articles

img

கேரளம் போல் மாணவர்களை அரசியல்படுத்த வேண்டும் - ஜோதிமணி

இளந்தலைமுறையின் அதீதமான புரிதல்  வியப்பளிக்கிறது.  அதே சமயம், போதைப்பழக்கம் நாட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, ஊட்டி ஆகிய மாவட்டங்களில் சமூக கல்வி நிறுவனம் பள்ளி மாணவர்களிடத்தில் ஆய்வு நடத்தியது. அதில், 6-12 வகுப்புக்குட்பட்ட மாணவர்களில் 9 விழுக்காட்டினர் போதைக்கு அடிமையாகி உள்ளனர். இது தமிழகத்தின் எதிர்கால அரசியல், சமூக தளத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் 26 விழுக்காட்டினர் மது, 23 விழுக்காட்டி னர் கூல் லிப்சென்ஸ், 22 விழுக்காட்டினர் புகை யிலை, 10 விழுக்காட்டினர் கஞ்சா பயன்படுத்துகின்ற னர். 45 விழுக்காட்டினர் அழுத்தம் (பீர்பிரஷர்) காரணமாகவும், 23 விழுக்காட்டினர் எளிதாக கிடைப்பதாலும், 17 விழுக்காட்டினர் ஆர்வத்தின் காரணமாக மேற்கண்ட போதை பொருட்களை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் 6வது படிக்கும்போதே மாணவர்கள் அரசியல் படுத்தப்படுகின்றனர். இளைஞர்களை நல்வழிப்படுத்த கிளப்புகள், அரசியல் கட்சிகளின் இயக்கங்கள் செயலாற்றுகின்றன.

தமிழகத்தில் அதற்கு நேர் எதிரான சூழல் உள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளின் தோல்வியும் காரணம். தமிழகத்தில் டிவி கடை முன்பு கூட்டம் அதிகமாக இருந்தால் கிரிக்கெட் ஓடுகிறது என்று பொருள். அதுவே, கேரளாவாக இருந்தால், பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று பொருள். இடதுசாரி அரசாக இருந்தாலும் எஸ்எப்ஐ போராடும். காங்கிரஸ் அரசாக இருந்தாலும் கேஎஸ்யு போராடும். அத்தகைய அடிப்படை அரசியல் விழிப்புணர்வு அங்குள்ளது. தமிழகத்தை போன்று கேரளாவில் மக்களை ஏமாற்ற முடியாது. மதவாத சக்திகள், அப்பாவி இளைஞர்களை அணுகி மதவெறியூட்டி வாழ்க்கையை, சமூகத்தை சீரழிக்கின்றன. வாட்ஸ்ஆப் வதந்தி பரப்பும் சாதனமாக மதவாத சக்திகள் பயன்படுத்துகின்றன. மாணவர்களுக்கு பகுத்துப்பார்க்க கற்றுக் கொடுக்க வேண்டும். சினிமாவில், போதைப் பொருள் பயன்படுத்துவதை ஹீரோயிசமாக காட்டுகின்றனர். அதனால், மாணவர்களுக்கு இத்தகைய பழக்கம் பரவுகிறது. மாணவர்களுக்கு திறன்கள் குறைய, போதைப்பழக்கங்களும் காரணமாக உள்ளது. போதைப் பொருட்களால் பயன்படுத்துகிற வருக்கு மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுகிறது. குடும்ப வன்முறையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர். இந்த போதைப் பழக்கத்திலிருந்து விடுவிக்க வாலிபர் சங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன்.