1 பல நாட்களாகியும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் போர் தொடர்கிறதே?
ஆம்! இதனை போர் என்று சொல்வது தவறு. இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை! ஒரு இனத்தையே முற்றிலுமாக அழிக்கும் செயலை இஸ்ரேல் நடத்திக் கொண்டுள்ளது. 09.06.2024 (இன்று) இந்த இனப்படுகொலை தாக்குதல்கள் 245வது நாளை எட்டியுள்ளது.
2 பாலஸ்தீன மக்கள் சந்தித்த இழப்புகள் என்ன?
245 நாட்களில் காசாவில் மட்டும்
Y அதிகாரப்பூர்வ கணக்கின்படி 36,654 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
Y இதில் 15,000 குழந்தைகள்.
Y 10,000 பெண்கள்.
Y 83,309 பேர் படுகாயம். பலர் வாழ்நாள் முழுதும் கை அல்லது கால் அல்லது கண் இழந்தவர்களாக இருப்பர்.
Y 3,60,000 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
Y 19 லட்சம் பேர் காசா பகுதிக்குள்ளேயே இடம் பெயர்வு.
Y 300க்கும் அதிகமான மசூதிகள்/ இரு பெரிய தேவாலயங்கள் அழிப்பு.
Y அனேகமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் தகர்ப்பு.
Y பல அரிய பண்பாட்டு கட்டிடங்கள் அழிவு.
இப்படி காசா பகுதி மக்களின் இழப்பு பட்டியல் நீளமானது. காசாவில் மட்டுமல்லாது மேற்கு கரை பகுதியிலும் இஸ்ரேலின் அராஜகம் தொடர்கிறது.
3 இப்பொழுது நடப்பது காசா போர் என அழைக்கப்படுகிறதே!
அப்படி வரையறுப்பதே சரியா என்பது விவாதத்துக்குரியது. பாலஸ்தீன பகுதி இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பின்னர் காசா / மேற்கு கரை என இரு பகுதிகளாக உள்ளன. இஸ்ரேலின் இன அழிப்பு தாக்குதல்களின் பெரும் பகுதி காசாவில் நடந்தாலும் மேற்கு கரை பகுதியிலும் தாக்குதல்கள் நடக்கின்றன.
4 பாலஸ்தீன மக்கள் இந்த இரு பகுதிகளில் மட்டும்தான் வாழ்கின்றனரா?
இல்லை. கோலான் குன்று பகுதிகளிலும் ஒரு பிரிவினர் உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் 1948ஆம் ஆண்டு ‘நக்பா’ எனும் இஸ்ரேலின் பெரும் இன அழிப்பு தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு அரேபிய நாடுகளில் அகதிகளாக உள்ளனர். குறிப்பாக ஜோர்டான்/ எகிப்தில் அதிகம் பேர் உள்ளனர்.
5 நாங்கள்தான் இனப்படுகொலைக்கு ஆளானவர்கள்; என இஸ்ரேல் தலைவர்கள் கூறுகின்றனரே!
ஹிட்லரின் நாஜிக்களால் யூத இனமக்கள் இனப்படுகொலைக்கு ஆளானது உண்மைதான்! சுமார் 60 லட்சம் யூதர்கள், ஹிட்லரால் இனப்படுகொலை செய்யப்பட்டனர். அதனால்தான் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் யூதர்கள் மீது அனுதாபம் உலகம் முழுவதும் ஏற்பட்டது. ஆனால் இனப்படுகொலைக்கு ஆளானவர்களின் பெயரால் இன்று இனப்படுகொலையில் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருப்பது வரலாற்று உண்மை மற்றும் வரலாற்று முரண்!
6 இஸ்ரேல் உருவானது என்பதே ஒரு முரண்பட்ட நிகழ்வாக அமைந்ததா?
ஆம் என சொல்வதில் தவறு இல்லை. யூதர்கள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென தனி தேசம் இல்லை. ஒவ்வொரு மதம் அல்லது இனத்தவருக்கு தேசம் உள்ளது. உலகின் முக்கிய மதத்தைச் சேர்ந்த யூதர்களுக்கும் ஒரு தேசம் தேவை என ஒரு கருத்தாக்கம் 19ஆம் நூற்றாண்டிலேயே உருவானது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் அந்த கருத்து வலுவானது. ஹட்லரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால் யூதர்கள் மீது அனுதாபமும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் மேற்கத்திய நாடுகள் யூத மக்களுக்கு ஒரு தேசம் உருவாக்க வேண்டும் எனக்கூறி பாலஸ்தீனம் பகுதியில் ஒரு தேசத்தை உருவாக்கினர். இதுவே இஸ்ரேல் என அழைக்கப்பட்டது.
7 பாலஸ்தீன மக்கள் தமது நிலத்தில் இஸ்ரேல் உருவாவதை அனுமதித்தனரா?
இல்லை. பல முரண்பாடுகள் தோன்றின. பாலஸ்தீன மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அப்பொழுது பாலஸ்தீனம் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்தது. பாலஸ்தீன மக்களின் நிலத்தில் இஸ்ரேலை உருவாக்குவதற்கு பிரிட்டனும் அமெரிக்காவும் முடிவு செய்தன. அதில் எண்ணெய் வளம் மிக்க அரேபிய பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் எனும் ஏகாதிபத்திய சுயநலன் இருந்தது. இதுகுறித்து 1947ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் மார்ச் 3 வரை லண்டனில் பிரிட்டன் சாம்ராஜ்யத்தின் கீழ் உள்ள தேசங்களின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கீழ்க்கண்டவாறு தெளிவாக குறிப்பிடுகிறது:
“தனது எண்ணெய் கொள்ளையை அரங்கேற்றுவதற்கும் சூயஸ் கால்வாயை கட்டுப்படுத்தவும் பாலஸ்தீனத்தை தனது கீழ் உள்ள ஒரு பிரதேசமாக பயன்படுத்தவும் மேலும் மத்திய கிழக்கு பகுதி முழுவதிலும் தனது நலனை நிலைநாட்ட ஒரு பூகோள பகுதியாகவும் தொலைநோக்கு பார்வையில் செயல்படும் ஏகாதிபத்திய சூழ்ச்சியை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் வலியுறுத்துகிறோம்.”
மேலும் அந்த தீர்மானம் கூறுகிறது:
“சுதந்திரத்தை விரும்பும் அனைவரும் பாலஸ்தீனம் மற்றும் உலகம் முழுவதிலும் சமாதானத்தை தேடும் அனைவரும் ஒன்றிணைந்து கீழ்க்கண்டவற்றை வலியுறுத்த வேண்டும்:
Yபாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் ராணுவம் வெளியேற வேண்டும்.
Yபாலஸ்தீன மக்களின் நிலத்தில் யூதர்களுக்கு தேசம் உருவாக்க வேண்டும் எனும் ஐ.நா.சபைக்கு முன்பிருந்த “லீக் ஆஃப் நேஷன்” அமைப்பின் கட்டளையை திரும்பப்பெற வேண்டும்.
Yசுதந்திரமான பாலஸ்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும்.
Yஅங்கு வாழும் அரேபியர்கள் மற்றும் யூதர்கள் அனைவருக்கும்
Yபாலஸ்தீனத்திலிருந்து பிரிட்டன் ராணுவம் வெளியேற வேண்டும்.
Yபாலஸ்தீன மக்களின் நிலத்தில் யூதர்களுக்கு தேசம் உருவாக்க வேண்டும் எனும் ஐ.நா.சபைக்கு முன்பிருந்த “லீக் ஆஃப் நேஷன்” அமைப்பின் கட்டளையை திரும்பப்பெற வேண்டும்.
Yசுதந்திரமான பாலஸ்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும்.
Yஅங்கு வாழும் அரேபியர்கள் மற்றும் யூதர்கள் அனைவருக்கும் முழு மத சுதந்திரமும் பண்பாட்டு உரிமைகளும் ஏனைய வாய்ப்புகளும் உருவாக்கும் விதத்தில் இந்த தேசம் அமைய வேண்டும்.”
பிரிட்டனின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த 13 நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்த தீர்மானத்தில் இந்தியாவின் தோழர் ஜி. அதிகாரியும் பிரிட்டனின் ரஜனி பாமி தத்தும் கையெழுத்திட்டனர்.
8 யூதர்களும் முஸ்லிம்களும் நிரந்தர எதிரிகளா?
இல்லை. பாலஸ்தீன மக்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்ல. அவர்களில் ஒரு பிரிவினர் கிறித்துவர்கள் உள்ளனர். அரேபியாவில் இஸ்லாம் தோன்றிய பின்னரும் கூட , நபிகள் நாயகம் காலத்திலிருந்தே யூதர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர்.
ஜெருசேலம் நகரை முஸ்லிம்களிடமிருந்து மீட்க அன்றைய போப் ஆண்டவரால் நடத்தப்பட்ட “சிலுவைப் போர்களில்” முஸ்லிம்களும் யூதர்களும் ஒரு அணியாகவும் கிறித்துவர்கள் குறிப்பாக மேற்கத்திய கிறித்துவர்கள் ஒரு அணியாகவும் மோதினர். பல ஆண்டுகள் நடந்த அந்த போரில் யூதர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகவே போப் படைகளுக்கு எதிராக போரிட்டனர்.
9 அனைத்து யூதர்களும் பாலஸ்தீன விரோதிகளா?
அப்படி சொல்ல முடியாது. யூதமும் சியோனிசம் என சொல்லப்படுகிற யூத மதவெறியும் ஒன்றல்ல. இந்து மதமும் இந்துத்துவாவும் எப்படி ஒன்றல்லவோ அப்படி யூதமும் யூத வெறியும் ஒன்றல்ல. இஸ்ரேலுக்கு வெளியே வாழும் பல யூதர்கள் இன அழிப்பை எதிர்க்கின்றனர். அதே சமயம் பெரும்பாலான இஸ்ரேல் வாழ் யூத மக்கள் பாலஸ்தீனத்துக்கு எதிராக ஓரணியில் திரட்டப்பட்டுள்ளனர் என்பது உண்மை.
10 இஸ்ரேல் எந்த அளவுக்கு பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்துள்ளது?
1947ஆம் ஆண்டில் இருந்த பாலஸ்தீன நிலத்தில் கிட்டத்தட்ட 80 முதல் 85% பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. இதனை கீழ்கண்ட வரைபடம் மூலம் அறியலாம். இஸ்ரேல் சிறியதும் பெரியதுமாக பல போர்களை நடத்தி பெரும் பகுதி பாலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்துகொண்டது.
11 2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு எதிர்வினை தான் இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கையா?
ஹமாசின் தாக்குதலை பல்லாண்டு இஸ்ரேலின் அநீதியிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது. பாலஸ்தீன மக்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள்/ காசா பகுதியை திறந்தவெளி சிறைச்சாலை போல உருவாக்கியிருப்பது/ மேற்கு கரையில் பாலஸ்தீன மக்களின் நிலம், வீடுகளை பறித்துக்கொண்டு அங்கு யூதர்களை குடியேற்றுவது/ ஜெருசலேமை தலைநகராக மாற்ற முயற்சி/ மெக்கா - மதினாவுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் புனிதமாக கருதும் அல்-அக்சா மசூதியில் பிரார்த்தனை நடத்த அனுமதி மறுப்பு/ அந்த மசூதியை இடித்து யூத வழிபாட்டுதலம் கட்டும் முயற்சி - இவையெல்லாம் அரங்கேற்றப்படும் பொழுது அதற்கு எதிர்வினை இருக்காது என எதிர்பார்க்க முடியாது.
12 2023 அக்டோபர் 7ல் ஹமாசின் தாக்குதல் நடந்ததற்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா?
அந்த குறிப்பிட்ட தேதிக்கு முக்கியத்துவம் இருப்பதாக தெரியவில்லை. அன்று இஸ்ரேலில் பல கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த சமயத்தில் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்களிலிருந்து தப்ப இயலும்; மேலும் பல பணயக்கைதிகளை சிறைபிடிக்க முடியும் என ஹமாஸ் நினைத்திருக்கலாம். ஆனால் தாக்குதல் நடத்திய காலகட்டத்துக்கு ஒரு நோக்கம் ஹமாசுக்கு இருந்தது.
கடந்த சில வருடங்களில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து பாலஸ்தீன பிரச்சனையை உலகின் விவாதத்திலிருந்து அகற்ற பல முயற்சிகள் செய்தனர். அதற்காக பல முஸ்லிம் தேசங்களுக்கு ராணுவ மற்றும் ஏனைய சலுகைகளை கொடுத்து அந்த தேசங்களுக்கும் இஸ்ரேலுக்கும் உறவை உருவாக்கினர். அப்படி முதலில் ஐக்கிய அரபு அமீரகமும் பஹ்ரைனும் இஸ்ரேலை அங்கீகரித்தன. பின்னர் சூடானும் மொராக்கோவும் இந்த சூழ்ச்சிக்கு பலியாயின. கத்தார் போன்ற தேசங்களும் இஸ்ரேலை நெருங்கின. இந்த தேசங்களின் மக்கள் எதிர்த்தாலும் அரசுகள் அமெரிக்காவின் சமரசத்தை ஏற்றுக்கொண்டன. இறுதியாக சில நாட்களில் சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் சமரச முயற்சிகள் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் இருந்தன. அது மட்டும் நடந்திருந்தால் அனேகமாக பாலஸ்தீன பிரச்சனை உலகத்தின் கண்களிலிருந்து காணாமல் போயிருக்கும். எனவே ஹமாசின் தாக்குதல் சவூதி- இஸ்ரேல் சமரசத்தை தடுக்கும் நோக்கம் கொண்டிருந்தது எனக் கூறலாம்.
13 அமெரிக்காவும் இஸ்ரேலும் சொல்வது போல ஹமாஸ் பயங்கரவாத அமைப்பா?
இந்த மதிப்பீட்டை ஏற்பது அல்லது நிராகரிப்பதற்கு முன்பு வேறு சில பிரச்சனைகளை கவனத்தில் கொள்வது அவசியம். 2000கள் வரை பாலஸ்தீன மக்கள் அனைவரின் பிரதிநிதியாக இருந்தது பி.எல்.ஓ. எனப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கம்தான்! இதன் தலைவர் யாசர் அராபத். விடுதலையை விரும்பும் அனைத்து மக்களுக்கும் அராபத் ஒரு போராளியாகவே இருந்தார். இந்தியா உட்பட பல தேசங்களின் குழந்தைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. சோவியத் யூனியன் பின்னடைவுக்கு பின்னர் பி.எல்.ஓ. ஒரு முக்கிய ஆதரவு தளத்தை இழந்தது. இஸ்லாமிய தேசங்களின் ஆதரவும் குறைந்த நிலையில் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயம் பி.எல்.ஓ.வுக்கு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை, காசா பகுதியில் உருவாகியிருந்த ஹமாஸ் கடுமையாக எதிர்த்தது.
இந்த நிலையில், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் காசா பகுதியில் ஹமாஸ் 75%க்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. அதற்கு பின்னர் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மக்களின் ஆதரவைப் பெற்ற அமைப்பாக ஹமாஸ் முடிவெடுக்கத் துவங்கியது.
ஹமாசின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் ஆதரிக்க இயலாது என்றாலும் அதனை பயங்கரவாத அமைப்பு என தற்போது வரையறுப்பதற்கு அடிப்படை முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை.
14 ஹமாஸ் மட்டும்தான் இஸ்ரேலுக்கு எதிராக போரிடுகிறதா?
இல்லை. 17 பாலஸ்தீன அமைப்புகள் தமக்குள் ஒருங்கிணைப்பை உருவாக்கி போரிடுகின்றன. அதில் பாலஸ்தீன கம்யூனிஸ்ட் கட்சியும் அடங்கும். இரு கிறித்துவ அமைப்புகளும் உள்ளன.
15 இஸ்ரேல் முன்னேறுகிறதா பின்னடைவை சந்திக்கிறதா?
காசாவின் பல பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. ஆனால் தாக்குதலுக்கு முன்பு இஸ்ரேல் முன்வைத்த கீழ்கண்ட எந்த இலக்கும் எட்டப்படவில்லை.
Y ஹமாசை முற்றிலும் ஒழிப்பது:
ஹமாசின் ராணுவத்தில் இன்னும் 75% பேர் உள்ளனர். இஸ்ரேல் ராணுவம் பூமிக்கு மேலே போரிடுகிறது. ஆனால் ஹமாஸ் பூமிக்கு கீழே இருந்து போரிடுகிறது. இதற்காகவே பல நூறு மைல்கள் நீளமுள்ள ஆழமான பதுங்குபாதைகள் வெட்டப்பட்டுள்ளன. எனவே இஸ்ரேலால் ஹமாசை ஒழிக்க முடியவில்லை. மாறாக சிறிய அளவு ஆயுதங்களை வைத்துக் கொண்டு ஹமாஸ் இஸ்ரேல் ராணுவத்துக்கு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
Y காசாவிலிருந்து அனைத்து பாலஸ்தீனர்களையும் விரட்டி அந்த பகுதியை இஸ்ரேலின் கீழ் கொண்டு வருவது:
இந்த இலக்கும் நடக்கவில்லை. எவ்வளவு தாக்குதல்களைச் சந்தித்தாலும் காசா பகுதியை விட்டு வெளியேறுவது இல்லை என்பதில் பாலஸ்தீன மக்கள் உறுதியாக உள்ளனர்.
Y அகண்ட இஸ்ரேல் அமைப்பது:
இதிலும் இஸ்ரேலுக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. காசா பகுதி மற்றும் மேற்கு கரை பகுதியை முற்றிலும் விடுவிக்காமல் அகண்ட இஸ்ரேல் சாத்தியமில்லை. அந்த இலக்கு நீண்ட கனவாகவே இஸ்ரேலுக்கு உள்ளது.
16 பல பத்திரிகையாளர்களும் ஐ.நா. ஊழியர்களும் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறதே!
ஆம். 150க்கும் அதிகமான பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப்போர் நடந்த 6 ஆண்டுகளில் கூட இவ்வளவு பத்திரிகையாளர்கள் உயிரிழக்கவில்லை. அதே போல 200க்கும் அதிகமான ஐ,நா. ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒரு இந்தியரும் அடக்கம். இந்த விவரங்கள் எந்த அளவுக்கு இஸ்ரேல் கொடூரமாகவும் வரைமுறையின்றியும் நடந்து கொள்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது
17 ஐ.நா. சபையில் இது பற்றி விவாதிக்கப்படுகிறதா?
ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு எதிராக பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானங்கள் கொன்டுவரப்பட்டால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் (ரத்து அதிகாரம்) மூலம் தடுத்துவிடுகிறது. எனவே ஐ.நா.பொதுச்சபையில் இரண்டு முறை தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இங்கு அமெரிக்கா உட்பட எவருக்கும் வீட்டோ அதிகாரம் கிடையாது.
18 ஐ.நா. தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரித்தனர்?
விவரங்கள் கீழே:
அக்டோபர் 2023 டிசம்பர் 2023
ஆதரவு 121 153
எதிர்ப்பு 14 10
நடுநிலை 44 23
அக்டோபர் மாதத்தைவிட டிசம்பரில் அதிக நாடுகள் ஆதரித்தும் குறைவான நாடுகள் எதிர்ப்பு/ நடுநிலை வகித்ததையும் காணலாம். இடைப்பட்ட இரு மாதங்களில் இஸ்ரேலின் கொடூரத்தை கண்ட பல நாடுகள் தமது எதிர்ப்பு நிலையிலிருந்து ஆதரவு நிலைக்கு மாறின. டிசம்பர் மாதம் ஆதரித்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 95%.
19 டிசம்பரில் எதிர்த்த தேசங்கள் எவை?
அமெரிக்கா/ இஸ்ரேல்/ ஆஸ்திரியா/ செக் போன்றவை பெரிய தேசங்கள். மற்றவை அமெரிக்காவின் ஆதரவு குட்டி நாடுகள்.
20 மேற்கத்திய தேசங்களும் பாலஸ்தீன தீர்மானத்தை ஆதரித்தனரா?
ஆம். ஆஸ்திரேலியா/ கனடா/ பிரான்ஸ்/ போலந்து/ போர்ச்சுகல்/ ஸ்பெயின்/ நார்வே/ டென்மார்க்/ நியூசிலாந்து / சுவிட்சர்லாந்து போன்ற பல தேசங்கள் பாலஸ்தீன ஆதரவு நிலைபாடு எடுத்தன.
21 இந்தியாவின் நிலை என்ன?
அக்டோபர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவில்லை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீன பிரச்சனையில் இந்தியா ‘நடுநிலை’ வகித்தது. 1939ம் ஆண்டு பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேல் அமைக்கப்படுவதை காந்திஜி கடுமையாக எதிர்த்தார். அன்றிலிருந்து பாலஸ்தீன ஆதரவு நிலைதான் இந்தியா எடுத்து வந்துள்ளது. ஆனால் மோடி ஆட்சியில் இந்தியா இஸ்ரேல் பக்கம் சாய்ந்தது. மோடியும் நேதன்யாகுவும் ஜாடிக்கு ஏற்ற மூடி போல நட்பு பாராட்டினார்கள். இதன் விளைவுதான் இந்தியாவின் நடுநிலை.
இந்தியாவின் நிலை தேசத்துக்குள்ளும் வெளியேயும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. எனவே டிசம்பர் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. எனினும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசின் சாய்மானம் இன்னும் உள்ளது. மோடி ஆட்சியின் வெளியுறவு கொள்கை விபரீதங்களில் இதுவும் ஒன்று.
22 ஐ.நா. சபையின் 377ஏ பிரிவின் கீழ் தீர்மானம் முக்கியமானதா?
377 ஏ பிரிவின் கீழ் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அந்த தீர்மானத்தை அமலாக்க ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட தேசங்களோ நடவடிக்கை எடுக்கலாம். அதனை ஐ.நா. ஆதரிக்கும்.