articles

img

தேசம் பற்றியெரிய வேண்டும் என்பதே உங்கள் விருப்பமா? - ஆர்.பத்ரி

பாஜகவின் வழக்கறிஞரான அஸ்வினி உபாத்யாயா என்பவரை நோக்கி உச்சநீதிமன்ற நீதிபதிகள் இத்த கையதொரு கேள்வியை எழுப்பியுள்ளனர். இந்தியா வில் உள்ள நகரங்களுக்கும், சாலைகளுக்கும் தற்போது உள்ள பெயர்கள் ஆக்கிரமிப்பாளர்களை நினைவூட்டுவதாக உள்ளது. எனவே நமது பண் பாட்டையும், பாரம்பரியத்தையும் நினைவூட்டும் வகை யிலான பெயர் மாற்றங்கள் இருக்க வேண்டும் என பாஜகவை சார்ந்த அந்த வழக்கறிஞர் உச்சநீதிமன் றத்தை நாடியுள்ளார். அவரது மனுவை விசாரித்த போதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்கண்ட கேள்வியை கோபத்தோடு எழுப்பினர்.  மேலும், “ஒற்றுமையான நமது சமூகத்தை குறுகிய கண்ணோட்டத்திலான இத்தகைய மனுக்களை தாக்கல் செய்வதன் மூலமாக பிளவுப்படுத்த முயற்சிக் காதீர்கள். தேசத்தையும் மக்களையும் எப்போதுமே மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மதத்தையும் நம்பிக் கைகளையும் கொண்டு பிரிவினை முழக்கத்தை முன் வைக்க வேண்டாம்” எனவும் காட்டமாக தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். நீதிபதிகளின் இத்தகைய கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஏனெ னில் பெயர் மாற்றம் எனும் பெயரால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக முன்னெடுத்துவரும் நுண்ணரசியலை மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் அவை.

ஏற்கனவே உபி யில் உள்ள அலகாபாத் எனும் நகரின் பெயரை பிரயாக்ராஜ் ஆகவும், தில்லியில் உள்ள ஒளரங்கசீப் சாலையை அப்துல் கலாம் சாலை எனவும், முஹல் சராய் ரயில் நிலையத்தின் பெயரை தீனதயாள் உபாத்யாய் ரயில் நிலையம் என வும் மாற்றியிருக்கிறார்கள். மேலும் அகமதாபாத் நகரின் பெயரை கர்ணாவதி எனவும், ஹைதரபாத் நகரின் பெயரை பாக்யாநகர் எனவும், அவுரங்கா பாத்தை சம்பாஜி நகர் எனவும் மாற்றுவதற்கான முனைப்பிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களை பொறுத்த வரை பெயர் மாற்றம் என்பது புதிய அடையாளங்க ளை உருவாக்குவதாகும். அத்தகைய புதிய அடையா ளங்கள் என்பது காவிமயமாதலை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டுமென்பதே ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் இந்துத்துவ அரசியலாகும் என்பது இந்த வழக்கின் மூலமாகவும் அம்பலப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது பாஜக வழக்கறிஞர் “இதை ஒரு சாதாரண வழக்காக மட்டும்  பார்க்காதீர்கள், பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெ டுப்பதற்கான முயற்சியே இது” என குறிப்பிட்ட போது, குறுக்கிட்ட நீதிபதிகள்  “மத வழிபாடுகளுக்கும் சாலை களின் பெயர் மாற்றங்களுக்கும் என்ன தொடர்பு  இருக்கிறது, கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்தவர்க ளின் பெயர்களை மாற்றுவதன் மூலம் வரலாற்றையே மாற்றி விட முடியுமா..” ? எனவும் கேட்டிருக்கிறார்கள்.  

இப்பிரச்சனையை ஒரு தனிப்பட்ட வழக்கறிஞ ரின் மனுவாக மட்டும் பார்க்க முடியாது. இவர்களின் இத்தகைய தனித்தனியான ஒவ்வொரு முயற்சியும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அரசியல் அஜெண்டா ஆகும். அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், வரலாற்றுத் தவறுகளால் “இந்து சமூகம்” ஆக்கிரமிக்கப்பட்டிருப்ப தாகவும், இந்து சமூகத்தை மீட்கும் யுத்தம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதை பின்பற்றும் விதத்திலேயே, “மேற்கத்திய கருத் துக்களால் தான் சனாதனச் சிந்தனைகள் சிதைக் கப்பட்டிருக்கின்றன. அதை பாதுகாப்பது நமது கடமை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் பேசியிருக்கிறார். எனவே இவை அனைத்தையும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள பிரச்சனையாகத்தான் நாம் கவனிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மிகச்சரியாக குறிப்பிட்ட படி இந்திய அரசியல் சாச னத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மை எனும் கோட்பாட்டை முற்றாக சிதைப்பதே இவர்களின் இலக் காகும். மதச்சார்பின்மையை தகர்த்து ஒரு மதவெறி திரட்டலை நோக்கி பயணிப்பதே ஆர்.எஸ்.எஸ்- ன் பாதையாகும். அந்த பாதையில் இந்தியாவை தள்ளி விடும் இவர்களின் முயற்சிகள் எதுவாக இருப்பினும் அவை அனைத்தும் வலுவாக எதிர்க்கப்பட வேண்டி யவையே.  

ஆழமான மதப்பகைமையை விதைக்கும் நோக்கத்தோடு அண்மைக்காலமாக அடுத்தடுத்த நிகழ்வுகளை இந்துத்துவவாதிகள் மேற்கொண்டு வரு கிறார்கள்.  பாஜக ஆளும் மாநிலங்களில் பொது  சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என பகிரங்கமாகவே அறிவிப்பை வெளியிடுகிறார்கள். முஸ்லீம் தனிநபர் சட்டவாரியத்தை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியும் அரங்கேற்றப்படுகிறது. உருது மொழியில் ஒரு பிரார்த்தனை பாடலை பாடியதற்காக உபி மாநிலத்தில் ஒரு பள்ளியின் முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் வடக்கு பாஸ்டர் மாவட்டத் தில் கிறித்தவ சிறுபான்மையினர் மீது பெரிய அள விலான தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. பில்கிஸ் பானு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளி களை கொண்டாடப்பட்டதைப் போலவே, புனே மொய் தீன் ஷேக் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளி கள் 21 பேரை விடுவிக்கப்பட்ட போதும் உற்சாகமான வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இது வரையிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த மெளலானா ஆசாத் தேசிய பெல்லோ ஷிப் எனும் கல்வி உதவித்தொகை முற்றாக முடக்கப் பட்டு விட்டது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் சிறு பான்மை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த (padho pardesh) கல்விக் கடன்களின் மீதான வட்டிக்கான மானியமும் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.

அண்மையில் நடைபெற்று முடிந்த குஜராத் சட்ட மன்ற தேர்தலில் மோடியும்  அமித்ஷாவும் மேற் கொண்ட விஷம் கக்கும் மதவெறி பிரச்சாரத்தை கேட்டு நாடே அதிர்ந்தது. அந்த அதிர்ச்சி அடங்கு வதற்குள்ளாகவே பிபிசி ஆவணப்படம் குஜராத் தாக்குதல் குறித்து வரலாற்றிலிருந்து பல உண்மை களை திரட்டி நாட்டையும் உலகையும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவற்றையெல்லாம் தொகுத்து பார்க்கும் போது ஒன்று புரிகிறது. தேசம் எப்போதும் பற்றியெரிய வேண்டுமென்பது மட்டுமல்ல, அப்படியாக பற்றி எரிகிற அந்த நெருப்பில் தாங்கள் அரசியல் குளிர் காய வேண்டும் என்பதும் தான் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார் கூட்டத்தின் விருப்பம் என்பதே உண்மை. 

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்