ஒரு மரத்தில் ஐந்து பறவைகள் இருக் கின்றன. அதில் ஒன்றைச் சுட்டால், எத்தனை பறவைகள் மீதம் இருக்கும்?சிலர் மட்டுமே “பூஜ்ஜியம்” என்று உடனடியாக விடையளிப்பர். தர்க்க அறிவைப் பயன் படுத்தாதவர்கள் கணித அறிவைப் பயன் படுத்துவர். தர்க்க அறிவே வாழ்வில் வெற்றிபெற உதவும் நடைமுறை அறிவு. “உண்மை,கண் முன்னே உள்ளது. அதை விடுத்து எங்கோ கண்காணா இடத்தில் உண்மையைத் தேடுகின்றனர்” என்று படத்தில் வரும் மேற்கண்ட வசனங்கள் தான் “அன்புக் குரிய” என்ற பொருள்படும் சுஜோய் கோஷின் “ஜானே ஜான்” என்ற திரைப்படம். மும்பையில் வாழ்ந்த சோனியா, அஜித் என்ற போலீஸ்காரனை மனதாரக் காதலித்த வள். ஆனால் பணத்துக்காக எதையும் செய்யும் அந்த வஞ்சகன் அவளை ஏமாற்றி கவர்ச்சி நடனக் (Pole Dance) கேளிக்கை விடுதியில் விற்று விடுகிறான். மேலும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுகின்ற புரோக்கர்களின் தொடர்பில் இருப்பவன். இவர்களுக்கு பிறந்த தாராவையும் கவர்ச்சி நடனப்பாவையாக மாற்றும் திட்டமும் அஜித்திடம் உள்ளது. இதை உணர்ந்த சோனியா தன் பெண்ணோடு அஜித்திட மிருந்து தப்பித்து, டார்ஜிலிங் அருகே உள்ள கரிம்போங்க் மலை வாழிடத்தில், மகளு டன், மாயா என்ற பெயரில் குடியேறுகிறாள். மகளைப் படிக்க வைத்து சீரிய எதிர்கா லத்தை உருவாக்கித் தரும் நோக்கில், சிறிய உணவு விடுதியை நடத்திகொண்டு, அமைதி யாக வாழ்கிறாள். பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் நரேன் என்ற கணித ஆசிரியர். புதிய கணித சமன்பாடு களுக்கு விடைதேடுவதையே வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர். தனித்து வாழ்பவர். கணிதத்தில் ஆழ்ந்த பற்றுக்கொண்டு பத்து வருடமாக ஒரு கணித சமன்பாட்டுக்கு விடையைத் தேடி நெருங்கும் சூழலில் வேறு ஒருவர் அதனை கண்டறிந்து புகழ் பெறுகிறார். இதனால் மனமுடைந்து போகிறார். தற்கொலைக்கு முயலும்போது, பக்கத்து வீட்டுக்காரி மாயா, அவரது உதவியை வேண்டி வீட்டுக் கதவை தட்டுகிறார். கதவை திறக்கும் ஆசிரியர், மாயா வின் பேரழகைக் கண்டு வியக்கிறார்.வியப்பு, மறுவாழ்வுக்கான திறவுகோலாகிறது. அவளுக்கு உதவும் வழியே, வாழ்வை நம்பிக்கையோடும், இளமைத் துடிப்போடும் மீண்டும் தொடங்குகிறார்.
கருப்புப் பண மோசடியில் ஈடுபட்டு, தலைமறைவு வாழ்க்கை வாழும் அஜித்; 14 வருட இடை வெளியில், மாயாவைத் தேடிக் கண்டறிகிறான். படிக்கும் பருவ வயது மகள் தாராவையும், மனைவி மாயாவையும் மீண்டும் கவர்ச்சி நடனமாட மும்பைக்கு வர வற்புறுத்துகிறான். அவனிடமிருந்து தப்பிக்க தாயும் மகளும் அவனைத் தாக்குகின்றனர். தாக்குதலில் அவன் கொல்லப்படுகிறான். அஜித்தை கைது செய்ய அவனை பின்தொடரும் இளம் மும்பை போலீஸான கரண், அஜித் கொலை செய்யப்பட்டதை அறிகிறான். பின், கொலையாளியைத் தேடும் படலத்தில் இறங்குகிறான். துப்பறிவாளன் கரண், ஆசிரியர் நரேனின் கல்லூரிகால நண்பன். கரணின் தொடர் விசாரணையில் சிக்கிய, மாயாவை, கொலைக் குற்றத்திலிருந்து தப்புவிக்க ஆசிரியர் எப்படி உதவினார் என்பதை சிலிர்ப்பூட்டும் விதமாகவும், தர்க்க ரீதியாக வும், காதல் என்ற மெல்லிய கோட்டின் மீது மிக நுட்பமாகவும், விவரிக்கிறது இத்திரைப்படம். ஆசிரியர் நரேனை ஏறெடுத்தும் பார்க்காத மாயா, தனக்கு ஆபத்தில் உதவும் நரேன், தன்மீதான காதலை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறுவதை உணர்கிறாள். அவனுடைய உதவிக்காக தன் நன்றியை வெளிப்படுத்தும் விதமாகக் கட்டித் தழுவு கிறாள். அப்போது நரேன் எதிர்வினையாற்ற இயலாமல், கைகளை அந்தரத்தில் நிறுத்திப் பரிதவிக்கும் காட்சியில், ஜெய்தீப் அக்லவாட் ஆகச் சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.
துப்பறிவாளன் கரண், மாயாவை கரோக்கே விடுதிக்கு விசாரணைக்காக அழைத்து செல்கிறான். அங்கு தற்செயலாக பழைய சினிமா பாடலை மாயா பாடி ஆடும்போது, இளமை ததும்பும் கரணோடு இணைந்துபாடும் சூழல் எழுகிறது. அப்போது, அவளையறியாமல் கரண் மீதான ஈர்ப்பை, அகல விரிந்த தன் விழிப் பார்வையால் வெளிப்படுத்தி கரீனா கபூர் தனது மேன்மை யான நடிப்பை தந்துள்ளார். கொலை விசாரணை உரையாடலின் போது, மாயாவின் மீது கரணுக்கு ஏற்படும் மோகம் மற்றும் அவளின் கள்ளமற்ற மனதை கண்டறியும் சமயத்தில், ஏற்படும் காதல் பரவசத்தை அருமையாக வெளிக் கொணர்ந்து, துப்பறியும் போலீஸாக வரும் விஜய் வர்மா அனைவரையும் கவர்கிறார். கதையின் மையமாக வரும் இம்மூவரின் நடிப்பே படத்திற்கு பெரும் பலமாகியுள்ளது. “தொடர்ந்து தேடினால் அந்தக் கடவுளையும் கண்டறியலாம்”, “கணிதமும் தர்க்கமும் ஒன்றே”உள்ளிட்ட வசனங்கள் மின்னல் தெறிப்புகள். கமல் நடித்து தமிழில் வெளியான “பாபநாசம்” பட வாசம், இப்படத்திலும் அடிக்கிறது. 2005ல் வெளியான “The Devotion of Suspect X” என்ற ஜப்பான் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 1983ல் இப்படத்தின் பெயரில் வெளியான படத்தில், கரீனா கபூரின் தந்தையான ரந்தீர் கபூர் நடித்துள்ளார்.
பாடல்கள் ஏதுமற்ற சிறப்பான பின்னணி இசை; தை ஓட்டத்தை எளிதாக புரியவைக்கும் படத்தொகுப்பு சிறப்பு.கரிம்போங்க் மலை வாழிடத்தின், இரவு நேரக் குளிரை, உணரவைக்கும் ஒளிப்பதிவு. சாலையோர கேட்பாரற்ற மனிதனைக் கொலை செய்து, தனது மானசீக காதலியான மாயாவைக் காப்பாற்றுகின்ற நரேனை, மனபிறழ்வு நோயாளியாக சித்தரிக்காமல், காதல் தியாகி போல் முடித்திருப்பது படத்தின் பெருங்குறை. கணிதச் சமன்பாட்டின் துணை யோடும், வாழ்வின் தர்க்கத்தோடும் உண்மையை உதறி விலகும் நரேன்; தர்க்க அனுபவ அறிவோடு உண்மையை நெருங்கும் துப்பறிவாளன் கரண்; இவர்களுக்கு இடையில் மெய்யான மாயா; இம்மூன்றுபாத்திரங்களின் கலவையில், சிறப்பான திரைக்கதையை அமைத்து, இயக்கியுள்ளார் சுஜய் கோஷ்.