சமூக பொருளாதார வளர்ச்சியில், நாட்டின் முன்னேற்றத்தில் போக்குவரத்து வசதி மிகவும் அடிப்படையானது. இந்தியாவில் 66 சதவீதம் சரக்கு போக்குவரத்தும் 82 சதவீதம் பயணிகள் போக்குவரத்தும் சாலைகள் வழியாகவே நடை பெறுகின்றன. வாகன பெருக்கத்தால், சாலை பயணம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஆண்டுக்கு நாலு லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. 1. 5 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர். சுற்றுப்புற சூழல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்தை குறைக்க, போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்த,சிறு வாகன போக்குவரத்தை கட்டுக்குள் வைத்து பொது போக்குவரத்தை மேம் படுத்துவது ஒன்றே சிறந்த வழியாகும்.
தமிழ்நாட்டில் பொது போக்குவரத்து நிலை
1972இல் மூவாயிரம் பேருந்துகளுடன் துவக்கப்பட்ட அரசு போக்குவரத்துக் கழகங்கள் 2018 வரை 22 ஆயிரம் பேருந்துகளுடன் வளர்ந்து பயணிகள் சேவை யில் சிறந்த பங்காற்றி வந்துள்ளது. ஆயிரம் பேர் வசிக்கும் கிராமங்களுக்கும் பேருந்து வசதி என்ற நிலை யிலிருந்து இன்று 500 பேர் வசிக்கும் இடங்களுக்கும் பேருந்து வசதிகள் கிடைக்கின்றன. பெரும் நகரங்க ளையும் கிராமங்களையும் இணைக்கின்றன அரசு பேருந்துகள். நகர பேருந்துகள், மலை பேருந்துகள் என வருமானம் குறைவான வழித்தடங்களில் 11 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இத்தடங்களில் தனி யார் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இந்தியாவி லேயே அதிக அரசு பேருந்துகள் இயக்கப்படும் மாநிலம் தமிழ்நாடு. 2019 ஆம் ஆண்டு வரை அரசு பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி பேர் வரை பயணம் செய்தனர். அந்த எண்ணிக்கை தற் போது 1. 70 லட்சமாக குறைந்துள்ளது.
மக்கள் சேவையில் அரசு போக்குவரத்து
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகங்கள் 8 கோட்டங்களாக 23 மண்டலங்களாக 320 பணி மனைகள் 21 ஆயிரத்து 500 பேருந்துகள், ஒரு லட்சத்து 35,000 தொழிலாளர்கள் பணியாற்றக்கூடிய தமிழ் நாட்டின் மிக முக்கியமான பொதுத்துறை நிறுவனமாக செயல்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள். பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பத்திரிகை யாளர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மாதாந்திர சலுகை கட்டண அனுமதி, வருமானம் இல்லா வழித்தடங்களிலும் மக்களுக்கு போக்குவரத்து வசதி, சட்டமன்ற நாடாளுமன்ற முன்னாள் இந்நாள் உறுப்பினர்களுக்கு சிறப்பு பயண அனுமதி, தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின் நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லாபயண அனுமதி, என பல்வேறு சமூக நல பொறுப்புகளை ஏற்று நடத்துகிறது. அரசு போக்குவரத்துக் கழகங்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மாணவ -மாணவிகள் இடைநில்லாமல் பள்ளிக்குச் சென்றனர். உயர் கல்வி படிக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் 32 சதவீதம் மட்டுமே. தமிழ்நாட்டில் 50 சதவீதத்திற்கு மேல் என்பது சிறப் பானதாகும்.
அரசு போக்குவரத்து நட்டமா?
போக்குவரத்துக் கழகங்கள் சேவை துறையாக தான் செயல்பட முடியும். பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணச் சேவை, பெண்களுக்கு நகர பேருந்து களில் இலவச பயண அனுமதி, இவைகள் எல்லாம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. சமீபத்தில் அரசு செய்திருக்கும் பெண்களுக் கான நகரப் பேருந்துகளில் இலவச பயண வசதி கூட உள்நாட்டு உற்பத்தியை, (ஜிடிபி) அதிகரித்தி ருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு, பராமரிப்புச் செலவுகள், நிர்வாகச் சீர்கேடுகள், அரசியல் ரீதியாக எடுக்கப்படும் முடிவுகள், பேருந்துகள் வாங்கு வதில் உதிரி பாகங்கள் வாங்குவதில் கமிஷன் என பல காரணங்களால் வருவாய் குறைந்தும் செலவுகள் அதிகரித்தும் வருகின்றன. இதுவரை போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூபாய் 48 ஆயிரம் கோடி நட்டம் என அரசு கூறுகிறது. இது நஷ்டமா?
அரசு ஈடுசெய்ய வேண்டிய இழப்பீடா? என்பதுதான் கேள்வியாக உள்ளது. தற்போதைய நிலையில் தோராயமாக ஒரு நகர பேருந்துக்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு ரூபாய் 18000, வருமானம் பத்தாயிரம். ரூபாய் 8000 இழப்புத் தானே. இதை அரசு ஈடுசெய்ய வேண்டாமா? போக்கு வரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள கடனோ இழப்போ அரசு கட்டாயமாக கொடுத்து உதவ வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களை சேவை துறை யாக செயல்படுத்த வேண்டும். கொள்கை அளவில் இதனை அரசு ஏற்றுக் கொள்வது தான் போக்கு வரத்தை மக்கள் சேவையில் மேலும் சிறந்ததாக இயக்கிட முடியும். மேலும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகச் சீர்கேடுகளை களைந்திட சிக்கனம் என்ற பெயரில் பேருந்து இயக்கங்களை குறைப்பது, ஒப்பந்த முறையில் வேலை வாங்கு வது, தேவையான தொழிலாளர்களை நியமிக்காமல் இருப்பது, தொழிலாளர்களின் வைப்பு நிதி, பணிக் கொடை நிதி, கூட்டுறவு சங்கங்களுக்கு ஊழியரிட மிருந்து பிடித்தம் செய்த தொகையை செலுத்தாமல் கழகங்களே மடைமாற்றி செலவு செய்ய அனு மதிப்பது, நிதி ஒழுங்கற்ற நடைமுறைகளில் கழக நிர்வா கங்கள் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்த தொகை ரூபாய் 10 ஆயிரம் கோடியை போக்குவரத்துக் கழகங்கள் மடைமாற்றி செலவு செய்திருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளாக கழகங்கள் சீரழிவை நோக்கிச் சென்றது. தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளும் உதாசீனப்படுத்தப்பட்டன. போக்கு வரத்துக் கழகங்களை பாதுகாக்க, ஊழியர்கள் பிரச்ச னைகள் தீர,சிஐடியு, தொ மு ச.உள்ளிட்ட சங்கங்கள் தொடர்ந்து கூட்டமைப்பை உருவாக்கி போராடி வந்தன. சிஐடியு தனியாகவும் போராடி வருகிறது.
திமுக ஆட்சி அமைந்த பின்
2021 இல் திமுக ஆட்சி அமைத்த பின் போக்கு வரத்துக் கழகங்கள் பாதுகாக்கப்படும் தொழிலாளர் கள் பிரச்சனைகள் தீர்க்கப்படும், பென்ஷன் அனைவ ருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என் றெல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முனைப்புடன் செயல்பட வேண்டி உள்ளது. பிரச்சனைகள் தீர்க்கப்பட பல போராட்டங்களுக்குப் பிறகு ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டது மகளிர் பேருந்து முதல்வரின் கனவு திட்டம் என கொண்டு வரப்பட்டது. 40 சதவீதம் பெண்கள் பயணிப்பதாக கணக்கிட்டு ரூபாய் 380 கோடி முதலில் அரசு ஒதுக்கியது. இத் திட்டத்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 61.82 சதமாக உயர்ந்துள்ளது. தற்போது ஆண்டிற்கு ரூபாய் 510 கோடி ஒதுக்கி உள்ளது. அரசு ஒதுக்கி யுள்ள இந்த நிதியும் முழுமையானது இல்லை. பென்ஷன் உள்ளிட்ட தொழிலாளர்கள் பிரச்சனைகள் தீர்க்கப்படுவது, பேருந்துகள் தேவையான அளவுக்கு வாங்குவது, தொழிலாளர்கள் நியமனம், ஒப்பந்த முறைகள் ரத்து செய்வது, வழித்தடங்களை அதிகப் படுத்துவது, முழுமையாக பேருந்துகளை இயக்கு வது உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். தொழிலாளர்களின் கடின உழைப்புதான் போக்கு வரத்துக் கழகங்கள் மக்கள் சேவையில் இன்றளவும் உயர்ந்து நிற்பதற்கு காரணமாக உள்ளது. கழகங்கள் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதற்கு தொழிலா ளர்கள் காரணம் அல்ல.
கழகங்களின் செயல் திறனை எடுத்துக் கொண்டால் டீசல் சிக்கனத்தில், விபத்தில்லா இயக்கத்தில், கிலோ மீட்டர் இயக்கத்தில், வருவாய் பெருக்கத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்திய அளவில் பல விருதுகளைப் பெற்ற கழகங்களாக தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் செயல்படுகின்றன.
போக்குவரத்தை மேம்படுத்த
எந்த நேரத்தில் சென்றாலும் பேருந்து கிடைக் கும் என்ற நம்பகத் தன்மையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இடைவெளியற்ற வசதியான குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவையை அனைவருக்கும் வழங்க வேண்டும். இது நடைபெற வேண்டுமென்றால் இன்றைய அரசு போக்குவரத்து செயல்பாட்டில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. அதற்கு நிதி நிலையை காரணம் காட்டாமல் போக்குவரத்து சேவை துறையாக செயல்பட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இன்றைய நிலையில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் 2700 வழித்தடங்கள் உள்ளன. இதில் தற்போது நூற்றுக்கு மேற்பட்ட வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பயணிக்கும் மக்களின் ஒரு நாள் எண்ணிக்கை இரண்டு கோடியிலிருந்து 1.70 லட்ச மாக குறைந்துள்ளது. பேருந்து இயக்கத்தின் சீரற்ற தன்மையால் கழக நிர்வாக சீர்கேடுகளால் தான் பயணி கள் எண்ணிக்கை பேருந்துகளில் குறைந்துள்ளது. இன்றைய பயணிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப் பட, ஒரு லட்சம் பயணிகளுக்கு குறைந்தபட்சம் 50 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை யில் தமிழ்நாட்டில் 34,000 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். தற்போது 20,000 பேருந்துகளே இயக் கப்படுகின்றன. பணியாளர் விகிதப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை. தற்போது ஒரு லட்சத்து 17 ஆயிரம் தொழிலாளர்களே பணிபுரிகின்ற னர். அரசு கணக்குப்படி 25000 காலிப் பணியிடங்கள் உள்ளன.
போக்குவரத்துக் கழகங்களை காக்க...
தமிழ்நாடு அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த சீரமைப் புக்குழு அமைக்கப்பட்டு சரி செய்யப்படும் என்றார். சீரமைப்பு குழு, கழகங்களுக்கு உடன் நிதி வழங்க வேண்டும் என கூறி அரசாணை எண் 31 மூலம் அறி விக்கப்பட்டது. இதுவரை பரிந்துரை என்னவென்றும் தெரியவில்லை பணமும் கிடைக்கவில்லை. போக்குவரத்துக் கழகங்களில் நிதி நெருக்கடியை 2023 - 2024 நிதி ஆண்டின் பட்ஜெட்டிலாவது தீர்வு காண வேண்டும், போதுமான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட, காலி பணியிடங்கள் உடனடியாக பூர்த்தி செய்யப்பட, வாரிசுகளுக்கு வேலை வழங்கிட, ஓய்வுக் கால பலன்கள் இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படா ததை உடன் வழங்கிட, பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று நடத்திட, 2003 ஆம் ஆண்டிற்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பென்ஷன் கிடைக்கப்பட, ஓய்வூதி யர்களுக்கு 93 மாதமாக வழங்கப்படாத பஞ்சப் படியை உயர்த்தி வழங்கிட. நீதிமன்ற தீர்ப்புகளை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்திட போன்ற கோரிக்கைகளோடு பொதுத்துறை போக்குவரத்தை பாதுகாக்க அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னம் (சிஐடியு) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில், சுற்றுச்சூழலை பாதுகாத்திட! விபத்தை தடுத்திட! பொது போக்குவரத்தை பலப் படுத்திட! பொதுத்துறையை பாதுகாத்திட! பிப்ரவரி 12இல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளை நடத்து கிறது. பாதுகாப்போம் பொது போக்குவரத்தை! கரம் கோர்ப் போம்! விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகளில்.
கட்டுரையாளர்: சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர், தஞ்சாவூர்