articles

img

அடக்குமுறைகளை எதிர்கொண்ட பாட்டாளிகளின் போர்ப்பாசறை! - வி.குமார்

சிஐடியு தமிழ்நாடு மாநில ஐந்தாவது மாநாடு 1989 செப்டம்பர் 21-24 ஆகிய தேதிகளில்  நாகர்கோவிலில் நடைபெற்றது. 33 ஆண்டுக ளுக்கு பிறகு மீண்டும் கன்னியாகுமரியில் சிஐடியு 15 ஆவது மாநில மாநாடு நவம்பர் 4-6 தேதிகளில் நடை பெறுகிறது. ‘ஒன்றுபடு போராடு’ என்ற போர்ப்பரணி முழங்கி செம்பதாகை உயர்த்தி இந்திய உழைப்பாளி மக்க ளின் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்கிற சிஐடியு உதய மானது 1970 ஆம் ஆண்டு.  தனது முதல் மாநில மாநாட்டை 1971ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மதுரை யில் கம்பீரமாக நடத்தியது. இரண்டாவது மாநில மாநாடு  சென்னையில் 1973 ஆம் ஆண்டு நடை பெற்றது.

1975ஆம் ஆண்டு ஜூன் 25அன்று அவசர நிலை பிரகடனம் வெளியிடப்பட்டு ஜனநாயக உரிமைக ளுக்கு வேட்டுவைக்கப்பட்டது.  அவசர கால அடக்கு முறைகளை எதிர்கொண்டு களப்பணியாற்றியது சிஐடியு. 1977 தேர்தலில் இந்திரா காந்தி தலைமை யிலான அடக்குமுறை அரசு தூக்கி எறியப்பட்டது. எதிர்க் கட்சிகளின் கூட்டணி அரசு உருவாயிற்று. மேற்கு வங்கத்தில் தோழர்.ஜோதிபாசு தலைமை யிலான இடது முன்னணி அரசு பொறுப்பேற்றது. மத்தியில் உருவான புதிய அரசு, அதன் வர்க்கத் தன்மைக்கு ஏற்ப தொழிலாளர்கள் மீது புதிய தாக்கு தல்களை தொடுத்தது. “தொழில் உறவு மசோதா“ தாக்கலாயிற்று. அதற்கு எதிராக, பரவலான ஒற்றுமை உருவாக்கப்பட்டு, போராட்டங்கள் நடை பெற்றன. 1978 நவம்பர் 20 அன்று புதுதில்லியில் நடை பெற்ற அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பேரணி தொழிலுறவு மசோதா வுக்கு எதிராகவும் தொழிலாளர் நலன்களைப் பாது காப்பதற்குமான புதிய ஒற்றுமையின் எடுத்துக் காட்டாக அமைந்தது.

சென்னையில் நடந்த  அகில இந்திய மாநாடு

இத்தகைய பின்னணியில்தான் சென்னையில் நான்காவது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு அது.  புதிய போராட்டங்களுக்காகவும், எதேச்சதிகா ரத்தை முறியடித்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு மான அறைகூவலோடு மாநாடு நிறைவு பெற்றது. இப்பின்னணியில்தான் 1980 ஆம் ஆண்டு செப்டம்ப ரில் திருச்சி காவிரிக்கரையில் 3ஆவது மாநில மாநாடு எழுச்சியோடு நடைபெற்றது. 1980 ஆம் ஆண்டில் மீண்டும் இந்திரா காந்தி தலை மையில் ஆட்சி அமைந்த பிறகு சர்வதேச நிதி நிறு வனத்தின் கட்டளைகளை ஏற்றதன் விளைவாக தொழி லாளர்களும், விவசாயிகளும், சாதாரண ஏழை எளிய மக்களும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாயி னர். இதனை தொடர்ந்து வர்க்க வெகுஜன அமைப்புக ளின்   தேசிய மாநாடு  1981 ஜூலை மாதம் மும்பையில் நடைபெற்று, தேசிய பிரச்சார மேடை  (NCC) உருவாக் கப்பட்டது. இவ்வமைப்பின் சார்பில் புது தில்லியில் நவம்பர் 23இல் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மிகப்பிரம்மாண்டமான அணிவகுப்பு நடை பெற்றது. பேரணி இறுதியில் 1982 ஜ னவரி 19 ஒரு நாள் தேசம் தழுவிய வேலை நிறுத்தம் என அறிவித்த போது கரவொலி அடங்க சில நிமிடங்களாகியது.

தேச விடுதலைக்குப் பிறகு தொழிலாளி வர்க்கம் முதன்முதலாக பொதுவான கோரிக்கைக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தை உடைக்க ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் முன் னெச்சரிக்கையின் பேரில் கைது செய்யப்பட்டனர். 1000க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வேலைநிறுத்தத்தின் போது நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்டோர் காவல் துறையின ரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் தமிழகத்தில் திருமெய் ஞானம் தியாகிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.

நேச சக்திக்கு நிதி உதவி            

இதன் பின்னணியில் 1983ஆம் ஆண்டு டிசம்பரில் கோவையில் சிஐடியுவின் 4ஆவது மாநிலமாநாடு நடைபெற்றது. இம்மாநாடு  மகத்தான தலைவர்களான பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி, ஜோதிபாசு ஆகியோர்  பங்கேற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடாக திகழ்ந் தது. இம்மாநாட்டில் தான் தொழிலாளி வர்க்கத்தின் நேச சக்தியான விவசாயிகள் சங்கம் தமிழகத்தில் பல முள்ள அமைப்பாக வளர்வதற்கு சிஐடியு உறுப்பினர் ஒவ்வொருவரும் தலா ரூ.1.00 அளிப்பது என முடிவு செய் யப்பட்டு இன்றுவரை அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புரட்சிகரமான தொழிற்சங்க இயக்கத்தின் ஸ்தாபகர் தோழர் பி.ராமமூர்த்தி , தியாகத் திலே தழும்பேறிய அருமை தோழர் வி.பி.சிந்தன் ஆகிய இருவரும் இல்லாத மாநாடாக நாகர்கோவி லில் 1989இல் செப் 21-24 தேதிகளில் நடைபெற்றது  5ஆவது மாநில மாநாடாகும்.  இந்த காலத்தில் தான் தொழிற்சங்கங்களும் மற்ற வெகுஜன அமைப்புகளும் இடதுசாரி கட்சிகளுடனும் மற்ற மதச்சார்பற்ற கட்சிகளுடனும் ஒன்றிணைந்து நாடு தழுவிய நடவடிக்கைகளை உருவாக்கின. குமரி யிலிருந்தும், திருவனந்தபுரத்திலிருந்தும் புறப்பட்ட பிரச்சாரப் பயணம், 1988 மார்ச் 15 பாரத் பந்த், 1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 பாரத் பந்த் இயக்கங்கள் குறிப்பி டத்தகுந்த நடவடிக்கைகளாகும்.

நாகர்கோவில் மாநாட்டின் போது தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிலிருந்த திமுக அரசை 1991 ஜனவரி யில் ஒன்றிய அரசு டிஸ்மிஸ் செய்தது. பிறகு நடைபெற்ற தேர்தலில் ராஜீவ் காந்தி படுகொலை யின் பின்னணியில் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி  வெற்றி பெற்று அதிமுக ஆட்சி பொறுப்பேற்றது. புதிய ஒன்றிய அரசின் நாசகர பொருளாதாரக் கொள்கை யினை வரவேற்று, அதேபாதையில் அதிமுக அரசும் செயல்பட்டது. தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசாமல் 1992 ஆம் ஆண்டு ஜனவரியில் தொழிற் கொள்கை அறிவிக்கப்பட்டது. ஸ்பிக் பங்கு விற்பனை, டான்சி நிலங்கள் விற்பனை, மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தனியாருக்கு பங்கு, அரசு போக்கு வரத்து பேருந்துகள் ஓடும் வழித்தடங்களை தனியா ருக்கு ஒதுக்குவது போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கையில் அதிமுக அரசு இறங்கியது. இதற்கு எதிராக வலுவாக போராடியதன் பின்னணியில் 6ஆவது மாநில மாநாடு 1993 ஏப்ரல் 21-24 தேதிகளில் சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

புதிய தாராளமயக் கொள்கைகளை வேகமாக ஒன்றிய அரசு அமலாக்க முயற்சித்த காலம், தாராள மயக் கொள்கைகளுக்கு எதிராக தேசம் தழுவிய அளவிலும் தமிழகத்திலும் கூட்டு போராட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தி வந்த பின்னணியில் தான் ஏழாவது மாநிலமாநாடு 1997 மார்ச் 6-8 தேதிகளில் சென்னையில்  நடைபெற்றது. முறைசாரா தொழிலாளர்களின் குறைந்தபட்சக் கூலி உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1997 செப்டம்பர் 9இல் வேலைநிறுத்தம் மேற்கொள் ளப்பட்டது. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் 10 ஆயிரம் மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிராக ஊதிய கோரிக்கைகளுக்கு தீர்வு காண மறுப்பதற்கு எதிராகவும் பிப். 2 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த வேலை நிறுத்தம் முழுவெற்றி அடைந்தது. வாஜ்பாய் அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைக ளுக்கு எதிராக 2000 ஆண்டு மே 11 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்திலும் தனி முத்திரை பதித்தது. இந்த பின்னணியோடு  8ஆவது மாநில மாநாடு 2000 ஆண்டு செப் 27-30 தேதிகளில் மதுரையில் நடைபெற்றது.

வேலை நிறுத்த  தடைச் சட்டத்தை எதிர்த்து

தமிழகத்தில் 2012 மே மாதத்தில் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று  மக்கள் விரோத நடவடிக்கையில் இறங்கியது. ஊதிய வெட்டு ஆட்குறைப்பு போனஸ் மறுப்பு ஒப்பந்தங்களை மீறுவது, வேலைநிறுத்தங்களை உடைப்பது, பொடா, எஸ்மா, மத மாற்ற தடை சட்டம்- இவற்றிற்கு பதிலாக சிஐடியு நடத்திய வலுவான போராட்டங்கள், 2001 நவம்பரில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், அதில் சிஐடியு ஆற்றிய மகத்தான பணி குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  2003 ஜூலையில் நடைபெற்ற அரசு ஊழியர் ஆசிரி யர் வேலைநிறுத்தம் பல லட்சம் பேர் வேலைநீக்கம் எஸ்மா, டெஸ்மா என கடுமையான தாக்குதல்கள். இத னையொட்டி சிஐடியு போக்குவரத்து சம்மேளனம் சார்பில் தோழர் டி.கே.ரங்கராஜன் பேரில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அதில் கிடைத்த வெற்றி யென இந்த காலகட்டத்தை குறிப்பிடலாம். இப் பின்ன ணியில் 9ஆவது  மாநிலமாநாடு 2003 ஆகஸ்ட்  7-10 தேதி களில்  திருநெல்வேலியில் நடைபெற்றது.

மீண்டும் அகில இந்திய மாநாடு

இரண்டாவது முறையாக அகில இந்திய மாநாட்டை பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு தமிழ்நாடு சிஐடியுவிற்கு 2003இல் கிடைத்தது. 11ஆவது அகில இந்திய மாநாடு, 2003 டிசம்பர் 9-13 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இரண்டாயிரம் பிரதி நிதிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள், தோழமைச் சங் கங்களிலிருந்து பார்வையாளர்கள் என சென்னை யில் அனைத்து தயாரிப்புகளுடனும் 11வது மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாடு நடை பெற்ற போது நாட்டின் அரசியல் நிலைமைகளில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. 2004 பிப்ரவரி வேலைநிறுத்தம் அதையொட்டிய மறியலில்  2200 பெண்கள் உட்பட 25000 பேர் கைது  செய்யப்பட்டனர். முறைசாரா தொழிலாளர் உரிமைக ளுக்கான  கோரிக்கைகளை முன்வைத்து 2005 மே 17இல் 100 மையங்களில் சிஐடியு மகத்தான மறியல் இயக்கத்தை நடத்தியது.

 வெண்மணி நடைபயணம் 

2004 டிசம்பர் 22-25 தேதிகளில் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் சிஐடியு ஊழியர்கள் மேற்கொண்ட நடைபயணம் தொழிற்சங்க அரங்கில் நடந்த குறிப்பிடத் தகுந்த இயக்கமாகும். மொத்தத்தில் 90 குழுக்கள் , மூன்று நாட்கள், சராசரியாக ஒரு நாளை க்கு 50-55 கிமீ நடந்த தூரம் 5000 கிமீ, 5ஆயிரம் கிராமங்களில்  பிரச்சாரம் நடைபெற்றது. நடைபயணத் திற்கு கிராமங்களில் நல்ல வரவேற்பும் உற்சாக மும் இருந்ததை காண முடிந்தது. இக்காலத்தில் காளான் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் , டாஃபே தொழிலாளர்கள், சவிதா பல் மருத்துவமனை ஊழி யர்கள், இந்துஸ்தான் மோட்டார் தொழிலாளர்கள், விஸ்டியான் தொழிலாளர்கள், நெய்வேலி தொழி லாளர்கள் என போராட்டங்கள் வெகுவாக நடைபெற்ற காலமாகும். இப்பின்னணியில் தான் 10ஆவது மாநில மாநாடு 2006இல் டிசம்பர் 17-20 தேதிகளில் திருப்பூரில் நடைபெற்றது. முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆட்சியின் போது இடதுசாரிகள் அழுத்தத்தின் காரண மாக பொதுத்துறை தனியார் மயம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டது. தகவல் அறியும் உரி மைச் சட்டம் ,தேசிய கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டம் உட்பட சில நல்ல திட்டங்களை கொண்டு வர முடிந்த காலம் இது. அதே நேரத்தில் தொழிற்சங்க உரிமை கூட்டுப்பேர உரிமை போன்றவற்றிற்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த காலமாக வும் அமைந்தது. இச்சூழலில் திருப்பூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தடைகளை உடைத்து வர்க்கத்தை திரட்டி வல்லமைபெறுவோம் என்று சூளுரைத்தோம்.

பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பு   

சிஐடியுவின் 11ஆவதுமாநில மாநாடு 2010-ஜனவரி 4-6 தேதிகளில் கடலூரில் எழுச்சியுடன் நடைபெற்றது. பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கவும் நவீன தொழிலாளர்களை திரட்டவும் தொடர் முயற்சிகள் மேற்கொண்டதன் பயனாக விஸ்டி யான் என்ற கம்பெனியில் தொழிலாளிக்கு சங்கம் அமைத்தோம். இது தான்  பன்னாட்டு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் சங்கமாகும். இதனைத் தொடர்ந்து  ஹூண்டாய் தொழிற்சாலை யில் தொழிலாளர்களை நாயாக உருவகப்படுத்தி ஒரு கருத்து படத்தை அதிகாரிகள் வெளியிட்டனர். அதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். தொழிலாளர்களின் கோபம்  தன்னெ ழுச்சிப் போராட்டங்களாக வெடித்தது. 2009 மே மாதத்தில் 18 நாட்கள் வேலைநிறுத்தம்; தோழர் அ.சவுந்தரராசன் தலைமையில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடந்தது. ஹூண்டாயைத் தொடர்ந்து  நோக்கியா, பாக்ஸ்கான், சான்மினா, பிஒய்டி போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் சிஐடியு தொழிற்சங்கம் உதய மானது. சான்மினா ,பாக்ஸ்கான் போராட்டங்கள் தீவிர மாகவும் உறுதியாகவும் நடைபெற்றது. பாக்ஸ்கான் போராட்டத்தை ஒட்டி கைது, சிறை, கைவிலங்கு போன்றவற்றை சந்திக்க நேர்ந்தது. இத்தொழிலாளர்க ளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவு நடவடிக்கைகள் நடைபெற்றன. இந்த பின்னணியில் சிஐடியு 12ஆவது மாநில மாநாடு 2013 பிப். 1-4 வரை திருச்சியில் நடைபெற்றது.

வெண்மணி நினைவாலயம்

சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 24 நாட்கள் வேலைநிறுத்தம், மூன்று நாட்கள் அரசு போக்கு வரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம், பீடித் தொழி லாளர்கள் வேலைநிறுத்தம், என்எல்சி வேலை நிறுத்தம், நவம்பர் 26 குடியேறும் போராட்டம், ஆலை  மூடலுக்கு எதிராக போராட்டம் என இந்த காலத்தில் ஏராளமான போராட்டங்கள் நடைபெற்றன.  வெண் மணி நினைவாலயம் தொழிலாளர்களின் ஏழாண்டு கால முயற்சியால்  நிர்மாணிக்கப்பட்டு அதன் திறப்பு விழா 8.03.2014 அன்று நடைபெற்றது. 13ஆவது மாநில மாநாடு 2016  செப்டம்பர் 9-12 தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்றது. 2014 மே 26 மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து இரண்டு வேலைநிறுத்தங்களை நடத்திய நிலையில் நடைபெற்ற மாநாடாகும். ஒன்றிய அரசின் தொழிலாளர் உரிமை பறிப்பு தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தம், பொதுத்துறை பங்கு விற்பனை, இதோடு தமிழகத்தில் அதிமுக ஆட்சி யின் அவல நிலை ,ஊழல் போன்றவற்றிற்கு எதிராக வும் சுயேச்சையான இயக்கங்கள் கூட்டு இயக்கங்கள் வலுவாக நடைபெற்ற காலமாகும் இது. இதனைத் தொடர்ந்து 2019 செப்டம்பர் 19-22 ஆகிய  தேதிகளில்   காஞ்சிபுரத்தில் நடைபெற்றது 14ஆவது மாநில மாநாடு. இந்த மாநாட்டிற்கு முன்னதாக 2016 நவம்பர் 8 பணமதிப்பு நீக்க நடவடிக்கை, 2017 ஜூலை 1 முதல் அமலாகி வருகின்ற சரக்கு மற்றும் சேவை வரி இவற்றுக்கு எதிராக ஏராளமான இயக்கங் கள் நடைபெற்ற காலமாகும்.

சிஐடியு பொன்விழா

17ஆவது மக்களவை தேர்தல் முடிந்து, மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப் பேற்று, மக்கள் மீது கொடூரமான தாக்குதல்களை தொடுத்துள்ள நிலையில், 16ஆவது அகில இந்திய மாநாடு, 2020 ஜனவரி 23 முதல் 27வரை சென்னை யில் நடைபெற்றது. இந்திய தொழிற்சங்க இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த காலமிது. இந்தியாவில் முதல் தொழிற்சங்கமான ‘சென்னை தொழிலாளர் சங்கம்’ துவக்கப்பட்டு 104ஆண்டுகளாயிற்று. முதல் மத்திய தொழிற்சங்கமான அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் துவக்கப்பட்டதின் நூறா மாண்டு விழாவும் சிஐடியுவின் பொன் விழாவும் நிறைவு பெற்றது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக 1991இல் துவக்கப்பட்ட அகில இந்திய வேலை நிறுத்தங்களும் துறைவாரிப் போராட்டங்களும் தீவிரமடைந்தன.

இந்த நிலையில், 2020 மார்ச் 23 அன்று கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில் எந்தவித முன்னறி விப்புமின்றி அமலாக்கப்பட்ட பொதுமுடக்கம்; இத னால் ஏற்பட்ட வேலை இழப்பு, ஊதிய இழப்பு, புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த  ஊர்களுக்கு நடந்தே பயணித்தது, பயணத்தின் போது 400க்கும் மேற் பட்டோர் இறந்து போனது, கொரோனா பெருந்தொற்று தாக்கம், இதனை எதிர்கொண்டு வருமானம் இழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி கொரோனா  காலத்திலும் சிஐடியு நடத்திய தொடர் இயக் கங்கள், 2021ஆம் ஆண்டு நவம்பர் 26இல் நடத்திய வேலை நிறுத்தம், 2022 மார்ச் 28-29 தேதிகளில் நடத்திய 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம்; கொரோனா காலத்தை பயன்படுத்தி பன்னாட்டு நிறு வனங்களுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல் படுவதை அம்பலப்படுத்துவது, வேளாண் தொழிலை நிர்மூலமாக்கும் வகையில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்ததற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவாக  தொழிற் சங்கங்கள் நடத்திய ஆதரவு இயக்கம் இந்த கால கட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளாகும்.  இந்த பின்னணியில் 2022 நவம்பர் 4-6 தேதிக ளில் குமரி முனையில் நடைபெறும் 15ஆவது மாநில மாநாடு தமிழக தொழிற்சங்க வரலாற்றில் புதிய திருப்பு முனையை ஏற்படுத்தும்.

கட்டுரையாளர்: மாநில உதவி பொதுசெயலாளர். சிஐடியு