articles

கவலை போக்கு! - கோவி.பால.முருகு

கோடை விடுமுறை விட்டாச்சு-மனம்
    குதிக்கும் இன்பம் தொட்டாச்சு!
ஆடை முழுதும் நனஞ்சாச்சு-உடல்
    ஆறாய் வியர்க்கத் திரிஞ்சாச்சு!

மாமா வீடு வந்தாச்சு-அங்கே
    மாமா பிள்ளைகள் ஒன்றாச்சு!
தேமா புளிமா தின்றாச்சு-உடல்
    தேடிய  ஆட்டம்  நன்றாச்சு!

உள்ளே வெளியே ஆடியாச்சு-எங்கள்
    ஒற்றுமை காட்டக் கூடியாச்சு!  
பள்ளம் மேடு மறைந்தாச்சு-நாங்கள்
    பதுங்கும் இடங்கள் அவையாச்சு!

கோடை மழையில் நனைந்தாச்சு-வெயில்
    கொடிய வெப்பம் தணிச்சாச்சு! 
ஓடை தொரவில் குளிச்சாச்சு -மனம்  
    ஓங்கிட   ஊக்கம் பெற்றாச்சு!
           
 பசியும் உறக்கமும் பறந்தாச்சு-இன்பப்
    பற்றிடும் விளையாட்டில் மறந்தாச்சு!
வசிக்கும் தோட்டம்  வந்தாச்சு -மரம்
    வழங்கும் கனிகள் சுவைச்சாச்சு! 

பள்ளி திறப்பது நெருங்கியாச்சு -எங்கள்
    பதட்டம் கொஞ்சம் அதிகமாச்சு!
கல்வியின் அவசியம் புரிஞ்சாச்சு -அதால்
    கவலைப் போக்க முடிந்தாச்சி!