த துறை களை மேம்படுத்திட ஒன்றிய, மாநில அரசுகள் முன் வருவதன் மூலமாக பெரும் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட முடியும். முன் வருமா அரசுகள்?

-ஜே.ஜேம்ஸ், தலைவர், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் (டாக்ட்), கோவை.