மாணவர் ஒற்றுமை ஓங்குக!, இந்திய மாணவர் சங்கம் வாழ்க!, ஜனநாய கக் கல்வி முறையை கொண்டு வரு வோம்!, அனைவருக்கும் வேலையை உறுதிப் படுத்து!, ஏகாதிபத்தியம் ஒழிக!, அமெரிக்க ஏகாதிபத்தி யமே வியட்நாமை விட்டு வெளியேறு! போன்ற எழுச்சிமிக்க முழக்கங்களிடையே இந்திய மாணவர் சங்கத்தின் கொடி 1970 டிசம்பர் 30 ஆம்தேதி திருவனந்த புரத்தில் உயர்ந்தது. ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக முதல் மாநாட்டில் மலர்ந்தது. இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு மாநாடு துவங்குவதற்கு முன்பே மேற்குவங்கம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மாணவர் சங்கம் மாநில அளவில் வலுவான நிலையில் செயல்பட்டு வந்தது. தமிழக மாணவர் சங்கத்தின் முதல் மாநாடு மதுரை தமுக்கம் கலையரங்கில் 1968 ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் அனைவருக்கும் கல்லூரிகளில் இடம் வேண்டும். விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப கல்வி வேண்டும். கல்லூரிகளில் தமிழ் மொழியை பாட மொழியாக்கிட வேண்டும். தமிழை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக மாணவர் சங்கம் வலியுறுத்தியது. தமிழக மாணவர் சங்கத்தின் 2ஆவது மாநாடு கோவை நகரில் 1970ஆம் ஆண்டு ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. 1968 முதல் அமைப்புரீதியாக செயல்பட்ட தமிழக மாணவர் சங்கம், திருவனந்தபுரத்தில் நடை பெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் அமைப்பு மாநாட்டில் சங்கமித்தது.
1936 ஆகஸ்ட் 12இல் துவங்கப்பட்ட ஏஐஎஸ்எப் விடு தலைக்கு பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை தவறாக கணித்தது. அன்றைய காங்கிரஸ் அரசின் கொள்கை கள் இந்திய பெரும் முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்க ளுக்கும் ஆதரவாக இருந்தன. எனவே புரட்சிகரத் தன்மை கொண்ட மாணவர்கள் மாநில அளவில் அமைப்புகளை உருவாக்கிச் செயல்படத் துவங்கி னர். 13 மாநிலங்களில் செயல்பட்ட இத்தகைய அமைப்புகளை ஒருங்கிணைத்தே 1970இல் ஒரே அமைப்பாக எஸ்எப்ஐ உருவானது. இன்று 23 மாநி லங்களில் அமைப்புரீதியான செயல்பாட்டோடு நாற்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தேசத்தின் தனி பெரும் மாணவர் அமைப்பாகத் திகழ்கிறது. அதற்குச் சான்றாக தற்போது நடைபெற்ற 17ஆவது அகில இந்திய மாநாட்டில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களி லிருந்தும் 750 மாணவர்கள் பிரதிநிதிகளாகப் பங்கேற்ற னர். ஜம்மு-காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட மாநிலங்க ளில் அமைப்பின் செயல்பாடு விரிவடைந்துள்ளது. வெளிநாடுகளில் கல்வி பயின்றுவரும் இந்திய குடியுரிமை கொண்ட மாணவர்கள் கணிசமான எண் ணிக்கையில் இணைந்துள்ளனர். பிரிட்டனில் மாணவர் சங்க கிளை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பி டத்தக்கது.
பொதுக்கல்வி பாதிப்பு
ஒன்றிய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 முதல் நவதாராளவாத அரசியல் பொருளாதாரக் கொள்கையால் அனைத்துத் துறைகளும் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக தனது காவி கார்ப்பரேட் அஜண்டா மூலம் இளைஞர்களுக்கு கல்வி, வேலை முழுவதும் மறுக்கப்பட்டுள்ளது. இந்தி யாவில் பள்ளி கல்வி முடித்து உயர்கல்வியில் சேரு கின்ற மாணவர்களின் எண்ணிக்கையானது வெறும் 28 விழுக்காடாகவே உள்ளது. இதில் 67 விழுக்காடு மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களையே நம்பி உள்ளனர். தேசத்தின் பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையோடு இந்திய கல்வித் துறையையும் தனியார் வசம் ஒப்படைத்து வருகிறது. ஒப்பந்த முறையிலான பணிகளை கல்வித் துறைகளிலும் இயல்பாக்கியுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளை நிரந்தரமற்றதாக மாற்றிவருகிறது. கடந்த இரண்டாண்டுகளில் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளதை போலவே அரசு கல்வி நிறுவனங்க ளின் கட்டணமும் உயர்ந்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020
தேசிய கல்விக் கொள்கை சுயநிதிப் பாடங்களை யும், பன்னாட்டு முதலாளிகளின் மூலதனத்தை யும், இந்திய கல்வித்துறையில் நேரடியாக அனுமதிக்கி றது. இது இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களையும் மனிதவள வளர்ச்சி, சேவை சார்ந்த அரசின் பணியாகக் கருதா மல் நிதி, வியாபாரம், இலாபம் சார்ந்த செயல்பாடாக மாற்றி உள்ளது. இதன் அமலாக்கத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் 40 விழுக்காடு கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது. மேலும் இணைய வழிக் கல்வியும், பயிற்சி வகுப்புகளும், போட்டித் தேர்வு பயிற்றுவிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையும் புற்றீசல் போல அதிகரித்துள்ளன. தேசிய தேர்வு முகமையின் மூலம் நீட், கியூட் போன்ற தேர்வுகளை வியாபாரமாக மாற்றியுள்ளது. இலாபம் கொழிக்கும் தொழிலாக பயிற்சி வகுப்பு நடத்தும் நிறு வனங்கள் ஆக்கியுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒன்றிய அரசாங்கம் பல்கலைக்கழக மானியக் குழு வையும், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலை யும் கலைப்பதற்கான நடவடிக்கையை இக்கல்வி கொள்கையின் வரைவு வழி நின்று செய்து, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற பெயரில் ஒரே அமைப் பாக மாற்றியது. இதன் மூலம் உயர் கல்வியின் பன்முகத்தன்மையை அழித்து, ஜனநாயக நெறிமுறை களை சிதைத்து, கல்வியை மத்தியப்படுத்தும் பணி யைச் செய்து முடித்துள்ளது.
கல்வியில் காவிமயம்
கல்வியில் காவியை புகுத்துவதற்கான நடவடிக்கை யாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பரிவாரத்தை சார்ந்த நபர்களை துணை வேந்தர்களாக நியமித்து வருகிறது. மேலும் வேந்த ராக இருக்கும் ஆளுநர்களும் சங் பரிவாரத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்நிலை மேலும் மோசம் அடைந்துள்ளது. எனவேதான் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் மாநில ஆளுநர்களை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்கும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளனர். இந்திய வரலாற்றை மனுவாத அடிப்படையில் திரித்து வருகிறது. சனாதன கோட்பாடுகளையும், வைதீக மரபுகளையும் இந்தியாவின் வரலாறாக மாற்றும் நடவடிக்கையை செய்து வருகிறது. சமீபத்தில் காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் இத்த கைய வரலாற்று திரிபையே அரங்கேற்றியது. முகலா யர்கள், ஆங்கிலேயர் வரும் வரை இந்து மன்னர்க ளால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடிய பொற் கால ஆட்சி நடந்தன என உண்மைக்கு மாறாக வரலாற்றை திருத்தி வருகிறது. மேலும் இஸ்லாமிய படையெடுப்பு என்றும், ஆரியர் வருகை என்றும், ஜனநாயகம், மதசார்பின்மை, சமத்துவம் போன்ற வார்த்தைகளை நீக்கியும் பாடபுத்தகத்தை வடிவ மைத்து வருகிறது. கர்நாடக பாடபுத்தகத்தில் மன்னிப்பு கடித புகழ் சாவர்கரை விடுதலை போராட்ட வீரர் என குறிப்பிட்டு அந்தமான் சிறையிலிருந்து புல்புல் பறவையில் பறந்து வந்தார் எனவும், குஜராத் தேர்வில் மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என வினா இடம்பெற்றுள்ளதும், பெண்கள் எப்படி அடிமையாக இருக்க வேண்டும் என ஒரு பாடமே வடிவமைத்துள்ளதும், ஒன்றிய அரசின் போட்டி தேர்வில் சாதிய பெயர்களை குறிப்பிட்டு எது கீழ்சாதி என கேட்பதும், ஒலி மாசு குறித்த வினாவில் இஸ்லாமிய பாங்க் ஓசையை குறிப்பிடுவதும் என பல எடுத்துகாட்டுகளை அடுக்கி கொண்டே போகலாம்.
இந்தித் திணிப்பு
அரசியலமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 22 மொழி களை தேசிய மொழிகளாக அங்கீகரித்துள்ள நிலை யில் இந்தி மொழியை இந்தியாவின் அடிப்படை மொழி யாக ஒன்றிய அரசு மாற்றி உள்ளது. இது அரசியல் சாசனம் பிரிவு 340 முதல் 351 வரை கூறியுள்ள அலுவல் மொழி உரிமைக்கு எதிரானதாக அமைந்துள்ளது. மேலும் ஒன்றிய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்க ளிலும் இந்தி மொழியை பயிற்று மொழியாகவும், தேர்வு மொழியாகவும் மாற்றுவதற்கான நடவடிக்கை யை துவங்கியுள்ளது. இது இந்தியாவின் மொழி பன்முகத்தன்மையை அழிப்பதோடு மாநிலத்தின் உரி மைகளையும் பறிக்கின்ற நடவடிக்கையாகும்.
உதவித்தொகை பறிப்பு
கல்விக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதிகளை படிப்படி யாக குறைப்பதோடு மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையையும் குறைத்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டே ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கி வந்த அனைத்து வகையான உதவித்தொகையையும் நிறுத்த துவங்கியுள்ளது. தற்போது கூட 2008 ஆம் ஆண்டு இடதுசாரிகளின் ஆதரவோடு ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகையை நிறுத்தியுள்ளது. இது இந்தியாவின் புத்தம், சமணம், சீக்கியம், பார்சி உள்ளிட்ட அனைத்து சிறு பான்மை மாணவர்களின் கல்வியையும் குழி தோண்டி புதைக்கின்ற நடவடிக்கையாகும். உதவிதொகை பெறும் மாணவிகள் எண்ணிக்கையும் குறைந்துள் ளது. 1 முதல் 10 வகுப்பு வரையிலான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி இப்போது 9, 10 க்கு மட்டும் என அடாவடித்தனமாக அறிவித்துள்ளது.
மதிய உணவு
இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மதிய உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் சத்தான உணவை மாணவர்களுக்கு வழங்கு வதை உத்தரவாதப்படுத்த வேண்டும். எனவே இந்திய குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட புரதச்சத்து களை வழங்குவதை இந்திய அரசாங்கம் உறுதிப் படுத்த வேண்டும். ஆனால் பிஜேபி ஆளுகின்ற 19 மாநிலங்களில் 14 மாநிலங்கள் முட்டை வழங்கு வதை நிறுத்துவதற்கான நடவடிக்கையை தொடங்கி யுள்ளது. குறிப்பாக சத்தீஷ்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அங்கன்வாடிக ளில் முட்டை வழங்குவதை நிறுத்தியுள்ளது. உத்தர கண்ட் மாநிலத்தில் மதிய உணவில் முட்டை சமைத்த தற்காக ஒரு பெண் ஊழியர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் பழங்குடி யினர் பெரும்பான்மையாக வசிக்கும் மூன்று மாவட்டங்களில் முட்டை வழங்குவதை நிறுத்தி யுள்ளது. அசைவ உணவு உண்ணாத மாணவர்களின் மனம் புண்படுவதாக பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் மாணவர்களின் பெரும்திரள் போராட்டத்தால் தற்போது முட்டை மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களி லும் மதிய உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்ப டைப்பதற்கான ஒப்பந்தத்தை திட்டமிட்டுள்ளது. குறிப்பாக அரசு சாரா நிறுவனங்கள் (என் ஜி ஓ), பன்னாட்டு பெரும் முதலாளிகளை நடவடிக்கையில் புகுத்துவதற்கான வேலையை செய்து வருகிறது.
மாற்று கல்விக் கொள்கை
இந்திய கல்வியில் தமிழகமும், கேரளமும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதற்கு நீண்ட நெடிய போராட்ட வரலாறும், மக்களின் அரசியல் விழிப்பு ணர்வும் காரணமாக உள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில கல்விக் கொள் கையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியையும் மாநில முழுவதும் செய்து முடித்துள் ளது. அதே வேளையில் தேசிய கல்விக் கொள்கை தெரிவித்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை மாநி லத்தில் வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப் படுத்தும் ஐயப்பாடும் எழுந்துள்ளது. தற்போது கூட தனி யார் முதலாளிகள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓ) அரசு பள்ளிகளை தத்தெடுக்கலாம் என்ற உத்தரவை வழங்கியுள்ளது. இது கல்வியின் நிர்வாகத்தை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
மாற்றுக் கல்வி கொள்கையை கேரள அரசாங்கம் திறன்பட எடுத்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி அரசு ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஆறு ஆண்டு களில் 6.5 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களுக்கு சேர்ந்துள்ளனர். இதற்கு அம்மாநில அரசின் திட்டமிட்ட மாற்றுக் கல்விக் கொள்கையை காரணமா கும். குறிப்பாக கேரளா அரசாங்கம் கேரள மாநி லத்தை அறிவுச் சமூகமாக மாற்றுவதற்கான நடவ டிக்கையை கடந்த ஆறு ஆண்டுகளாக செய்து வரு கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிக ளுக்கும் 1 முதல் 3 கோடி வரை நிதியை தாராளமாக வழங்கி வருகிறது. மேலும் அனைத்து சட்டமன்ற தொகு திகளிலும் சர்வதேச தரமிக்க அரசு பள்ளியை உருவாக்கி வருகிறது. இதற்கு தலா ஒரு பள்ளிக்கு 5 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 1500க்கு மேற்பட்ட விடுதி அறைகளை புதியதாக உருவாக்கியுள்ளது. இது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி யுள்ளது. இந்திய மாணவர் சங்கம் இத்தகைய கல்வி மாற்றத்தை தான் இந்தியா முழுவதும் எதிர் பார்க்கிறது.
ரத்தத்தால் வளர்த்து...
பொதுக் கல்வி, அனைவருக்குமான கல்வி, அறிவியல் பூர்வமான முற்போக்கான ஜனநாயகத் தன்மை கொண்ட பன்முகப்பட்ட கல்வியை உரு வாக்க இந்திய மாணவர் சங்கம் கடந்த 53 ஆண்டு களாக போராடி வருகிறது. இத்தகைய போராட்டத்தில் இந்துத்துவா பயங்கரவாதிகளையும், அரச பயங்கரவா திகளையும், வலதுசாரி அடிப்படைவாத கும்பல்களை யும் எதிர்த்து போராடி வருகிறது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சார்ந்த 16 வயதேயான அபிமன்யு ஆர்எஸ்எஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதேபோல இடுக்கி அரசு பொறியி யல் கல்லூரி மாணவர் தீரஜ் காங்கிரஸ் மாணவர் அமைப்பால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போலீஸ் குண்டர்களால் அனீஸ்கான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் கேரள மாநிலம் வயநாட்டில் 53 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 48 கல்லூரியில் எஸ்எப்ஐ பெற்ற வெற்றியை பொறுத்துக்கொள்ளாது, அபர்ணா கௌரி என்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளரை, எம்எஸ்எப் அடிப்படை வாதக் கும்பலும், கேஎஸ்யு குண்டர்களும் கண்மூடித் தனமாக தாக்கியதால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அதே மாணவர்கள் முன்னிலையில் அபர்ணா சிம்ம சொப்பனமாக நடந்து போனார். இத்தகைய தீரமிக்க இந்திய மாணவர் சங்கத் தின் இலக்கும் இயக்கமும் இந்திய கல்வியின் பெருங்கனவை நனவாக்குவதற்கான தியாகமிக்க போராட்டத்தோடு பின்னிப்பிணைந்தே இருக்கும்.
கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர்