காங்கிரஸ் மற்றும் பல எதிர்க்கட்சி களில் இருப்பவர்களை தங்கள் கட்சிக்கு தாவச் செய்வதற்கான வேலைகளில் பாஜக முழுமூச்சுடன் இறங்கியிருக்கி றது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார், ராஷ்டிரிய லோக் தளத்தைச் சேர்ந்த ஜெயந்த் சௌத்ரி முதலானவர்களை பாஜக அணிக்கு தடம் புரளச் செய்தபின், தற்போது பல மாநிலங்களில் காங்கி ரஸ் கட்சியில் உள்ள முக்கியமான தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்களைத் தங்கள் பக்கம் தாவச் செய்வதற்கான நடவடிக்கைகளில் பாஜக இறங்கி இருக்கிறது.
கட்சி தாவிய பிரமுகர்கள்
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அசாம் மாநிலத் தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பாஜக அர சாங்கத்தை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், அசாம் காங்கிரஸ் செயல் தலைவர் புர்காயஸ்தா ஆவார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான அசோக் சவான் பாஜகவிற்குத் தாவி இருக்கிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் பழங்குடி யினத் தலைவரும், நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவருமான மகேந்திரஜித் சிங் மாளவியா, திடீ ரென்று பாஜகவின் சித்தாந்தத்துடன் தன்னை நெருக்க மாக்கிக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் சட்டமன்றத் தில் தலைமைக் கொறடாவாக இருப்பவர் உட்பட இரண்டு எல்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜக பக்கம் தாவி இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவரும், ஐந்து முறை மக்களவை உறுப்பின ராக இருந்தவருமான நாரன் ரத்வா என்னும் பழங்குடியி னத் தலைவரும் அவருடைய மகனும் பாஜக பக்கம் சாய்ந்திருக்கின்றனர். அருணாசலப் பிரதேசத்தில், கட்சித் தாவல் மூலம் தற்போது நிரம்பி வழியும் பாஜக வில் மேலும் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும், தேசிய மக்கள் கட்சி (NPP-National People’s Party) கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்களும் ஐக்கி யமாகியுள்ளனர். பீகாரில் சட்டமன்றம் நடந்துகொண்டி ருந்த சமயத்தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்க ளும், ஒரு ஆர்ஜேடி எம்எல்ஏவும் ஆளும் கட்சிப் பக்கம் சாய்ந்திருக்கிறார்கள். முன்னதாக, நம்பிக்கை வாக்கு எடுக்கும் சமயத்தில் மூன்று ஆர்ஜேடி எம்எல் ஏக்கள் கட்சித் தாவல் மேற்கொண்டிருந்தார்கள். ஜார்க்கண்டில், ஒரேயொரு காங்கிரஸ் எம்எல்ஏவான கீதா கோடா, பாஜகவில் சேர்ந்திருக்கிறார்.
இவ்வாறு சுயநலம் மிக்க நபர்கள் கட்சித் தாவ லில் ஈடுபட்டிருப்பதை, ஏதோ காய்ந்த மாடுகள் பசுமை நிறைந்த புல்வெளியை நோக்கிப் பாய்வது போன்று, சாதாரணமாகப் பார்த்தால் தவறாகும். பாஜக விற்கு எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பிரதான எதிர்க் கட்சியாக இருக்கிறதோ அங்கெல்லாம் அதனைப் பலவீனப்படுத்திடவும், முடக்கிடவும், சிதைத்திடவும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்றே இதர எதிர்க்கட்சிகளையும் பலவீனப்படுத் திட வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாகும்.
பணத்தால் அடிப்பதும், மிரட்டிப் பணிய வைப்பதும்
காங்கிரஸ் கட்சி மற்றும் சில எதிர்க்கட்சித் தலை வர்களைத் தங்கள் கட்சிக்கு தாவச் செய்வதற்கு பாஜக இரு விதமான உத்திகளைப் பின்பற்றிக் கொண்டிருக்கி றது. ஒன்று மிரட்டுவது, மற்றொன்று பணத்தைக் கொட்டி தாஜா செய்வது. ஒரு பக்கம் அமலாக்கத் துறை யினரையும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகத்தின ரையும் மற்றும் ஒன்றிய அரசின் புலனாய்வு முகமை களை அனுப்பி மிரட்டுவது. மற்றொரு பக்கம் அவர்கள் மீது இருக்கும் லஞ்சக் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் களை விடுவிப்பது, அவர்களுக்கு தேர்தலில் நிற்க இடம் அளிப்பது, அவர்களுக்குப் பணத்தை வாரி இறைப்பது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள், பாஜகவில் இணைந்தவுடன் அந்தக் குற்றச்சாட்டு கள் எல்லாம் காணாமல் போய்விட்டதைப் பார்க்கி றோம். இதற்கு சரியான எடுத்துக்காட்டு அசோக் சவான். இந்தப் பேர்வழி மும்பை ஆதார்ஷ் வீட்டு வசதி ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட நபர். அதேபோல, அசாம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் புர்கா யஸ்தா மீது அம்மாநில லஞ்ச ஒழிப்பு துறை விசா ரணை செய்து கொண்டிருந்தது. இதேபோன்றே மகா ராஷ்டிராவில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலை வர்களில் பெரும்பாலானவர்கள் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தார்கள். இப்போது அவர்கள் அனைவரும் பாஜகவிற்கு ஆதர வாக சென்றுவிட்டனர். இதேபோன்றே தங்கள் கட்சிக்கு வரும் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தி னருக்கும் காட்டப்படும் ஆசைகள் ஏராளமாகும்.
எதற்கும் பணியாதவர்களுக்கு சிறை
தங்கள் ஆசை வார்த்தைகளுக்கு இசையாவிட்டா லோ, அமலாக்கத்துறையினர்/குற்றப் புலனாய்வுக் கழகத்தினரின் மிரட்டல்களுக்கு அடிபணியாவிட்டா லோ, அவர்களுக்காக சிறைவாசம் காத்துக் கொண்டி ருக்கிறது. ஜார்க்கண்ட் முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அப்படித்தான் கைது செய்யப் பட்டார். தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படக்கூடும் என்று மிரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். பாஜக தலைமையின் நோக்கம் எதிர்க்கட்சிகளைப் பூண்டோடு ஒழித்துக்கட்டிவிட்டு, ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியை நிறுவ வேண்டும் என்பதேயாகும். அத னால்தான் அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அசாமில் உண்மையான எதிர்க்கட்சியே இல்லை,” என்றும் “அனைத்து எம்எல்ஏக்களும் மாநில அரசாங்கத்தையும் ஒன்றிய அரசாங்கத்தையும் ஆத ரிக்கும் ஒரே மாநிலம்” என்றும் பீற்றிக்கொண்டிருக்கிறார்.
மாநிலங்களவைத் தேர்தலில் கட்சித்தாவல் - பாஜகவின் ‘மாஸ்டர்பிளான்’
சமீபத்தில் நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்த லில் இமாச்சலப் பிரதேசத்திலும், உத்தரப்பிரதே சத்திலும் எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்து பாஜக உறுப்பினரை வெற்றி பெற வைத்திருப்பது பாஜக வின் ‘மாஸ்டர் பிளான்’படி நடைபெற்றவையேயா கும். வடக்கில் ஒரேயொரு காங்கிரஸ் அரசாங்கம் உள்ள இமாச்சலப் பிரதேசத்தில், மொத்தம் 68 உறுப்பி னர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு 40 இடங்கள், பாஜகவிற்கு 25 இடங்கள், சுயேச்சைக்கு 3 இடங்கள். இந்த மூன்று சுயேச்சை உறுப்பினர்க ளும் இதுவரையிலும் காங்கிரஸ் அரசாங்கத்தை ஆத ரித்து வந்தவர்கள். இருப்பினும், மாநிலங்களவைக்கு பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஆறு பேரும், சுயேச்சை உறுப்பி னர்கள் மூன்று பேரும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அவரை வெற்றி பெற வைத்துள்ளனர். இதன்காரணமாக ஆளும் சுக்விந்தர் சிங் சுகுவின் அரசாங்கம் சட்டமன்றத்தில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அதை நிறைவேற்றுவதற்கே கூட, கடினமானதொரு நிலையில் சிக்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற பத்து இடங்களில், சமாஜ்வாதி கட்சி சட்டமன்றத்தில் தனக்கி ருக்கும் வலிமையில் மூன்று இடங்களில் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் ஏழு எம்எல்ஏ-க்கள் சமாஜ்வாதி கட்சியிலிருந்து தாவி, பாஜகவிற்கு வாக்களித்திருக்கின்றனர். இதில் அக்கட்சியின் தலைமைக் கொறடாவும் ஒருவர். இப்படித்தான் மாநிலங்களவைக்கு பாஜக கூடுதலாக இரு இடங்களைப் பெற்றிருக்கிறது. இமாச்சலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் நீடிக்குமா என்கிற அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் மிகுந்த கவலையை அளித்தி ருக்க வேண்டும். பாஜகவின் இத்தகைய மோசமான தகிடுதத்தங்களை ஒருவர் கண்டிக்க முடியும் என்ற போதிலும், இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் அணிகளை வேட்டையாட பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது காங்கிரஸ் தலைமைக்குத் தெரியாமல் எப்படி தூங்கிக்கொண்டிருந்தது என்ற கேள்வி எழுகிறது. சில மாநில சட்டமன்றங்களில் அது வெற்றி பெற்றுள்ள போதிலும், ஒட்டுமொத்தத்தில் அது பல கோஷ்டிகளுடன் உள்ள கட்சியாக நீடிப்பது என்பது தொடர்கிறது.
கமல் நாத் - ஓர் உதாரணம்
காங்கிரஸ் கட்சியின் இப்போதைய அவலநிலை க்கு கமல்நாத் போன்றோர் அதிலிருந்து வெளியேறியி ருப்பது முக்கிய எடுத்துக்காட்டாகும். மத்தியப்பிரதே சத்தில் கட்சியை இதுவரை வழிநடத்திவந்த ஒரு முக்கியமான மூத்த தலைவரான அவரே, திடீரென இந்துத்துவா சிந்தனைகளைப் புகழ்ந்து தள்ளுகிறார். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்விய டைந்த பின்னர் அவர் பாஜகவுடன் கூடிக்குலாவவே விரும்பினார். ஆயினும் என்ன காரணத்தாலோ அது தோல்வியடைந்துவிட்டது. மூத்த காங்கிரஸ் தலைவர்க ளின் குணமே இப்படி சீரழிந்திருக்கிறது என்றால், இத்தகைய பேர்வழிகளை வைத்துக்கொண்டு, ஆர்எஸ்எஸ்/பாஜக-விற்கு எதிராக ஓர் உறுதியான மற்றும் தீவிரமான போராட்டத்தை இக்கட்சியால் நடத்த முடியாது.
உறுதியான, பலமான போராட்டம் அவசியம்
பாஜகவிற்கு எதிராக அதன் இந்துத்துவா மத வெறி சக்திகளுக்கு எதிராக சித்தாந்த ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவதற்கு ஓர் உறுதியான, பலமான, ஒன்றுபட்ட போராட்டத்தை நடத்தியாக வேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், இன்னும் சரியாகச் சொல்வதென்றால்- எதிர்க்கட்சி கள் தங்கள் கட்சி காணாமல் போகாமல் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும்கூட, அத்தகைய உறுதியான போராட்டம் அவசியம் என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். நடைபெறவிருக்கும் தேர்தல் களத்தில் பாஜக தலைமையில் உள்ள மதவெறி-கார்ப்பரேட் கூட்டணி ஆட்சியை முறியடித்திட, ஜனநாயகத்திற்கு அதனால் எழுந்துள்ள ஆபத்திற்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
பிப்ரவரி 28, 2024,
தமிழில் : ச.வீரமணி