articles

img

உரிமை கேட்டால் தடியடியா? - பி.சம்பத்

உத்தப்புரம் கிராமத்தில் 700 தலித் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. மக்கள் தொகையில் தலித் மக்களின் எண்ணிக்கை பிற சாதி மக்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும். இருந்தும் பிற சாதி மக்கள், சாதிய சக்திகளின் தூண்டுதலால் தலித் மக்களின் பல அடிப்படை  உரிமைகளை சாதியின் பெயரால் அனுபவிக்க விடாமல் தடுத்து வந்தார்கள். சாதிய ஒடுக்கு முறைகள் காரணமாக தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் முரண்பாடுகள் உருவானது இது நான்காவது முறையாகும். ஏற்கனவே 1948, 1964, 1989 ஆகிய ஆண்டுகளில் சாதிய மோதல்கள் உருவாகியிருந்தன. 1989 சாதிய மோதலை ஒட்டிதான், 600 மீட்டர் நீளம் 30 அடி உயரமுடைய தற்போது நாம் விவாதிக்கக் கூடிய தீண்டாமைச் சுவரைக் கட்டினார்கள். சமீபகாலப் போராட்டங்களின் முரண்பாட்டின் மையப்புள்ளியாக இந்தத் தீண்டாமைச் சுவர் அமைந்தது.  உத்தப்புரம் தீண்டாமைச் சுவரின் ஒரு  பகுதி தகர்க்கப்பட்டதும், அப்பகுதியில் தலித் மக்கள் நுழைய ஒரு பாதை உருவாக்கப் பட்டதுமான நிகழ்வுகள் அம்மக்கள் பொதுச் சாலையை பயன்படுத்தும் உரிமையைப் பெற்றுத்தர அடிப்படையாக அமைந்தன. உத்தப்புரம் ஊரில் சுவர் தகர்ப்பு ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். ஆயினும், அவ்வூரில் உள்ள பிற சாதி மக்கள் தலித் மக்கள் பெற்ற இந்த உரிமையை அங்கீகரிக்கத் தயாராக இல்லை. சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்ட பிறகு, பிற சாதி மக்கள் அனைவரும் தங்கள் குடும்ப அட்டையை தாசில்தாரிடம் ஆத்திரத்தோடு ஒப்படைத்துவிட்டு ஊரைவிட்டு வெளியேறி னர். பக்கத்தில் உள்ள ஒரு மலையின்மேல் ஏறி அங்கேயே குடிபுகுந்தனர். பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உட்பட எவரும் விதிவிலக்கின்றி இவ்வாறு குடியேறினர். வெயில், மழை, காற்று என இயற்கையின் துயரங்கள் அனைத்தையும் எதிர்கொண்டு பல நாட்கள் இரவுபகலாக அங்கேயே தங்கி னார்கள். 

ஏராளமான அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் அந்த ஊருக்கு தினசரி படை யெடுத்துச் சென்று அவர்களை தாஜா செய்து மலையில் இருந்து கீழே இறக்க பெருமுயற்சி எடுத்தனர். பத்திரிகைகள், இதர ஊடகங்கள் இவர்கள் மலையில் குடியேறிய செய்தியை பிரதான செய்தியாக வெளியிட்டன. பலநாட் கள் அரசு நிர்வாகம் எடுத்துக்கொண்ட முயற்சி களுக்குப் பிறகு அம்மக்கள் ஒருவழியாக சில நிபந்தனைகள் அடிப்படையில் மலையை விட்டு கீழே இறங்கினர். மலையிலிருந்து ஊர் திரும்பிய பிற சாதி மக்கள் அதன்பிறகு தலித் மக்களிடம் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஆரம்பித்தனர்.  தலித் மக்களுக்காக உருவாக்கப்பட்ட சாலையில் பல தடைகளை ஏற்படுத்தினர். தங்கள் வீடுகளில் உள்ள மேல்கூரையை நீட்டி சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். எஞ்சியுள்ள பகுதியில் ஆட்டுக்கல், அம்மிக்கல், துணிதுவைக்கும் கல் போன்றவற்றைக் கொண்டுபோய் போட்ட னர். துணிகளைத் திறந்த சாலையில் காய வைத்தனர். ஆடுமாடுகளை சாலையில் கட்டிப் போட்டனர். இதனால், அந்தச் சாலையில் தலித்மக்கள் நான்கு சக்கரவாகனத்திலோ, அல்லது ஆட்டோவிலோ வர இயலவில்லை. தலித் மக்கள் அப்பாதையில் நடந்துவரும் போது கூட அவர்களைத் திட்டியும், மிரட்டி யும் சில சந்தர்ப்பங்களில் தாக்கியும் திருப்பி யனுப்பினர். ஆக, தலித்மக்களுக்குப் பொதுச் சாலையில் செல்ல உரிமை கிடைத்தும், அவர் களால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.

இப்பிரச்சனைகள் குறித்து தலித் மக்கள் காவல்துறையில் புகார் கொடுத்தும் பிற சாதி மக்கள் சிலர்மீது சில வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதே தவிர, ஆக்கிரமிக்கப் பட்ட பாதையை உபயோகிக்க காவல்துறை யினர் எவ்வித நடவடிக்கையையும் எடுக்க வில்லை. மட்டுமல்லாமல் தலித் மக்கள் பலர்மீது, அவர்கள் போலீஸில் பொய்யான புகார் கொடுத்து அவர்கள் மீதும் பல வழக்கு களை பதியவைத்தனர். பொதுச் சாலையில் ஆங்காங்கு காவலுக்கு நின்றுகொண்டிருந்த காவல்துறையினர் ஒன்று வேடிக்கைப் பார்த்தனர்; அல்லது, பிற சாதி மக்களுடன் இணைந்து தலித் மக்களை விரட்டியடிப்பதில் பங்குகொண்டனர். இப்படியாக பல மாதங்கள் கடந்தன.  இந்நிலையில் தலித் மக்களுக்கு உரு வாக்கித் தரப்பட்ட சாலையில் சாதிய சக்திகள் பிற சாதி மக்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் தலித்மக்கள் பயன் பாட்டிற்கு அச்சாலையைக் கொண்டுவர வலி யுறுத்தியும் சி.பி.ஐ(எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக பல இயக்கங்கள் நடந்தன. ஆயினும், அரசு, காவல்துறை நிர் வாகங்கள் அசையவில்லை. இந்நிலையில், உத்தப்புரம் தலித் மக்கள் அனைவரும் பங்கேற்ற காலவரையற்ற பெருந்திரள் உண்ணாவிரதத்திற்கு சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஏற்பாடு செய்தன. உத்தப் புரம் போராட்டங்களின்போது சிபிஐ(எம்) புற நகர் மாவட்டக்குழுச் செயலாளர் வெ.சுந்தரம் தனிக்கவனம் செலுத்தி வழிகாட்டிய பாங்கு இங்கு குறிப்பிடத்தக்கது. 

பெருந்திரள் உண்ணாவிரதப் போராட்டத் திற்கு பி.சம்பத், கே.பாலபாரதி எம்.எல்.ஏ, எஸ்.கே.மகேந்திரன் எம்.எல்.ஏ, கே.சாமுவேல் ராஜ் தலைமை ஏற்றனர். இப்போராட்டத்தில் மாவட்ட, இடைக்கமிட்டி தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். சி.ராமகிருஷ்ணன், தங்கராஜ், தா.செல்லக்கண்ணு, அரவிந்தன், ஜி.முருகன், சமையன் ஆகிய தோழர்கள் போராட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்த தோடு முன்னின்றும் போராடினர். வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சாதிய சக்திகள் கொடுத்த நிர்பந்தம் காரணமாக முடிவு ஏற்படவில்லை. எனினும், போராட்டக் குழுவினர் தீர்வுகாணாமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என உறுதியான நிலை எடுத்தனர். அன்றைய தினம் நீடித்து நடந்த போராட்டத்தின் நிர்பந்தம் காரணமாக அதி காரிகள் எடுத்த நிலைப்பாட்டால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 

தலித் மக்கள் அப்பாதையில் நடந்தும் வாக னங்களிலும் செல்ல அனுமதியும், பாதுகாப்பும் அளிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உடனடியாக தலித் இளை ஞர்கள் பலரும் ஆட்டோக்களில் ஏறி அந்த சாலைவழியாகப் பயணம் செய்தனர். காவல் துறையினர் இதற்குப் பாதுகாப்பு அளித்தனர். இப்போராட்ட வெற்றியால் மக்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்தது. எனினும், பிரச் சனைகள் வேறு வடிவில் தொடர்ந்தன. முத்தா லம்மன் கோவில் வழிபாட்டுப் பிரச்சனை, பேருந்து நிறுத்த நிழற்குடை அமைப்பது போன்ற பல பிரச்சனைகளில் தீர்வு ஏற்படவில்லை. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தொடர்ந்து போராட வேண்டிய தேவை இருந்தது. ஏற்படவில்லை. இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தொடர்ந்து போராட வேண்டிய தேவை இருந்தது.  இந்நிலையில்தான் உத்தப்புரம் ஊரில் உள்ள தலித்மக்களின் தலைவர்கள் பொன்னையா, சங்கரலிங்கம் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். தலித் இளைஞர்கள் பலரையும் காவல்துறையினர் தேடித்தேடி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், பல இளைஞர்கள் ஊரைவிட்டே வெளி யேறினர். ஊரில் இருந்த பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் திடீரென காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் உள்ளே நுழைந்து, தலித் மக்கள் மீது கடும்தாக்கு தலை நடத்தினர். இதில் பெண்கள், குழந்தை கள், முதியவர்கள் உட்பட பலர் காயமடைந் தனர். தலித் மக்களின் வீடுகள், குடிசைகள் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. தங்கள் உரிமைகளை நிலைநாட்டுவதில் தலித் மக்கள் உறுதியாக இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, எவ்வித நியாமும் காரண மும் இன்றி காவல்துறையினர் இத்தாக்கு தலை நடத்தினர். 

உத்தப்புரத்தில் காவல்துறையினர் தலித் மக்கள் மீது நடத்திய மிருகத்தனமான தாக்கு தலைக் கண்டித்து சிபிஐ(எம்), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங் கள் நடத்தப்பட்டன. அது மட்டுமல்ல, உத்தப் புரம் தலித்மக்கள் மீது, காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் மற்றும் உடைமை களுக்கு ஏற்படுத்திய சேதாரங்களைக் கண்டித்தும், இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரியும், அம்மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய் பெயரில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிரபல வழக் கறிஞர்கள் உ.நிர்மலா ராணி, ராஜ்குமார், லஜபதிராய் நீதிமன்றத்தில் ஆஜராகி திறம்பட வாதாடினர். 

உத்தப்புரம் தலித்மக்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல்கள், இதனால் ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து ஆய்வுசெய்ய மதுரை உயர்நீதிமன்றம் ஒரு விசாரணைக்குழுவை நியமனம் செய்தது. இக்குழு முழுமையாக விசாரணை செய்து உடனடியாக பாதிக்கப் பட்ட தலித்மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் நிவா ரணம் வழங்க சிபாரிசு செய்தது. விசாரணைக் குழுவின் சிபாரிசுக்கு தமிழக அரசு தரப்பில் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அந்த ஆட்சேபணையை நிராகரித்து உயர் நீதிமன்றம் ரூபாய் 10 லட்சத்தை உத்தப்புரம் தலித்மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்க உத்தரவிட்டது. இதை யடுத்து நிவாரணம் வழங்கப்பட்டது தலித் மக்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்தது.  நீதிமன்றத் தீர்ப்பால் உத்தரப்புரம் தலித் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்த போதிலும், அவர்களின் பல பிரச்சனை களுக்குத் தீர்வுகாணப்படாத நிலை நீடித்தது. பல அடிப்படை ஜனநாயக உரிமைகள் அவர்களுக்குத் தொடர்ந்து மறுக்கப்பட்டன. இந்நிலையில், இப்பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும் முன்னிறுத்தி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி அணிதிரள்வதென தீர்மானிக்கப் பட்டது. 12.7.2010இல் மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் அணிதிரண்டனர். உத்தப்புரம் தலித் மக்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு ஆதரவாக இதர ஜனநாயக இயக்கங்களைச் சேர்ந்தவர்களையும் அணிதிரட்டியது சிபிஐ(எம்) மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இப்போராட்டத்திற்கு டி.கே.ரங்க ராஜன் எம்.பி, பி.சம்பத் தலைமையேற்றனர். இவர்களோடு சி.ராமகிருஷ்ணன், எஸ்.கே. மகேந்திரன் எம்.எல்.ஏ, கே.சாமுவேல்ராஜ், சு.வெங்கடேசன், ஆர்.அண்ணாதுரை எம்.எல்.ஏ, எஸ்.கே.பொன்னுத்தாய், தா.செல்லக் கண்ணு உள்ளிட்ட பல மாநில, மாவட்டத் தலை வர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 

போராட்டத்தின் துவக்கத்தில் டி.கே.ரங்கராஜன், பி.சம்பத் இருவரும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். முத்தாலம்மன் கோவில் நுழைவு, பேருந்துநிறுத்த நிழற்குடை அமைப்பது, தலித்மக்கள் குடியிருப்பில் ஓடும் சாக்கடைக்கு மூடி போடுவது உட்பட பல பிரச்சனைகளை மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். இவை அனைத்தும் மக்களின் அடிப்படை தேவை சம்பந்தமான பிரச்சனைகள் என்றும் உடனடியாகத் தீர்வு காண்பது அரசின் கடமை என்றும் வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சித் தலைவரைப் பொறுத்தவரை சென்னையில் மாநில ஆட்சித்தலைமையுடன் தொடர்பு கொண்டு பேசியபிறகு பதிலளிப்பதாக தெரி வித்தார். இதன்படி மாநிலஆட்சித் தலைமை யுடன் தொடர்புகொண்டு பேசிவிட்டு மீண்டும் தலைவர்களை அழைத்தார். ஆனால், தன்னால் எதுவும் செய்ய முடியாது என்ற பதிலையே அவர் கூறினார். இதனால், அதிர்ச்சி யடைந்த தலைவர்கள் இத்தகைய பதிலை ஏற்க முடியாது என உறுதிபடத் தெரிவித்தனர். கால அவகாசம் எடுத்துக்கொண்டாவது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுமாறும் மாவட்ட ஆட்சியரிடம் வற்புறுத்தப்பட்டது. ஆனால், அவரோ அடிப்படையான ஜன நாயகப் பிரச்சனைகளுக்கு எவ்வித உத்தர வாதத்தையும் தரமறுத்துவிட்டார். 

இந்நிலையில் வேறுவழியின்றி பிரச்சனை களுக்குத் தீர்வு ஏற்படாமல் இங்கிருந்து நகர மாட்டோம் என உறுதிபட மாவட்ட ஆட்சி யரிடம் தெரிவித்துவிட்டு, தலைவர்களும், போராட்டத்தில் பங்கேற்றவர்களும் அலுவ லகத்துக்கு வெளியே தரையில் அமர்ந்து முழக்கமிட்டனர். பிடிவாதம் காட்டிய மாவட்ட நிர்வாகம் காவல்துறையை ஏவிவிட்டது. கூட்டத்திற்குள் புகுந்த காவல்துறையினர் திடீரென தடியடி தாக்குதல் நடத்தினர். பெண்கள், குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரும் தாக்கப்பட்டனர். தலைவர் களைக் கைதுசெய்து குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வேனில் எறிந்தனர். பலநூற்றுக் கணக் கானவர்களை இவ்வாறே பலவந்தமாக கைதுசெய்து வேன்களில் ஏற்றினர்.  கைது செய்யப்பட்ட அனைவரையும் மதுரை மத்தியச்சிறையில் அடைப்பதற் கான ஏற்பாடுகளை காவல்துறை செய்து கொண்டிருந்தது. இதற்கான முழுவிவரங்கள் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பெறப் பட்டது. சிறைச்சாலைக்குக் கொண்டு செல்வதற்கான பேருந்துகளும் தயாராக கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. இந்நிலை யில் சென்னையில் இருந்து மாநில ஆட்சித் தலைமையின் உத்தரவு அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இதன்பிறகு, உயர்மட்ட அதி காரி ஒருவர் டி.கே.ரங்கராஜன் எம்.பியிடம் நீங்களும் கைதுசெய்யப்பட்டவர்களும் விடுதலை செய்யப்படுகிறீர்கள் எனத் தெரி வித்தார். இத்தகவலை கூடியிருந்தவர்களிடம் தெரிவித்த டி.கே.ரங்கராஜன், “நாம் அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராவோம்” என அறைகூவல் விடுத்தார். போராட்ட முழக்கங் களை எழுப்பியவாறு கூட்டம் அங்கிருந்து கலைந்துசென்றது. அறிவித்தவாறே அடுத்த கட்டப் போராட்டங்கள் வீரியத்தோடு நடந்தன.