சிஐடியு அகில இந்தியத் தலைவர்க ளில் ஒருவரான ஆர்.கருமலையான் பேசுகையில்,தோழர் நல்லசிவன் ஆற்றிய பல்வேறு பணிகளை நினைவு கூர்ந்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், மேற்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு இந்த நிகழ்வி ற்கு வந்துள்ளேன். உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணி கூடுத லாக 11 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது (58 லட்சம்). மம்தா பானர்ஜி அரசு தேர்தலை நேர்மையாக, நியாயமாக நடத்தியிருந்தால் கட்சிக்கு ஒரு கோடி வாக்குகள் கிடைத்திருக்கும் என மாநில சிஐடியு நிர்வாகிகள் தெரிவித்தனர். மற்றொருபுறத்தில் உலகம் முழுவதுமுள்ள கார்ப்பரேட்டுகள், உலகையே கொள்ளையடிக்க முயல்கின்றனர். இந்தியாவிலும் அத்தகைய முயற்சியில் கார்ப்பரேட்டுகள் ஈடுபட்டு மோடியின் துணை யோடு வெற்றி பெறுகின்றனர். உலகக் கார்ப்பரேட்டுகளின் முகவராக இந்தியாவில் பிரதமர் மோடி உள்ளார் என்றார். ரூ.2 ஆயிரம் நோட்டும்-பிரதமர் மோடியும் மாநிலக்குழு உறுப்பினர் க.கற்பகம் பேசுகையில், ரூ.2000 நோட்டுச் செல்லாமல் போனது போல், 2024-தேர்தலிலும் மோடி செல்லாமல் போவார் என்றார்.