articles

img

இராமாயணம் படிப்பது பெருமாள் கோவிலை இடிப்பதற்கான லைசன்ஸ் ஆகி விடாது - க.கனகராஜ்

 தீர்ப்பில் டேவிட்சன் ஆசிர்வாதம் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு, அந்த குற்றச்சாட்டைச் சொன்ன அண்ணாமலை ‘ஜனநாயகத்தின் பாதுகாவலர்’ என்று பேசியது அறம் தவறிய செயல் என்றே சட்டத்துறையினர் அப்போது விமர்சித்தார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் அவர்கள் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்துக்களை முன்வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்தியாவில் அரச மைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது இருந்த மக்கள் தொகை சேர்மானம் மற்றும் குண நலன்கள் (டெமோ கிராபிக் ஃபுரோபைல்) பாதுகாக்கப்பட வேண்டும்; அப்படி பாதுகாக்கப்படவில்லையென்றால் அரசமைப்புச் சட்டம் நீடிக்காது என்று கூறி யிருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று தோன்றும். ஆனால், இந்தியாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்துக்களின் எண் ணிக்கையை விட அதிகமாகி விடும் என்று ஒரு வதந்தியை சங்பரிவார் ஆட்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்று பலரும் அறிவியல் ரீதியாக அதை மறுதலித்திருக்கிறார்கள். இந்தியாவில் தலைமை தேர்தல் ஆணையாளராக இருந்த எஸ்.ஒய். குரேஷி இது குறித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். ஆனாலும், இஸ்லாமிய வெறுப்பை விதைப்ப தற்கான அடிப்படையாக சங்பரிவார் இதை தொடர்ச்சி யாக செய்து கொண்டேயிருக்கிறது. அதை ஜி.ஆர். சுவாமிநாதன் வேறு வார்த்தைகளில் சொல்லி யிருக்கிறார். 

இதுபோன்ற பல தேவையற்ற விஷயங்களைப் பேசி சர்ச்சையை உருவாக்கிய அவர், அதே நிகழ்வில் ‘மகா பெரியவாவை’ தெரியாதது ஒரு மகா பாவம் போல கிண்டலடித்திருக்கிறார். உண்மையில் எங்கள் ஊரில் இருக்கும் பல தெய்வங்களின் சிலை களை ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு வைத்தால் அவரால் எது எந்த தெய்வம் என்று சொல்ல முடி யாது. இதற்காக இவரெல்லாம் நீதிபதியா என்று கேட்பது அறிவுடமையாகுமா?. ‘மகா பெரிய வா’ வை தெரியாது என்ற அமைச்சர், இந்து சமய அற நிலையத்துறை அமைச்சராக இருந்தவர் என்றும் கேலிப்பொருளில் குறிப்பிட்டார் ஜி.ஆர்.சுவாமி நாதன். ‘மகா பெரியவா’ என்று சொல்லப்பட்ட சங்கராச்சாரியார் இருந்தது காஞ்சி மடத்தில். அந்த மடம் ஒன்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவது அல்ல.மேற்படி மகா பெரியவா, வைணவ கோவில்கள் எதற்கும் சென்றதாகவோ, இந்துக்களின் பெரும்பாலானோர்களின் வழக்கமாக இருக்கும் குல தெய்வக் கோவில்களுக்கு சென்ற தாகவோ தகவல் ஏதும் இல்லை. அந்த கோவில்க ளில் ஒன்றைக் காட்டி இதை அடையாளம் தெரிய வில்லை என்பதற்காக இவர் இந்து மதத்தைச் சார்ந்தவரா என்று கேட்க முடியுமா?.

இன்னும் சொல்லப்போனால் சில விஷயங்களில் மகா பெரியவாவின் நடவடிக்கைகளை விமர்சிப்ப வர்கள் உண்டு. 1932ஆம் ஆண்டு குருவாயூர் கோவி லுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவைத் தடுப்பதற்காக சட்ட நிபுணர்கள் மற்றும் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகளை அவர் அனுப்பி வைத்தார் என்பது வரலாறு. எனவே, அவரை அந்த நோக்கி லிருந்து மிகக் கடுமையாக விமர்சிக்க முடியும். ஆனால், அம்பேத்கர் மீது பெரிய மரியாதை இருப்ப தாக சொல்லிக் கொண்டே ஜி.ஆர்.சுவாமிநாதன் போன்றோர் தான் அவரையும் கொண்டாட முடியும். 

இது ஒருபுறமிருக்க, அம்பேத்கர் பிறந்த தினத்தை சென்னை ராஜ் பவனில் கொண்டாடிய ஜி.ஆர்.சுவாமிநாதன் வேறு சில விஷயங்களையும் இதே போன்று பேசியிருக்கிறார். ‘சர்ச்சையை ஏற்படுத்தும்’ என்று சொல்லிக் கொண்டே சமஸ்கிருதத்தை நமது தேசிய மொழியாக இருக்க வேண்டுமென்று அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர் பேசியதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் உண்மை யில், அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் தேசிய மொழியாகவோ அல்லது அலுவல் மொழியாகவோ சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று சொன்னதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை. மாறாக, இது சம்பந்தமாக முன்னர் பேசியவர்கள், எழுதியவர்கள் செப்டம்பர் 11, 1949 நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை மேற்கோள் காட்டுகிறார்களே தவிர, அரசியல் நிர்ணய சபை விவாதங்களை யாரும் மேற்கோள் காட்டவில்லை. அம்பேத்கரிடம் நீங்கள் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக மாற்ற வேண்டுமென்று கோரினீர்களா? என்று கேட்டதற்கு, ‘ஏன், சமஸ்கிருதத்தில் என்ன தவறு இருக்கிறது’ என்று எதிர்க்கேள்வி கேட்டதாக உள்ளதை மட்டுமே மேற்கோள் காட்டுகிறார்கள்.  ஒரு வாதத்திற்காக அம்பேத்கர் அப்படி சொல்லி யிருந்தார் என்று கொண்டால், அதுவரையிலும் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் காதால் கேட்கக் கூடாத, படிக்கக் கூடாத, பேசக் கூடாத தேவபாஷை என்று உச்சாணிக்கொம்பில் வைக்கப்பட்ட ஒன்றை அதனால் இழிவாக கருதப்பட்ட மக்கள் பேசட்டும், எழுதட்டும் என்று நினைத்துக் கூட அவர் சொல்லி யிருக்கலாம்.

அம்பேத்கர் அன்றைய நிலையில் சொன்ன அனைத்தையும் சூழலுக்கு பொருத்தமின்றி இன்னொரு சூழலில் மேற்கோள் காட்டி தங்களின் சமஸ்கிருதத் திணிப்பு நோக்கத்தை இவர்கள் நிறைவேற்றிக் கொள்வதை அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பார். ஆர்.எஸ்.எஸ்.சின் குருஜீ என்று அழைக்கப்படுகிற கோல்வால்கர் இடைக்காலத்தில் இந்தி, இறுதியாக சமஸ்கிருதம் என்று சொன்னதை வேறொரு வடி வத்தில் புகுத்துவதற்காக அம்பேத்கரை துணைக்கு அழைக்கிறார்கள்.  இந்த ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒரு வழக்கில் சமையலர்களாக நியமிக்கப்பட்ட 10 பட்டியலினத்த வர்களை முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள் என்று அரசாங்கம் பணியிலிருந்து நீக்கியதாகவும், தான் தலையிட்டு அவர்கள் நியமிக்கப்பட்டது சரிதான் என்று சொன்னதாகவும், அதை எதிர்த்து இப்போது அரசு மேல்முறையீட்டிற்கு சென்றிருப்பதாகவும் அதன் காரணமாக தான் சமூக நீதிக்காக நிற்பதாக வும், தமிழ்நாடு அரசாங்கம் சமூக நீதிக்கு எதிராக உள்ளது போலவும் பேசியிருக்கிறார்.

அந்த பேச்சின் ஒரு பகுதியாக, 40 ஆண்டுக ளுக்கு முன்பாக தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக  இருந்ததாகவும் எழுதியதாகவும், தற்போது அண்ணல்  அம்பேத்கர் அவர்களால் இடஒதுக்கீட்டின் மேன்மையை புரிந்து கொண்டதாகவும் கூறியிருக்கி றார். இன்னும் 40 வருடங்கள் போனால் ஒருவேளை அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று அவர் மனம் மாறக் கூடும். ஆனால் தற்போது, தமிழ்நாடு அரசாங்கம் குமார வயலூர் முருகன் கோவி லில் அர்ச்சகர்களாக நியமித்த இருவரை ஆகம விதிப்படி செல்லாது, ஸ்மார்த்த பிராமணர்கள் கூட அர்ச்சகராக முடியாது என்று சொல்லி அந்த நியமனத்தை ரத்து செய்ததோடு, 1959ஆம் ஆண்டு சட்டத்தின்படி செல்லாதது ஆக்கப்பட்ட பரம்பரை அர்ச்சகர் நியமனத்தை தானே அமல்படுத்த முனைந்திருக்கிறார். ஒரு நீதிபதி என்பதைத் தாண்டி  தான் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தின் பிரதிநிதி என்கிற முறையில் தான் அவருடைய பேச்சுக்களும், தீர்ப்புக ளும் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை 27 அன்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையை தனது தீர்ப்பில் ‘ஜனநாயகத்தின் பாதுகாவலர்’ என்று பாராட்டியிருக்கி றார் மேற்படி ஜி.ஆர்.சுவாமிநாதன். உண்மையில் அந்த வழக்கை தொடுத்தவர் வேறொருவர். மூன் றாண்டுகளாக அந்த வழக்கு நடந்து கொண்டி ருக்கிறது. திடீரென அந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி திரு.டேவிட்சன் ஆசிர்வாதம் முறையாக விசாரிக்கவில்லை என்று சொன்னது மட்டும் தான் அண்ணாமலை தலை யிட்டது. ஆனால், தீர்ப்பில் டேவிட்சன் ஆசிர்வாதம் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு, அந்த குற்றச்சாட்டைச் சொன்ன அண்ணாமலை ‘ஜன நாயகத்தின் பாதுகாவலர்’ என்று பேசியது அறம் தவறிய செயல் என்றே சட்டத்துறையினர் அப்போது விமர்சித்தார்கள்.

இதேபோன்று, திருச்சி, ஸ்ரீரெங்கநாத சாமி கோவில் சம்பந்தமான ஒரு வழக்கை விசாரித்த போது அரசு ஏன் இந்து கோவில்களில் மட்டும் தலை யிடுகிறது என்று சங்பரிவாரின் கருத்தை ஜி.ஆர். சுவாமிநாதன் முன்வைத்தார். இதேபோன்று பாஜக ஆதரவு யூடியுப்பர் மாரிதாஸ் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழ்நாடு இன்னும் சில நாட்களில் இன்னொரு காஷ்மீராக மாறிவிடும் என்று சொன்னது மற்றும் கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத்தினர் கொரோனா ஜிகாத்தை பயன்படுத்தினர் என்று கூறியதையொட்டி அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் முதல் தகவல் அறிக்கையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தர விட்டார். அதோடு மட்டுமின்றி, மாரிதாஸ் தேச பக்த பிரச்சாரம் செய்தார் என்பது போன்ற கருத்துக்களை யும் உதிர்த்தார். பின்னர் இந்த உத்தரவை உச்சநீதி மன்றம் ரத்து செய்தது. இதேபோன்று தஞ்சை மாவட்டம், மைக்கேல்பட்டியில் ஒரு மாணவி இறந்ததையொட்டி கட்டாய மதமாற்றம் நோக்கமாக இருந்ததா என்று ஆராயும்படி அவசர அவசரமாக அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினார். 

பொதுவாக, இதுபோன்ற கருத்துக்கள் இயல்பாக மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளும். ஆனால், ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதிபதியாக இருப்ப தால் பெரிய அளவுக்கு இது உரிய விமர்சனத்திற்கு உள்ளாகாமல் போய்க்கொண்டேயிருக்கிறது. நீதிபதி என்கிற பொறுப்பையும், அதனால் சமூகத்தில் கிடைக்கும் மரியாதையையும் வைத்துக் கொண்டு பிற்போக்குத்தனமான, சனாதன கருத்துக்களையும், மக்களை பிளவுபடுத்தும் சங்பரிவாரின் வெறுப்பு பிரச்சாரத்தின் அம்சங்களையும் முன்வைக்கிற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடும் கண்டனத் திற்குரியவர்.

கட்டுரையாளர் : சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர்