...நேற்றைய தொடர்ச்சி
உயிரற்ற பொருளல்ல; பரம்பொருளான பிரம்மம் தான் அனைத்தையும் படைத்ததும் அசைவை உண்டாக்கிக் கொண்டிருப்பதும் என்பதே இந்தக் கருத்தின் பொருள். மூலகாரணமான பிரம்மம்தான் உண்மையானது; மற்றவை உண்மையானதல்ல; அவை அழியக்கூடியது என்ற இந்தக் கருத்தை சாங்கியவாதிகள் கடுமையாக எதிர்த்தார்கள். இயற்கையின் முதன்மையைப் பற்றி விரிவாக விளக்கம் கூறியபோதிலும் இந்த சாங்கிய தத்துவ ஞானத்திலும் பல்வேறு கருத்து முதல்வாத எண்ணங்க ளைப் பார்க்கலாம். இருப்பினும் அக்காலத்தில் செல்வாக்காக இருந்த பொருள்முதல்வாதத்தின் பிரதிபலிப்புகளை இந்த தத்துவஞானத்தில் காணலாம். பௌத்தம், சமணம், நியாயம், வைசேஷிகம் போன்ற பல்வேறு தத்துவ ஞானங்களிலும் பொருள்முதல்வாதக் கருத்துக்களை தெளிவாகக் காணலாம். நியாயமும், வைசேஷிகமும் விளக்கிக் கூறிய அணுசித்தாந்தமும் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் நியாயமும், வைசேஷிகமும் ஊழ்வினையை ஒத்துக்கொள்வதும் இங்கே குறிப்பி டத்தக்கது.
பௌத்த தத்துவ ஞானம்
பௌத்த தத்துவஞானம் அக்காலத்தில் கருத்து முதல்வாதத்திற்கெதிரான ஒரு போராட்டமாகவே விளங்கியது. பிரார்த்தனை, கடவுள், பலி, ஜாதி போன்ற கருத்துக்களை பௌத்தம் கடுமையாகத் தாக்கியது. உபநிஷத்துக்களை சாடியது. பிரபஞ்சத்தின் தோற்றத் தைப் பற்றியும் அழிவைப் பற்றியும் சிந்தித்து நேரத்தை வீணாக்காதீர்களென்று புத்தர் மக்களுக்கு உப தேசம் செய்தார். இந்தப் பிரபஞ்சமானது “ஆம்” என்றும் “இல்லை” என்றும் உள்ள இரண்டு தன்மையைக் கொண்டது என்று அவர் என்று கூறினார். நீரோட்டம் போல என்றும் மாறிக் கொண்டிருப்பது இதன் இயல்பு; தானாகவே தோன்றி தானாகவே எரிந்து கொண்டிருக் கும் நெருப்பைப் போன்றது இந்த உலகம் என்றார். கிரேக்க நாட்டின் தலைசிறந்த பொருள்முதல்வாதி ஹெராக்லிடஸ் பிரபஞ்சத்தைப் பற்றி கூறியதைப் போல் இங்கு புத்தரும் கூறுகிறார். பௌத்த தத்துவ ஞானத்தின் இப்பகுதிகள் உண்மையில் மிகச் சிறப்பானதாகும்.
அவதூறுப் பிரச்சாரம்
இதிலிருந்து நாம் என்ன பார்க்கிறோம்? பிரபஞ் சத்தை அறிய நம்முடைய மூதாதையர்கள் முயன்ற பொழுது, இயற்கையை ஒட்டி நிற்கும் பொருள் முதல் வாத எண்ணங்களைத்தான் அவர்கள் ஆரம்பத்தில் பிரதிபலிக்க முடிந்தது. உலக வரலாற்றில் மனித நாகரீ கம் தோன்றிய நாடுகளுடைய அனுபவமும் இதைத் தான் எடுத்துக்காட்டுகின்றது. விஞ்ஞான வளர்ச்சியோ இயந்திர நுட்பங்களோ இல்லாத அக்காலத்தின் பொருள் முதல்வாதத்திற்கு இயல்பான, தவிர்க்க முடியாத சில பலவீனங்களும் இருந்தன என்பது உண்மையே. முதன்மையானது பொருள்தான் என்றும் பிறகு தான் உயிர் தோன்றியது என்றும் தெளிவாகக் கூறிய லோகாயதவாதிகள் கூட முழுமையான ஒரு பொருள் முதல்வாத தத்துவத்தை உருவாக்க அன்றைய அறிவு வளர்ச்சிச் சூழலில் இயலவில்லை. பொருள்களின் மாற்றத்தைப் பற்றியும் சமுதாய அமைப்பின் அடிப் படை நியதிகளைப் பற்றியும் அவர்களால் தெளிவாக எதுவும் கூறமுடியவில்லை. வர்க்கங்களுக்கு இடையே உள்ள உறவுகளும் இதற்கு ஒரு பிரதான காரண மாக விளங்கியது.
லோகாயதவாதிகளைத் தவிர மற்ற தத்துவஞானி கள் பல்வேறு பிரச்சனைகளில் மூடப்பழக்க வழக்கத்தின் கொடூரமான பிடியிலிருந்து தப்ப முடிய வில்லையென்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவு மில்லை. இருப்பினும் தத்துவ ஞானத்தின் அடிப்ப டைப் பிரச்சனைகளில் பொருள் முதல்வாதக் கருத்துக் களை அவர்கள் எடுத்துரைத்தனர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொருளா அல்லது எண்ணமா? எது முதன்மையானது? பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி எது? இத்தகைய பிரச்சனைகளில் ஓரளவுக்கு தெளிவான கருத்துக்களை அவர்களால் வெளியிட முடிந்தது. சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றி உடல் உழைப்புக்கும், மூளை உழைப்புக்கும் வேறுபாடு ஏற்பட்டதின் விளைவாகத்தான் பிற்காலத்தில் கருத்து முதல்வாதம் உருவெடுத்தது. உபநிஷத்துக்களில் இதன் விதையைப் பார்க்கலாம். யக்ஞவல்கியரும் வியாசரும் இதற்கு உருவம் கொடுத்தனர். பொருள் முதல்வாதத்திற்கெதிரான தாக்குதலும் தீவிர மடைந்தது. தத்துவஞானப் பள்ளிகள் பல அழிக் கப்பட்டன. பொருள் முதல்வாதக் கருத்துக்களை பின் பற்றக்கூடிய பல்லாயிரக்கணக்கான மக்களை ஆயி ரக்கணக்கில் கொன்று குவித்தனர். சிற்றின்ப வாழ்க் கையை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட கீழ்த்தர மான விலங்குத்தன்மை கொண்ட ஓர் கருத்துதான் பொருள் முதல்வாதம் என்று அவதூறுப் பிரச்சார மும் செய்தனர்.
இவ்வாறு அவதூறுகள் கூறுவது வரலாற்றில் புதியதல்ல.
மாமேதை ஏங்கெல்ஸ் கூறுவதைப் பார்ப்போம்:
“பொருள்முதல்வாதம் என்ற வார்த்தை மூலம் பெருந்தீனி தின்னல், குடிவெறி, பெண்ணாசை, உடல் ஆசை, திமிர், காமவெறி, பிறர் பொருளை அபகரித்தல், பணப்பேராசை, கொள்ளை லாப மடித்தல், பங்குமார்க்கெட்டில் கொள்ளை அடித்தல் என்று பத்தாம்பசலி புரிந்துகொள்கின்றான் – சுருங்கச் சொன்னால் அவன் தனிப்பட்ட வாழ்க்கையில் தானே அனுபவித்துக் கொண்டிருக்கும் சகல இழிவான கெட்ட பழக்க வழக்கங்களையும் பொருள் முதல்வாத மென்று புரிந்துகொள்கிறான்.” இது கருத்து முதல்வாதிகளுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்.
வரலாற்று உண்மை
புதிய விஞ்ஞான உண்மைகளை எடுத்துரைத் ததாலும், மூடப்பழக்க வழக்கங்களை எதிர்த்ததற்கா கவும், பொருள் முதல்வாத கருத்துக்களை கூறியதற்கா கவும் பலர் புரோகிதக் கூட்டத்தாலும், பிற்போக்குப் பிண்டங்களாலும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தையும், சமுதாய மாற்றங்களையும் இத்த கைய கொடுங்கோன்மைகளால் தடுத்துவிட முடியாது என்பதே உலக வரலாறு கூறும் உண்மையாகும். இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முடி யாது; பிரபஞ்சம் ஒரு மாயை; இந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் முன்பிறவியின் வினையே; கடவுளை நம்பி மோட்சம் அடைய எடுக்கும் நட வடிக்கை ஒன்றுதான் ஞான மார்க்கம்; கர்ம மார்க்கம் வீணானது என்றெல்லாம் பித்தலாட்டம் செய்யும் இந்திய கருத்துமுதல்வாதம் உண்மையில் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக் கட்டையாக நின்றது. இது தகர்த்தெறியப்பட வேண்டும். பொருள்முதல்வாதம் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறது. உலக வரலாற்றில் நடைபெற்ற எல்லா முன்னேற்றத்திற்கும், விஞ்ஞான வளர்ச்சிக்கும் ஆதார மாக இருந்ததும் பொருள் முதல்வாதமே. சமுதாய வளர்ச்சியில் கருத்துமுதல்வாதம் வர லாற்றின் குப்பைத் தொட்டிக்கு தூக்கியெறியப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆதி பொருள்முதல்வாதத்திற்கு பல பலவீனங்கள் இருந்தது உண்மையே; இருப்பினும் ஏங்கெல்ஸ் குறிப்பிடுவது போல் அதன் சிறப்பு, ஆதி பொருள் முதல்வாதிகளின் அடிப்படையை ஆதாரமாக்கிக் கொண்டு சிறந்த விஞ்ஞான ரீதியான பொருள்முதல் வாதத்தை நோக்கி உலகம் முன்னேறிக் கொண்டி ருக்கிறது. இயற்கையைப் பற்றி மனிதன் மென்மேலும் அறி யும்போது மனதுக்கும் பொருளுக்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும், ஆத்மாவுக்கும் உடலுக்கும் இடையே முரண்பாடு என்ற இயற்கைக்குப் புறம்பான மடமையான கருத்து மறையும் என்று ஏங்கெல்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரேக்க பொருள் முதல்வாதம்
கிரேக்கத் தத்துவ ஞானிகளின் மனதில்பட்ட ஒரு கருத்து- நம்மைப் பொருத்தவரை அது திட்டவட்ட மான ஆராய்ச்சியின் விளைவாகும். நமது அனுபவத்துக்குப் பொருத்தமுடையதாக - அதன் காரணமாக துல்லிய மாக தெளிவான உருவமாக உள்ளது என்பதேயாகும். ஏங்கெல்ஸ் புராதன கிரேக்க பொருள் முதல்வாத தத்துவ ஞானிகளைப் பற்றிக் கூறியுள்ளார். இது நமது புராதன பொருள் முதல்வாத தத்துவஞானிக ளுக்கும் முற்றிலும் பொருந்தும். உடல் உழைப்புக் கும், மூளை உழைப்புக்கும் உள்ள வேறுபாடுகள் ஒழிக்கப்படும்போது கருத்து முதல்வாதத்தின் அடிப்ப டையும் தகர்க்கப்படும். கிரேக்க நாட்டின் மிகச்சிறந்த தத்துவஞானி களின் சிந்தனைப் போக்குடன் நமது புராதன பொருள் முதல்வாத தத்துவஞானிகளின் கருத்துகளும் இயைந்து செல்கின்றன. இயற்கை முழுவதுமே, மிகச்சிறு பொருளிலிருந்து மிகப்பெரும் பொருள் வரையிலும்; மணலின் சிறு துளியிலிருந்து சூரியன் வரையும்; உயிரின் மூலக்கூறிலிருந்து மனிதன் வரை யிலும்- சமுதாய வளர்ச்சியில் ஏற்படும் இடைவிடாத மாற்றங்களை பொருள்முதல்வாதம் உரத்துக் கூறுகிறது.
இறுதி வெற்றி
உடல் உழைப்புக்கும், மூளை உழைப்பிற்கும் உள்ள வேற்றுமையைப் போக்கும் வல்லமை உடைய ஒரு வர்க்கம் – தொழிலாளி வர்க்கம் இன்று உதயமாகி யுள்ளது. இந்த வர்க்கத்தின் தோற்றமும் அது நடத்தி யுள்ள எண்ணற்ற போராட்டங்களும் பலவீனமான ஆதி பொருள் முதல்வாதத்தை இன்று நிறைவு பெற்ற பொருள்முதல்வாத தத்துவ ஞானமாக உருவாக்கி யுள்ளது. அதுவே மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் அளித்துள்ள தர்க்கவியல் பொருள் முதல் வாதம். முதலாளித்துவத்தின் அழிவும், தொழிலாளி வர்க்கத்தின் வெற்றியும் எவ்வாறு தவிர்க்க முடியா ததோ அவ்வாறே பொருள்முதல்வாதத்தின் இறுதி வெற்றியும் நிச்சயம்.