மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் கண் ணியமான வாழ்வை மேம்படுத்துவதற்காக, 1992 முதல் ஆண்டு தோறும் டிசம்பர் 3 ஆம் தேதி மாற்றுத் திற னாளிகளின் உலக தினமாக ஐ.நா.சபை அழைப்பின் பேரில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி களின் இருப்பை உறுதிப்படுத்துவதையும், சமூகத்தோடு இணைத்துக் கொள்வதை யும், அவர்களையும் ஏற்று பங்களிப்புச் செய்ய வைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதுமே இந்த நாளின் குறிக் கோள். இந்த ஆண்டிற்கான கருப்பொருள், “மாற்றுத் திறனாளிகளுக்கான நிலைத்த நீடித்த முன்னேற்றத்துக்கான குறிக்கோள் களை அடைய, மாற்றுத் திறனாளிகளுடன் ஒன்றிணைந்து செயல்பட்டும், மாற்றுத்திற னாளிகள் மூலமாகவும் சாதித்திடுவோம்” என்பதாகும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைப் பேசு வது இந்நாளின் ஒரு பகுதியாக இருந்து வரும் அதே வேளையில், தற்போதைய உல களாவிய சூழலில், பாலஸ்தீன மாற்றுத்திற னாளி மக்களின் அவலநிலையை கவ னத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கருதுகிறது.
அமைதி நிலவ...
இந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ஐ.நா. வில் நடந்த நினைவேந்தல் நிகழ்வு விவாதத் தின் ஐந்து கருப்பொருள்களில் ஒன்று “அமைதி”. நிலைத்த நீடித்த எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைய அமைதி நிலவ வேண்டியது அவசியம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய அவ சியமில்லை. பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான ஆக்கிரமிப் பும், ஆக்கிரமிப்புக் கொள்கைகளும் நீண்ட காலமாக நீடித்து அமைதிக்கு முட்டுக் கட்டையாக இருப்பது உலகின் முக்கிய மான பிரச்சனைகளில் ஒன்றாகும்.
1919 ஆம் ஆண்டில், முதல் உலகப் போர் முடிவடைந்த உடனேயே, அப்போது துருக்கியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த பாலஸ்தீனத்தை ஆள்வதற்கு, முத லாம் உலகப்போரின்போதே உருவாக்கப் பட்டு செயல்பட்டு வந்த உலக நாடுகள் சங்கம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்) அமைப்பி டமிருந்து ஆங்கிலேயர்கள் ஆணையைப் பெற்றனர். அந்த நேரத்தில் பாலஸ்தீனத் தில் பெரும்பாலும் அரேபியர்களான 7,50,000 இஸ்லாமியர்களும், வெறும் 60,000 யூதர்கள் மட்டுமே இருந்தனர், (ஏ.ஜி. நூரனி: இஸ்லாம் மற்றும் ஜிஹாத், 2002). ஆனால் அப்போது “உலகின் நான்கு பெரும் சக்தி களாக விளங்கிய இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் சியோ னிசத்தை (யூதர்களுடைய மதம்) தழுவ உறுதிபூண்டுள்ளன” என்று பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் ஏ.ஜே. பால்ஃபோர் பிரகடனம் செய்ததன் மூலம் வலுவான இஸ்ரேல் நாடு உருவாக அடித்தளமாக அமைந்தது.
இஸ்ரேலை உருவாக்குவதற்காக 1948இல் லட்சக்கணக்கான பூர்வீக இஸ்லா மிய குடிமக்களை யூத ஆக்கிரமிப்பா கர்கள் மூலம் வெளியேற்றி பாலஸ்தீன நிலத்தின் முக்கிய நிலப்பகுதிகளை ஈவி ரக்கமின்றி ஆக்கிரமித்தது மட்டுமின்றி, தொ டர்ந்து சொல்லொணாத் துயரங்களைக் கொ டுத்தும் வருகிறது. பாலஸ்தீன மக்களின் அடிப்படை மனித உரிமைகள், கண்ணிய மான வாழ்க்கை, சிவில் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இஸ்ரேல் பறித்துள்ளது. நிறவெறியின் மற்றொரு வடிவம் நடை முறையில் உள்ளது என்றுகூடக் கூறலாம். இந்தக் கருத்தை இஸ்ரேலிய உளவு அமைப் பான மொசாட்டின் முன்னாள் தலைவர் தாமிர் பார்டோவும் ஆமோதித்துள்ளார்.
தற்போதைய நிகழ்வுகளை, 1948 மற்றும் அதற்குப் பிறகான சூழலில் இருந்த நிலைமையில் இருந்து விலக்கி வைத்து விட்டுப் பார்ப்பது கேலிக்குரியதாக அமைந்துவிடும். இஸ்ரேலிய ஆக்கிர மிப்பிற்கு எதிராக, தங்கள் தாயகத்தை மீட்ப தற்காக, பாலஸ்தீன மக்கள் நீண்டகாலப் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தீர்வு காண உறுதியளிக்கும் வகையில் திணிக்கப்பட்ட இரு நாடு ஆலோசனையை இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் ஆதரித்தன. அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளின் தீவிர அழுத்தத்தின் காரணமாக புவிசார் அரசி யலில் ஏற்பட்ட மாற்றமானது, பல்வேறு அரபு அரசுகள் பாலஸ்தீனத்தை கைவிட்ட தைக் கண்டது வேறு விஷயம்.
காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்
இனப்படுகொலை நோக்கில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் முன்னெப்போ தும் இல்லாத அளவில் காட்டுமிராண்டித்த னம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. தற் போதைய தாக்குதல்களின் விளைவாக பாலஸ்தீனத்தில் உயிர் இழப்புகள் மற்றும் சிவிலியன்களுக்கு ஏற்பட்டுள்ள பலமான காயங்கள், அங்க இழப்புகள் பயங்கரமான வை ஆகும். கிட்டத்தட்ட காசாவின் பெரும் பகுதிகளை தரைமட்டமாக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுக ளின் ஆதரவுடன், 2023 அக்டோபர் 7 இல் நடந்த ஹமாஸ் தாக்குதல்களுக்கு பதில டியாகத்தான் இந்தப் போர் என சொல் லப்பட்டாலும், அது முற்றிலும் நியாய மற்றது. அதன் பின்னர், இன்றுவரை குறைந்தது 15,000 பேரை இரக்கமின்றி கொன்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கொடூரமான காட்டுமிராண்டித்தனம் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திற னாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட வர்களை விடவில்லை. இறந்தவர்களில் 6,150 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலர் கைக்குழந்தைகள். காசா பகுதி “குழந்தைகளின் கல்லறையாக” மாறி வரு கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அன் டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மேலும் 242 பேர் (57 குழந்தைகள் உட்பட) கொல்லப் பட்டுள்ளனர். காசாவில் சுமார் 36,000 பேர் (அவர்களில் 75 சதவீதம் பேர் குழந்தை கள் மற்றும் பெண்கள்) மற்றும் ஆக்கிர மிக்கப்பட்ட மேற்குக் கரையில் 2,750 பேர் பலமான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ள னர். இது, இறுதியில் மாற்றுத்திறனாளி களை உருவாக்குவதற்கே வழிவகுக்கும்.
ஒட்டுமொத்த பாலஸ்தீன மக்களையும் அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த தாக்குதல்களின் விளை வாக மாற்றுத்திறனாளிகள் அளவில் ஏற் பட்டுள்ள உயிரிழப்புகள் அல்லது மாற்றுத் திறனாளிகளாக உருவாக்கப்பட்டுள்ள வர்கள் போன்ற விபரங்கள் பாலஸ்தீனத்தி லிருந்து வெளிவரும் புள்ளிவிவரங்களில் வெளிவரவில்லை.
பள்ளி செல்லும் குழந்தைகளில் 15 சதவீதம் மாற்றுத் திறனாளிகள்
பாலஸ்தீனத்தில் ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தொடர்ச்சியான இஸ்ரேலியத் தாக்குதல் கள் மற்றும் போர்க்குற்றங்கள் காரண மாக எண்ணற்ற மக்களை ஊனமாக்கி உள்ளது. பாலஸ்தீன மத்திய புள்ளியியல் கழகம் 2020 கணக்கீட்டின்படி, ஆரம்ப பள்ளி வயது குழந்தைகளில் 15 சதவீதம் பேர் (5-17 வயது) மாற்றுத்திறனாளிகளாக உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. மேற்குக் கரையில் 17 சதவீதம் மற்றும் காசா பகுதி யில் சுமார் 13 சதவீதம் பேர் இதில் அடங்கு வர். குறிப்பாக உடல் ஊனமுற்றவர்கள் மட்டுமே இந்த கணக்கீட்டில் உள்ளனர். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களு டைய புள்ளிவிவரங்கள் இக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மன நலப் பிரச்சனை பாலஸ்தீன மக்கள் தொகையில் பெரும் பகுதியினரை பாதிக்கும் ஒரு பரவ லான பிரச்சனை என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
இஸ்ரேலின் இந்தக் கொடூரத் தாக்குதல் களால் பாலஸ்தீனத்தில் உள்ள மற்ற சாதாரண மக்களைவிட அங்குள்ள மாற்றுத்திறனாளிகளே மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர் என்பதை நாம் சொல்ல வேண்டிய தேவை இல்லை. உயிர் வாழ்வதற்காக தப்பிக்கக்கூட மாற்றுத்திற னாளிகளால் முடியவில்லை. ஒட்டுமொத்த மாக ஓரங்கட்டப்பட்டு புறக்கணிப்பையே பாலஸ்தீன மாற்றுத்திறனாளிகள் சந்திக் கின்றனர். பாலஸ்தீனத்தின் உள்கட்ட மைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் அல்லாத மக்களுடன் ஒப்பிடுகையில், இஸ்ரேல் தொடுத்துள்ள தாக்குதலின் தாக்கம் மாற்றுத்திறனாளிகள் மீதே பல மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
16 ஆண்டுகால முற்றுகையும் மாற்றுத் திறனாளிகளின் துயரமும்
இஸ்ரேலின் ஆயுத மற்றும் கூலிப் படையினால் காசா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் அடக்குமுறைகள், மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்ட மனித உரிமைகள் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களை மீறுவதா கவே உள்ளன. காசா மீதான 16 ஆண்டுகால முற்றுகையின் விளைவுகள், அதன் மக்கள் மீது, குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மீது சொல்லொணா துயரங்களை அதிகப் படுத்தியுள்ளது. வேண்டுமென்றே இலக்கு வைத்து மாற்றுத்திறனாளிகள் மீது சமீப மாக நடைபெறும் தாக்குதல்கள் கொலை கள், மாற்றுத்திறனாளிகள் அல்லாத மக்க ளிடையே அச்சத்தை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் அணுக முடியாத பாலஸ்தீனத்தின் உள்கட்டமைப்பு, உதவி உபகரணங்கள் கிடைக்காதது, உபகர ணங்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தடை, உபகரணங்களை ரிப்பேர் மற்றும் பராம ரிப்பு செய்வதில் உள்ள சிரமம் போன்ற பல வகைகளில் பாலஸ்தீன மாற்றுத்திறனா ளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் வாழ பாதுகாப்பான தங்குமிடம், மீட்பு, நிவாரண முகாம்கள் இடங்களுக்குச் செல்வதில் இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். பார்வை, செவித்திறன் மற்றும் அறி வுத்திறன் குறைபாடுகள் உள்ளவர்களு க்கு, முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பு கள் உட்பட முக்கியமான தகவல்களை அணுகுவது கூடுதல் தடைகளை ஏற் படுத்துகிறது.
இடைவிடாத தாக்குதல்களால் மன நலக் கோளாறுகள் உள்ளவர்களின் எண் ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என வெளிவந்துள்ள அறிக்கைகள் கவனத்தை ஈர்க்கின்றன. தொடர்ச்சியான குண்டு வெடிப்பு மற்றும் தனிப்பட்ட இழப்புகளால் நடுங்கும் குழந்தைகள் போன்று கிடைக் கும் வீடியோக்கள், இது போன்ற செயல்க ளால் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் மன அதிர்வுகளை உண்டாக்குவதும் உறுதி.
உலக நாடுகளுக்கு ஐ.நா.வேண்டுகோள்
2023 நவம்பர் 8 அன்று கூடிய ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, மாற்றுத்திறனா ளிகள் உரிமைகள் தொடர்பான 2007 ஆம் ஆண்டு ஐநா மாநாட்டு விதிகளை பாலஸ்தீனத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற வரைவு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தது. மாற்றுத்திறனாளிகள் சந்திக் கும் அபாயங்களை உணர்ந்து, அவர்க ளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் எடுக்க உதவுமாறு உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.
சர்வதேச மனிதாபிமானச் சட்டம், மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் உள்ள கடப் பாடுகள், மற்றும் 2007 மாற்றுத்திறனாளி கள் ஐநா உரிமைகள் கன்வென்ஷன் விதி கள் (CRPD), ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்-2475 ஆகியவற்றை ஆயுத மோதல்கள் மற்றும் போர்க்காலங்க ளின்போது கடைப்பிடிக்கப்படுவதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மதிக்கப்படுவது கட்டாயமாகும்.
மாற்றுத் திறனாளிகளின் பாதுகாப்பு...
2007 மாற்றுத்திறனாளிகள் ஐநா உரி மைகள் கன்வென்ஷன் விதிகள் - பிரிவு 11 பின்வருமாறு கூறுகிறது: “சர்வதேச மனி தாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் உட்பட சர்வதேச சட்டங்களின் கடப்பாடுகளை ஏற்று, ஆயுத மோதல்கள் நடைபெறும்போது, அவசர நிலைகள் மற்றும் இயற்கை பேரழிவுக ளின்போது மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்பதாகும்.
ஆயுத மோதலால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிலையான, சரியான நேரத்தில், பொருத்தமான, உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய உதவிகளை வழங்குவதன் நன்மை, மறு ஒருங்கிணை ப்பு, மறுவாழ்வு மற்றும் உளவியல் ஆதரவு உட்பட, அவர்களின் குறிப்பிட்ட தேவை களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மா னம் 2475 உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள குழந்தை மாற்றுத்திறனாளிகளின் பாது காப்பு குறித்து இத்தீர்மானம் அதிகமாகக் குறிப்பிடுகிறது.
செயலற்ற தன்மை மோசமான தோல்வி
உலகெங்கிலும் பல்வேறு நகரங்க ளில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆயி ரக்கணக்கானோர் பாலஸ்தீனர்களின் சுதந்திரமான மற்றும் சுதந்திர தாயகத்திற் கான கோரிக்கைக்கு ஆதரவாக, பேரணி யில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கி றது என்றாலும், உலகம் முழுவதும் பல செல்வாக்கு மிக்க அரசுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பாலஸ்தீனர்களின் இனப்படுகொலைக்கு வெளிப்படையான அல்லது மறைமுக ஆதரவில், ஐ.நா போன்ற அமைப்புகளின் மோசமான செயலற்ற தன்மையும் மோச மான தோல்வியும் அம்பலமாகி நிற்கிறது. மனித உரிமைகள் தொடர்பான மரபுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமை கள் தொடர்பான ஆணைகளும் தண்டனை யின்றி மீறப்படுவது வேதனைக்குரியது.
இந்தச் சூழலில்தான், ஐ.நா தீர்மானங்க ளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மோதலில் சிக்கியுள்ள பாலஸ்தீன மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவிக ளையும் ஆதரவையும் வழங்க வேண்டு மென்றும் சர்வதேச சமூகத்துக்கு ஊனமுற் றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை (NPRD) அழைப்பு விடுக்கிறது.
பாலஸ்தீன மக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கோருகிறது. ஆக்கிரமிக் கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வெளி யேறி, 1967க்கு முந்தைய எல்லைகளை மதித்து, இரு நாடுகள் தீர்வை அமல் படுத்த வழி வகுக்க வேண்டுமெனக் கோருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த உலக தினத்தில், பாலஸ்தீன மக்களின் சுதந்திரம் மற்றும் அவர்களின் தாயகத்திற் கான உரிமைக்கான நியாயமான போ ராட்டத்தில் ஊனமுற்றோர் உரிமைகளுக் கான தேசிய மேடை தனது ஆதரவை உறுதியளிக்கிறது. மாற்றுத்திறனாளி களின் உரிமைகள் இந்தப் போராட்டத்தில் பிரிக்க முடியாத பகுதியாகும் என்பதை உறுதியாகக் கூறுகிறது.