சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆக.1 அன்று தென்சென்னை மாவட்டத்தில், மாநில சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. வர்க்க, வெகுஜன அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள ‘சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம்’ (மெஸ்) இந்த மாநாட்டை நடத்துகிறது. இதனையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் ‘தொழிற்துறையும் சென்னைக்கான வேலைவாய்ப்பு உருவாக்கமும்’ எனும் தலைப்பில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஆற்றிய உரையின் சுருக்கம்:
வேலை தருவது அர சின் கடமை; பொறுப்பு. ஆனால் இந்தியாவில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு சுருங்கி வருகிறது. இராஜ பாளையத்தில் உள்ள 700 நூற் பாலைகளில் 150 ஆலைகள் நலி வடைந்து மூடுகிற நிலையில் உள் ளன. 30 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ள னர். திருப்பூரில் ஒவ்வொரு ஆலையின் வாயிலிலும் ‘ஆட்கள் தேவை’ என்று அறி விப்பு பலகை தொங்கும். தற்சமயம் அவை அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. திருப்பூரில் மையப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் தினசரி 55 லிட்டர் பால் வைத்து வியாபாரம் செய்தனர். தற்போது, அதிகபட்சமாக 20 லிட்டர் பால்-தான் செல வாகிறது. அதாவது, டீ குடிப்போரின் எண் ணிக்கை அல்லது குடிக்கும் அளவு குறைந்து விட்டது. சென்னை டீக்கடைகளிலும் 40 விழுக்காடு வரை வியாபாரம் குறைந்துள் ளது.
தமிழகத்தில் உள்ள நூற்பாலைகள் அனைத்தும் மூடும் நிலைக்கு வந்துவிட்ட தாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். பருத்தி இறக்குமதிக்கு புதிதாக ஒன்றிய அரசு 11 விழுக்காடு வரிவிதித்துள்ளது. அதை திரும்பப் பெற வேண்டும் என்று முதல மைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி யுள்ளார். கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஆலை உரிமையாளர்கள் முதலமைச்சரிடம் கோரியுள்ளார்கள். இந்த தொழில் நெருக்கடிக்கு என்ன தீர்வு?
முதலாளித்துவ நெருக்கடி
இன்றுள்ள பொருளாதார நெருக்கடி உலகளாவியது. ஐரோப்பாவின் பல நாடு களில் கடுமையான பொருளாதார மந்தம் நிலவுகிறது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது. உக்ரைன் போருக்குப் பிறகு மேலும் குறைந்துவிட்டது. இதனால் துணி வாங்குவதும் குறைந்து விட்டது. ஐரோப்பாவில் வாங்கும் சக்தி அதிகரித் தால்தான் இராஜபாளையம், கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் உள்ள ஆலை களில் உற்பத்தி பெருகும் என்று உற்பத்தி யாளர்கள் கூறுகின்றனர்.
முதலாளித்துவ கட்டமைப்பில் பொருளா தார நெருக்கடி பலமுறை வந்துள்ளது; பிறகு மாறியுள்ளது. ஆனால், 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நீண்ட காலமாக நீடிக்கிறது. மார்க்சியம் கூறுகிற அடிப்படையான மாறுதலை செய்தால்தான் பொருளாதார மந்தத்திலிருந்து மீள முடி யும். முதலாளித்துவத்தின் அடிப்படை லாபம். லாபத்தை பெருக்க கடுமையான விலையேற்றம் செய்கின்றனர். உற்பத்தி யை அதிகரிக்க தொழிலாளர்களின் எண் ணிக்கையை குறைக்க எந்திரங்கள், தகவல் தொழில் நுட்பங்களை பயன்படுத்து கின்றனர். இதனால் முதலாளிகளுக்கு லாபம் பெருகுகிறது. மறுபுறம் வேலை யிழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டு, மக்க ளின் வாங்கும் சக்தி குறைகிறது. பொருட்கள் விற்பனையாகவில்லை. இதனால் உற்பத்தி முடங்குகிறது. ஆலைகள் இயங்காது. இந்த சக்கரத்தில் முதலாளித்துவம் சிக்கிக் கொண்டுள்ளது. இதுதான் இன்றைக்கு இந்தியாவின் நிலையும்.
ஆய்வுகளைக் கைவிட்ட மோடி அரசு
இந்தியாவில் வேலையின்மைப் பிரச்ச னையை தீர்க்க, பிரதமர் வேலையின்மை கணக்கெடுப்பையே நிறுத்தி விட்டார். கடந்த 9 ஆண்டுகளில், அனைத்து குறியீடு களிலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள் ளது. 2019-20 தேசிய மாதிரி கணக்கெடுப்பின் படி, பெண்களில் 56 விழுக்காட்டினரும், 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 47 விழுக்காட்டினரும் இரத்தசோகையால் பீடிக்கப்பட்டிருந்தனர். ஆட்சிக்கு அவப் பெயர் என்று பிரதமர் இந்த கணக்கெ டுப்பையே நிறுத்திவிட்டார். இப்படியாக அடிப்படையான கணக்கெடுப்புகளைக் கூட ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது.
காண்ட்ராக்ட் எனும் தீண்டாமை
பேர் நிரந்தர தொழிலாளிகள் என்றால் 2 - 5 பேர் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக இருப்பார்கள். அதுகூட உற்பத்தி சாராத பிரி வில்தான் இருப்பார்கள். இன்று, ஒரு ஆலை யில் 10 நிரந்தர தொழிலாளி, 90 காண்ட்ராக்ட் தொழிலாளிகள் உள்ளனர். காண்ராக்ட் தொழிலாளி என்றால் அவர் தொழி லாளியே இல்லை என்றுதான் பொருள் கொள்கின்றனர். உலகம் முழுவதும் காண்ட்ராக்ட், வெளி முகமை (அவுட்சோர்சிங்) முறை செயல் படுத்தப்படுகிறது. கண்ணியமான வேலை, ஊதியம் இல்லை. மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கின்றனர். உதாரணத்திற்கு ஓசூர் அசோக் லேலண்ட் தொழிற்சாலை யில் 2000 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்
களும், 7 ஆயிரம் ஒப்பந்த தொழிலா ளர்களும் உள்ளனர். இருவருக்கும் கேண்டீ னில் தனித்தனி உணவு வழங்கப்படுகிறது. நிரந்தர தொழிலாளிக்கு இலையில் உணவு பறிமாறுகிறார்கள், காண்ட்ராக்ட் தொழி லாளிக்கு பொட்டல உணவு தரு கிறார்கள். நிரந்தர தொழிலாளிக்கு வாரத்தில் 3 நாள் அசைவ உணவு கொடுக்கிறார்கள். காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு அசைவ உணவே கிடையாது. இது தொழிற்சாலைக் குள் நடைபெறுகிற ஒதுக்கல்; ஒடுக்கல்; தீண்டாமை. இதுதான் தமிழகத்தில் உள்ள 70 விழுக்காட்டிற்கு மேற் பட்ட ஆலைகளில் பணியாற்றும் காண்ட் ராக்ட் தொழிலாளர்களின் நிலையாக உள்ளது. தற்போது பணியில் உள்ள வர்களில் 70 சதவீதம் பேருக்கு சமூக பாது காப்பு இல்லை. பணியில் சமூக பாதுகாப்பு என்பது, பணி நியமனம், பணி நிரந்தரம், பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம் இவை யெல்லாவற்றையும் உள்ளடக்கியது. காண்ட்ராக்ட் தொழிலாளிக்கு எந்த சமூக பாதுகாப்பும் இல்லை. பொதுத்துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களில் பாதி பேருக்குத்தான் சமூக பாதுகாப்பு உள்ளது. அங்கேயும் காண்ட்ராக்ட் முறைவந்து விட்டது. இந்த சுரண்டலை ஒழிக்காமல் புதிய தொழில்கள் வராது. வாங்கும் திறன் அதிக ரிக்க வேண்டும், மக்களிடம் வருமானம் பெருகி பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். இது நடைபெறாமல் புதிய தொழில்கள் வராது.
தொழில்தொடங்க உகந்த சூழல் தமிழ் நாட்டில் உள்ளதாக முதலமைச்சர் கூறு கிறார். நிதி மூலதனம் குறைந்த கூலிக்கு, சட்டத்தை மீறினால் அதற்கு இசைவான அரசு எங்குள்ளது என்று தேடிக்கொண்டி ருக்கிறது. இன்றைக்கு வந்துள்ள புதிய தொழிற்சாலைகளில் காண்ட்ராக்ட்டும், அவுட்சோர்சும்தான் அதிகமாக உள்ளது.
‘நாப்ஸ்’, ‘நீம்’ திட்டங்கள்
பயிற்சியாளர்களை உருவாக்கும் (நேச னல் அப்ரன்டீஸ் புரமோசன் ஸ்கீம் - நாப்ஸ்) திட்டத்தை ஒன்றிய கொண்டு வந்துள்ளது. அதாவது, தொழிலாளிக்கு முதலாளி பயிற்சி கொடுப்பார். அதற்கு அரசு பண உதவி செய்யும் திட்டம். இதன்படி, முதலாளி ஒரு தொழிலாளிக்கு பயிற்சி கொடுத்து உற்பத்தி யை அதிகரித்து, லாபத்தையும் பெருக்கிக் கொள்கிறார். 50 - 60 ஆயிரம் ரூபாய் ஊதி யம் தர வேண்டிய பணியிடத்தில், 7500 ரூபாய் கொடுத்து பயிற்சி தொழிலாளி வாயி லாக முழு உற்பத்தியையும் பெறுகிறார். அடுத்த சில மாதங்களில் பயிற்சி முடிந்த தாக கூறி வேலையிலிருந்து வெளியேற்றப் படுகிறார். இப்படியாக உழைப்பை சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். தற்போது நாப்ஸ் திட்டத்தை வைத்தே முதலாளிகள் ஆலை யை நடத்துகின்றனர். புதிய வேலைவாய்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவெடுத்துவிட்டது. அதை மாநில அரசுகளும் அமலாக்குகின்றன. ‘நீம்’ என்ற ஒரு திட்டத்தை வைத்துள்ள னர். டிவிஎஸ் கம்பெனி முழுவதும் பயிற்சி தொழிலாளர்கள்தான் (அப்ரன்டீஸ்) உள்ள னர். ஒன்றிய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் என்டிபிஎல் நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளி ஒருவர் கூட கிடையாது. காம ராஜர் துறைமுகத்தில் நிரந்தர தொழிலாளி யாக 5 பேர் மட்டுமே உள்ளனர்.
இளைஞர்களுக்கு கண்ணியமான வேலை, கவுரவமான சம்பளம் கிடைக்க வில்லை. உயிர்வாழ, பிளாட்பார்ம் தொழிலா ளர்களாக லட்சக்கணக்கானோர் ஸ்விகி, ஓலா போன்ற நிறுவனங்களில் பணியாற்று கின்றனர். செயலிகள் வாயிலாக பணி யாற்றும் எல்லோரும் பிளாட்பார்ம் தொழி லாளர்கள்தான். இவர்களை தொழிலா ளர்களாகவே அங்கீகரிக்க மறுக்கின்றனர். இந்த தொழிலாளி வேலைசெய்வதால், அதன் பலன் யாருக்கு செல்கிறதோ அவன் தான் முதலாளி. முறைசாரா தொழிலாளர்களுக்கு, புலம்பெயர் தொழிலாளர்கள் வாயிலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறைந்த கூலி கொடுத்து அவர்களை சுரண்டுகின்றனர். ஒரே நிறுவனத்தில் நிறைவான கூலி உள்ளவரும், குறைவான கூலி உள்ள வரும் இருந்தால், நிறைவான கூலி பெறு பவர் வெகுசீக்கிரம் அங்கிருந்து வெளியேற் றப்படுவார். கருப்பு இனத்தவரும், வெள்ளை இனத்தவரும் ஒரே ஆலைக்குள் இருந்தால், வெள்ளை இனத்தவர், கருப்பினத்தவ ருக்காக போராட வேண்டும் என்றார் மார்க்ஸ். எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். உள்ளாட்சியில் ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு அளவுகளில் கூலி நிர்ணயிக்கின் றனர். 5 வருடத்திற்கு முன்பு குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டது. அப்போது ஊராட்சி தொழிலாளிக்கு 6 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் தீர்மானிக்கப்பட்டது. 2023ம் ஆண்டிலிருந்து அதை 5 ஆயிரம் ரூபாய் என்று அரசாணை போட்டுள்ளனர். வேலையும் சம்பளமும் மட்டுமின்றி சமூக பாதுகாப்பு முக்கியமானது. இதற் கான சித்தாந்தத்தை, இடதுசாரி மாற்றை மக்களிடம் கொண்டு செல்வோம். சோச லிசமே மாற்று மற்றதெல்லாம் ஏமாற்று என்பதை உணர வைப்போம்.