சென்னை, மே 9- கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை கள் வைத்துள்ள பாக்கித்தொகையை பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டி. ரவீந்திரன், ஆலை தலைவர் டி.காசிநாதன், ஆலை செய லாளர் நாக.முருகேசன் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு தமிழ்நாட்டில் 2010-11 ஆண்டில் 23.5 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தியானது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சர்க்கரை உற்பத்தி, கரும்பு சாகுபடி வீழச்சியடைந்து 2023-24 பருவத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு 1.5 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதற்கு காரணம் ஒரு டன் கரும்பு வெட்டுக் கூலி ரூ.1500 வரை உயர்ந்தது தான். எனவே முத்தரப்பு கூட்டம் நடத்தி கரும்பு வெட்டுக் கூலியை வரை முறைப்படுத்த வேண்டும். வருவாய் பங்கீட்டுமுறை சட்டத்தை ரத்து செய்து விட்டு கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை விலையை அறிவித்து வழங்க வேண்டும். மாநிலத்தில் செயல்பட்டு வந்த ஆரூரான், அம்பிகா, தரணி நிறுவனங்களுக்கு சொந்தமான ஏழு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கரும்பு பண பாக்கியை வைத்துவிட்டு, தேசிய கடன் நிறுவன தீர்ப்பாயத்திற்கு சென்றுவிட்டன. இதில் தஞ்சை மாவட்டம், திருமண்டகுடி ஆரூரான் மற்றும் கடலூர் மாவட்டம், சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலைகளை குறைந்த விலைக்கு கால்ஸ் டிஸ்ட்டிலேரி லிமிடெட் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளனர். சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு பண பாக்கி விபரம் வருமாறு.
எப்.ஆர்.பி. கோடி வட்டி எஸ்.ஏ.பி மொத்தம்
திருமண்டகுடி
ஆரூரான் 35.19 26.32 8.11 99.62
சித்தூர் ஆரூரான் 11.21 3.39 43.29 57.89
46.40 29.71 81.40 157.51
இரண்டு ஆரூரான் சர்க்கரை ஆலைகளும் 157.51 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு தர வேண்டும். இது தவிர நீதிமன்ற உத்தரவுபடி 5ஏ லாபத்தில் பங்கு தொகை யையும் தர வேண்டியுள்ளது. ஆனால் தேசிய கடன் நிறுவன தீர்ப்பாய உத்தரவு படி ரூ.45 கோடி மட்டும் விவசாயி களுக்கு தருவோம் என்று புதிய நிர்வாகம் கூறி வருகிறது. விவசாயிகளுக்கு சேர வேண்டிய பெரும் தொகையை அவர்கள் இழக்கும் நிலைமை உருவாகி உள்ளது. இது தவிர விவசாயிகள் பெயரில் வங்கிகளில் சுமார் 130 கோடி ரூபாய் கடன் வாங்கி ஆரூரான் ஆலை பயன்படுத்திக் கொண்டது. வங்கிகள் விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். மேலும் விவசாயிகள் 2013-14, 2014-15, 2015-16, 2017-18 ஆண்டுகளில் வங்கிகளில் பெற்ற கரும்பு பயிர் கடனை ஆரூரான் சர்க்கரை ஆலை பிடித்தம் செய்து கொண்டு வங்கிகளுக்கு செலுத்தவில்லை. வங்கிகள் விவசாயிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் டெல்டா மாவட்டத்தில் கடந்த 160 நாட்களாக அரசு தலையிட கோரி வரும் நிலையில் முதலமைச்சர், ஆரூரான் கரும்பு விவசாயி களை பாதுகாக்கவேண்டும். இதற்காக கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுகிறோம். ஆரூரான் கரும்பு விவசாயிகளுக்கு ஆலை தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டுகிறோம். ஆரூரான் ஆலை விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்ற 130 கோடிக்கும் அதிகமான கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை கடன் வலையிலிருந்து விடுவித்து கடன் இல்லா தடையில்லா சான்று பெற்றுத் தர வேண்டு கிறோம். 2013-14, 2014-15, 2015-16, 2016-17 ஆண்டுகளில் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கரும்பு பயிர் கடன் சுமார் 30 கோடி வரை இருக்கலாம்.
இந்த பணத்தை ஆரூரான் ஆலை நிர்வாகம், விவ சாயிகள் ஆலைக்கு அனுப்பிய கரும்பு கிரயப்பணத்தில் பிடித்தம் செய்து கொண்டு வங்கிகளுக்கு செலுத்தாததை புதிய நிர்வாகத்தின் பெயரில் மாற்றி விவசாயிகளை கடனில் இருந்து விடுவிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கரும்பு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தொகையை ஆரூரான் ஆலை பிடித்தம் செய்து கொண்டு கூட்டுறவு வங்கிகளுக்கும் கட்டவில்லை, விவசாயி களுக்கும் தரவில்லை. தள்ளுபடி செய்யப்பட்ட சொசைட்டி கடன் தொகை முழுவதையும் சம்பந்தப்பட்ட விவசாயி களுக்கு பெற்றுத்தர வேண்டும். புதிய நிர்வாகம் விவசாயி கள் கோரிக்கைகளை ஏற்காத நிலையில் மாநில அரசு ஆரூரான் சர்க்கரை ஆலைகளை ஏற்று நடத்தி கரும்பு விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். பெண்ணாடம் - அம்பிகா, துகிளி அம்பிகா சர்க்கரை ஆலைகள் விவசாயிக ளுக்கு கீழ்கண்ட வகையில் கரும்பு பண பாக்கி வைத்துள்ளனர்.
எப்.ஆர்.பி. கோடி வட்டி எஸ்.ஏ.பி. மொத்தம்‘
பெண்ணாடம்
அம்பிகா 30.99 7.23 78.62 116.84
கோட்டூர்
அம்பிகா 23.87 10.74 31.30 65.91
54.86 17.97 109.92 182.75
இதே போல வாசுதேவநல்லூர் - தரணி, போளூர் -தரணி, சங்கராபுரம் - தரணி ஆகிய மூன்று சர்க்கரை ஆலை கள் வட்டித் தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு சுமார் 300 கோடி ரூபாய் கரும்பு பண பாக்கி வைத்துள்ளனர். தரணி சர்க்கரை ஆலைகள் விவஉசாயிகளிடம் பிடித்தம் செய்த கரும்பு பயிர்க் கடனை வங்கிகளுக்கு செலுத்தவில்லை. வங்கிகள் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். மூடியுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்தார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள என்.பி.கே.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை புனரமைக்க தேவையான நிதி ஒதுக்கி வரும் அரவை பருவத்தில் செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.